இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

இந்து சமயம் சொல்லும் தானங்கள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


இந்து சமயம் குறிப்பிடும் பல்வேறு தானங்களில் பஞ்சலாங்கல தானம், மாகட தானம், இரண்டய அச்வதானம், இரண்ய இடபதானம், இரண்யகற்பதானம், இரண்ய கன்னிகாதானம், இரத்தினம் - மணி, இரத்தினதேனு தானம், இலக்குமி தானம், உபயமுகி தானம், கற்பகக்கொடி தானம், கற்பகத்தரு தானம், கோகர்ணம், விஷ்ணு விம்பதானம், திலதேனு தானம், திலபத்ம தானம், விச்வநேமி தானம், சத்தசாகரத்தானம் ஆகிய தானங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பஞ்சலாங்கல தானம்

சந்தன மரத்தாலேனும், தேக்காலேனும், ஐந்து கலப்பைகள் செய்து கொம்பைப் பொன்னாலும், குளம்பை வௌ்ளியாலும் அலங்கரித்துள்ள எருதுகள் பத்துப் பூட்டி ஓமஞ் செய்து பத்து வேதியரைப் பூசித்து ஒரு சிற்றூராயினும், பேரூராயினும் பிராமணருக்குக் கொடுத்துக் கலப்பையைத் தானஞ் செய்வதாம்.

மாகட தானம்

ஒரு சாணிற்குக் குறையாது அதிகம் நுாறு சாணாய் ஒரு பொற்குடம் செய்வித்து வயிரத்தால் அலங்கரித்து நெய், பால், குடத்தில் விட்டு ஒரு கற்பகத்தரு செய்து அமைத்து அடியில் திரிமூர்த்திகள், கணபதி, வேதம், புராணம் இவர்களை எழுந்தருளச் செய்து கும்பத்தைச் சூழத் தானியாதிகள் பரப்பித் தான் சுகிர்பூசிதனாய்க் கும்பத்தை வலம் வந்து வேதியர்க்குக்குக் கடத்தைத் தானம் செய்வதாம்.

இரண்டய அச்வ தானம்

1008 அல்லது 108 கழஞ்சு பொன்னால் ஒரு குதிரை செய்வித்து வௌ்ளியினால் முகமுங், காலும் அமைத்து அலங்கரித்து வேதம் நன்றாக அறிந்த வேதியனை அழைத்து அவனை இந்திரனாகப் பாவித்து 5 கழஞ்சு பொன், தட்சணை வைத்து வேதியர்க்கு உணவு அளித்தலாம். இதைச் செய்தவர் சுவர்க்காதிகளை அடைவர்.

இரண்ய இடபதானம்

முகமும், கொம்பும் வௌ்ளியாலும் வால் கழுத்து முசிப்பு இவைகளுக்குப் பதுமராகம், கோமேதகம், முத்து இவைகளைப் பதிப்பித்து, பொன்னால் இடபம் உருவஞ் செய்வித்து படிகத்தாற் பிறை செய்து கழுத்திலணிந்து முத்துகளாற் பலவணிகள் செய்திட்டுக் கிழக்கு நோக்க வைத்து வேதியர்க்குத் தட்சணையுடன் அளித்து அமுது செய்வித்தலாம். இவை செய்தவர் சுவர்க்காதி போகம் அடைவர்.



இரண்யகற்பதானம்

பொன்னினால் மனிதன் புகத்தக்க ஒரு இடம் விதிப்படி செய்வித்து யாக வேதியகையிலிருத்திப் பூசித்து அதில் யஜமானன் புகுந்து கிழக்காய் இருக்குங் காலையில் கருப்பாதானம், சீமந்தம் முதலியன செய்து வலப்பால் அறுகும், அத்திப்பழத்தையும் பிழிந்து, பின் ஆண் (புருடன்) குடத்தினின்று எழுந்த பின்பு சாதகர்ம முதலியன செய்வித்து வேதியர்க்கு முதல் அளித்து, முப்பது கழஞ்சியிற் பெண்ணுருச் செய்வித்து ஆலயத்திற்கு அதைத் தானஞ் செய்து குடத்தையும் மற்றுள்ள அதிக பொருட்களையும் வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.

இரண்ய கன்னிகாதானம்

ஒரு பிராமணக் கன்னிகையைத் தந்தையிடம் விலைக்கு வாங்கி, அவளைப் பொன்னாலும், ஆடையாலும் அணிந்து பிரமச்சாரிக்குத் தீ முன்னர்ப் பாணிக்கிரகணஞ் செய்வித்துப் பூமி முதலிய தானஞ் செய்து வேதியரை அருத்துவதாம்.

இரத்தினம் - மணி. இரத்தினதேனு தானம்

வேதிகை செய்வித்து அதில் வௌ்ளுப்புப் பரப்பி அதில் கன்றினுடன் பசு எழுதி மூக்கில் நூறு புட்பராகம், முகத்தில் 81 பதுமராகம், நெற்றியில் முத்து, பொற்பட்டம், கண்களில் நூறு முத்துக்கள், கழுத்தில் நூறு கோமேதகம், முதுகில் நூறு நீலம், இரண்டு பக்கங்களில் நூறு சீவரத்னங்கள், பற்களுக்குப் பளிங்கு, வாலில் நூறு முத்துக்கள், அரையில் நூறு மாணிக்கம், பொன்னாற் குளம்பு, மூக்கில் சூர்ய சந்திரகாந்திகற்கள், வௌ்ளியால் நாபி, சந்தனம், குங்குமம், கற்பபூரம் முதலியவைகளால் உரோம கூபங்கள் செய்வித்துக் கருடப்பச்சை தன்னாற் கால்கள் அமைத்து, சந்திகளின் நவமணிகள் பதித்து, கற்கண்டிற் கோமயம் அமைத்து நெய்யைக் கோசலமாக வைத்து, கன்றும் இவ்வாறமைத்து, காலில் கவடி கட்டி, இடங்கள் தோறும் நெல் முதலிய குவித்து வேதிகையிற் பூசை செய்வித்து வேதியர்க்கு அருத்தித் தட்சணையுடன் தானஞ் செய்வதாம். (ஸ்ரீ இலங்கபுராணம்.)

இலக்குமி தானம்

ஆயிரம் முதல் நூறு கழஞ்சு இறுதியான பொன்னில் இலட்சுமியின் உருச்செய்து விதிப்படி பூசித்துத் தட்சிணையுடன் வேதியர்க்குத் தானஞ் செய்வது.

உபயமுகி தானம்

ஆவீனும் போது கன்று சிரசு உதயமான பின் அப்பசுவைத் தானம் பண்ணல்.

கற்பகக்கொடி தானம்

குறைந்தது ஐந்து பலத்தில் இரண்டு கற்பகக் கொடிகள் செய்வித்துப் பத்துப் பலம் பொன்னாற் கின்னர மிதுனம் இருத்தி வேதிகையில் கொடியை வைத்துப் பிராமி அநந்த சத்தியைப் பூசித்துப் பிராமணர்க்கு அன்னதானம் செய்வித்துக் கொடியைப் பிராமணர்க்குத் தானஞ் செய்வது.



கற்பகத்தரு தானம்

பொன்னாற் செய்த எட்டுச் சாகைகளை உடைய கற்பகத்தருவின் அடியில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து அதைச் சுற்றி பிரமன் முதலிய தேவரையும் தாபித்து தருவைச் சிவாலயத்திற்கேனும், வேதியர்க்கேனும் தானஞ் செய்வது.

கோகர்ணம்

1. கோகர்ண தேசத்திலிருக்கும் சிவஷேத்திரம், இதில் திருக்கைலையிலிருந்து சிவலிங்கம் பெற்று இலங்கை நோக்கிச் செல்லும் இராவணன், தேவர் வஞ்சனையால் சிவலிங்கத்தைப் பிரமச்சாரிய உருக்கொண்டு வந்த விநாயகரிடம் கொடுத்து நீரின் பொருட்டு நீங்க விநாயகர் சிவலிங்கத்தைப் பூமியில் எழுந்தருளச் செய்தனர். இராவணன் தன் காரியம் முடித்து வந்து சிவலிங்கத்தைப் பெயர்க்க அது பசுவின் காது போல் குழைந்தது. ஆதலால் இப்பெயர் பெற்றது. இது கேரள தேசத்தில் இருப்பது.

2. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நாற்றிசையிலும் முப்பது கோலளவு அளக்கப்பட்ட பூமி. காளையுடனும் கன்றுகளுடனும் கூடின நூறு கோக்கள் சுகமாகத் தங்குமிடம். இவ்வளவு பூமிதானம் செய்தவன் புண்ய லோகம் அடைவான். (பார - அச்.)

விஷ்ணு விம்பதானம்

ஆயிரம் கழஞ்சு பொன்னால் விஷ்ணு விம்பம் செய்வித்து வேதியர்க்கு அளித்தலாம்.

திலதேனு தானம்

10 கழஞ்சு பொன் தாமரை மலர் ஒன்று செய்வித்து வேதிகையில் வைத்து வௌ்ளை ஆடையால் சுற்றி மலர்ந்த எள்ளின் பூப்போல் பொன்னினால் செய்வித்து, அதன் மேல் வைத்து அதன் மீது சிவபூசை செய்து பொற்கமலத்தின் வட பால் பதினொரு வேதியரை இருத்தி அவர் முன் 11 வஸ்திரம் விரித்து எள்ளினாற் பசு செய்து அதன் கொம்பு 1 கழஞ்சு பொன்னிலும், குளம்பு 2 கழஞ்சு வௌ்ளியிலும், கவசம் வெண்கலத்தாலும் செய்வித்துப் பதினொரு இடத்துந் தனித்தனி இருத்தி உருத்திர மந்திரத்தால் பூசித்துக் கீழ்ப்பால் துவாதசாதித்தரையும், அக்நி திக்கில் வேதியரையும் வித்தியேசுவரரை அட்ட மூர்த்திகளாகப் பூசித்து ஐந்து கழஞ்சு பொன் தட்சணையுடன் பசுவை வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.

திலபத்ம தானம்

திலம் - எள். மெழுகிட்ட பூமியில் வௌ்ளை வஸ்திரம் விரித்து மூன்று கலம் எள் பரப்பி அதன் மேல் பத்துக் கழஞ்சு பொன்னால் எட்டிதழ்க் கமலம் செய்து மூன்று கழஞ்சியில் உமையுஞ் செய்து இருத்திச் சிவமூர்த்தியுடன் விதிப்படி வித்தியேசுரரையும் பூசித்துத் தட்சணையுடன் வேதியர்க்கு அளிப்பது.



விச்வநேமி தானம்

இருபத்தெட்டுப் பலத்திற்கு குறையாத பொன்னினாற் பதினாறு கோணமுள்ள சக்கரஞ் செய்வித்து நடுவில் எட்டுத் தளமுள்ள தாமரை செய்வித்து அதன் அடையில் அஷ்ட கன்னியருடன் கண்ணனை எழுந்தருளச் செய்து கிழக்கில் விஷ்ணுவையும், மற்ற திக்குகளில் அத்திரி, வசிட்டன், பிருகு, காசிபன் முதலியோரையும் பிரதிட்டித்து, இரண்டாம் ஆவரணத்தில் நட்சத்திரங்களையும், மூன்றில் சப்தமாதர். அட்ட வசுக்கள் முதலியவரையும், நான்கில் வேதங்களையும், ஐந்தில் பஞ்ச பூதங்களையும் பதினொரு உருத்திரர்களையும், ஆறில் அட்டகசங்கள், திக்குப்பாலகரையும், ஏழில் வாள், கதை, சூலம், சத்தி, வில், குடை, சங்கம், முத்து, சாமரம், சாந்தம், கோரோசனை முதலியவற்றையும், எட்டில் மீண்டும் இரண்டிற் கூறியவற்றையும் செய்வித்து, எருதின் தோலில் எள் பரப்பி விதிப்படி பூசித்து மறையவர்க்கு அன்ன முதலிய அளித்துத் தானஞ் செய்வித்தலாம்.

சத்த சாகரத்தானம்

குறைந்தது ஏழு பலம் பொன் தகட்டில் ஏழு குழிகள் செய்வித்து ஒவ்வொரு குழிகளிலும் உப்பு, நெய், பால், தயிர், கன்னல், மது, நீர், இவைகளை நிரப்பி முறையே உப்பு முதலியவைகளில் பிரமன், மால், மகேசன், சூரியன், சத்தி, இந்திரன், திரு, மலைமகள் முதலியவர்களைத் தாபித்து ஏழு குண்டத்தினும் ஏழு சாதி மணிகள் இட்டு எருதின் தோளில் எள் பரப்பிப் பூசித்து வேதியர்க் கூட்டித் தானஞ் செய்வது.

இவ்விதம் தானங்கள் பல்வேறு நிலைகளில் செய்யப்பெறுகின்றன. நாமும் நம்மால் முடிந்த தானங்களைச் செய்த உரிய பலனைப் பெறுவோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p208.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License