இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

ஏகாதசி நோன்பு

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


ஏகாதசி நோன்பு என்பது பதினோராந் திதி. இது வித்தியாதரப் பெண்ணொருத்தி இலட்சுமியைப் பூசித்துப் பெற்ற பூ மாலையை அடைந்த துருவாசர் இந்திரனுக்குக் கொடுக்க இந்திரன் தான் ஏறி வந்த யானை மீது வைக்க யானை எடுத்துத் தேய்த்து விட்டதால் கோபித்து இந்திரன் செல்வம் கடலில் விழச் சபித்தனர். இதனை மீண்டும் பெற ஏகாதசியில் தேவர் கடல் கடைந்து துவாதசியில் இலட்சுமியின் அனுக்கிரகம் அடைந்து விஷ்ணுவைப் பூசித்த நாள் என்கிறது அபிதான சிந்தாமணி (பக்கம் 340)

ஏகாதசி நோன்பு

தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்தில் தோன்றிய ஆலகாலத்தைச் சிவபெருமான் தேவ ஸ்திரீ - பெண்களின் மங்கல நாண் நிலைபெறும் பொருட்டாக உண்டு கண்டத்தில் அடக்கினர். அத்தினம் ஏகாதசியாம். அற்றையிரவு முழுதும் தேவர்கள் சிவபெருமானைப் பூசித்து நற்பேறு பெற்றனர். இதனை “பொங்குங் கங்காதரன் காள மயின்றே யொன்றும் புகலாம லிருந்தனன்” என வருஞ் சகலாக மத்திரட்டுச் செய்யுளானறிக. இது யாவரும் அநுட்டிக்க வேண்டிய விரதமாம்.

ஏகாதசி நோன்புப்பலன்

புரூரவாது என்பவன் அநுட்டித்துத் தன் விலங்குரு வொழிந்து சக்கிரவர்த்தி ஆயினன். அயோத்தி நகரத்திருந்தரசாண்டு உருக்குமாங்கதன் அநுட்டித்து பரமபதம் அடைந்தான். அவன் ஏவல் பெண்ணொருத்தி அநுட்டித்து ஓரா மகள் கொம்மட்டிக் கொடியிற் சிக்குண்டு நின்றமையை விலக்கித் தேவலோகஞ் செல்ல விடுத்தனள். அம்பரீடன் என்பவன் அநுட்டித்து உலகை ஒரு குடையின் ஆண்டு வைகுந்தம் அடைந்தான். வீமன் அநுட்டித்து நினைத்தது பெற்றான்.

ஏகாதசி புராண வரலாறு

இஃது சொற்சுவை பொருட் சுவைகளான் நிறைந்துள்ள ஓர் காப்பியம். யாழ்ப்பாணத்துச் சன்னாகப்பதியில் எழுந்தருளி இருந்த அ - வரதராஜ பண்டிதர் அவர்களாற் செய்தருளப்பட்டது. சைவர், வைணவர் ஸ்மார்த்தர் முதலாயினோர் அநுட்டிக்க வேண்டிய ஏகாதசியின் கூறுபாடுகளையும் அநுட்டித்தார் பெற்ற பேறுகளையும் எடுத்து விளக்குவது. கடவுள் வாழ்த்து, கால நிர்ணயச்சருக்கம், உருக்கு மாங்கதச் சருக்கம், உருக்கு மாங்கதச் சருக்கம், உருக்கு மாங்கதச்சருக்கம், வீமேகாதசிச்சருக்கம் என நான்கு பாகங்களை உடைத்து. முந்நூற்றைம்பத் தெட்டுச் சருக்கம், உருக்கமாங்கதச்சருக்கம், வீமேகாதச்சருக்கம் என நான்கு பாகங்களை உடைத்து. முந்நுாற்றைம்பத்தெட்டுச் செய்யுட்களை உடையது. காருட புராணம், சூரிய சித்தாந்தம், பிரம கைவர்த்தம், ஆக்கினேயம், விஷ்ணு புராணம், பவிடிய புராணம், பதுமம், பிராம நூல்களிலிருந்து கண்ணுவர், உத்தாலகர், சனற்குமார், காத்தியாயனர், பிருகற்பதி, மார்க்கண்டர், வியாதர், சேடர், தேவலர், கபிலர், பயிட்டினசி, யாக்கியவற்கியர், இருசிய சிருங்கர் முதலாயினோர் சொல்லிய சாரங்களை எல்லாம் வித்தியா தரணிய முனிவர் திரட்டியோர் நூல் செய்தனர். அதனையுங் கொண்டு இயற்றினர்.


ஏகாதசி மாத விரதம்

பன்னிரு மாதங்களிலே வருகின்ற வளர்பிறை, தேய்பிறை ஆகிய பட்ச ஏகாதசிகளின் பெயரும் பூசைகளில் கடைபிடித்தனர்.

ஏகாதசி வகை

கூடுதல் 31 ஆகும். ஆரம்ப ஏகாதசி, மோக்க ஏகாதசி, புத்திரதா ஏகாதசி, சபல ஏகாதசி, சய ஏகாதசி, சட்டில ஏகாதசி, ஆமலக ஏகாதசி, விசய ஏகாதசி, கமதா ஏகாதசி, பாவமோசன ஏகாதசி, மோகினி ஏகாதசி, வரூதினி ஏகாதசி, பாண்டவ ஏகாதசி, அபார ஏகாதசி, பதும ஏகாதசி, யோகினி ஏகாதசி, நந்தன ஏகாதசி, கர்மிக ஏகாதசி, வாமன ஏகாதசி, அசா ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி, இந்திர ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி, இரமா ஏகாதசி, (பாம) பரம ஏகாதசி, பதுமினி ஏகாதசி, கௌசிக ஏகாதசி, கைசிக ஏகாதசி, சர்வ சீவ ஏகாதசி, தத்த ஏகாதசி என்பனவாம். சொல்லப்பட்ட ஏகாதசிகளுடன் பரம ஏகாதசி, பதுமினி யேகாதசி, கௌசிக யேகாதசி, கைசிக வேகாதசி, சர்வசீவேகாதசி, தத்த ஏகாதசிகளும் உண்டு.

ஏகாதசி விரதம்

முற்காலத்து நாடி சங்கன்மகனாமரு என்னும் அசுரனுக்குத் தோற்றோடிய இந்திரன், திருமால் சமுகத்திற் சென்று முறையிட அவரது திருமேனியினின்றும் ஓர் சத்தி பெண்ணாகத் தோன்றி அவ்வசுரனைக் கொன்று இந்திரனாதியிமையவர் துன்பத்தை அடையச் செய்தனன். அதனால் அச்சத்தியானவள் ஏகாதசி என நோற்பிக்கும் வரத்தையும் பெற்றான்.

அபர பக்கத்து வரும் ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்று பெயர். இதனைக் கோகுலபுரத்து வைகானசர் என்னும் இராசவிருடியன் அனுட்டித்து முத்தி அடைந்தனர்.

அபர பக்கத்து வருவதற்குச் சபல ஏகாதசி என்று பெயர் இதனைச் சம்பகாவதி பட்டினத்து அரச குமாரனாய ஏகலன் உபாசித்துத் தத்துவ ஞானஞ்சாரப் பெற்று முத்தி அடைந்தான்.


பன்னிரண்டு மாத ஏகாதசிகளின் பெயர்கள்

காமதா ஏகாதசி, மோகினி ஏகாதசி, பாண்டவ ஏகாதசி, பதும ஏகாதசி, நந்தன ஏகாதசி, வாமன ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி, பிரண போதினி ஏகாதசி, ஆரம்ப ஏகாதசி, புத்திரதா ஏகாதசி, சய ஏகாதசி, ஆமலக ஏகாதசி ஆகியன ஆகும்.

1. காமதா ஏகாதசி

சித்திரை மாதத்திலே பூர்வ பக்கத்தில் வரும் ஏகாதசிக்குக் காமதா ஏகாதசி என்று பெயர். அதனை நாகலோகத்திருந்த இலலிதன் என்னுங் கந்தருவன் அநுட்டித்துப் புண்டரீகன் என்னும் அரசன் சாபத்தால் அடைந்த இராக்கத ரூபம் மாறப் பெற்றான். மற்றைய அபர பக்கத்தாய பாவ மோசன ஏகாதசியை மஞ்சூடா வென்னுந் தேவகன்னிகை அநுட்டித்துப் பாவங்கள் தொலையப் பெற்றாள்.

2. மோகினி ஏகாதசி

வைகாசி மாதத்துப் பூருவ பக்கத்தில் வரும் மோகினி ஏகாதசியை துதி மான் என்னும் அரசனும், திருட்டபுத்தி என்னும் வைசியனும் நோற்றுப் பரமபதம் அடைந்தனர். அபர பக்கத்து வரூதீனி ஏகாதசியை அநேக மகா பாதகர்கள் அநுட்டித்து வைகுண்ட பதவி அடைந்தனர்.

3. பாண்டவ ஏகாதசி

ஆனி மாதத்திலே பூர்வ பக்கத்துப் பொருந்தும் பாண்டவ ஏகாதசியைப் பாண்டவர்கள் அநுட்டித்துக் கண்ண மூர்த்தியைத் துணையாகக் கொண்டனர். மற்றைய அபார ஏகாதசியில் நித்திரை கொள்ளாத அநேக மகா பாதகர்கள் திருவருள் பெற்று வைகுண்டம் அடைந்தனர்.

4. பதும ஏகாதசி

ஆடி மாதத்து வரும் பூருவ பக்கத்துப் பதும ஏகாதசியை மாந்தாதா என்னுஞ் சக்கிரவர்த்தி அநுட்டித்து மழை பெய்வித்துத் தேச வளப்பஞ் செழிக்கப் பரிபாலனஞ் செய்தான். அபர பக்கத்து வரும் யோகினி ஏகாதசியை இயக்கனாய எமமாலியும், அவன் மனைவியரான விசாலாட்சி சுரூபை என்பவர்களும் அநுட்டித்துக் குபேரனால் நேர்ந்த சாப நிவாரணம் பெற்றனர்.

5. நந்தன ஏகாதசி

ஆவணி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்கு நந்தன ஏகாதசி என்று பெயர். அதனை மகிசித்து ராசன் என்பவன் நோற்று மகப்பேறடைந்தான். அபர பக்கத்து வரும் ஏகாதசிக்குக் கர்மிக ஏகாதசி என்று பெயர். அத்தினத்திற் பசியாயிருந்து உயிர் நீங்கிய பஞ்ச பாதகர் யாவரும் பரமபதஞ் சேர்ந்தனர்.


6. வாமன ஏகாதசி

புரட்டாசி மாதத்திலே பூருவ பக்கத்த வரும் ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்று பெயர். இதனை உபாசித்த விரோசன குமாரனா மாவலிச் சக்கிரவர்த்தி அநுட்டித்து இன்புற்றான். மற்றைய அபர பக்கத்து ஏகாதசிக்கு அசா ஏகாதசி என்று பெயர். இதனை அரிச்சந்திர மகாராசன் நோற்று இராச்சியம் - அரசாங்கம் கொண்டான்.

7. பாசாங்குச ஏகாதசி

ஐப்பசி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்குப் பாசாங்குச ஏகாதசி என்று பெயர். இதனைத் தருமராசன் மெய்யன்புடனோற்றுத் தருமத்திற்கு அதிபதியானான். மற்றைய இந்திர ஏகாதசியை இந்திரசேனன் அநுட்டித்து தன் தந்தைக்குச் சுவர்க்கங் கொடுத்தான்.

8. பிரணபோதினி ஏகாதசி

கார்த்திகை மாதத்துப் பூருவ பக்கத்து ஏகாதசியே பிரணபோதினி ஏகாதசியே சிறப்புடைத்து. இத்தினத்திற்றான் அரி மூர்த்தி யறி துயிலொருலி யெழுந்திருப்பர். இதனிற் போக முத்தியடைந்தார் தொகையைப் புகலுதல் அரிதேயாம். மற்றையது இரமா ஏகாதசியாம். இதனைச் சந்திர பாகை என்னும் இராச குமாரி அநுட்டித்துத் தன் காதலனை அடைந்து வாழ்ந்தாள்.

9. ஆரம்ப ஏகாதசி

மார்கழி மாதத்திலே பூருவ பக்கத்தில் வரும் ஏகாதசியையே முதலாகக் கொண்டு அநுட்டிக்க வேண்டும். ஆகலின் அது ஆரம்ப ஏகாதசி எனப் பெயர் பெறும்.

10. புத்திரதா ஏகாதசி

தை மாதத்திலே பூர்வ பக்கத்தில் வரும் ஏகாதசிக்கு புத்திரதா ஏகாதசி என்று பெயராம். இதனைப் பத்திரவதிபுரக்கணிருந்த சுகேது என்னும் அரசனும், அவன் தேவியாய சைப்பியா என்னும் அரசியும் அநுட்டித்துப் புத்திரப்பேற்றை அடைந்தனர்.

11. சய ஏகாதசி

மாசி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசியை சய ஏகாதசி என்று கூறுவர். இதனைக் கந்தருவ குலத்து மாலியவானும், அவன் மனைவியான புட்பவதியும் அநுட்டித்து இந்திரன் சாபத்தானேர்ந்த பிசாச வடிவு நீங்கப் பெற்றனர். அபர பக்கத்து வரும் ஏகாதசியை ஓர் பிராமண நங்கை நோற்று இட்ட சித்தி எய்தப் பெற்றாள்.

12. ஆமலக ஏகாதசி

பங்குனி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்கு ஆமலக ஏகாதசி என்று பெயர். இதனை வைதிசநகர்ச் சசபிந்து மன்னனும், சலந்தி புரத்து விதுர வேந்தனும் நோற்று வேண்டிய வென்றனர். மற்றைய அபர பக்கத்து வருகின்ற விசய ஏகாதசியை இராமச்சந்திரர் உபாசித்து இராவணவதஞ் செய்து, சீதாபிராட்டியையுஞ் சிறை மீட்டு அரசாட்சி பெற்றனர்.

ஏகாதசி விரதம் இருப்பவர் மிகுந்த பலனை அடைவர். ஏகாதசி விரதம் இருந்தவரை ஏற்றடா இரதத்திலே என்பர். ஏற்றம் பெற விரும்புபவர்கள் ஏகாதசி விரதமிருக்கலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p209.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License