இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

பஞ்ச பூதத் திருத்தலங்கள்

ச. பர்வதா


உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் உலகைப் படைத்தான்; உள்ளம் மகிழ்ந்தான்; உலகே அவன் ஆனான். மண் படைத்தான்; நீர் படைத்தான்; காற்று மண்டலத்தைப் படைத்தான்; தீயைப் படைத்தான்; வானும் படைத்தான்; உலகில் உயிரும் படைத்தான். காலையே போன்று இலங்கும் மேனியும், கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறும், மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றையும் உடைய சிவனே, புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பறவையாய்ப், பாம்பாகிக், கல்லாய், மனிதராகிப் பின் உயிரே அவன் ஆனான்; உடலாகி, உள்ளமும் ஆனான்; உண்மையும் இன்மையும் அவனே ஆனான்.

தன்னின்று தான் படைத்த மனிதனே தன்னை வணங்கும் பெற்றிமையும் பெற்றான். எல்லாமாய் இலங்கும் கடவுளின் தன்மையை, மனிதன் உணர ஒரு வாய்ப்பாக அமைவதே கோயில். கோயில்கள் பலப் பல. ஒவ்வொரு கோயில்களும் ஏதேனும் ஒரு நோக்கத்துடன், அமைப்புடன் எழுப்பப்பட்டுள்ளன. அவை தனக்கென்று ஒருசில சிறப்புகளைக் கொண்டிருக்கும். அவற்றுள் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் முதலான ஐம்பெரும் பூதங்களையும் படைத்தவன், தானே அவையாகி நின்று அருள் புரியும் தலங்களும் உள்ளன. இப்போது நாம் அவற்றைத் தரிசிக்கச் செல்லலாம் வாருங்கள்.

பிருதிவித் தலம் - காஞ்சிபுரம்

பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகப் போற்றப்படுவது காஞ்சி மாநகரம். பிருதிவி என்பதற்கு மண் என்று பொருள்.

சிவ பெருமானின் துணைவியாராகிய உமாதேவியார், உலகம் உய்வு பெற வேண்டி, ஆகம விதிப்படி ஈஸ்வரனைப் பூஜிப்பதற்காகக், கைலாயத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார். காஞ்சி மாநகரை வளம் செய்யும் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மண்ணிலே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார். அச்சமயம் கம்பாநதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அஞ்சிய உமாதேவியார் லிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டார். அதனால் இறைவனின் திருமேனி குழைந்தது. அதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயர் உண்டாயிற்று. அம்பாள் ஏலவார் குழலி அம்மை எனப்பட்டார்.

கம்பா நதிக் கரையில் ஏகாந்த நிலையில் இத்திருவிளையாடல் நடைபெற்றதால் பரமன் ஏகாம்பர நாதர் எனப்பட்டார். இக்கோயிலின் தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. பிருதிவி என்பதற்கு மண் என்பது பொருள். இக்கோயிலில் மண்ணால் அமைந்த லிங்கத்திருமேனிஉருவில் இறைவன் அருளாட்சி செய்வதால், இத்தலம் பிருதிவித் தலமாகப் போற்றப்படுகின்றது.



திருவொற்றியூர் எல்லையைக் கடந்தவுடன் இரு கண்களின் பார்வையையும் இழந்த சுந்தரமூர்த்தி நாயனார் இடதுகண் பார்வையைப் பெற்ற தலம் இது. ‘நகரேஷு காஞ்சி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் பெருமையை உடைய இத்தலம் முத்தித் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

“உன்னினும் முத்தி வழங்கு காஞ்சியைப்போல்
உலகில்வே றொரு நகருளதோ”

என்பார் கந்த புராண ஆசிரியர்.

“அவ்வூர்தன்னை அண்ணினுங் கேட்பினும் சொலினும்
வணங்கினும்பே ரின்பவீ டெவர்க்கும் நல்குமே”

என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

அப்புத் தலம் - திருவானைக்கா

பஞ்சபூதத் தலங்களில் அப்பு ஸ்தலம் என்று கூறப்படுவது இத்தலம். அப்பு என்றால் நீர். கோயில் கர்ப்பக்கிருகத்தில் எப்போதும் நீர் நிரம்பி இருக்கும்.

“செழுநீர்த் திரளைச் சென்றாடினானே”

என்று தேவாரம் கூறுகிறது. வெள்ளை நாவல் மரத்தடியில் அகிலாண்ட நாயகி, காவிரி நதியில் நாதனைக் கண்டு பரவசம் கொண்டு ஆராதித்த தலம். பரமன் ஜம்புகேஸ்வரன் எனப் போற்றப்படுகிறான்.

“ஆனைக் காரருள் புரிதலின் ஆனைக்கா
ஆயிற்று” (திரு. புராணம்)

வெள்ளையானை வழிபட்ட தலமாதலால் ஆனைக்கா என்று பெயர்பெற்றது. சிலந்தியும் முத்தி பெற்ற தலம்.

சோழமன்னன் ஒருவன் காவிரியில் குளித்தபோது அவன் அணிந்திருந்த பதக்கம் நதியில் விழுந்துவிட, அவன் சிவபெருமானிடம் “நீரே கொண்டருளும்” என வேண்டினான். அது திருமஞ்சனக் குடத்தில் அகப்பட்டு, அபிஷேகத்தின் போது இறைவன் மீது விழ, அதனை ஆடல்வல்லான் அணிந்து, அரசனுக்கு அருள்புரிந்த தலம் இது. மேலும் ஆற்றில் மிதந்து வந்த நாவற்பழத்தைச் சம்புமுனிவர் உண்ண, அது அவர் வயிற்றில் முளைத்து, கபாலத்தைக் கிழித்து, மரமாக வளர, அதன் சுமை தாங்காது, அவர் சிவனை வேண்டினார். ஈசனும் அவரை அங்கிருக்கச் செய்து, அம்மர நிழலில் தாமும் வீற்றிருப்பதாக ஐதீகம்.



வாயு தலம் - திருக்காளத்தி

வாயு ஸ்தலமாகப் போற்றப்படுவது திருக்காளத்தி. சந்நிதானத்தில் எரியும் தீபங்களில் ஒன்று, காற்றினால் மோதப்பட்டது போல் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ காளஹஸ்தி என்பது, ஸ்ரீ - சிலந்தி ; காளம் - பாம்பு ; ஹஸ்தி - யானை - மூன்றும் பூசித்து முத்தி பெற்ற தலம்.

இம் மலைகிழவோனை அன்புடன் வழிபட்டு தன் கண்ணை இடந்து அப்பி, அருந்தொண்டு செய்த கண்ணப்பர் ஆறே நாளில் அமரலோகம் அடைந்தார்.

“வேயனைய தோளுடையோர் பாகமது வாகவிடை ஏறி சடைமேற்
தூயமதி முடிசுடு காடில்நட மாடிமலை தன்னை வினவில்
வாய்க்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல் ராகு நயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்தி மலையே”

என்று திண்ணனார், கண்ணப்பர் ஆன செய்தி திருவிளையாடற்புராணத்தில் இடம் பெறுகின்றது.

தேயு தலம் - திருவண்ணாமலை

பஞ்சபூதத் தலங்களில் தேயுதலம் என்று போற்றப்படுவது திருவண்ணாமலை. தேயு என்பது அழித்தலுக்குக் காரணமாகிய அக்கினியைக் குறிக்கும். இது சோதிவடிவில் நிலை பெற்று, நினைக்கவே முத்திதரும் நிர்மலமான தலமாகும். எம்பிரான் சோதிமயமானவன். தீயவை அனைத்தையும் நீறாக்கித் தன்மயமாக்கிக் கொள்ளும் பேராற்றல் படைத்த நெருப்பின் வடிவம்; நானே பரம்பொருள் என்று வாதிட்ட பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் முன் சிவபெருமான் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், அக்கினிமலையாய்த் தோன்றி நின்றார். பிரமன் அன்னப்பறவையாய் ஆகாசம் நோக்கிச் சென்று முடி தேட, விஷ்ணுவோ பன்றி உருவெடுத்து பூமியைப் பிளந்து, அடி தேடினார். அழல் வடிவில் நின்று அவர்தம் அகந்தை தீர்த்து, தாமே பரம்பொருள் என்று நிலைநாட்டிய தலம் திருவண்ணாமலை.

“செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்குமலர்ப் பாதம்”

என்று திருவாசகமும்,

“கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்”

என்று திருவிளையாடற்புராணமும் இந்நிகழ்வைப் போற்றுகின்றது.

உலகின் அக்ஞான இருள் நீக்கி, ஞானச் சுடராய் நிற்கும் அருணாசலேசுவரர் கார்த்திகை தீபத் திருநாளில் இன்றும் சோதிமயமாய் திருவண்ணாமலையில் தரிசனம் தருகின்றார். மகிழ மரத்தடியில் பார்வதி தேவி உண்ணாமல் தவம் செய்து இடப்பாகம் பெற்றது இத்தலத்திலே தான்.

“ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிபோம் நமதுள்ள வினைகளே”


ஆகாயத் தலம் - சிதம்பரம்

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகப் போற்றப்படுவது சிதம்பரம். “பூலோக கைலாயம்” எனப்படும் இப் புண்ணிய பூமியைத் தரிசித்தாலே நமக்கு முத்தி கிட்டும். ‘கோயில்’ என்னும் சிறப்புப் பெயராலும் இத்தலம் குறிக்கப்படும். பஞ்ச சபைகளில் கனகசபையாகிய இப்பொன்னம்பலத்திலே எந்நேரமும் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கின்றார். அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று நிலைகளில் இங்கு பரமனைக் காணலாம்.

ஆத்ம ஜோதியாய் மறைந்து நிற்கும் இறைவன் பொன்னாலான வில்வ மாலை அணிந்து, ஆகாயமாய்ப் பரந்து விரிந்த நிலையில், அருவமாகக் காட்சி தருகின்றான். எல்லாமாகி நிலைத்து நிற்கும் இறைவனின் நிலையைச் சொல்லாமல் சொல்லி நிற்கும் இக்காட்சியே சிதம்பர ரகசியம்.

“அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே”


சிதம்பரத்தைத் தரிசித்தால் மட்டுமின்றி நினைத்தாலே முத்தி கிட்டும். பிறப்பினின்றும் விடுபடலாம்.

முடிவுரை

இவ்வாறு காணும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திலங்கும் ஈசன் நாம் உண்ணும் உணவாய், பருகும் நீராய், உணரும் உணர்வாய் ஒளிர்கின்றான். தென்னாட்டில் பல்வேறு தலங்கள் இருந்த போதும் ஐம்பெரும் பூத வடிவில் திகழ்ந்து, இறை உண்மையை உணர்த்தும் இத்தலங்களைத் தரிசிக்க நாம் என்ன பேறு பெற்றோம்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p193.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License