இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

சைவ சமயக் கட்டுப்பாடுகளும் கோட்பாடுகளும்

பா. காருண்யா


இந்து (சைவ) சமயமானது இயமம், நியமம் எனும் இரு நன்னெறிக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இயமங்கள் என்பது “செய்யத் தகாதவை”. செய்யத்தகாதவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நமது இச்சை மன இயல்பு (விலங்கு மனம்) கட்டுப்பாட்டில் வருகிறது. நியமங்கள் என்பது “செய்ய வேண்டியவை”. செய வேண்டியவைகளைப் பின்பற்றுவதன் மூலம் சமய ஈடுபடும் கலாச்சார ஈடுபாடும் மேலும் அதிகரித்து, நமது ஆன்மாவின் தூயத் தன்மையும் வெளிப்படுகிறது. இயமங்கள், நியமங்கள் நமது யோக வாழ்வை வலுப்படுத்த அடிப்படைகளை வழங்குவதுடன், சிவனை அடையும் பாதையில் அவை நம்மை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆண்டும் ஊன்றி நிலைபெறச் செய்கிறது.



இயமம் எனும் பத்து கட்டுப்பாடுகள்

1. அகிம்சை

துன்புறுத்தாமை. உமது செயலாலோ அல்லது வாக்காலோ அல்லது எண்ணத்தாலோ கனவிலும் கூட பிறருக்கு நாம் தீங்கிழைத்தல் கூடாது. யாரையும் பயமுறுத்தாமல், யாருக்கும் வலியோ, காயமோ ஏற்படுத்தாமல் ஓர் அன்பான வாழ்க்கை வாழுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் இறைவனைக் காணுங்கள். சைவ உணவை உண்ணுங்கள்.

2. சத்தியம்

உண்மை. உண்மையான, அன்பான, நன்மையான, அவசியமான விஷயத்தை மட்டுமே பேசுங்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள். குடும்பம் அல்லது நண்பர்களிடம் ரகசியத்தை மறைக்காதீர்கள். கலந்துரையாடும் போது சரியாகவும் மனம் திறந்தும் பேசுங்கள். பிறரை ஏமாற்றாதீர்கள். உங்கள் தோல்விகளை ஒப்புக்கொள்ளுங்கள். ரகசியமாகக் கிசுகிசுப்பதோ, பின்னால் பேசுவதோ அல்லது பொய் சொல்லுவதோ கூடாது.

3. அஸ்தேயம்

திருடாமை. திருடக்கூடாது. ஆசைகளைக் கட்டுப்படுத்தி குடும்ப வருமானத்துக்கு ஏற்றபடி வாழுங்கள். மற்றவர் பொருள்மீது ஆசைப்படக்கூடாது. பிறரிடம் இரவல் வாங்கியப் பொருள்களை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. சூதாடக்கூடாது. பிறரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கக்கூடாது. அனுமதியின்றி, ஒப்புதலின்றி பிறரின் பெயரையோ, சொற்களையோ, வளத்தையோ அல்லது உரிமையையோ உபயோகிக்கக்கூடாது.

4. பிரம்மச்சரியம்

தெய்வீக நடத்தை. திருமணம் ஆவதற்கு முன் ஆசைகளை அடக்கி பாலியல் உறவைத் திருமணம் ஆகும் வரை பாதுகாக்க வேண்டும். திருமணத்துக்கு முன் பாலியல் சக்தியை கல்வி கற்பதற்கும், திருமணத்துக்குப்பின் குடும்ப வெற்றிக்கும் பயன்படுத்துங்கள். மிதமாக உடையுடுத்தி, மிதமாகப் பேசுங்கள். தூயவர்களின் நட்பை நாடுங்கள். காமப் படங்கள் மற்றும் வன்முறைப் படங்களை தொலைக்காட்சியில், திரைப்படங்களில், சஞ்சிகைகளில், கணினிகளில் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

5. க்ஷாமா

பொறுமை. மக்களின் சகிக்கமுடியா தன்மையைக் கட்டுப்படுத்தி சூழ்நிலையைப் பொறுக்க முடியாத தன்மையையும் கட்டுப்படுத்த வேண்டும். எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவசரப்பட வேண்டாம். மற்றவர்கள் உங்களின் போக்குக்கு இணங்கி நடக்க வேண்டுமென்று வற்புறுத்தாமல், அவர்களின் இயல்புப்படி நடக்க விடுங்கள். பிறரிடம் பேசும்போது வாக்கு வாதம் செய்யாமல், குறுக்கே பேசாமல் அல்லது நீங்கள் ஒருவரேப் பேச்சை ஆக்கிரமிக்காமல் இருக்கவும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் மிக்க பொறுமையாக இருங்கள். கஷ்டமான நேரங்களிலும் நிதானம் தவறாமல் இருக்க வேண்டும்.


6. திரிதி

உறுதியாக இருத்தல். பயம், முடிவெடுக்க முடியாமை, அடிக்கடி மாறுந்தன்மை ஆகியவற்றை போக்கிவிடுங்கள். கவனத்தை சிதறவிடாமல் எதை செய்யவேண்டுமோ அந்தக் காரியத்தை செய்வதில் கண்ணுங் கருத்துமாக இருங்கள். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள். உங்கள் லட்சியத்தை அடைய பிரார்த்தனை செய்து நோக்கம், திட்டம், விடாமுயற்சி மற்றும் ஊக்கம் ஆகியவற்றுடன் அடையுங்கள். புகார் செய்யாமல் சாக்கு போக்கு சொல்லாமல் இருங்கள். மனோ உறுதியையும் தைரியத்தையும் உழைக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தடைகளை வெல்லுங்கள்.

7. தயை

இரக்கம். எல்லா உயிர்கள் மீதும் இருக்கும் கொடூரமான மனிதாபமற்ற உணர்வுகளை வெல்லுங்கள். எல்லா இடங்களிலும் இறைவனைக் காணுங்கள். மக்களிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும், பூமாதேவியிடமும் கருணையோடு இருங்கள். உண்மையாக, தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டவரை மன்னித்துவிடுங்கள். துன்பத்தால் துவண்டு போயிருப்போரின் தேவைக்கு கருணை காட்டுவதை ஊக்குவியுங்கள். பலவீனமாக இருப்பவர்கள், ஏழைகள், முதியோர்கள் மற்றும் வலியால் துன்பப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். குடும்பத்தில் நிலவும் சித்திரவதையையும், பிற இடத்தில் நடக்கும் கொடூரங்களையும் எதிர்த்து நில்லுங்கள்.

8. அர்ஜவா

நேர்மை, ஒளிவு மறைவின்றி இருத்தல். மோசடி செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் விட்டுவிடுங்கள். உங்கள் நாட்டின் சட்டத்தையும், சமுதாய ஒழுக்கத்தையும் மதித்து நடந்து கொள்ளுங்கள். லஞ்சம் கொடுப்பதோ அல்லது வாங்கவோ கூடாது. யாரையும் ஏமாற்றவோ துரோகம் பண்ணவோக் கூடாது. உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். பிறர் மீது குற்றம் சுமத்தாமல் உங்களின் குறைகளை எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் நேர்மையாக இருங்கள்.

9. மிதாகாரம்

நடுத்தரமாக உணவு உட்கொள்ளல். அதிகமாக சாப்பிடக்கூடாது. மாமிசம், மீன், நத்தை, கோழி அல்லது முட்டை சாப்பிடக்கூடாது. புதிதாக செய்த, உடம்புக்கு சத்தான முழுமையான சைவ உணவை உண்டு மகிழுங்கள். நொறுக்குத் தீனிகளையும், வெள்ளை சீனி, வெள்ளை அரிசி, வெள்ளை மாவு போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்க்கவும். குறித்த நேரத்தில் பசியெடுக்கும்போது மட்டுமேச் சாப்பிட வேண்டும். தொந்தரவான சூழ்நிலையில் அல்லது மனம் குழம்பிய நிலையில் சாப்பிடக்கூடாது.

10. சௌச்சம்

தூய்மை. மனம், மெய், மொழியில் தூய்மையற்ற நிலையை தவிர்க்கவும். சுத்தமான ஆரோக்கியமான தேகத்தை வைத்திருங்கள். வீட்டையும் பணியிடத்தையும் குப்பைக்கூளமின்றி தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அறவழியில் செல்லுங்கள். நல்லோர்களோடு உறவாடுங்கள். கடுமையான சொற்களையோ கீழ்த்தரமான சொற்களையோ சொல்லக்கூடாது.

நியமங்கள் எனும் பத்து கோட்பாடுகள்

1. ஹ்ரி

மனவருத்தம். தன்னடக்கத்துடன் இருக்கவும். தவறேதும் செய்துவிட்டால் அதற்காக வெட்கப்பட வேண்டும். உங்களின் தவறு எது என்று உணர்ந்து, அதை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக்கேட்டு அதனை திருத்திக் கொள்ளவும். நல்ல குறைநிறைகளை வரவேற்கவும். தூங்கப் போவதற்குமுன் எல்லா சண்டை சச்சரவுகளையும் தீர்த்துக்கொள்ளவும். சொந்தக் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனைக் களைந்தெறியவும். தற்புகழ்ச்சி வேண்டாம். செருக்காக நடந்து கொள்வதிலிருந்தும் பொய்யாக நடிப்பதிலிருந்தும் விலகி நில்லுங்கள்.

2. சந்தோஷ

திருப்தி. வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் நாடுங்கள். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருந்து மற்றவர்களையும் அவ்வாறே மகிழ்ச்சியுறச் செய்யுங்கள். உங்களின் உடல் நலம், நண்பர்கள், வைத்திருக்கும் உடைமைகளுக்காக நன்றி சொல்லி வாழுங்கள். இல்லாதவைக்காகக் குறைபட்டுக் கொள்ள வேண்டாம். எல்லாம் கடந்த உங்களின் உண்மைத்தன்மையை அடையாளம் காணுங்கள். எல்லாம் கடந்து நிற்கும் இக்கணத்தில் வாழ்ந்து கொண்டு ஆன்மீக வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள்.

3. தானம்

கொடுத்தல். வருமானத்தில் பத்து சதவீதம் கோயிலுக்கோ, ஆசிரமத்துக்கோ அல்லது ஆன்மீக அமைப்புக்களுக்கோத் தானம் கொடுங்கள். தேவைப்படுவோருக்கு உணவும் பொருளும் அளியுங்கள். உங்களின் நேரத்தையும் திறமையையும் இலவசமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். விருந்தினர்களைத் தெய்வமாக நடத்துங்கள்.

4. அஷ்டிகா

நம்பிக்கை. இறைவன் மீதும், தெய்வங்கள் மீதும், குரு மீதும், மெய்ஞானத்துக்கு இட்டுச் செல்லும் மார்க்கத்தின் மீதும் உறுதியாக நம்பிக்கை வையுங்கள். ஞான சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நம்புங்கள். உங்களின் ஞானப் பரம்பரைக்கு விசுவாசமாக இருங்கள். குருவோடு ஒருமையுடன் இருங்கள். உங்களின் சமய நம்பிக்கையைச் சீர்குலைக்க முயல்பவர்களோடுளோடு நட்பு கொள்ளவேண்டாம். நம்பிக்கையை மேலும் வளர்ப்பதற்கு பக்தியையும் சாதனைகளையும் மேற்கொள்ளுங்கள். ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் தவிர்க்கவும்.

5. ஈஷ்வரபூஜானா

ஈஷ்வரனை வணங்குதல். அனுதினமும் இறைவனை வணங்கி தியானம் செய்யுங்கள். வீட்டிலுள்ள பூஜையறையில் சுவாமிக்கு பழம், பூக்கள் அல்லது நைவேத்தியம் வையுங்கள். எளிமையான பூஜை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டை விட்டுக் கிளம்பும் போதும், திரும்பும் போதும் பூஜை அறைக்குப் போய்விட்டு வாருங்கள்.


6. சித்தாந்த சரவண

ஞான சாத்திரங்களைக் கேட்டல். உங்கள் குரு. சார்ந்த ஞானிகளின் போதனைகளைப் படியுங்கள். அவர்களின் அருள்மொழிகளைக் கேளுங்கள். ஒரு ஞான குருவைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியைப் பின்பற்றுங்கள். பிற வழிகளை ஆராய்ச்சி செய்து காலத்தை வீணடிக்க வேண்டாம். ஞானியிடமிருந்து சீடனை அடையக்கூடிய அந்த எழுச்சிமிகு பாடங்களையும் உபதேசங்களையும் கேளுங்கள்.

7. மதி

அறிவெழுச்சி. உங்கள் சற்குருவின் வழிகாட்டுதலோடு ஆன்மீக வைராக்கியத்தையும் அறிவையும் பெருக்கிக் கொள்ளுளங்கள். கடவுளைப்பற்றி அறிந்து கொள்ளவும். உங்களில் இருக்கும் ஜோதியை எழுப்புவும் முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அனுபவத்திலும் பொதிந்துள்ள வாழ்க்கைப் பாடத்தைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையையும் உங்களையும் புரிந்து கொள்ளுங்கள். தியானத்தின் மூலம் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

8. விரதம்

புனித சத்திய வாக்குகள். சமய சத்திய வாக்குகள், வழிமுறைகள், நியமங்களை மேற்கொண்டு நிறைவேற்றி வையுங்கள். அவை உங்கள் ஆன்மாவோடு, சமுதாயத்தோடு, கடவுளோடு, தெய்வங்களோடு, குருவோடு மேற்கொள்ளப்படும் ஆன்மீக ஒப்பந்தங்களாகும். காலா காலத்துக்கு உண்ணா விரதம் இருங்கள். ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொள்ளுங்கள். உங்களின் சத்திய வாக்குகள் எதுவாக இருந்தாலும் சரி, அது உங்களின் கற்பு, திருமணம், சந்நியாசம், போதையற்ற வாழ்வு, காணிக்கை கொடுத்தல், குரு பரம்பரைக்கு விசுவாசமாக இருத்தல், சைவ உணவையே உண்ணுதல் அல்லது புகைப்பிடிப்பதைக் கைவிடுதல் என்று எதைப்பற்றி சத்தியம் செய்திருந்தாலும் சரி, அதை மீறாமல் மிக உறுதியாகக் கடைப்பிடியுங்கள்.

9. ஜெபம்

ஜெபித்தல். உங்கள் குரு சொன்னபடி உங்கள் புனித மந்திரத்தை தினமும் ஜெபியுங்கள். முதலில் குளித்துவிட்டு மனதை அமைதியாக்கி உங்களின் மந்திர ஜெபத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, அம்மந்திரம் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி தூய்மையாக்கி உங்களின் மனவுணர்வை மேலோங்கச் செய்யுங்கள். உங்கள் உணர்ச்சிகளையும் நதியென பொங்கிவரும் எண்ண எழுச்சிகளையும் அந்த மந்திர ஜெபம் ஒடுக்கிவிட அனுமதியுங்கள்.

10. தபஸ்

தவம். அடிக்கடி தவம், கடுமையான ஒழுக்கங்கள், பிராயச்சித்தம், தியாகச் செயல்கள் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். தவறு செய்துவிட்டால், அதற்கு பிராயச்சித்தமாக 108 தடவை கீழே விழுந்து வணங்குதல் அல்லது உண்ணாவிரதம் இருந்து அந்த பாவச்செயலுக்கு பரிகாரம் தேடுங்கள். விருப்பமான உங்கள் உடைமைகள், பணம் அல்லது நேரத்தைக் கொடுத்துவிட்டு, சுய வேண்டாமை மேற்கொள்ளுங்கள்.
*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p425.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License