இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

சிவலிங்கம் தோன்றிய கதை

உ. தாமரைச்செல்வி


சிவலிங்கம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு கேரளத்தில் ஒரு புராணக் கதை உள்ளது.

அந்தக் கதை இதுதான்;

பரமசிவனை பால்ய ஆதித்தர்கள் என்ற முனிவர்கள் ஒரு முறை வேண்டி மிக உக்கிரமான யாகம் ஒன்று மேற்கொண்டார்கள்.

யாகத்தின் உக்கிரத் தன்மையையும், முனிவர்களின் தவ வலிமையையும் தாங்க முடியாமல் பூமாதேவி நிலை குலைந்தாள்.

நாட்கள் நீண்டன. ஆனால் பரமசிவனின் அருள் பார்வை முனிவர்களின் மேல் விழவே இல்லை.

யாகத் தீ மேல் நோக்கி உயர எழும் ஒவ்வொரு நிமிடமும் பூமாதேவி துவண்டு போனாள்.

பூமாதேவி பிரம்மதேவனிடம் தனது நிலையை விளக்கி முறையிட்டாள்.

பிரம்மா மற்ற தேவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு கைலாய மலை சென்றார்.

சிவனிடம் பூமாதேவியின் குறையை விளக்கி அருள் புரியுமாறு வேண்டி நின்றார்.

பிரச்னையைக் கருணையுடன் கேட்ட மகேசன், பால்ய ஆதித்தர்கள் மிகவும் கர்வம் கொண்டவர்கள் என்றும், அவர்களது ஆணவம் அடங்கினால்தான் அவர்களுக்குத் தமது தரிசனம் கிடைக்குமென்றும், அதற்கு வேண்டியதைத் தாம் செய்யப் போவதாகவும் கூறி அருளினார்.

பரமசிவன் ஒரு வயோதிக வழிப்போக்கரின் உருவத்தை ஏற்று பால்ய ஆதித்தர்களின் யாக சாலையை நோக்கி விரைந்தார்.


அங்கே ஒரே அமளி துமளி. முனிவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாத குறைதான். தங்களுக்குள் யார் பெரியவர்? என்ற சர்ச்சையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

வயோதிகரைக் கண்டவுடன் தங்கள் சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு அவரிடம் விண்ணப்பித்தார்கள்.

எல்லாம் அறிந்த கிழவரல்லவா அவர்! புன்முறுவலுடன் அவர்களிடம், ‘நீங்கள் யாருமே பெரியவர்கள் இல்லை. எல்லோருமே சிறியவர்கள்தான்!’ என்று அவர் கூறினார்.

அவ்வளவுதான், முனிவர்களின் கோபத் தீ இப்போது வயோதிகர்மீது திரும்பியது.

உடனே அந்த வயோதிகரது உடலே ஒரு தீயாக மாறி, மலை போன்று வளர்ந்தது. அந்த அக்னி மலையின் மேல் பாகத்தில் சிவனின் மூன்று கண்கள் மட்டும் தெரிந்தன. அந்தக் கண்கள் அக்னியை விட அதிகமாகப் பிரகாசித்தன.

அதைக் கண்ட பின்தான் முனிவர்களுக்குக் கிழவராக வந்திருப்பது யார் என்பது புரிந்தது.

தங்களைச் சோதிக்க வந்த மகேசனை வணங்கி மன்னித்தருளுமாறு அவர்கள் வேண்டினார்கள். சிவனும் அவர்களை மன்னித்து அருள்பாலித்தார்.

பிறகு, முனிசிரேஷ்டர்களே, “என்னை எடுத்து அந்த மலையின் மேல் கொண்டு சென்று வையுங்கள்" என்று அசரீரி மூலம் கட்டளையிட்டார்.

இறைவனது கட்டளையை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்கள் திகைத்தார்கள்.

முக்கண்கள் கொண்ட அந்த மலை போன்ற உருவத்தை எடுத்துச் செல்லும் பலம் பெற்றவரை அவர்கள் ஈரேழு உலகங்களிலும் தேடி அலைந்தார்கள்.

கடைசியில் அவர்களது பிரச்னைக்கு முடிவு சொன்னவர் யார் தெரியுமா? நாரதர்தான்!

நாரதரின் அறிவுரைப்படி விநாயகரைத் தியானம் செய்து தங்களுக்கு உதவுமாறு முனிவர்கள் வேண்டினார்கள்.


விநாயகர் அந்த மலை போன்ற உருவத்தை மூன்று முறை வலம் வந்தார். தலை வணங்கினார். தமது துதிக்கையால் ஒரு பூவை எடுப்பது போல், பரமசிவனின் அக்னித் திருவுருவத்தைத் தூக்கி எடுத்தார். மலைச் சிகரத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்தார். பிறகு விதிப்படி பூஜை செய்தார். அதனால் பரமசிவன் மகிழ்ந்து பால்ய ஆதித்தர்களை ஆசிர்வதித்தார்.

ஆணவம் அடங்கிய அந்த முனிவர்களும் பரமசிவனின் துதி பாடி வரம் பெற்றனர்.

தமது அந்த மலை போன்ற முக்கண்கள் கொண்ட உருவத்தை யார் பக்தியுடன் வணங்குகிறார்களோ, அவர்களுக்குத் தம் அருள் கிடைக்கும் என்று இறைவன் ஆசிர்வதித்தார்.

இன்று நாம் பூஜித்து வணங்கும் சிவலிங்கம் அந்த உருவத்தின் மறு உருவம்தான்.

அன்று முதல் கேரளாவில் உள்ள சிவாலயங்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் யானை ஒன்று கோயிலை வலம் வந்து பரமசிவனைத் துயிலெழுப்பும் வழக்கம் ஏற்பட்டதாம். விநாயகர் செய்த செயலை நினைவூட்டும் வகையில் இந்த வழக்கம் ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1077.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License