ஒரு விவசாயி தன நிலத்தில் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒருவர் அருகில் இருந்த குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டு கூழாங்கற்களைக் குளத்துக்குள் வீசிக் கொண்டு சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
அவருக்கு எரிச்சல் உண்டாயிற்று.
''நாம் கஷ்டப்படும்போது இவன் மட்டும் சோம்பேறித்தனமாய் பொழுதைப் போக்குகிறானே'' என்று எண்ணினார்.
சில நாட்கள் கழித்து விவசாயி பக்கத்து நகரில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சிக்கு சென்றபோது, ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் நூற்றுக் கணக்கானோர் ரசித்துச் செல்வதைக் கண்டார்.
விவசாயியும் அந்த ஓவியத்தால் கவரப்பட்டு அந்த ஓவியரைக் காண விரும்பினார்.
அந்த ஓவியர் வேறு யாருமல்ல. குளத்தங்கரையில் அன்று கல்லை வீசிக் கொண்டிருந்தவர்தான்.
அந்த ஓவியம் குளத்தங்கரையின் கவிதை மயமான சூழ்நிலைத் தோற்றத்தைக் காட்டியது.
அதை வரையத்தான் அந்த ஓவியன் மணிக்கணக்காகக் குளத்தங்கரையில் காத்திருந்திருக்கிறான்.
விவசாயி பாராட்டினான், ''அய்யா, நீங்களும் ஒரு உழைப்பு நிலையில்தான் இருந்திருக்கிறீர்கள்என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. நீங்கள் உருவாக்கிய படைப்பு ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கிறது. என் வாழ்த்துக்கள்''