இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

பகவானுக்கு நன்றி கூறுங்கள்...!

மு. சு. முத்துக்கமலம்


கி. பி. 1268 ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் நட்சத்திரத்தில், புதன்கிழமையன்று அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர் வேங்கடநாதன். பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பல பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவரான வேதாந்த தேசிகர், பகவான் தமது அளப்பரிய கருணையால் நமக்கு மனிதப்பிறவி தந்ததோடு, பல உபகாரங்கள் செய்துள்ளார். அந்த உபகாரங்களை எல்லாம் சுட்டிக்காட்டி, அவரிடம் நன்றி கூற வேண்டுமென்கிறார்.

1. நம்மைப் படைத்த பகவான் மிகுந்த கொடையாளி. நாம் உடம்பு மட்டுமல்ல, அழிவற்ற ஆத்மாவாக நம்மைப் படைத்துள்ளானே! அழியாத அந்த ஆத்மாதானே வைகுண்டத்தில் நல்வாழ்க்கை வாழ்கிறது!

2. பகவானின் திருவடிகளைப் பணிந்து நமது ஆத்மாவை ரக்ஷிக்கும்படி வேண்ட அவரே நமக்கு அறிவைத் தந்துள்ளாரே!

3. நாம் எப்படி இருந்தாலும் சரியான தருணத்தில் நம்மைக் கை தூக்கிக் கரையேற்றிடக் காத்திருக்கிறாரே பகவான்!

4. ஏழை, பணக்காரர் என்று வித்தியாசம் பாராதவர் பகவான். நாம் செய்த கடுகளவு புண்ணியத்தையும் மதித்து, மேலும் நல்வழியில் செல்லுமாறு வழி நடத்துகிறாரே!

5. எத்தனையோ பிறவிகளை அனுபவித்த நாம் நற்கதி பெறுவதற்கு எந்தத் தகுதியையும் பெறவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ ஏதோ ஒரு பிறவியில் செய்த நற்காரியத்தையும் பாராட்டி, செய்துவிட்ட மலை போன்ற தவறுகளுக்குக்கூட சிறிய தண்டனைகளைத் தந்து தம்மிடம் ஆட்கொண்டு விடுகிறார் அல்லவா!


6. சத்விஷயங்களில் ஈடுபாடில்லாதவர்களைக் கண்டு நாம் வருந்த வேண்டும். அவர்களுக்குக் கிட்டாதப் பேற்றினை நமக்கு அருளியுள்ளாரே என்று எண்ணி எம்பெருமானிடம் அன்பைப் பெருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த நற்செயல்களின் மூலம் பகவானுக்கு நன்றி கூற வேண்டும்.

7. நாம் உய்வதற்காக ஸ்ருதிகளை வழங்கியுள்ளதற்கு பகவானிடம் நன்றி கொள்ள வேண்டும்.

8. சாஸ்திரங்களில் உள்ள அனைத்தையும் நான் எப்படி முழுவதுமாக அறிவது? இது சாத்தியமா என்று நாம் எண்ணும்போது, அவரே, அதன்படி வாழ்கின்ற ஆச்சார்யர்களையும் ஆழ்வார்களையும் அனுப்பி வைத்து நமக்கு வழிகாட்டுகிறாரே!

பெரியவர்களின் வாழ்க்கையே சாஸ்திரங்களுக்கு விளக்கமல்லவா!

9. விலங்கு, பறவை, மரம், செடி என்று எத்தனையோ ஆத்மாக்களைக் காண்கிறோம். நாம்கூட முற்பிறவிகளில் இவ்வாறு இருந்திருக்கலாம். ஆனால் இப்பிறவியில் அவற்றுக்கில்லாத ஆறாவது அறிவான புத்தியை நமக்குத் தந்துள்ளாரே!

10. மனிதர்கள் சிந்திக்கத்தக்கவர்கள்தான். ஆனால் சத் விஷயங்களைச் சிந்திக்காமலே பலர் மரணமடைந்து விடுகிறார்களே. அவ்வாறின்றி, நேற்று வரை அவர்கள் போலவே இருந்த நம்மையும் 'இனி பிறவி கூடாது' என்று உறுதி பெறும் வகையில் ஆச்சாரியர்களை அனுப்பி நமக்கு வழிகாட்டியுள்ளார் பகவான். அந்தப் பெரியவர்களையோ, சாஸ்திரங்களையோ நிந்திக்கலாமா? நற்கதி அளிக்க நம்மை அல்லவா பகவான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நன்றி கூற வேண்டாமா!


11. நற்குடியில் பிறந்திருந்தாலும் எத்தனை பேருக்கு நல்லோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது! நமக்கு அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறாரே பகவான்!

12. கருணையுடன் கீதாசார்யனாக நமது அறியாமை இருளகற்ற கீதை பகன்றவன் பகவான். தயக்கமின்றி ஓர் ஆச்சார்யனை நாடி தெளிவு பெற வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் அவருக்கு நன்றி பலப் பல!

13. தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்த அர்ஜுனன், பகவானின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் தன் அறியாமையை எண்ணி வெட்கி 'கண்ணா, உன் திருவடிகளைப் பணிகிறேன் என்னைச் சீடனாக ஏற்று உபதேசி' என்று கூறவில்லையா! நாமும் அர்ஜுனன் போல் பெருமாளின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்க வேண்டாமா!

14. ஒரு குருவிடம் சென்று நாம் நல்லுபதேசம் பெறும்போது மனதில் தெளிவு உண்டாகிறதே, இது பகவானின் அனுக்ரகம்தானே!

15. சத்விஷயங்களைக் கேட்கும்படி செய்வதும், அதை நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும்படி செய்வதும் பகவான் நமக்குச் செய்யும் உபகாரம்.

16. சத்விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் சிலரின் துர்போதனைகளினால் நாத்திகம் பேசுவது சாஸ்திரத்தையும், பெரியோர்களையும் நிந்திப்பது போன்றவற்றால் மனம் கலங்கிவிடும். அவ்வாறு கலக்கம் கொள்ளாமல் தெளிவுடன் இருக்கும்படி நம்மைக் காப்பது பகவான்தானே!

17. தாயின் கருவிலிருந்து பிறந்ததால் பிறவிப் பயனடைந்துவிட்டதா? தாய் போல் சாலப் பரிவுள்ள குருவை அணுகி, தத்துவங்களை அறியுமாறு அருள்கிறானே பரந்தாமன். இது எப்படிப்பட்ட பெரும் உபகாரம்!

18. நமது தீமைகளை அகற்றி ஆத்மாவை ஒளிரச் செய்கிறாரே பகவான்!

19. உயர் நிலையாகிய மோக்ஷத்தை அடைவதற்காக, குருவின் வழிகாட்டுதலுடன் ப்ரபத்தி மார்க்கத்தில் பக்தனைச் சரணடையச் செய்கிறாரே பகவான்.

20. நிலையற்ற லௌகீக இன்பத்தில் உழன்று கொண்டிருந்தவர்களான நம்மிடம் நிலையான பேரின்பத்தை அடையும் முயற்சியை உண்டாக்கிவிட்டாரே!

21. குற்றமே புரியாதவன் என்று உலகில் யாருமில்லை. இனி குற்றம் புரிவதில்லை என்று சங்கல்பித்து நம்மை முயற்சி செய்ய வைப்பது மட்டுமல்ல; நமது குற்றங்களைக் கண்டும் நம்மை வெறுத்து ஒதுக்காமல் உள்ளாரே பதித பாவனனான பெருமான்.

22. பகவானைப் பற்றிய உபதேசங்களைக் கிரமமாகப் பழகுவதற்கான நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கித் தருகிறாரே அதற்கும் நன்றி.

23. 'குறையொன்றுமில்லை கோவிந்தா' என்ற மனநிலையை அருளியுள்ளாரே அதற்கும் நன்றி.

24. சரணாகதியினை நம்புவது மட்டுமல்ல, செயல்படுத்துவதும் கடினமே. 'மாமேகம் சரணம் வ்ரஜ' – என்னையே சரணடை என்று அவர் திருவடியில் அடிபணிவதான மனத்தெளிவையும் அல்லவா எனக்கருளி உபகாரம் செய்திருக்கிறார்!

25. பகவானே, பஞ்ச கோச சம்ஸ்காரம் செய்து உங்களிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்துவிட்டேன். அப்படிச் செய்துவிட்ட என்னை உடலில் உயிர் உள்ளவரை தவறான பாதையில் செல்லாமல் தடுக்கிறாரே, அது சிறிய விஷயமா!


26. அவ்வாறு என்னையும் மீறி அறியாமல் தவறு செய்துவிட்டால் சிறிய கர்மவினை மட்டும் அளித்து என்னை ஏற்றுக் கொள்கிறாரே, அது சிறிய உபகாரமா என்ன!

27. தண்டனைக்குப் பயந்த நமக்கும் பிராயச்சித்தம் என்னும் வழியைக் காட்டி உபகாரம் செய்கிறாரே பகவான்!

28. எங்கு, எப்படி இறப்போம் என்று தெரியாத நிலையில் சரணாகதி அடைந்தவன் மரணமடையும்போது நியமம் ஏதும் பாராமல், வைகுந்த பதவியை அருளும் பரந்தாமனின் உபகாரம் எப்படிப்பட்டது.

29. இருக்கும்போதே பகவத் ஸ்மரணை இல்லையே, மரணத்தின் பிடியிலிருக்கும் போதும், கட்டை போலக் கிடக்கும் போதும் பகவானின் நினைவு வருமாறு அனுக்ரகம் செய்கிறாரே! சாதாரணமான உபகாரமா அது?

30. உடல் எனும் அழுக்குச் சேற்றில் விழுந்த ஜீவனை, முகம் சுளிக்காமல் மலத்தை அப்பிக் கொண்டிருக்கும் குழந்தையைச் சுத்தம் செய்யும் தாய்போல, அன்புடன் பெருமாள் ஜீவனை உடலிலிருந்து தூக்கிச் செல்வது உபகாரம்தானே!

31. எப்படி இருந்தவர்கள் நாம்! நம்மை வைகுந்தத்தில் தம் மடிமீது அல்லவா அமர்த்தி ஆனந்தமடைகிறார் எம்பெருமான்! யார் செய்வார்கள் இப்படி ஓர் உபகாரம்?

32. தந்தையும் தாயுமாய் நின்று நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தி நாம் மகிழ்வதைக் கண்டு ஆனந்திக்கின்ற எம்பெருமான் – பெருமாட்டிக்கு நம்மால் எப்படி நன்றி கூற முடியும்?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1042.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License