இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

நவராத்திரி வரலாறும் வழிபாடும்

சித்ரா பலவேசம்


சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது ஆட்சியின் கொடுமை தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் தேவர்கள் முறையிடுகின்றனர்.

மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.தேவி, அழகிய பெண் உருவம் எடுத்துப் பூலோகத்திற்கு வந்தாள்.

அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் இருவரும் இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது அரசர்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அப்போது தேவி, “யார் என்னைப் போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் நான் மணப்பேன்’ என்று தான் சபதம் செய்திருப்பதாகத் தெரிவிக்கிறாள்.

அதற்குச் சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. சாதாரண பெண்ணான நீ எங்களிடம் வீணாகப் பேசுவதா? பேசாமல் எங்களுடன் வா...” என்றனர்.

அதற்கு தேவி, “நான் தெரிந்தோ, தெரியாமலோ சபதம் செய்து விட்டேன். நீங்களிருவரும் உங்கள் அரசர்களிடம் சொல்ளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு வாருங்கள்…” என்றாள்.

இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் தங்களது படையிலிருக்கும் அசுரர்கள் ஒவ்வொருவராக அனுப்பினர்.

அவர்கள் அனைவரையும் தேவி அழித்தாள். அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். அவன் கடுந்தவம் செய்து, அவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான் என்றும், அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான் என்றும் ஒரு வரம் பெற்றிருந்தான்.

தேவி ரக்த பீஜனை அழிக்கத் துவங்கிய போது, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றிக் கொண்டேயிருந்தான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. இதைக் கண்ட தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடித்து விடச் சொன்னாள்.

சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேறி, இறந்து போனான்.

கடைசியாக சும்பன், நிசும்பன் இருவரும் தேவியால் அழிக்கப்படுகின்றனர்.

இதனடிப்படையிலேயே தேவியை நவராத்திரி நாட்களில் வணங்கும் வழக்கம் தொடங்கியது என்று தேவி மகாத்மியத்தில் வரும் புராணக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.



நவராத்திரி காலம்

நவராத்திரி புண்ணிய காலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. நவராத்திரி நோன்பு புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் தலைமையாக உள்ள சூரியன், கன்னி இராசியில் இருக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இரவுக் காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் நிலை சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்று சொல்வதுண்டு. இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச் சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

தேவியை வழிபட உத்தராயணத்தில் வசந்த நவராத்திரி, தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரி என்று இரு நவராத்திரிகள் இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே அனைவராலும் கொண்டாடக் கூடியதாக இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்கப்படும் நோன்பு சாரதா நவராத்திரி நோன்பு எனப்படுகிறது.

அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் வணங்கி வழிபட்டு, இந்த உலக வாழ்கை சிறப்பாக அமையத் தேவையான கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றையும் முப்பெரும் தேவிகளிடம் வேண்டிக் கடைப்பிடிக்கப்படும் இந்த ஒன்பது நாட்கள் கொண்ட சாரதா நவராத்திரி நோன்புக் காலத்தில், முதல் மூன்று நாள்கள் தமோ குணமுடையவளான துர்கா பரமேஸ்வரியை வீரம், துணிவு வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குணமுடையவளான மகாலட்சுமியைச் சகல செல்வங்களையும் அளிக்க வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குணமுடையவளான சரஸ்வதியை கல்வி, அறிவு என்று அனைத்துக் கலை ஞானங்களையும் அளிக்க வேண்டியும் வழிபடுகிறார்கள்.



நவராத்திரி வழிபாட்டு முறை

நவராத்திரி நாட்களில் அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒரு உணவைப் படைத்து ஒவ்வொரு தேவியாக வணங்க வேண்டுமென்கிற நடைமுறை வழக்கத்திலிருக்கிறது. அது குறித்த அட்டவணையைக் கீழே காணலாம்.

நாள் தேவியின் பெயர் படைக்கும் உணவு
முதல் சாமுண்டி சர்க்கரைப் பொங்கல்
இரண்டு வராஹி தேவி தயிர்ச்சாதம்
மூன்று இந்திராணி வெண்பொங்கல்
நான்கு வைஷ்ணவி தேவி எலுமிச்சை சாதம்
ஐந்து மகேஸ்வரி தேவி புளியோதரை
ஆறு கவுமாரி தேவி தேங்காய்ச் சாதம்
ஏழு மகாலட்சுமி கற்கண்டு சாதம்
எட்டு நரசிம்ஹி சர்க்கரைப் பொங்கல்
ஒன்பது ப்ராஹ்மி அக்கர வடசல், சுண்டல்



நவராத்திரி கொலு

நவராத்திரி வழிபாட்டில் முக்கியமானது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும் கொலுவாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் வடிவங்களாகக் கருதி நவராத்திரி நாட்களில் வழிபடுபவர்களுக்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாக இருக்கிறது.

நவராத்திரி கொலுவிற்கான மேடை 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். இந்த ஒன்பது படிகளிலும் கீழ்க்காணும் பொம்மைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.


முதல் படி

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகைப் பொம்மைகள்.

இரண்டாவது படி

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாவது படி

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நான்காவது படி

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாவது படி

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.

ஆறாவது படி

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

ஏழாவது படி

மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகான்கள் போன்றோரின் பொம்மைகள்.

எட்டாவது படி

தேவர்கள், அட்டதிக்கு பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாவது படி

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

ஓரறிவு உயிராகத் தொடங்கிய வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய முடியும் என்பதை உணர்த்துவதாக இந்தக் கொலு அமைப்படுகிறது.

வழிபடுவோம்

முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள். பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமாகக் கொள்கிறோம். மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி பூசையைச் செய்து தேவியை வழிபடுவோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p126.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License