* உலகில் சந்தோஷமாக வாழ்பவர்கள் இருவர் மட்டுமே. ஏமாற்றும் அரசியல்வாதிகளும், கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.
* ஒழுங்காகத் தன்னை நடத்தி, உண்மையை மறைக்காமல் எல்லாவற்றிலும் நேர்மையை கடை பிடிப்பவனுக்கு அது ஒரு தனிப்பட்ட பலம் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
* சுய மரியாதை கல்வி மற்றும் அறிவார்ந்த குணங்கள் மட்டுமே கீழ் தட்டு மக்களை முன்னேற்றும்.
* ஒரு புலி இன்னொரு புலியை கொல்வதில்லை; ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை கொல்வதில்லை; ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்கிறான். எனவே மனிதன்தான் மிகவும் அபாயகரமானவன்.
* கோவிலில் சாமி கும்பிட வந்தவனைப் பார்த்து கும்பிட்டான் பிச்சைக்காரன். யார் கடவுள்?
* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
* வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன். விதியை நம்பி மதியை இழக்காதே.
* மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
* பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ். பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
* ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம். ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
* கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
* மற்றவர்களின் ஆதிக்கத்திலோ, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக மாற்றுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
* ஒரு மனிதன் தகுதி, திறமை பெறவேப் பள்ளியில் பயிற்சிக்கு வருகிறான். ஆனால், அந்தப் பள்ளியில் படிக்கவும், பயிற்சி பெறவும் தகுதி திறமை வேண்டுமென்றால் இது எத்தனை அயோக்கியத்தனமான கொடுங்கோன்மை.
* இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.
* மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்.
* சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு. பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.
* நெருப்பு கூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது.
* ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு.
* மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
* மனிதனை மதம் மிருகமாக்கும், சாதி சாக்கடையாக்கும்.
* யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி அடைய மாட்டான்.
* கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்.