இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

நீதி சதகம் கூறும் நீதிகள்


 எந்த உயிரையும் அழிக்காமை, பிறர் பொருளைக் கவராமை, பொய் பேசாமை, காலத்திற்கும் சக்திக்கும் இயைந்த வண்ணம் தானம் செய்தல், பிறருடைய மனைவிமார்களைப் பற்றிப் பேசாமை, ஆசையின் வேகத்தைத் தடுத்தல், பெரியோர்களிடம் வணக்கம், எல்லா உயிர்களிடமும் இரக்கம் காட்டுதல் இவையே உத்தம வாழ்க்கைக்கு உரிய பொது வழியாகும்.

 நீதிநெறி வழுவாத பிரியமான நடத்தை, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட பொழுதும் பாவம் செய்யாமை, தீயவர்களுக்கு வணங்காமை, ஏழைகளான நண்பர்களிடம் பொருளுதவி நாடாமை, கொடிய ஆபத்திலும் நிலை தவறாமை, மகான்களுடைய நடத்தையைப் பின்பற்றுதல் ஆகிய இவை கத்தி முனை மேல் நடத்தல் போல் கடினமானது.

 கல்வியால் அலங்கரிக்கப்பட்டவனாக இருந்தாலும், தீயவனுடைய சகவாசம் விலக்கப்பட வேண்டும்.

 சங்கீதமோ இலக்கியமோ, வேறு கலைகளோ ஒன்றும் தெரியாத மனிதன் வாலும் கொம்பும் இல்லாத பசுவைப் போன்றவன். புல்லைப் புசிக்காமல் உயிருடன் இருப்பது ஒன்றுதான் அவனுடைய பாக்கியம்.

 எவரிடம் கல்வியோ, தானமோ, தவமோ, ஞானமோ, நன்னடத்தையோ, நல்ல குணங்களோ இல்லையோ அவர்களின் மனிதர்களிடையே பூமிக்குப் பாரமாக மனித உருவத்தில் உலவி வரும் விலங்குகளே ஆவர்.

 கையிலிருந்து கீழே எறியப்பட்ட பந்து மீண்டும் மேலேயே கிளம்பும். அநேகமாக நல்லோர்களை விபத்து தாழ்த்தினாலும், அவர்கள் அதில் நில்லாமல் மேலேயே கிளம்புவார்கள்.

 ஆசையை ஒழி; பொறுமையைக் கைக்கொள்; கொழுப்பை அடக்கு; பாவத்தில் மனதைச் செலுத்தாதே; சத்தியத்தைப் பேசு; மதிப்புடையவர்களுக்கு மரியாதை செய்; எதிரிகளைச் சமாதானப்படுத்து; உன் குணங்களைப் பிரகடனம் செய்யாதே; கீர்த்தியைக் காப்பாற்றிக் கொள்; துன்புற்றவர்களுக்கு இரங்கு. இவைதான் நல்லவர்களுக்கு அடையாளம்.

 துர்மந்திரிகளால் மன்னன் நாசமடைகிறான். உலகப் பற்றால் துறவி நாசமடைகிறான். செல்வம் கொடுத்துச் சீராட்டுவதால் புத்திரன் கெடுகிறான். வேதம் ஓதாததால் பிராமணன் கெடுகிறான். கெட்ட பிள்ளையால் குடும்பம் அழிகிறது.

 கெட்டவர்களுடன் கூடிப் பழகுவதனால் நடத்தை அழிகிறது. வெட்கம் குடியினால் கெடுகிறது. வேளாண்மை நிலத்தைப் பாராமையால் கெடுகிறது. சிநேகம் மரியாதைக் குறைவால் கெடுகிறது. நிறைவு முறைகேட்டால் கெடுகிறது. செல்வம் ஊதாரித்தனத்தால் கெடுகிறது.

 சாணையினால் மெருகேறிய ரத்தினம், போரில் ஆயுதங்களால் காயப்படுத்தப்பட்ட வெற்றி வீரன், மதப்பெருக்கால் மெலிந்த யானை, கோடைக்காலத்தில் நீர் வற்றி மணல் திட்டுடன் விளங்கும் நதி, ஒரே கலை எஞ்சியுள்ள சந்திரன், கவலையால் மெலிந்த இளம்பெண்ணின் அழகு, யாசகர்களுக்குக் கொடுத்துச் செல்வச் செழிப்பு குறைந்தவர்களின் பெருமை ஆகிய எல்லாம் குறைவினால் பிரகாசிக்கின்றன.

 கைக்கு அழகு நன்கொடை, தலைக்கு அழகு பெரியோர் பாதச்சேவை, முகத்துக்கு அழகு உண்மையான சொல், புஜங்களுக்கு அழகு ஒப்பற்ற பராக்கிரமம், மனத்திற்கு அழகு நல்லொழுக்கம், செவிக்கு அழகு நல்ல சாத்திரங்களைக் கேட்டல்.

 விபத்தில் தைரியம், செலவச் செழிப்பில் பொறுமை, சபையில் பேச்சுத் திறமை, போரில் வீரியம், நல்ல புகழில் ஆசை, வேதம் ஓதுவதில் விடாமுயற்சி ஆகியவை மகாத்மாக்களின் பிறவிக் குணங்கள்.

 காதுக்கு ஆபரணம் நல்ல கேள்வியேயன்றி குண்டலங்களன்று. கைகளுக்கு ஆபரணம் தானமேயன்றிக் கங்கணங்களன்று. கருணை மிக்கவர்களின் உடலுக்கு ஆபரணம் பரோபகாரமேயன்றி சந்தனப் பூச்சன்று.

 பாவச்செயல்களிலிருந்து விலக்கி நல்ல செயலில் ஊக்குவிப்பவர்கள், இரகசியங்களைக் காப்பவர்கள், நல்ல குணங்களைப் பிரகடனம் செய்பவர்கள், ஆபத்தில் கைவிடாதவர்கள், தக்க சமயதில் உதவி செய்பவர்கள் இவைகள்தான் நல்ல நண்பர்களின் அடையாளங்கள்.

தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p113.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License