இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

ஆறு வகை பகைவர்கள்

மு. சு. முத்துக்கமலம்


ஆன்மாக்களாகிய நமக்கு, என்ன என்ன வகையிலோ இடர்கள் வருகின்றன; இந்த இடர்களில் மிகவும் கொடியது பகையால் வரும் இடரேயாகும். பகையில்லாத ஒருவனே அமைதியாக வாழ இயலும். பகைவர்களை ஆறு வகையினராக வகைப்படுத்தலாம் என்கிறார் திருமுருக கிருபானந்தவாரியார். வாங்க அவர் சொல்லும் ஆறு பகைவர்கள் யார்யாரென்று பார்க்கலாம்.

1. புறப்பகை

தேவர்கள் பொன்னுலகவாசிகள். கற்பக மரம், காமதேனு, ஐராவதம், உச்சைசிரவம், அரம்பை மாதர்கள், சிந்தாமணி முதலிய பல நலன்கள் அமைந்திருந்தும் அவர்கள் சூராதி அவுணர்களாகிய பகைவரால் பல காலம் ஆற்றொணாத அல்லல் உற்றார்கள். ஆதலின் ஒரு வீட்டிலோ நாட்டிலோ பகை ஏற்படுமாயின் வாழ்வது அரிது. மனதில் சிறிதுகூடச் சாந்தியே இராது. தானவர்களது பகையால், வானவர்கள் பலகாலும் வருந்தினார்கள். கூனியின் பகையால் இராமர் இடா்ப்பட்டார். துரியோதனனது பகையால் பாண்டவர்கள் பரிதவித்தார்கள்.

2. அகப்பகை

அன்றி அகப் பகையும் உள்ளது. அது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் எனப்படும்.

``இந்தக் காமாதி அறுபகைவர்க்கு நாம் அஞ்சுதல் கூடாது. புறப் பகை யனைத்தும் வென்றேன், அகப் பகையையும் வெல்லுவேன்'' என்று தசரத வள்ளல் கூறுகிறார்.


1. காமம்

இதுதான் முதற் பகை. காமம் என்ற சொல்லுக்கு ஆசை என்பது பொருள். காமத்தால் ஆவி துறந்த தசரதர் மகன் மீது அளவற்ற ஆசை வைத்தார். அதனால், மகனுடைய பிரிவு என்ற துயர், அவருடைய உயிருக்கு இறுதியை நல்கியது. மக்கள் மீது அன்பு வைக்க வேண்டும்; ஆசை வைக்கக்கூடாது. மகன் மீது அன்பு வைத்த கௌசலை வாழ்ந்தாள். ஆசை வைத்த சக்கரவர்த்தி மாய்ந்தார். அதாவது, அன்பு - வாழ வைக்கும், ஆசை - தாழ வைக்கும்.

2. குரோதம்

வடமதுரையை ஆண்ட உக்ரசேனனுடைய முதலமைச்சன் சூரசேனன். இவருடைய மக்கள் இரண்டு பெண்கள்; ஒரு ஆண். 1. குந்திதேவி, 2. சாத்துவதி, 3. வசுதேவர். குந்திதேவியின் மைந்தராகிய யுதிஷ்டிரர் ராஜசூயம் என்ற பெருவேள்வியைச் செய்தார். அதன் முடிவில் முதல் தாம்பூலம் யாருக்குத் தருவது என்று யுதிஷ்டிரர் கேட்டார்.

வியாசமுனிவர், ''ஞானபானுவாகிய கண்ணபிரானே முதல் மரியாதைக்கு உரியவர்'' என்றார்.

அதன்படியே யுதிஷ்டிரர் முதல் தாம்பூலத்தை யதுகுல நந்தனராம் வாசுதேவருக்கு வழங்கலுற்றார்.

அப்போது வடவைக் கனல் கொதித்தது போல் சீறியெழுந்து தடுத்தான் சிசு பாலன்.

குந்தியின் தங்கை சாத்துவதி, அவள் சேதி நாட்டு மன்னன் தருமகோஷனை மணந்தாள். அவளுடைய மகன் சிசுபாலன்; தருமருக்குச் சிற்றன்னையின் மகன் சிசுபாலன். கண்ணபிரானுக்குச் சிறிய அத்தையின் மகன் அவன். ஆகவே சிசுபாலனுடைய தாய்மாமன் மகன் கண்ணன்.

கண்ணனுக்கு வரும் பெருமையைக் கண்டு, குரோதம் உற்றான். கண்ணபிரானுடன் எதிர்த்துப் போரிட்டு மடிந்தான்.


3. லோபம்

ஒரு மனிதனிடத்தில் ஆயிரக்கணக்கில் நற்குணங்கள் அமைந்திருப்பினும், உலோபம் என்ற ஒரு தீக்குணம் இருப்பின், அந்த ஒன்று ஏனைய நற்குணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

``தாடகை என்ற ஒருத்தி, வளமையான வனம் முழுவதையும் அழித்துவிட்டாள். உலோபமானது, சகல நற்குணங்களையும் அழிப்பது போல் என உணர்க'' என்று ஸ்ரீராமருக்கு விச்வாமித்திர முனிவர் கூறுகிறார்.

பாண்டவருக்குப் பாதி ராஜ்யம் சேர வேண்டும். சமாதானத்தை விரும்பிய தர்மர், கண்ணபிரானைத் தூது அனுப்பி, ஐந்து வீடுகள் மட்டும் தந்தால் போதும்; ஒற்றுமையாக வாழலாம் என்று கேட்டார். மூடனாகிய துரியோதனன், ஐந்து வீடுகளைத் தந்திருந்தால் பரம சுகமாகச் சுற்றம் நண்பர் சூழ வாழ்ந்திருப்பான். ஊசி நாட்டும் இடமும் தரமாட்டேன் என்று மறுத்தான். இந்த உலோபகுணம் ஒன்றால், துரியோதனன் தன் குலத்துடன் மாய்ந்தான்.

4. மோகம்

மோகத்தால் முழுவதும் அழிந்தவன் இராவணன். தன் மனைவியருடன் இனிது வாழ்ந்திருக்கலாம், பிறன் மனைவியாகிய சீதை மீது மோகம் வைத்து, மூவுலக ஆட்சியை முற்றிலும் துறந்து இறந்தான்.

5. மதம்


ஆயிரத்தெட்டு அண்டங்கட்கும் நான் தலைவன்; எனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று, தருக்குற்று அழிந்தான் சூரபத்மன். மனிதனிடம் மதம் புகுந்தால் அழிவான். யானைக்கு கன்ன மதம், கரட மதம் என்ற மும்மதங்கள் உண்டு.

அது போல் மனிதனிடமும் தன் மதம், வித்யா மதம், குலமதம் என்ற மும்மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்களான மும்மதங்களால் அழிகின்றர் பலர்.

6. மாச்சர்யம்

கம்சன் என்ற யதுகுலவேந்தன் தன் தங்கையின் மைந்தரான கண்ணபிரான் மீது மாத்சர்யம் கொண்டு, நாசம் அடைந்தான். ஆதலால் இந்த அரிஷ்ட வர்க்கம் என்கிற உட்பகை ஆறையும் வென்று மனிதன் சாந்தி பெறுதல் வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1068.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License