* சூடிய மலரைச் சுற்றிவந்து ரீங்காரமிடும்
வழக்கம் வண்டினத்தில் இல்லை!
* பால்மரமே ஆனாலும் அளவுக்கு அதிகமாகக்
கீறினால் பட்டுப் போகும்!
* மூளையைப் பற்றி கவலைப்படாத மனம்
முடியைப் பற்றி கவலைப்படுகிறது!
* கருவாச்சி அழும்போது துடிக்காத இதயம்
வெள்ளச்சி அழும்போது துடிக்கின்றது!
* மண்புழுவின் வயிற்றுக்குள் தூண்டில் மறைந்து
இருக்குமென்று மீனுக்குத் தெரியாது !
* இறக்கை முற்றிய குஞ்சுகளைக் கூட்டில்
வைத்துக் கொள்வதில்லை குருவி!
* குருவிகள் கூடுகட்ட வங்கிக் கடனை
நம்பி இருப்பது இல்லை!
* கடன் வாங்கி கல்யாண வீட்டிற்கு
மொய் வைப்பதன்று நல்லாட்சி!
* மதுவால் அமைவ தன்று அரசு
மக்களால் அமைவதே அரசு!
* காதல் செய்யும் மனமே கடவுள்
உறையும் அன்பு இல்லம்!