இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

திருப்பலி - தெரிந்து கொள்வோம்!


1. பங்குபெறுவோர்

அ. திருப்பலியில் பங்குபெறுவோர் குருவானவர்

இவர் திருப்பலி கொண்டாட கூடியிருக்கும் சபையின் தலைவர். இவரின் வழியாக கிறிஸ்து திருப்பலியில் வெளிப்படுகின்றார்.

ஆ. பீடச்சிறுவர்

இறைமக்களின் சார்பாக, பீடத்திலிருந்து திருப்பலி நிறைவேற்றும் குருவானவருக்குத் தேவையான உதவிகளைச் செய்பவர்கள்.

இ. இறைமக்கள் சபை

திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் ஒரு குடும்பமாகத் திகழ்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர். இத்திருக்கூட்டத்தின் மூலமும் இறைவன் வெளிப்படுகின்றார். ஏனெனில், அவர் பெயரால் ஒன்று கூடும் போது அவர்கள் நடுவே அவர் இருக்கிறார் என்பது வெள்ளிடைமலை.


2. திருப்பலியில் முக்கிய இடங்கள்

அ. பலிப்பீடம்

கல்வாரியில் தம்மைப் பலியாக்கிய கிறிஸ்து இன்று இப்பீடமதில் கண்களுக்கு மறைந்த வண்ணம் இரத்தம் சிந்தா பலியாவதால் இம்மேடையைப் பலிப்பீடம் என்கிறோம். இதனின்று முக்கியமாக நமக்குக் கிறிஸ்து வெளிப்படுகின்றார். உயிருள்ள இறைமகனாக அப்ப இரச வழியிலே.

ஆ. வாசக மேடை

அன்று இறைவாக்கினரின் மூலமும், தம் திருமகனின் மூலமும் மக்களோடு பேசிய கடவுள், திருநூலின் மூலமும், குருவின் மூலமும் இவ்விடத்திலிருந்து பகிர்ந்து கொள்ளுகிறார். இறைமக்கள் இறைப் பிரசன்னத்தை மீண்டும் உணருகின்றனர்.


3. திருப்பலி சடங்குகள்

அ. தொடக்கச் சடங்குகள்

i) சிலுவை அடையாளம் - நாம் மூவோரு கடவுளின் பெயரால், பெற்ற ஞானஸ்நானத்தின் அடையாளமாக திருப்பலியின் தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்துகின்றோம்.

ii) வாழ்த்தும் வரவேற்பும் - “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று குரு கூடியுள்ள அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றார். மக்களும் குருவை உம்மோடும் இருப்பாராக என வாழ்த்தி வரவேற்கின்றனர்.

iii) மன்னிப்பு வழிபாடு - செய்த குற்றங்களுக்காக இறைவனின் மன்னிப்பு கேட்டு தாய்மையுடன் திருப்பலி கொண்டாட முயல்கின்றோம்.

iv) சபை மன்றாட்டு - சபையினர் அனைவரின் வேண்டுதல்களையும் உள்ள ஏக்கங்களையும் ஒன்று திரட்டி, குரு இம்மன்றாட்டுச் செபத்தை நிகழ்த்துகின்றார்.

ஆ. இறைவார்த்தை வழிபாடு

i) முதல் இரண்டு வாசகங்கள் - பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் (நற்செய்தி ஏடுகள் நீங்களாக) எடுக்கப்பட்டு இறை வார்த்தையாக வாசிக்கப்படும்.

ii) தியானப்பாடல் - இறைவார்த்தையைக் கேட்ட மக்கள் இறைவனோடு இப்பாடல் மூலமாக ஒன்றிணைகின்றனர்.

iii) மகிழ்ச்சிப்பாடல் - “அல்லேலூயா” என்பதன் பொருள் ஆண்டவருக்குள் மகிழ்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம்.

iv) நற்செய்தி வாசகம் - (தூய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலிருந்து காலத்திற்குத் தகுந்தவாறு எடுத்தாளப்படுகிறது. இதனின் விளக்கத்தை மறையுரையாகக் குருவானவர் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

v) விசுவாச அறிக்கை - இறைவனையும், அவர் பேசிய இறைவார்த்தையையும், அவர் பிரசன்னம் கொண்ட திருச்சபையையும், அது கொண்டுள்ள உண்மைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என அறிக்கையிடுகிறோம்.

vi) இறை மக்கள் வேண்டுதல்கள் - நம்பிக்கை கொடுத்த தேவனிடத்தில் வேண்டிய வரங்களை மக்கள் எடுத்துக் கூறுகின்றனர். இவ்வேண்டுதல்களுக்காகத் திருச்சபையும் பரிந்துரை செய்கிறது.


இ. நற்கருணை வழிபாடு

i) காணிக்கை - நமது அன்பைக் காட்ட, நன்றியினைத் தெரிவிக்க, விளைபொருட்களையும், வாங்கின பொருட்களையும், தன்னுடைய அன்பை நமக்குக் காட்டின இயேசு தேர்ந்து கொண்ட உணவுப்பொருட்களை அப்ப இரச வடிவிலும் அர்ப்பணிக்கிறோம்.

ii) உண்டியல் - ஆலயத்தின் தேவைகளுக்கும், அமைப்புத் திருசபையின் தேவைகளுக்கும் மக்களால் தரப்படும் காணிக்கையாகும்.

iii) காணிக்கை செபம் - காணிக்கைப் பொருள்களை மக்களிடமிருந்து பெற்று அவற்றினை இறைவன் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், பலிக்கு அவைகள் தகுதி பெற வேண்டுகின்றோம்.

iv) கை கழுவுதல் - மகத்து மிக்க பலி நிறைவேற்ற, குரு அகமும் புறமும் தூய்மையாக, செபித்து அருள்பெறும் அடையாளமாக இதனைச் செய்கின்றார்.

v. தொடக்கவுரை - இறைவனிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கும், அவர் நமக்குச் செய்த மீட்புச் செயலுக்கும் நன்றி கூறி, இறை புகழ் கூறும் பகுதியே இது.

vi) பரிசுத்தர், பரிசுத்தர் (தூயவர், தூயவர்) - இறைவனின் மகிமையை இப்பாடல் மூலம் வாழ்த்திக் கூறிப் பாடுகிறோம். (ஓசன்னா- எனில் வாழ்க என்பது பொருள்)

vii) புனிதப்படுத்தும் செபம் - காணிக்கையாகப் பெற்ற அப்ப இரசத்தை ஆவியினால் புனிதப்படுத்தி இறைமகன் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற செபிக்கின்றோம்.


viii) திருவுடல் திரு இரத்தம் - இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் சரீரம். இது உங்களுக்காகச் சிந்தப்படும் புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம் எனும் இயேசுவின் அர்ப்பணிப்பு வார்த்தைகளைக் கூறும் போது, அவை இயேசுவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாறி முழுமையாகின்றன.

ix) விசுவாசத்தின் மறைபொருள் - வெறும் கண்கள் காணும் அப்பத்திலும் இரசத்திலும், அவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் கண்டுணர்ந்து, அவர்பட்ட பாடுகளையும், எதிர்கொண்ட வீர மரணத்தையும், இலட்சிய புருசனாக உயிர்த்ததையும் அறிக்கையிடுகின்றோம்.

x) நினைவு - புனிதர்கள், திருச்சபையின் தலைவர்கள், திருச்சபையின் மக்கள், இறந்தவர்கள் அனைவரையும் ஒரே ஆண்டவரின் பிள்ளைகள் எனும் நோக்கோடு நினைவு கூறுகின்றோம்.

xi) இறுதிப் புகழுரை - அன்பில் ஒன்றான திருச்சபை கிறிஸ்து வழியாகக் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்குள் பிதாவிற்கு புகழ்ச்சியைச் செலுத்துகின்றது.

xii) கர்த்தர் கற்பித்த செபம் - அனைவரும் குழந்தைகளுக்குரிய மனநிலையோடு, ஆண்டவர் கிறிஸ்து சொல்லிக் கொடுத்த செபத்தினைச் சொல்கின்றனர்.

xiii) சமாதானப் பகிர்வு - திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம். வேறுபாடுகளோ, பகைமையோ இல்லை என்பதனைக் காட்டுகின்றதன் அடையாளம் இது.

xiv) நற்கருணை விருந்து - ஆன்ம உணவாக ஆண்டவர் வருகின்றார், நற்கருணை வடிவிலே அவரை ஏற்றுக் கொள்ளும் வண்ணம், ஆமென் என்று சொல்லி அவரைப் பெற்றுக் கொள்கிறோம் (ஆமென் எனில் ஆம் என்பது பொருள்)

xv) நன்றி செபம் - இறை மக்களின் நன்றியைத் திருக் கூட்டத்தின் தலைவராக இருக்கும் குரு நன்றி செபமாகக் கூறுகின்றார்.

xvi) பிரியாவிடை - குருவின் ஆசிகளோடு இறைமக்கள் பலியான கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்டு பரந்த உலகில் இனி பலியாக, விடைபெற்றுச் செல்கின்றனர்.

ஈ. திருப்பலியில் உடல் செயல்பாடுகள்

i) எழுந்து நிற்பது - உயிர்த்த இயேசுவுடன் நாமும் இணைந்தவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.

ii) அமர்தல் - இறைவார்த்தையைக் கவனமாகக் கேட்கவும், தியானிக்கவும் எவ்வித சலனத்திற்கும், இடையூறுக்கும் இடம் கொடாதிருக்க இது மேற்கொள்ளப்படுகிறது.

iii) மண்டியிடுதல் - இறைவனுக்கு முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள் எனும் நிலையைக் குறிக்கிறது.

iv) தலை வணங்குதல் - இறைவனை ஆராதிப்பதற்கும், மரியாதை செய்வதற்கும் அவருக்கு முன் நாம் தகுதியற்றவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.

v) பவனி (வருகை, காணிக்கை, நற்கருணை) - அனைவரும் ஒன்ருகூடி இறைவனை நோக்கி ஆவலுடன் அவர் வழி நடக்கவும், அவரிடம் தஞ்சமடையவும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.

vi) நெஞ்சில் அறைதல் - செய்த குற்றத்திற்கு வருந்துகின்ற மனநிலையின் ஓர் அடையாளம்.

vii) கரங்களைக் குவித்தல் - இது நாமும், இறைவனுடன் இணைந்துள்ளோம் என்பதனையும், நமது மரியாதையையும் காட்டுகின்றது.

viii) சமாதானத்தை அறிவித்தல் - ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, மன்னித்து, மதிப்பளித்து, அன்பு உறவில் வாழத் தயாராக இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம்.


உ. திருப்பலியில் பயன்படுத்தப்படும் பொருள்கள்

i) விளக்கு, எரியும் மெழுகுவர்த்திகள் - கிறிஸ்து, உயிருள்ள இறைவனாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம்.

ii) தூபம் - இறைவனை ஆராதிப்பதற்கும் அதனின்று மேலெழும் புகை, போன்று நமது செபங்களும் இறைவனை நோக்கி மேலெழுகின்றன என்பதற்கும் அடையாளம்.

iii) மலர்கள் - இயற்கையின் சிகரம் மலர்கள். அவற்றினைப் பீடத்தின் மீது வைத்து இயற்கை வழியாக இறைவனை மகிமைப்படுத்துகிறோம்.

iv) தண்ணீர் - இறைவனே நமது வாழ்வின் மையம். அவர் இல்லையெனில் நமது வாழ்வு வறண்டுவிடும். அவராலே வாழ்வு பெற்று தூய்மையாக்கப்படுகிறோம் என்பதன் அடையாளம்.


v) அப்பமும் இரசமும் - மனிதன், அவனது உழைப்பு, இன்பங்கள், துன்பங்கள் இவைகளின் முழு உருவாகப் பீடத்தின் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றன.

vi) நற்கருணைப் பாத்திரம், திருக்கிண்ணம், நன்மைத்தட்டு - தினந்தோறும் திருச்சடங்கில் பலியாகும் கிறிஸ்துவைத் தாங்கும் பாத்திரங்கள்.

vii) திரு உடைகள் - குருவின் பணியையும், இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் பொருளையும், மக்களின் மனநிலையையும் இவை குறிக்கின்றன.

viii) திருச்சிலுவை - பீடத்தல் நிகழும் பலி, கல்வாரிப் பலியின் நிகழ்வே என்பதனை நமக்கு நினைவுறுத்துகிறது.

நன்றி:http://shseminary.blogspot.com/2011/10/blog-post_29.html

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/christian/p22.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License