இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

நவராத்திரி கொலு பொம்மைகள்

மு. சு. முத்துக்கமலம்


கோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. தேவியரைப்புதுப்புது கோலங்களில் அலங்கரித்துக் கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். தேவியர் கொலு வீற்றிருந்து, அருளாட்சி செய்து, உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கின்றனர். அகிலாண்ட நாயகி, ராஜராஜேஸ்வரி கொலு வீற்றிருக்கிறாள். அருள் பாலிக்கிறாள்.

வீடுகளில் கொலு வழிபாடு: ‘கொலு' என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம். வீற்றிருத்தல், சேவை சாதித்தல் முதலியன இதன் பொருள்.

கோயில்களில் தேவியைக் கொலு வைத்து வழிபட்டார்கள்: அதைப் போல, வீடுகளிலும், தேவிகளின் பொம்மைச் சிலைகளை அடுக்கி வைத்து வழிபடுவது 'கொலு' வழிபாடு.

புரட்டாசி அமாவாசையன்றே கொலு வைப்பதற்குரிய சரியைச் செயல்கள் தொடங்குகின்றன. அதன் பொருட்டு ஓர் அறையைத் தேர்ந்தெடுத்துப் புனிதமாக்குகின்றனர்.

இதற்கான படிகளை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது என்று அவரவர் வசதிக்குத் தகுந்தபடி அமைக்கிறார்கள்.

வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளால் அவற்றைப் போர்த்துகின்றனர்.

முதல் படியின் நடுவில் கலசத்தை வைக்கிறார்கள். வெள்ளி அல்லது செம்பு அல்லது பித்தளைக் குவளையில் பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். தீப ஆராதனை நடைபெறுகிறது. தேவி கலசத்தில் பிரசன்னமாகிறாள். நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன.

இதன் தத்துவம், கலசம்-உடம்பு; பச்சரிசி - உயிர், மாவிலை - அருள் பாலித்தல், தேங்காய் - தேவி. தேவியின் அருள் உயிருக்குக் கிடைக்கிறது என்பது இதன் பொருள்.

தேவியின் அருள் உயிரில் இறங்குவதற்கு மாவிலைகள் துணை செய்கின்றன.


இதேப் போன்று நவதானிய முளைப்பாலிகை வைக்கப்படுகிறது. அதாவது, கொலு வைக்கப்பட்டிருக்கும் அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கிறார்கள். அவை முளைவிட்டுச் செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பது நம்பிக்கை. இதன் தத்துவம், குபேரன் அருளுகிற பலவகைப்பட்ட செல்வச் செழிப்புகளை நவதானியங்களின் வளர்ச்சி உணர்த்துகிறது. நவதானியங்கள் பல செல்வங்கள்.

கொலுவில் மண், மரம், பீங்கான், பிளாஸ்டிக், உலோகத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை வரிசை வரிசையாக அடுக்கி வைக்கின்றனர்.

தெய்வ வடிவங்கள், புராணக்காட்சி வடிவங்கள் முதலிய தெய்வத் தொடர்பான பொம்மைகளை உயரத்திலுள்ள படிகளில் வைக்க வேண்டும். அதாவது, தெய்வ வடிவங்களை அடுக்கிய படிகளில் அல்லது அதற்கு மேலே இருக்கும் படிகளில் உயிரின, உயிரற்ற பொருள்களின் வடிவங்களை வைக்கக் கூடாது.

முதல் படியில் மரப்பாவைகளை வைப்பது மரபு. தம்பதி பொம்மைகளை வைப்பது மங்கலம்.

மளிகை வணிகரின் பொம்மை ஒன்று, தக்க மளிகைப் பொருள்களுடன் கொலுவில் நிச்சயம் இடம் பெற்றிருக்கக் காணலாம்.

அரச சபை, அணிவகுப்பு, உணவு விடுதி, புகைவண்டி நிலையம் முதலிய தொகுப்புப் பொம்மைகளைத் தரையில் வைப்பது அழகு; நல்லது.

செயற்கை அருவி, ஆற்று நீரோட்டம், ரயிலோட்டம், படகோட்டம் முதலியவற்றில் இக்காலத் தொழில்நுட்பங்களையும், அறிவியல் நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். இவற்றைக் குழந்தைகள் மிக்க ஆர்வத்துடன் கவனிப்பார்கள்.


தம் வீட்டிலுள்ள கொலுவைக் காண வருமாறு பெண்கள், தனக்குத் தெரிந்த மற்றப் பெண்களை அழைக்கின்றனர். வந்தவர்களை விருந்தோம்பி மகிழ்கின்றனர். அவர்கள் கொலுவைக் கண்டு மகிழும் போது, தாமும் மகிழ்ந்து, பெருமிதம் கொள்கின்றனர். கொலுவைக் கண்டவர்கள் விடைபெறும்போது, அவர்களுக்கு ஆடை முதலான பரிசுப் பொருள்களை அளித்து, மஞ்சள் குங்குமத்துடன் வழியனுப்புகின்றனர்.

சிலர் பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர்; சிலர் படிக்கின்றனர். சிலர் தேவி பாகவதம் முழுவதையும் படித்து முடிக்கின்றனர். சில வீடுகளில் கதா காலட்சேபமும் நடைபெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், வீடு, கொலுவின் போது சிறந்த கலைக்கூடமாக கோயிலாக மாறிவிடுகிறது.

விஜய தசமியன்று, பால் நிவேதனம் படைத்து, தீப ஆராதனையோடு கொலு முடிவுறுகிறது.

படியிலுள்ள சில பொம்மைகளைப் படுக்க வைத்துக் கொலுவை முடிப்பது வழக்கம்.

இங்கு கொலுப்படிகள் - பல உலகங்கள்; தேவி - பரம்பொருள்; கலசம் - தேவியின் பிரசன்னம்; பொம்மைகள், உயிரினங்கள்.

அனைத்து உயிர்களுக்கும், உயிருக்குயிராய் அமைந்து, அருள் சுரக்கிறாள் தேவி. தேவியின் அருளால் பாவங்கள் ஒழிகின்றன, தர்மங்கள் நிலைபெறுகின்றன, அஞ்ஞானம் அழிகிறது, மெய்ஞானம் ஒளிர்கிறது.


இந்தக் கொலு வைப்பதன் மூலம்,

1. தேவி வழிபாடு, விருந்தோம்பல் என்ற தமிழர்களின் அடிப்படைப் பாரம்பரியப் பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

2. பெண்களின் பக்தி உணர்வுகளையும், செல்வ வளத்தையும், மனோநிலைகளையும், கலைத் திறனையும் உணர முடிகிறது.

3. பொம்மைகளைச் செய்யும் கலை, வார்ப்புக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, அலங்காரக்கலை முதலிய பல வகைப்பட்ட கலைகள் வளர்கின்றன. சில கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.

4. பழமையான எல்லாப் பொருள்களும் புனிதமானவை, தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டியவை. சிலர் மிகமிகப் பழைய பொம்மைகளைக் கூடுதல் பொறுப்புகளுடனும், புனிதத்துடனும் பாதுகாக்கிறார்கள். புதிய பொம்மைகளை வாங்குகிறார்கள். ஆகவே, கொலு என்பது பழமையின் பழமை; புதுமையின் புதுமை. இரண்டின் சங்கமம்.

5. குழந்தைகள் கொலுவைப் பார்த்துப் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள். புராணக் கதைகளை அறிகிறார்கள். அவர்களுக்குப் பக்தி உணர்வுகளைப் பெருக்கக் கொலு மிகவும் பயன்படுகிறது.

6. குடும்பத்தினரின் வாழ்க்கைப் பிரச்னைகளை மறக்கச் செய்து, துன்பச் சுமைகளை இறக்கி, மனதை இலேசாக்கி, எல்லாத் தாக்குதல்களிலிருந்தும் விடுதலை தருகிறது. அத்துடன் கொலு அவர்களைப் பத்து நாள்களுக்கு பக்திப் பாசத்தால் பிணைக்கிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1027.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License