151. தனஸ் ஸங்கிராந்தி
சங்கிராந்தி நாளில் ஒரு கலசத்தில் தீர்த்தம் நிறைத்துச் சுவர்ணத்தில் சூரியப் பிரதிமை செய்வித்துக் கலசத்தில் சூரியனைப் பூஜித்து வேதியர்க்கு அன்னமளித்துத் தானஞ் செய்வது.
152. தனுஸ் ஸங்கிராந்தி
தனுர் மாதத்தில் உண்டாகுஞ் சங்கிராந்தி. இதில் சூர்யனைக் கலசத்தில் ஆவாகித்துப் பூஜித்துப் பிராமணர்களுக்கு அன்னாதிகள் அளிப்பது.
153. மகா சங்கிராந்தி
தயிர்க்குடத்தில் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியை யசோதையுடன் சுவர்ண பிரதிமை செய்வித்துத் தாபித்துப் பூஜை செய்து பிராமண போஜனஞ் செய்வித்துப் பிரதிமாதானஞ் செய்வது.
154. மௌன விரதம்
இதில் எங்கு மாதம் விரதம் அநுட்டித்தல் வேண்டும். இது லட்சுமி நாராயணப் பிரதிமை போன்றனாற் செய்வித்து விதிப்படி பூசித்துப் பிராமண போஜனஞ் செய்வித்து வேதியர்க்குத் தானஞ் செய்வித்து விரதமிருப்பது.
155. லட்சதீபதான விரதம்
இது நெய்யினால் சிவாலாயாதி ஆலயங்களில் லட்சமாயினும், அதிற் பாதியாயினும் அதிற்பாதியாயினும் தீபமிட்டுப் பூஜையாதிகள் செய்யின் தீபங்கள் எவ்வளவோ அவ்வளவு காலம் புண்ணிய உலகத்திருப்பர்.
156. துளசிவிரதம் பிரதட்சணம்
வீட்டிலாவது, பூந்தோட்டத்திலாவது, மேடை கட்டுவித்து அதில் துளசி மாடமியற்றித் துளசி மந்திரத்தால் பூஜித்து லட்சுமி நாராயண சுவர்ண பிரதிமை வைத்துப் பூஜித்து ஹோம முதலிய அக்னி காரியஞ் செய்து பிராம்மண போஜனஞ் செய்வித்துத் தட்சணை கொடுத்து லட்சப் பிரதட்சணஞ் செய்வது. இதை அநுட்டித்தோர் சகல சித்தியும் அடைவர்.
157. அநுமப்பிரதட்சணம்
ஆடி மாதம் சுக்கில பட்ச ஏகாதசி, துவாதசி, பௌர்ணமி முதலிய தினங்களில் விரதமிருந்து கோப்பிராம்மண பூஜை செய்து அநும மந்திரஞ் செபித்து அநுமப்பிரதிட்டை செய்து லட்சம் பிரதட்சணஞ் செய்யின் பூத பிசாசு பயரோகங்களிலிருந்து நீங்குவர்.
158. மாதா பித்ரு சேவனபிரதம்
இது தாய் தந்தையரைப் பூஜித்து விரதம் இருப்பது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாதலின் அவர்களைச் சுத்தனாய் நாடோறுஞ் சேவிக்கின் எல்லா நலமும் அடைவன் எனக் கூறியிருக்கிறது. இங்ஙனம் பிதுர்வாக்யம் கடவாதார் ஸ்ரீராமன், பரசுராமன், பார்க்கவர் முதலியோர். இங்ஙனஞ் செய்வாரைத் தேவரும் வணங்குவர்.
159. பதிசேவன விரதம்
இது தன் நாயகனே தெய்வமென்றும் வேறு தெய்வம் போற்றாளாய் நாயகனையே சேவித்திருக்குங் குலமகள் செய்யும் விரதம். இது நாரி தான் மணங்கொண்ட நாள் தொடங்கி நாடோறுங் குலமகள் தன் கொழுநனைப் பேணிப் பூஜிக்கும் விரதம். இவ்விரதம் அநுட்டித்தோர் பதிவுலகம் அடைவர் என ஸ்காந்த புராணம் கூறுகிறது. ஸ்திரீகளுக்கு இதனினும் மேலான விரதம் இல்லை. இது சர்வ விரதங்கள், தீர்த்தங்கள், தர்மங்கள், ஷேத்திரங்கள், யஞ்ஞ, யோக, போகங்களினும் உயர்ந்ததாகும்.
இன்னும் பல விரதங்கள் உண்டு. அவை;
1. தேவ விரதம்
2. ருத்திர விரதம்
3. வீர விரதம்
4. பிரீதி விரதம்
5. கௌரி விரதம்
6. காம விரதம்
7. சிவ விரதம்
8. சௌமிய விரதம்
9. சௌபாக்கிய விரதம்
10. சாரஸ்வத விரதம்
11. சம்பத் விரதம்
12. சுத்தி விரதம்
13. கீர்த்தி விரதம்
14. காமதுக் விரதம்
15. பித்ரு விரதம்
16. ஆனந்த விரதம்
17. ராஜ்ய விரதம்
18. அஹிம்சா விரதம்
19. சூரிய விரதம்
20. விஷ்ணு விரதம்
21. சீல விரதம்
22. தீபவிரதம்
23. தீப்பிய விரதம்
24. சாந்திவிரதம்
25. பிரம்ம விரதம்
26. சுவிரதம்
27. கல்பவிரதம்
28. பீமவிரதம்
29. தாரவிரதம்
30. மகாவிரதம்
31. ரபாவிரதம்
32. பிராப்தி விரதம்
33. சுகதி விரதம்
34. வைஸ்வான விரதம்
35. கிருஷ்ணவிரதம்
36. தேவி விரதம்
37. பானு விரதம்
38. விநாயக விரதம்
39. காலவிரதம்
40. சௌர விரதம்
41. நாராயண விரதம்
42. வருஷ விரதம்
43. பிராஜாபத்திய விரதம்
44. திரியம்பக விரதம்
45. கிருத விரதம்
46. இந்திர விரதம்
47. சதாசிவ விரதம்
48. அஸ்வ விரதம்
49. கஜ விரதம்
50. நிர்துக்க விரதம்
51. வருண விரதம்
52. சந்திர விரதம்
53. ருத்திர விரதம்
54. பவானி விரதம்
55. ஸ்நாபக விரதம்
56. தாம விரதம்
57. சிகி விரதம்
58. விப்ர விரதம்
முதலியன. (மச்சபுராணம்)