126. மார்கழி அமாவாஸ்யை - கௌரீதபோ விரதம்.
127. அச்வத்த பிரதட்சிண விரதம்
அமாவாசையில் சோம வாரம், சப்தமியுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தியுடன் கூடிய செவ்வாய்க்கிழமை, அஷ்டமியுடன் கூடிய புதன் கிழமை இத்தினங்களில் புண்ய தீர்த்த கூப நதி தீரங்களில் நித்யகடன் முடித்துச் சங்கல்பஞ் செய்து கொண்டு திரிமூர்த்தி சொரூபமாயிருக்கும் அரச மரத்தைப் பூஜித்துக் கலச பூஜை செய்து அடி பிராமணராகவும், இலைகள் ருக் வேதமாகவும், பழங்கள் யஞ்ஞமாகவும், கிளைகள் நாராயணனாகவும் எண்ணி நாராயணனையும் சிவபிரானையும் பூஜித்துப் பின் மரத்திற்கு அபிஷேகாதிகள் நடத்திச் சோடசவுபசாரஞ் செய்து விருட்சராஜனை நமஸ்கரித்து 108 பிரதட்சணஞ் செய்து பலத்தைக் கேட்டுத் தட்சணை முதலியன கொடுத்துப் பிராம்மண போஜனஞ் செய்வித்து விரதமிருப்பது. இது வேத மயமாதலினாலும், திரிமூர்த்திகளும் யஞ்ஞத்தின் பொருட்டு இவ்விருஷ ரூபமானதாலும், இதனைப் பூஜிக்க வேண்டியது. புருஷராயினும், பெண்களாயினும், லட்சம் பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனடியில் தம்பதிகளை லட்சுமி நாராயணராக மதித்துப் பூஜை செய்யச் சனி வாரம் உசிதம். இதனடி பிரமரூபம். மத்யம் விஷ்ணுரூபம், அக்ரம் சிவரூபம் ஆதலால் அச்வத்த பூஜை செய்க. இதனைச் செய்தோர் பல ரோகங்கள் நீங்கிப் புத்ர போக பாக்யங்களை அடைவர். “பிரம்ம விஷ்ணுருத்ரசாட்ஷாத் அச்வத்தரூபிந” மூலம் ஸ்நாதனம் பிரம்ம கர்ப்போக்னிஸ் ஸமிதோரவி: சந்தாம்ஸிதஸ்யா பர்ணானி விருஷோசௌசவை வைஷ்ணவ: அச்வத்த சர்வ விருக்ஷாணாம் அக்ரணீர் வைதிகஸிவ” என்பதால் அரசைப் பூஜிக்க. இதைப் பூஜிக்க சநி ஸோம வாரங்கள் விசேஷம். இவ்வாறு பூஜித்துப் பிராம்மண போஜனஞ் செய்வித்துத் தட்சணாதிகள் கொடுத்து விரதமிருந்து புண்ய கதை கேட்க வேண்டும்.
128. அர்த்தோதயம கோதய விரதம்
இது தை, மாசி மாதங்களில் அமாவாஸ்யை, வியதிபாதம், திருவோணம் நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கூடிய நாள். இதில் விரதம் விசேஷம். இதில் திரிமூர்த்திகளின் பிரதிமைகளைப் பொன் வெள்ளிகளில் செய்வித்து ஊஞ்சலில் படுக்க வைத்து ஹோமாதிகள் செய்து தட்சணை போஜனாதிகளுடன் வேதியர்க்குப் பிரதிமைகளைத் தானஞ் செய்வது. மேற் கூறிய நட்சத்திரங்கள் திங்கள், புதனில் வரின் மகோதயமாம்.
129. வார விரதம் - ஞாயிற்றுக்கிழமை விரதம்
இந்நாளில் விரதங் கொள்ள நித்யகன்மம் முடித்து ஒரு சுத்த இடத்தில் மெழுகிச் சர்வதோபத்ர மண்டலமிட்டு அதன் மேல் தாம்ர பீடத்தில், சூர்ய மண்டலம் ரதம் சந்தனத்தால் எழுதி அதனிடையில் சூரிய யந்திரம் எழுதி அதன் பக்கலில் கணபதி யந்திரம் எழுதி கணபதியைப் பூஜித்துப் பின் அறுகோண யந்திரம் சூரியஷ்டாக்ஷரம் எழுதிக் கலசாவாஹனஞ் செய்து பிராணப் பிரதிஷ்டை செய்து சூர்யபூஜை கிரமப் படி செய்வது. இதை அநுட்டிப்போர் எல்லா நலமும் அடைவர். இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தில் உத்தராயணத்தில் சூரியன் மகர ராசியில் இருக்கையில் சுக்ல பட்சத்தில் சப்தமியில் வருவது நிரசனார்க்க வார விரதம் எனப் பெயர். இதில் விதிப்படி விரதமிருந்தவர் ரஜஸ்வலை பார்த்த தீண்டிய தோஷங்கள் நீங்குவர். இதில் துண்டிலன் என்போன் விரத உத்யாபன தினத்து ஒருவன் வீட்டில் புசிக்கத் தீர்த்தங் கொண்டு தனக்கிருந்த குஷ்ட வியாதி நீங்கினன்.
130. நித்யாரவி வார விரதம்
முற் கூறியபடி செய்து ரவி வாரந் தோறும் விரதமிருக்கின் சூர்ய சாயுஜ்யம் அடைவர்.
131. சோமவார விரதம்
இது சிவபிரான் விரதம். இதனைச் சோம வாரந் தோறும் அநுட்டித்தல் வேண்டும். இது பிராம்மண தம்பதிகளை உமாமகேசராகப் பாவித்துப் பூஜித்து அவர்களுக்கு உணவாதிகள் அளித்து விரதம் இருப்பது. சீமந்தினியைக் காண்க. இது கார்த்திகை முதலிய மாதங்களிலிருந்து தொடங்கல் வேண்டும்.
132. மங்கள கௌரி விரதம்
இது ஆவணி மாதம் செவ்வாய்க் கிழமையில் அநுட்டிப்பது. இது கன்னிகையராயின் தாய் வீட்டில் அநுட்டித்துப் பின் மாமியார் வீட்டில் அநுட்டிக்க வேண்டும். இதில் கௌரி பூஜை விசேஷம். இதை அநுட்டித்தவர் எல்லா மங்களங்களையும் அடைவர்.
133. மங்களக்ரஹ விரதம்
இது மங்கள வாரத்தில் செந்நிற புஷ்பம் சந்தனாதிகளால் செவ்வாய்ச் சக்கிரத்தில் செவ்வாய்க் கிரகத்தைப் பூஜிக்கின் கடன் முதலியன தீர்ந்து புத்ராதி சம்பத்தை அடைவர்.
134. புதவார விரதம்
புத வாரத்தில் புதனை அவனுக்குரிய யந்திரத்தில் ஆவாஹனஞ் செய்து பூஜிக்கின் வாணிபம் பெருகும்.
135. குரு வார விரதம்
இதில் குருவைத் தனக்குரிய சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கின் வித்யா செல்வ முதலியன பெறுவர்.
136. சுக்ல வார விரதம்
தேவி விரதம் காண்க. வரலட்சுமி விரதம் - அது ஆவணி மாதம் சுக்ல பட்ச த்விதியை சுக்ர வாரத்தில் அநுட்டிப்பது. இதனைச் சித்ரநேமி என்பவன் அநுட்டித்து எல்லாச் சித்திகளையும் பெற்றான். கல சத்தில் சதுர்ப்புஜமுள்ள லட்சுமிதேவி பிரதிமை செய்து கலச பூஜை செய்து ஸ்தாபித்துப் பூஜை செய்து தானாதி போஜனாதிகள் செய்விப்பது. இது கற்புள்ள மங்கையர் ஐஸ்வர்யத்தை எண்ணி நோற்பது. குண்டினபுரத்துச் சாருமதியின் பொருட்டு லட்சுமி தரிசனந் தந்து தன்னை இத்தினத்தில் பூஜித்து விரதமிருப்போர் அஷ்ட ஐஸ்வர்யம் அடைவர் என்று மறைய அவள் அவ்வாறு அநுட்டித்துப் பெரு வாழ்வடைந்தனள்.
137. சநிவார விரதம்
நிலத்தில் பொன் முதலிய லோகங்களால் சநிப்பிரதிமை செய்வித்துப் பூஜித்து ஓமாதிகள் செய்து வேதியர்க்குத் தட்சணை முதலிய அளிப்பது. இவ்வாறு செய்வோர் சனிக் கிரகத்தால் உண்டாகும் தீமை நீங்குவர்.
138. சநிவரா வேங்கடேசுவர விரதம்
இது ஆவணி மாதம் சனி வாரத்தில் வருவது. இந்நாளில் வேங்கடேசுரனை எண்ணி விரதமியற்றித் தானாதிகள் செய்யின் சகஸ்ர சஷ்டி விரத பலம் பெறுவர். இதனைப் புரட்டாசியில் அநுட்டிக்கின்றனர்.
139. வியாதிபாத விரதம்
இதில் விரதமிருந்தோர் சூர்ய உலகம் பெறுவர். வியதிபாதங் காண்க.
140. மாஸ உபவாஸம்
இது ஆடி மாதம் சுக்ல ஏகாதசி முதல் கார்த்திகை சுக்ல ஏகாதசி வரையில் உபாசிப்பது. இது லட்சுமி நாராயண உருவம் பிரதிமையில் செய்து பூசித்து விரதம் இருப்பது.
141. தான்ய சங்கராந்தி விரதம்
இது விஷ்வத் புண்ய காலத்தில் சூரியனைப் பூஜித்துத் தான்யதானஞ் செய்வது. இது செய்தார் ஆயிரம் அக்னிஷ்டோம பலம் அடைவர்.
142. லவண சங்கிராந்தி விரதம்
வருடக்கடைசியில் லவணகும்பம் தாபித்துச் சூரிய பூஜை செய்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதைச் செய்தவர் சூர்யலோகம் அடைவர்.
143. போகசங்கிராந்தி விரதம்
இது வருடக்கடைசியில் சூரியபூஜை செய்து தனதான்ய பசுவாதிகளை வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூரிய பூஜை செய்ய வேண்டியது.
144. ரூபசங்கிராந்தி
இது சங்கிராந்தி காலத்தில் பொன் பாத்திரத்தில் பொன்னிட்டு நெய் வார்த்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூரியபூஜை செய்ய வேண்டியது.
145. தேஜஸங்கிராந்தி
செந்நெல் அரிசி இவற்றின் மேல் கலசம் தாபித்து மோதக முதலியன நிவேதித்து வேதியர்க்களிப்பது. இது வருஷ முதலிற் செய்து கடையில் உத்யாபனமும் செய்வது.
146. சௌபாக்கிய சங்கிராந்தி
இது சங்கிராந்தி வாரத்தில் முதலில் சூரியனை அர்ச்சித்து வஸ்திர முதலியவை கலசத்திற்கு அணிந்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதில் லவண பர்வத தானமுஞ் செய்ய வேண்டும்.
147. தாம்பூல சங்கிராந்தி
வருடாரம்பத்தில் சூர்யார்ச்சனை செய்து ஒரு பாண்டத்தில் வெற்றிலை, பாக்கு முதலியவற்றோடு வாசனைத் திரவியங்கள் வைத்துப் பிராமண தம்பதிகளைப் பூசித்து அளிப்பது.
148. மனோரத சங்கிராந்தி
ஒரு கும்பத்தில் வெல்லம் நிறைத்துப் பூஜித்து வேதியர்க்கு விருந்தளித்து அளிப்பது. இதில் சூர்யபூஜை செய்ய வேண்டும்.
149. அசோக சங்கிராந்தி
உத்தராயன தட்சணாயனம், விஷ்வத் புண்ய காலம், வியதிபாதம் இக்காலங்களில் பொன்னில் சூர்ய பூஜை செய்து திலதான பூர்வகமாய்ப் பூசித்துக் கபிலை தான முதல் எல்லா தானங்களுஞ் செய்து பிராம்மண போஜனஞ் செய்வித்து வேதியர்க்குப் பிரதிமையைத் தருதல். இத்தானஞ் செய்தார் ஆயுராரோக்ய சம்பத்துக்களைப் பெறுவர்.
150. ஆயுஸ் ஸங்கிராந்தி
சங்கிராந்தி நாளில் பசுவின் பால் வெண்ணெய் முதலியவை கும்பத்தில் பூரித்துச் சூரியனைப் பூஜித்து வேதியர்க்கு அன்னபானாதி தட்சணைகள் அளித்து வேதியர்க்குக் கொடுப்பது.