இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
பிற சமயங்கள்

தீபாவளித் திருநாளும் சில கதைகளும்


தீபம் + ஆவளி என்பதன் சேர்க்கையே தீபாவளி. தீபங்களின் வரிசை என்று பொருள் தரும் தீபாவளி இன்று பல சமயத்தவரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளித் திருநாள் எனும் விழாவிற்கு மக்களிடையே பல்வேறு கதைகள் வழங்கி வருகின்றன. சமயங்களுக்கேற்றவாறு வழங்கப்படும் இக்கதைகளுள் சில கதைகளைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.

நரகாசுரன் அழிவு

பூமாதேவியின் மகன் நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாவிடம் வரம் வேண்டி தவமியற்றினான்.

நரகாசுரனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா நரகாசுரனிடம், “என்ன வரம் வேண்டுமென்று...?” கேட்க, அவனோ, “தன்னுடைய தாயைத் தவிரத் தனக்கு வேறு எவராலும் மரணம் வரக் கூடாது” என்று வரம் வாங்கினான்.

தான் பெற்ற வரத்திற்குப் பின்பு தேவர்கள், நாட்டு மக்கள் என்று அனைவரையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

இரவு நேரங்களில் வீட்டில் யாரும் விளக்கு ஏற்றி ஒளியூட்டக் கூடாது என்பது உட்பட பல வித்தியாசமான நடைமுறைகளையும் செயல்படுத்தினான்.

பல்வேறு தொல்லைகளுக்குள்ளான மக்கள் நரகாசுரனிடமிருந்து தங்களுக்கு விடிவு வேண்டி இறைவன் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர்.

இறைவன் கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் கிளம்பினார். அவருக்குத் துணையாக சத்தியபாமா தேரோட்டிச் சென்றார்.

கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் போர் தொடங்கியது. அப்போது நரகாசுரன் தொடுத்த ஒரு அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையத் தொடங்கினார்.

இதனைக் கண்ட சத்தியபாமா கோபத்துடன் கிருஷ்ணரிடமிருந்த வில் அம்பை எடுத்து நரகாசுரனின் நெஞ்சுக்குக் குறி வைத்து அம்பை எய்தினார்.

அந்த அம்பு நரகாசுரனின் நெஞ்சில் பாய்ந்தது. அவன் அம்மா என்று அலறினான்.

அப்போதுதான் சத்தியபாமாவிற்குத் தான் பூமாதேவியின் அவதாரம் என்பதும், நரகாசுரன் தன்னுடைய மகன் என்பதும், அவன் பிரம்மாவிடம் தன் தாயால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் வாங்கியிருந்ததும் நினைவுக்கு வந்தன.

தனது மகன் மரணத்திற்குத் தானே காரணமாகி விட்டோமே என்று அவள் வருந்தினாள்.

இதனைக் கண்ட நரகாசுரன், “தாயே, என் மரணத்தைக் கண்டு வருத்தமடைய வேண்டாம். பிரம்மாவிடம் வரம் பெற்ற பின்பு தான் மக்களுக்கு செய்த பல்வேறு கொடுமைகளுக்கு எனக்குச் சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. நான் மக்களை இரவு நேரங்களில் கூட ஒளியேற்றக் கூடாது என்று தடை செய்திருந்தேன். இனியாவது அவர்கள் தங்கள் வீடுகளில் ஒளியேற்றிக் கொண்டாடட்டும். என்னுடைய இறப்பு நாளைத் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி மகிழ்ந்திட வரம் அளித்திட வேண்டும்” என்று வேண்டினான்.

சத்யபாமாவும் அவன் வேண்டிய வரத்தை அளித்தாள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது என்கின்றனர்.



நாடு திரும்பிய நாள்

கைகேயின் சூழ்ச்சியால் இராமர் 14 ஆண்டுகள் வன வாசம் செல்ல நேர்ந்தது. இராமருடன் காட்டிற்குச் சென்ற சீதை இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு விடுகிறார். சீதையைப் பிரிந்த இராமர், பின்னர் வானரங்களின் உதவியுடன் இராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு திரும்புகிறார். 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து இராமரும் சீதையும் நாடு திரும்பும் நாள்தான் தீபாவளித் திருநாள். எனவே அவர்களை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடினர். இந்தத் திருநாள்தான் தீபாவளித் திருநாள் என்று தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்கின்றனர் சிலர்.

இரணியன் அழிவு

மகாவிஷ்ணு தனது நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தில் இரணியனை அழித்து, உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்கின்றனர் சிலர். சிலர் கிருஷ்ணன் ஆணைப்படி மகாபலி கீழ் உலகத்தில் இருந்து பூமிக்கு வந்த நாள் என்றும் சொல்வதுண்டு.

அர்த்த நாரீஸ்வரர் காட்சி

இந்து சமயத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள், சிவபெருமான், "அர்த்தநாரீஸ்வரர்” தோற்றத்தில் காட்சியளித்த நாள்தான் தீபாவளி என்கின்றனர்.

சிறையிலிருந்து விடுதலை

சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளையே தீபாவளி என்று கொண்டாடுவதாகச் சீக்கிய சமயத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.



மகாவீரர் வீடுபேறு நாள்

சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் என்று போற்றப்படும் வர்த்தமான மகாவீரர், ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று வீடுபேறு பெற்றார். அந்த நாளைச் சமண சமயத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று அப்போதைய சமண சமயத்தைச் சேர்ந்த மன்னர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அன்றிலிருந்து தீபஒளித் திருநாள் சமண சமயத்தவர்களால் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்கின்றனர் சமண சமயத்தினர்.

பண்டைய குறிப்பு

இந்தியச் சமயங்களுக்கான பண்டைய இலக்கியங்களில் தீபாவளி எனும் விழா குறித்த தகவல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமண முனிவர் பத்ரபாகு முனிவர் என்பவரால் எழுதப்பட்ட "கல்ப சூத்திரம்' என்னும் பிராகிருத நூலில்,

"மகாவீரர்" என்ற ஞான ஒளி மறைந்துவிட்டதால், தீப விளக்கையாவது ஏற்றி வைப்போம்" என்று காசி, கோச மக்களும், பதினாறு கண அரச மக்களும், தங்கள் வீடுகளின் முன் தீபம் ஏற்றி வைத்தார்கள்"

என்கிற குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

இந்தச் சமண சமய இலக்கியத்திற்கு முன்பாக பிற சமய இலக்கியங்கள் எதிலும் தீபாவளி குறித்த குறிப்புகள் எதுவுமில்லை என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளக் கூடியது.

-கணேஷ் அரவிந்த்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/others/p11.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License