இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

ஒரே சிற்பி வடிவமைத்த ஐந்து நடராசர் செப்புச்சிலைகள்

சித்ரா பலவேசம்


பல்லவ மரபின் தோற்றத்துக்குக் காரணமானவனும், கெளட தேசத்திலிருந்து வந்தவனுமான சிம்மவர்மன், சிவபெருமான் மேல் அதிகமான பக்தி கொண்டிருந்தான். அவனுக்குச் சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் ஒன்றாய்க் கொண்ட நடராசர் தோற்றத்தைச் சிலையாக வடிவமைத்துச் சிதம்பரத்தில் வைத்து வழிபட வேண்டுமென்று விரும்பினான்.

அந்தக்காலத்தில் சிலை வடிவமைப்பில் புகழ் பெற்றிருந்த சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாய முத்து என்பவரை அழைத்து, அவரிடம் நடராசர் சிலை ஒன்றை வடிவமைத்துத் தரும்படி சொன்னான். மன்னனின் விருப்பப்படி அவரும் நடராசர் சிலையினைச் செப்புச் சிலையாக வடிவமைத்து அவனுக்குக் காண்பித்தார்.

அந்தச் செப்புச்சிலையின் வடிவத்தையும், அழகையும் கண்டு வியந்த மன்னன், செப்புச்சிலையை விடத் தங்கச்சிலையாகச் செய்தால் அதை விட, அழகாகவும், சிறப்பாகவும் இருக்குமே என்று நினைத்தான். அவன் சிற்பியிடம், அந்தச் செப்புச் சிலையைப் போன்றே தங்கத்தில் ஒரு சிலையைச் செய்யும்படிச் சொல்லி, அதற்குத் தேவையான தங்கத்தையும் கொடுத்தனுப்பினான்.

சிற்பிக்குச் சிறை

சிற்பியும் தூயதங்கத்தில் அடுத்த சிலையைச் செய்யத் தொடங்கினார். அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுப் பார்த்த போது, அதுவும் செப்புச்சிலையாகவே தோற்றமளித்தது. அதனைக் கண்டு கோபமடைந்த மன்னன், தான் சிலை செய்வதற்காகக் கொடுத்தத் தங்கத்தைச் சிற்பி திருடி விட்டதாக நினைத்து அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டான்.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், சிற்பி தங்கத்தைக் கொண்டே சிலை வடித்ததாகவும், தான் செப்புச்சிலையாக இருக்க விரும்பியதால் செப்புச்சிலையாகவே மாறி விட்டதாகவும் சொல்லிச் சிற்பியைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி சொன்னார். அதைக் கேட்ட மன்னன் சிவபெருமானிடம் தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.

சிதம்பரம்

அவனை மன்னித்த சிவபெருமான், “மன்னனே, உன் விருப்பப்படி உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, உனக்கு மட்டும் தங்கச்சிலையாகத் தோற்றமளிக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அது செப்புச்சிலையாகவே தோன்றும். முதலில் உருவாக்கிய செப்புச்சிலையை அந்தச் சிற்பியிடமே கொடுத்துத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லச் சொல்” என்றார்.

மறுநாள் காலையில் சிற்பியை விடுவித்த மன்னன், அந்தச் சிலையைத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லும்படி சொல்லி, அவருக்குத் துணையாகத் தனது படைவீரர்கள் சிலரையும் அனுப்பி வைத்தான். அதன் பிறகு, சிற்பி இரண்டாவதாக செய்த சிலையைச் சிதம்பரத்தில் இருக்கும் கோயிலில் வைத்து வழிபாடுகளைச் செய்தான்.

காணாமல் போன சிலை

சிற்பி, தான் முதலில் உருவாக்கிய செப்புச்சிலையினை மன்னன் அனுப்பிய வீரர்கள் உதவியுடன் தென்பகுதிக்குக் கொண்டு சென்றான். அவன் திருநெல்வேலிக்கு அருகில் நெருங்கிய போது, அந்தச் சிலையைச் சுமந்து வந்த படைவீரர்கள் சிலையின் எடை அதிகரிப்பது போல் தெரிகிறது என்றனர். சிற்பி அவர்களிடம் அந்தச் சிலையை அங்கு இறக்கி வைத்துவிட்டு அவர்களை ஓய்வெடுக்கச் சொன்னார். ஓய்வெடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் தூங்கிப் போனார்கள்.

அவர்கள் எழுந்து பார்த்த போது, அங்கிருந்த சிலையைக் காணவில்லை. அதனால் அச்சமடைந்த அவர்கள், அப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ராமபாண்டியன் என்பவனைச் சந்தித்துத் தாங்கள் கொண்டு வந்த நடராசர் செப்புச் சிலை காணாமல் போன விவரத்தைத் தெரிவிக்கச் சென்றார்கள்.

மன்னன் ராமபாண்டியன் தினமும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டுக் காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தான். முதல் நாளில் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த ஓடிய வெள்ளத்தால் அவனால் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்ல முடியாமல் போனது. அன்று முழுவதும் பட்டினியாக இருந்த அவன் கனவில் தோன்றிய இறைவன், அவனுக்கு மறுநாள் காலையில் நல்லதொரு செய்தி வந்து சேரும் என்று சொல்லியிருந்தார்.

சிற்பியும், அவருடன் வந்த வீரர்களும் மன்னன் ராமபாண்டியனைச் சந்தித்துத் தாங்கள் கொண்டு வந்த நடராசர் செப்புச்சிலை காணாமல் போன விவரத்தைச் சொன்னார்கள். நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தனக்கு, தனது ஆட்சிப் பகுதியில் வேற்று நாட்டிலிருந்து கொண்டு வந்த நடராசர் சிலை காணாமல் போய்விட்டது என்கிற செய்தியை நினைத்து அதிர்ச்சியடைந்தான்.

செப்பறை


மன்னன் தனது படைவீரர்களுடன் அவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றான். அப்போது, அருகிலிருந்த காட்டுக்குள் இருந்து சிலம்பொலிச் சத்தம் கேட்டது. அவன், தனது படைவீரர்களுடன் காட்டுக்குள் சென்று பார்த்தான். அங்கு ஓரிடத்திலிருந்து எறும்புகள் வரிசை வரிசையாகக் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தான்.

அந்த எறும்புகள் சென்ற வழியில் போய்ப் பார்த்த மன்னன் அங்கிருந்த சுயம்புலிங்கத்தையும், அருகில் நடராசர் செப்புச்சிலை இருப்பதையும் கண்டு வியந்து போனான். அவன் இரண்டையும் வணங்கி நின்ற போது, “மன்னனே, இந்த இடத்தில் எனக்குக் கோயிலமைத்து வழிபாடு செய்” என்று இறைவனின் குரல் அவனுக்குள் கேட்டது.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோயிலமைக்கப்பட்டது. நடராசருக்குத் தனிச்சன்னதியும் அமைக்கப்பட்டது. சிற்பியால் செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அமைந்திருக்கும் இந்த ஊர் செப்பறை என்றழைக்கப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராஜவல்லிபுரம் சென்று, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் செப்பறைக்குச் செல்லலாம்.

இரண்டு செப்புச்சிலைகள்

மன்னன் ராமபாண்டியன் தான் வழிபடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும், அந்தச் செப்புச்சிலையைப் போன்றே மற்றொரு சிலையைச் செய்து வைத்திட நினைத்தான். இந்நிலையில் அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் என்பவன் செப்பறையில் அமைக்கப்பட்ட கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டான்.

அக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த நடராசர் தோற்றத்திலான செப்புச்சிலை அவனை மிகவும் கவர்ந்ததால், தனது ஆளுகையிலிருக்கும் கட்டாரிமங்கலம் எனும் ஊரிலும் அதைப் போன்றதொரு நடராசர் சிலையைச் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினான்.

அதற்காக மன்னன் ராமபாண்டியனைச் சந்தித்து, அந்தச் சிற்பியிடம் சொல்லித் தனக்கும் ஒரு செப்புச்சிலையைச் செய்து தரும்படி வேண்டினான். மன்னன் ராமபாண்டியன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு ஒன்றும், சிற்றரசன் வீரபாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப கட்டாரிமங்கலத்துக்கு ஒன்றும் என இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து தரும்படி சிற்பியிடம் சொன்னான்.

அதன் பின்னர் சிற்பியும், நடராசர் தோற்றத்திலான இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து முடித்தார். தனக்குரிய செப்புச்சிலையினை எடுத்துச் செல்லத் தனது படைவீரர்களுடன் அங்கு வந்த சிற்றரசன் வீரபாண்டியன் இரண்டு செப்புச்சிலைகளும் அழகாக இருந்ததைக் கண்டு மயங்கினான். அந்த இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் சென்று விட வேண்டுமென்று நினைத்தான். இது போன்ற செப்புச்சிலையை இனிமேல் அந்தச்சிற்பி வேறு யாருக்கும் செய்து கொடுக்கக்கூடாது என்றும் நினைத்தான்.

கட்டாரிமங்கலம்


உடனே அவன், சிற்பியின் கைகளைத் துண்டித்து எடுத்து விட்டு, இரண்டு சிலைகளையும் தனது படைவீரர்களை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். அவனின் படைவீரர்கள் இரு சிலைகளையும் எடுத்துக் கொண்டு, இரு பிரிவாகப் பிரிந்து சென்றனர். ஒரு பிரிவினர் ஒரு சிலையைக் கட்டாரி மங்கலத்துக்குக் கொண்டு சென்று விட்டனர்.

மற்றொரு பிரிவினர் சிலையை எடுத்துக் கொண்டு சென்ற போது, இடையில் குறுக்கிட்ட தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த அவர்கள், அந்தச் சிலையை அப்படியே ஆற்றில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

கட்டாரி மங்கலத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மூன்றாவது செப்புச்சிலையைச் சிற்றரசன் வீரபாண்டியன் அங்கு கட்டி வைத்திருந்த கோயிலில் நிறுவினான். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேய்க்குளம் எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கட்டாரிமங்கலம் செல்லலாம்.

கரிசூழ்ந்தமங்கலம்


சில நாட்களுக்குப் பின்பு, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்ததும், நடராசர் தோற்றத்திலான செப்புச்சிலையைப் பார்த்த அந்த ஊர் மக்கள், ஆற்றிலிருந்து அந்தச் சிலையினை எடுத்து வந்து ஊரின் மேடாக இருந்த ஒரு இடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர்.

சிற்றரசன் வீரபாண்டியன் சிற்பியின் கையை வெட்டிவிட்டு, இரு சிலைகளையும் எடுத்துச் சென்றதை அறிந்த மன்னன் ராமபாண்டியன், சிற்றரசன் வீரபாண்டியனுடன் போரிட்டு, அவனது இரு கைகளையும் துண்டித்து அனுப்பினான்.

அதன் பிறகு, தாமிரபரணி ஆற்றின் கரையில் எடுத்து வைக்கப்பட்டிருந்த நடராசர் செப்புச்சிலையைத் திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ஆனால், அது முடியவில்லை. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், கரிய மேகங்கள் சூழ்ந்த அந்த இடத்திலேயே தான் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு ஒரு கோயில் கட்டித்தரும்படியும் சொன்னார்.

அதன்படி மன்னன் ராமபாண்டியனும் அந்த இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டிக் கொடுத்தான். சிற்பியால் செய்யப்பட்ட நான்காவது செப்புச்சிலை இருக்கும் கோயில் கரிசூழ்ந்தமங்கலம் எனும் ஊரில் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியிலிருக்கும் பத்தமடை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊருக்குச் செல்லலாம்.

கருவேலங்குளம்


அதன் பிறகு, மன்னன் ராமபாண்டியன் அந்தச் சிற்பிக்கு மரக்கை ஒன்றைத் தயாரித்துப் பொருத்தினான். மரக்கை பொருத்தப்பட்ட பின்பு, அந்தச் சிற்பி மரக் கைகளின் உதவியுடன் ஒரு நடராசர் செப்புச்சிலை ஒன்றைத் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். அந்தச் செப்புச்சிலை, இதற்கு முன்பு செய்யப்பட்ட நான்கு செப்புச்சிலைகளையும் விட மிகவும் அழகாக இருந்தது.

அந்தச் செப்புச்சிலையின் அழகில் மயங்கிய அந்தச் சிற்பி, அந்தச் சிலையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவர் கிள்ளிய வடு அந்தச் சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் சிலை கருவேலங்குளம் எனும் ஊரிலிருக்கும் கோயிலில் நிறுவப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் சேரன்மகாதேவி வழியாகக் களக்காடு செல்லும் பாதையில் சென்று கருவேலங்குளம் செல்லலாம்.

சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாய முத்து செய்த நடராசர் தோற்றத்திலான ஐந்து செப்புச்சிலைகள் சிதம்பரம், செப்பறை, கட்டாரிமங்கலம், கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம் எனும் ஐந்து ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் அவரின் சிற்பத்திறனை வெளிப்படுத்தியபடி அவரது புகழை இன்றும் நிலைத்திருக்கச் செய்து கொண்டிருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p184.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License