இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


11. ஆதிக்க சாதியினரின் அழைப்பு

அய்யா வைகுண்டரின் போதைனைகள், வழிகாட்டல்கள்... தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினருக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அவர்கள் அய்யாவின் பின்னால் அணி திரண்டனர்.

மேலும், சித்த மருத்துவத்திலும் கைதேர்ந்தவராக இருந்த வைகுண்டர், தீராத நோயால் அவதியுற்றோரை குணமாக்கினார். புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி, அவர்களது நோய் நீங்கச் செய்தார். அற்புதங்கள் பலவும் அவர் வழியாக நிகழ்ந்தன.

எந்தவித ஊடக வசதியும் இல்லாவிட்டாலும் காட்டுத்தீ போல் பரவியது இந்தத் தகவல். அய்யாவை தேடி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு சாதாரண கிராமமாக இருந்த சாமித்தோப்பு பரபரப்புமிக்க ஊரானது.

அய்யாவின் ஆதரவால் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பது மேட்டுக்குடியினரின் கண்களை உறுத்தியது. தங்களைப் பார்த்த மாத்திரத்தில் தலை குனிந்து, துண்டை கை இடுக்குகளில் சொருகிக்கொண்டு ஒதுங்கி நின்றவர்கள், அதே துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொண்டு பூமியை முத்தமிடும் அளவுக்கு வேட்டி அணிந்து கொண்டு கம்பீரமாக நடந்து சென்றவர்களைப் பார்த்து பொறாமை கொண்டனர்.

இதை இப்படியே விட்டால் தங்களுக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தவர்கள், ஒரு கூட்டம் போட்டு, தாழ்த்தப்பட்டவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

‘அந்த வைகுண்டன் எங்கிருந்து வந்தானோ, அவன் வந்த பிறகு அவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாறிப் போய் விட்டார்கள். அந்த வைகுண்டனை நமது தெய்வமான திருமாலின் அவதாரம் என்கிறார்கள். அந்தத் தைரியத்தில் அவர்கள் நம்மை இப்போது மதிக்க மறுக்கிறார்கள். கூலி வேலை செய்ய யாரும் வர மறுக்கிறார்கள். நிலத்தில் விளையும் பயிரையும், பதனீரையும் இலவசமாக கொடுத்து வந்தவர்கள் இப்போது தரத் தயாராக இல்லை. இதை இப்படியே விட்டுவிட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால், இந்த பிரச்சினைக்கு இப்போதே ஒரு முடிவெடுக்க வேண்டும். உடனே நம் சமஸ்தான மன்னரின் தகவலுக்கு இதைக் கொண்டு செல்வதைவிட நாமே ஏதாவது செய்ய வேண்டும்...’ என்று ஒருமனதாக கூட்டத்தில் முடிவெடுத்த மேட்டுக்குடியினர், வைகுண்டரை சூழ்ச்சி செய்து கொல்லத் துணிந்தனர்.



ஒருநாள் வைகுண்டர் தங்கியிருந்த பூவண்டர் தோப்புக்கு ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்த, அய்யா குடிலுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம். “இவர்கள் எப்படி இங்கே?” என்று மனதிற்குள் யோசித்தனர்.

நேராக குடிலுக்குள் புகுந்த ஆதிக்க ஜாதியினர், அய்யாவின் முன்பு அமர்ந்தனர். அவர்களது முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அய்யா.

வழக்கமாக, 18 ஜாதியினரைப் பார்த்தால் பொங்கியெழும் இவர்கள் சாந்த சொரூபமாக அமர்ந்திருந்தனர். நாங்கள் கோபப்பட்டதே இல்லை என்பது போல் தங்களது முகத்தை குழந்தைத்தனமாக வைத்திருந்தனர்.

அப்போது, அய்யாவே அவர்களிடம் பேசினார்.

“எல்லோரும் வாருங்கள்... திடீரென்ற உங்களது வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நோக்கம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“தங்களை எல்லோரும் தெய்வமாக கருதுவதாக அறிந்தோம். நீங்கள் சொல்வதையும் அப்படியே கேட்கிறார்கள். அதனால்தான், நாங்களும் உங்களை ஒருமுறை பார்த்து பாராட்டிவிட்டுச் செல்வோம் என்று வந்தோம்...” என்றனர், அந்த மேட்டுக்குடியினர்.

அவர்களது பேச்சில் விஷம் தடவப்பட்டு இருக்கிறது என்பதை சட்டென்று கணித்துவிட்டார் அய்யா. ஆனாலும், அதை அவர் வெளிக்காட்டக் கொள்ளவில்லை.

“சரி... இப்போது என்னால் உங்களுக்கு காரியம் ஏதேனும் ஆக வேண்டுமா?” என அய்யாவே கேட்டார்.

“காரியம் எல்லாம் ஒன்றுமில்லை. எங்களைப் பகைவர்களாகப் பார்க்காமல், உங்களது சீடர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, எங்களது விருப்பம் ஒன்றையும் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும்...”

“என்ன விருப்பம்?”

“நாங்கள் வைக்கும் விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் எல்லோரது விருப்பம்”.

“நிச்சயமாக உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன். விருந்து எங்கே என்பதை மட்டும் சொல்லுங்கள். நான் தவறாமல் வந்துவிடுகிறேன். ஆமாம்... விருந்து எங்கே?”



“நம்ம மருந்துவாழ் மலையில்தான். நாங்கள் உங்களை ஆவலோடு எதிர்பார்ப்போம்...” என்று கூறிய ஆதிக்க ஜாதியினர், விருந்துக்கான தேதியையும், நேரத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.

புலி பாயத்தான் பதுங்குகிறது என்று கணித்துவிட்டார் அய்யா.

விருந்து நடைபெறும் நாள் வந்தது. மருந்துவாழ்மலைக்குச் செல்லத் தயாரானார். ஆனால், தனி ஆளாக புறப்பட்டார்.

அவரது சீடர்கள், ‘சதி நடக்கிறது... திட்டமிட்டுத்தான் தங்களை வரச் சொல்லி இருக்கிறார்கள்... அதனால், நாங்களும் உங்களுடன் பாதுகாப்புக்கு வருகிறோம்...’ என்று எவ்வளவோ சொல்லியும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனி ஆளாக அங்கே சென்றார் அய்யா வைகுண்டர்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1k.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License