இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

இலங்கை பஞ்ச ஈஸ்வரங்கள்

மு. சு. முத்துக்கமலம்


சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்ட கோயில்களில் ஐந்து கோயில்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. நகுலேஸ்வரம்

இலங்கையில் ஈழத்தின் வடக்கே அமைந்துள்ளது நகுலேஸ்வரம். யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவாலயம் ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான், இறைவி நகுலாம்பிகை ஆவர். இக்கோயிலின் தல விருட்சம் கல்லால மரம். தீர்த்தம் கீரீமலக்கடலாக இருக்கின்றது. சுதாம என்னும் முனிவரால் சாபம் பெற்ற கீரி முகம் கொண்ட வேடன் இத்தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். அவனின் கீரி முகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவராக மாறினார். இதனால் அவ்விடம் கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் அழைக்கப்படுகின்றது. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப்புரவல்லி குதிரை முகத்துடனும், குன்ம நோயுடனும் இருந்தார். சந்நியாசி ஒருவரின் அறிவுறுத்தலின் படி கீரிமலையில் வந்திறங்கிய இளவரசி, அங்கிருந்த நகுல முனிவரின் ஆலோசனையைப் பெற்று, அத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு குதிரை முகம் நீங்கினார். அவளுக்கிருந்த குன்ம நோயும் மாறியது. தற்போது நகுலேஸ்வரம் முன்னோர் (பிதுர்) கடன்களை கழிக்கும் சிறந்த சிவத்தலமாக விளங்குகின்றது.


2. திருக்கேதீஸ்வரம்

இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில், தேவாரம் பாடப்பெற்ற இரண்டு தலங்களில் ஒன்றாகும். ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். இங்குள்ள இறைவன் பெயர் கேதீஸ்வரநாதர், இறைவி கௌரியம்மை. இங்குள்ள தீர்த்தம் பாலாவி, விருட்சம் வன்னிமரம் ஆகும். இங்கு உள்ள இறைவனை, நாகர்கள் வழிபட்டமையால் இவருக்கு நாகநாதர் என்ற பெயருமுண்டு.

இராமர் இராவணனை வென்று அயோத்திக்குச் செல்லும் வழியில் திருக்கேதீச்சரப் பெருமானை வழிபட்டுச் சென்றார் என்றும், அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் பொருட்டு இலங்கையை அடைந்த பொழுது, திருக்கேதீச்சரம் வந்து வழிபட்டான் என்றும் கூறப்படுகின்றது.

சோழர் ஆட்சியில் இவ்வாலயமானது ‘இராஜராஜேஸ்வரர் மகாதேவன் கோயில்” என்று போற்றப்பட்டது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இவ்வாலயம் இடிக்கப்பட்டு அழிவுற்றது. அழிவுற்றிருந்த இக்கோயிலை புதுப்பிக்கும் முயற்சியில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஈடுபட்டார். இவரின் பல்வேறு முயற்சிகளினால் இவ்வாலயமானது மீண்டும் புதிதாகக் கட்டி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இக்கோயிலின் வருடாந்த மஹோற்சவம் வைகாசி மாதத்தில் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது, ஐந்து சித்திரத்தேர்கள் இழுக்கப்படுகின்றன. மாசி மாத மகாசிவராத்திரியானது இங்கு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. அன்றைய நாளில் சிவனடியார்கள் பலரும் இங்கு வந்து பாலாவியில் நீராடி இறைவனை வழிபடுவர். இங்கு சிவனடியார் பாலாவியில் நீராடித் தீர்த்தத்தைக் குடங்களில் நிரப்பி வரிசையான தீர்த்தக் காவடி எடுக்கும், ‘தீர்த்தக் காவடி எடுத்தல்” என்பது சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

இத்தலத்தில் அமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி, இறுதிக்கடன் புரிவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதுடன், இத்தீர்த்தத்தில் நீராடுவோருக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கும் என்பதும் தொன்ம நம்பிக்கை.

3. திருக்கோணேஸ்வரம்

இலங்கையின் திருகோணமலை கடற்கரையில் வானுயர்ந்து நிற்கிறது கோணமாமலை. இக்கோணமலை உச்சியில் கோணேசர் கோயில் அமைந்திருக்கிறது. இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் பெரும் புகழை ஈட்டியிருந்த ஆலயம் இதுவாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இக்கோயில் மீது பல பாடல்களை பாடியுள்ளார். அருணகிரிநாதரும் தனது திருப்புகழில் இக்கோயிலைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோயிலின் சிறப்பை, தட்சிண கைலாச புராணம், திருக்கோணாச்சர புராணம் என்பன விரிவாக எடுத்துக் கூறுகின்றன. இத்தலத்தில் இறைவன் கோணேஸ்வரர், இறைவி மாதுமையாள். இங்குள்ள தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. தலவிருட்சமாக, கல்லால மரம் விளங்குகின்றது.

இக்கோயிலின் மஹோற்சவப் பெருவிழாவானது பங்குனி உத்தர தினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. மஹோற்சவ நிறைவைக் குறிக்கின்ற பூங்காவனத் திருவிழாவும், தெப்ப உற்சவமும் இக்கோயிலில் பெரும் சிறப்புக்குரியவையாகும். சிவராத்திரி நாளிற்கு முந்தைய பதினைந்து நாட்களும், இக்கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.


4. முன்னேஸ்வரம்

இலங்கையிலுள்ள சிவன் கோயில்களில் காலத்தால் முற்பட்ட கோயில் இது. இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் சிலாபம் என்னும் ஊரில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் முன்னைநாதப் பெருமான், இறைவி வடிவாம்பிகை அம்பாள். இது ஒரு சிவத்தலமாக இருப்பினும் சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

இக்கோயிலில் வருடத்தில் இரு முறை மஹோற்சவம் நடைபெறும். மேலும், வடிவாம்பிகை உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அத்துடன் நவராத்திரி விழாவும் பக்தோற்சவ விழாவும் முக்கியமானவையாக இருக்கின்றன. ஆண்டுதோறும் ஆவணி மாதப் பௌர்ணமி தினத்தை தீர்த்தோற்சவமாகக்கொண்டு இருபத்தேழு நாட்கள் முன்னைநாதப் பெருமானின் உற்சவம் நடைபெறும். இக்கோயிலில் இருக்கும் அன்னை வடிவாம்பிகை அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகி அருட்சக்தி மிக்கவளாகத் திகழ்கின்றாள்.

மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமபிரான், தன்னை எதிர்த்த சிவபக்தனான இராவணனை அழித்தார். இதனால் ஏற்பட்ட தோசம் நீங்குவதற்காக இத்தலத்திலே சிவலிங்கம் அமைத்துப் பூசை செய்து தனது பிரம்மகத்தி தோசத்தினை நீக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன.

5. தொண்டீஸ்வரம்

இது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இன்று அழிக்கப்பட்டு விஷ்ணு ஆலயமாக மாற்றப்பட்டு விட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p755.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License