இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

பஞ்ச கோஷங்கள்

பா. காருண்யா


பிருகு என்று ஒருவர் இருந்தார். பல ஆண்டுகள், ஒரு சிறந்த குருவிடம் கல்வி பயின்ற பின், அவர் தன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் குதூகலம், விருந்து எல்லாம் முடிந்த பிறகு, அவரது தந்தை வருணன் அவரிடம், “உன்னிடம் உள்ள சாசுவதமான உண்மை எது?”எனக் கேட்டார்.

மகன் சற்று நேரம் யோசித்த பின், தனக்கு அந்தk கேள்விக்கு விடை தெரியாது என தந்தையிடம் மன்னிப்புக் கூறி, தனது குரு தனக்குக் கற்றுத் தரவில்லை என்று கூறினார். அதற்கு தந்தை, “என் கேள்விக்குப் பதில் கூற இயலாவிட்டால், உன் கல்வி பூரணமாக முடியவில்லை” என்றார். இதனால், கலக்கமடைந்த பிருகு தந்தையிடம், “அப்படி என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? என் கல்வி எவ்வாறு பூர்த்தியடையும்?”எனக் கேட்டார். அதற்கு வருணன் மிகவும் சாந்தமாக, “தவம் செய். அதுவே சிறந்த கல்வி. காட்டுக்குச் சென்று தவம் செய். என் கேள்விக்கு உனக்குக் கட்டாயம் விடை கிடைக்கும்” என்று கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு, தனக்கு விடை கிடைத்து விட்டதாக எண்ணிய மகன், அதைத் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினான். மகன் தந்தையிடம், “தந்தையே! என்னுடைய பௌதீக உடல், அதாவது ஸ்தூல சரீரமே சாசுவதமான உண்மை. அதுவே அன்னமயக் கோஷம். பௌதீக உடல்நிலை சரியாக இருந்தால் தான், நாம் எதுவும் செய்ய முடியும். உடல் நிலை சரியில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது” என்று கூறினான். இந்த விடை, தந்தைக்குத் திருப்தி கொடுக்காததால், மகனை மறுபடியும் சரியான விடையைக் கண்டுபிடிக்கக் காட்டுக்கு அனுப்பினார்.

சில வருடங்களுக்குப் பின் திரும்பிய மகன் தந்தையிடம், “நான் கூறியது தவறு. பௌதீக உடலால் மட்டுமே என்ன செய்ய முடியும்?அதற்கு உயிர் வேண்டும்; அதாவது, பிராணன் என்ற சக்தி உடலில் பரவ வேண்டும். இதுவே பிராணமயக் கோஷம். இதுவே மிகவும் முக்கியமானது” என்றான். தந்தை மீண்டும் அதிருப்திப்பட்டு மகனைக் காட்டுக்குச் சென்று விடை கண்டுபிடிக்கும்படி கூறினார்.

சில வருடங்கள் தீவிரமாகத் தவம் செய்த பிறகு, மகன் காட்டிலிருந்து திரும்பி வந்து தந்தையிடம், “நான் கூறிய விடை தவறு. பிராணன் அல்லது உயிர் மட்டுமே முக்கியம் அல்ல; சரியான மனநிலை எப்பொழுதும் இருக்க வேண்டும். மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். நான் தெளிவான சிந்தனை உள்ளவனாக இருக்க வேண்டும். இதுவே மனோமயக் கோஷம்” என்றான். “மகனே, நீ சரியான பதிலைக் கூறுவதற்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா?” என வருணர் கவலைப்பட்டுக் கேட்டார்.

மறுபடியும் தவம் செய்து, விடையைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக பிருகு திரும்பினான். “தந்தையே, கடைசியில் நான் உங்கள் கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடித்து விட்டேன். என் மதியை உபயோகித்து எது சரி, எது தவறு என்று நான் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், விஞ்ஞானமயக் கோஷமே என் அடிப்படையான சத்தியம். சரியா?” எனக் கேட்டான்.


உடனே தந்தை “தவறு” என பதிலை நிராகரித்து விட்டார். “நான்கு சந்தர்ப்பங்கள் கொடுத்தும் உன்னால் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். விட்டு விடு; ஒரு நாள் இந்த கேள்விக்குப் பதில் உன்னைத் தேடி வரும்; அது வரைக் காத்திரு” என தந்தை கூறினார்.

“இல்லை தந்தையே; நான் இந்த கேள்விக்குப் பதிலை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். எனக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” எனக் கெஞ்சினான்.

இம்முறை தந்தை வெகு நாட்கள், மகனுக்காகக் காத்திருந்தார். தந்தை எதிர்பார்த்ததை விட அதிகமான நாட்கள் கடந்துவிட்டன. பிருகு பலப் பல தசாப்தங்கள் கடந்தும் திரும்பி வரவில்லை. விபரீதமாக ஏதேனும் நடந்திருக்குமோ என எண்ணி, தந்தைக்கும் சற்றுக் கவலையாக இருந்தது. தந்தை மகனைத் தேடிக் காட்டுக்குச் சென்றார். மகனைத் தேடும் போது, காட்டின் ஒரு பகுதியிலிருந்து பிரகாசமான ஒளி, எல்லாத் திசைகளிலும் ஒளிர்ந்தது. அங்கு சென்ற தந்தை பல உணர்வுகளுக்கு ஆளானார். தந்தைக்கு மகிழ்ச்சி, ஆச்சரியம், துக்கம், ஆனந்தம், பெருமை, எனப் பல உணர்வுகள் ஒரே சமயத்தில் ஏற்பட்டன.

அங்கு, பத்மாஸனத்தில் (தாமரை மலரைப் போல்) தியான முத்திரையுடன், ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மனிதனின் உடலிலிருந்துதான் ஒளி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியானது ஆயிரம் சூரியன்களுக்குச் சமமானதாக இருந்தது. உலகத்திலேயே, அந்த மனிதரே மிகவும் மன நிறைவு கொண்டவராகத் தென்பட்டார். அம்மனிதரைக் கண்ட ஒரு காட்சியிலேயே, ஒருவரது மனம், மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் ஆனந்தத்தால் நிறைந்து விடும். அது வேறு எவரோ அல்ல; தந்தையின் கேள்விக்கு விடை கண்டு பிடிப்பதற்காக, தவம் செய்யக் காட்டிற்குச் சென்ற பிருகுவே!

வருணர் ஆனந்தக் கண்ணீருடன், தன் மகன் கால்களில் விழுந்து வணங்கி, பய பக்தியுடன் வீடு திரும்பினார்.

தன் மகன் விடையைக் கண்டுபிடித்து விட்டான் எனத் தந்தைக்குத் தெரிந்தது.

பிருகு, விடையின் ஆனந்தத்தில் மூழ்கி இருந்ததால், வீடு திரும்பியவுடன் தன்னிடம் பதிலைக் கூற மறந்து விட்டான் என அறிந்தார்; அவன் ஆனந்தமயக் கோஷத்தைப் பூரணமாக உணர்ந்திருந்தான். மற்ற நான்கு கோஷங்களும் சாஸ்வதம் அல்ல என்றும், ஆனந்தமயக் கோஷத்தின் உண்மையையும் உணர்ந்து, பிருகு சமாதி நிலையை அடைந்து, பரமானந்தத்தில் ஐக்கியம் ஆகி இருந்தார்.


இதிலிருந்து அறிவதென்ன?

அன்னமயக் கோஷம்

ஐந்து உறைகளில் முதலில் இருக்கும் இந்த உறை, பெரும்பாலாக ஸ்தூல சரீரத்தை சார்ந்து உள்ளது. ஒருவன் உண்ணும் உணவு, இந்தக் கோஷத்திற்கு ஆதாரமாக அமைகிறது. ஆரோக்கியமான, வியாதியற்ற பௌதீக உடலை, இயற்கையான உணவு வகைகளாலும், யோகாப்பியாசத்தினால் மட்டுமே அளிக்க முடியும்.

பிராணமயக் கோஷம்

இந்த இரண்டாவது உறை, அன்னமயக் கோஷத்தை விட பெரியதாகவும், சூட்சுமமாகவும் இருக்கின்றது. சுவாசிக்கும் காற்றே இதற்கு சக்தி அளிக்கிறது. ஆரோக்கியமான உடலுக்கு இந்தக் கவச உறையின் ஆரோக்கியம் முக்கியமானது. பிராணமயக் கோஷம் மேம்பட்ட நிலையில் இருந்தால்தான் உடம்பில் ஊக்கமளிக்கின்ற சக்தியும் பரவும்.

மனோமயக் கோஷம்

உணர்ச்சிகளும், மன நிலைகளும் இந்தக் கோஷத்தில் அடங்கியுள்ளன. ஒருவரது எண்ணங்களே இந்தக் கோஷத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன. நல்ல எண்ணணங்கள் மனதின் மேம்பாட்டுக்கு அறிகுறி.

விஞ்ஞானமயக் கோஷம்

ஒருவரின் புத்தியை இந்தக் கோஷம் வெளிப்படுத்துகிறது. சரி, தவறு; நிலையற்றது, நிலையானது; இன்பம், துன்பம்; இவற்றை பகுத்தறிந்து, முடிவுகளை எடுக்கும் திறன் இந்த கோஷத்திற்கு உட்பட்டது.

ஆனந்தமயக் கோஷம்

இது எல்லாவற்றிலும் பெரிது மற்றும் கடைசியான உறை. இது மற்ற கோஷங்களை விட சூட்சுமமான கோஷம். இதைப் புரிந்து கொள்வது, மற்றும் புரிய வைப்பதும் மிகவும் கடினம். இது இயற்கையாக ஆனந்தமான நிலை. இந்த கோஷத்தைத்தான் காரண தேஹம் என்கிறோம். ஆனந்தம் பிரம்மனின் அவதாரம். அவர் பரமானந்தத்தை அளிப்பவர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p426.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License