எந்தவொரு பழமாக இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு, அதனை மண்ணில் வீசி எறிந்து விட்டால், அது மீண்டும் முளைத்துவிடும். ஆனால், வாழைப்பழம் அப்படியில்லை. அதனை உரித்தோ அல்லது முழுமையாக வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது மறு பிறவியற்ற முக்தி நிலையைக் காட்டுகிறது. எனவே, பூசையில் வாழைப்பழத்தை இறைவனுக்குப் படைத்து வணங்கும் நாம், “இறைவா, எனக்கு மறு பிறவியற்ற முக்தி நிலையினைக் கொடு” என்று வேண்டிக் கொள்கிறோம்.
இதே போன்று, தேங்காய்க்கும் அந்தக் குணம் உண்டு. தேங்காயைச் சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்துதான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்துதான் வாழைக்கன்று வரும். பழம், கொட்டை என்பது கிடையாது. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
நமது எச்சில்படாத தேங்காய், வாழைப்பழத்தை இறைவனுக்கு உகந்ததாகப் படைத்து வணங்கும் முறையினை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நாமும் அதனைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.