இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
தெய்வீக்த் திருவிளையாடல்கள்

பிரம்படி பெற்ற இறைவன்

ஜெயவிகா


திடீரென்று வைகை ஆற்றில் பெரும் வெள்ளம்.

மதுரையில் வைகைக் கரையோரம் அமைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

இந்த வெள்ளப்பெருக்கு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனையும் திடுக்கிடச் செய்து விட்டது.

வீட்டுக்கு ஒரு ஆண் மண்வெட்டியுடன் புறப்பட்டால்தான், கட்டுக்கடங்காமல் ஓடும் வெள்ளத்திற்கு அணை போட முடியும் என்பதால், மன்னனிடம் இருந்து உடனடியாக உத்தரவு பறந்தது. வீட்டிற்கு ஒரு ஆண் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புறப்பட்டனர்.

இந்த மதுரை மாநகரில் வந்தியம்மை என்ற முதிய பெண்மணி, புட்டு விற்று தனியாக பிழைப்பு நடத்தி வந்தாள். தினமும் புட்டை விற்க ஆரம்பிக்கும் முன்பு, முதல் புட்டை சிவபெருமானுக்கு படைப்பது இவளது வழக்கம். சிவபெருமான் மீது அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தாள்.

வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த வந்தியம்மையின் பொருட்டு செல்ல ஆண்கள் யாரும் இல்லை. ஆனாலும், அவளை அந்த பணியில் ஈடுபடச் செய்ய உத்தரவு மட்டும் வந்துவிட்டது.

”முதியவளான என்னால் என்னச் செய்ய முடியும்?” என்று, தினமும் தான் வணங்கும் சிவபெருமான் முன்பு கண் கலங்கினாள். அவளது கண்ணீர் அந்த இறைவனையே உருக வைத்து விட்டது.

அப்போது, “அம்மா...” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஆம்... அந்த இளைஞன் வேறுயாருமில்லை. சிவபெருமான் தான்!



“அம்மா, உங்களுக்காக நான் வெள்ளப் பெருக்கைத் தடுக்கச் செல்கிறேன். அதற்குக் கூலியாக எனக்கு நீ புட்டு தர வேண்டும்” என்று கேட்டார் இளைஞன் உருவில் இருந்த சிவபெருமான்.

வந்தியம்மையும் அதற்கு சம்மதித்தாள்.

அவள் கொடுத்த சிறிதளவு புட்டை அங்கேயே வாங்கி சாப்பிட்டு விட்டு, கையில் மண்வெட்டியுடன் வைகைக் கரையை அடைக்க புறப்பட்டார் சிவபெருமான்.

அங்கே, வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான ஆண்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாண்டிய மன்னனின் ஆட்கள் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தனர்.

மன்னனும் பணிகள் எப்படி நடக்கிறது என்று பார்வையிட்டுக் கொண்டே வந்தான்.

ஓரிடத்தில் ஒரு இளைஞன் மண்வெட்டியை ஓரமாக வைத்து விட்டு வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மன்னனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நேராக அவனை நோக்கிச் சென்றான்.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல. புட்டுக்காக மண் சுமக்க வந்த சிவபெருமானேதான். மன்னன் அருகே வந்து நிற்பது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்த மன்னன், அருகில் கிடந்த பிரம்பை எடுத்து சிவபெருமானை ஓங்கி அடித்தான். அந்த அடி பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் எதிரொலித்தது. அடித்த மன்னனுக்கும் வலித்தது.

பிரம்பைக் கீழே போட்டபடி அந்த இளைனைப் பார்த்தான் மன்னன். அப்போதுதான், அந்த இளைஞன் சிவபெருமான் என்பதை உணர்ந்தான் மன்னன்.

அவன் தவறை உணர்ந்த அடுத்த நொடியே இறைவனும் மறைந்து விட்டார். தான் புட்டு வாங்கி உண்ட வந்தியம்மைக்கு முக்தியும் அளித்தார்.



உலக உயிர்கள் அனைத்தும் நானே... என்ற தத்துவத்தை உணர்த்த சிவபெருமான் நிகழ்த்திய 61-வது திருவிளையாடல் இது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மதுரை மாநகரிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல உற்சவத்தில் இறைவன் பிரம்படிபட்ட நிகழ்வு புட்டுத் திருவிழாவாக இடம் பெறுகிறது. இந்த திருவிழா நடைபெறும் மதுரை - ஆரப்பாளையம் அருகேயுள்ள வைகை கரையோரம் அமைந்துள்ள பகுதியை இன்றும் ‘புட்டுத்தோப்பு’ என்றே அழைக்கின்றனர்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p2f.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License