இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
தெய்வீக்த் திருவிளையாடல்கள்

கன்னிப்பெண் கேட்ட சீதனம்

ஜெயவிகா


பானாசுரன் எனும் அரக்கன் மிகுந்த பலம் கொண்டவனாக மாற விரும்பி அதற்காக சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தான்.

பானாசுரனின் சீரிய தவம் ஈசனின் மனதைக் கரைத்தது. அவன் முன்பு தோன்றினார்.

“பக்தா! உன் வேண்டுதல் என்ன? எதற்காக என்னை நோக்கி தவம்?”

“தங்களிடம் வரம் வேண்டிதான் இந்த தவம் அய்யனே...”

“என்ன வரம் வேண்டும்? நீயே கேள்...”

“எந்த ஆண் மகனாலும் எனக்கு அழிவு ஏற்படக்கூடாது. ஒரே ஒரு கன்னிப்பெண் தவிர, வேறு எவருக்குமே போரில் என்னை வெல்லும் தகுதி இருக்கக் கூடாது...” என்று வரம் கேட்டான் பானாசுரன்.

சிவபெருமான், அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தார்.

ஈசனிடம் பெற்ற வரத்தின் மூலம் மிகுந்த பலசாலி ஆன பானாசுரன் மனிதர்கள் மட்டுமின்றி தேவர்கள், முனிவர்கள் எல்லோருமே தனக்கு அடிமை என்று மமதை கொண்டான். அவர்களைப் பலவாறு துன்புறுத்தத் தொடங்கினான்.

அசுரனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் அன்னை பராசக்தியிடம் இது குறித்து முறையிட்டனர். அவனை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவளும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாள்.



நாட்கள் வேகமாக நகர்ந்தன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் உதவுவதாக வாக்களித்த அன்னை பராசக்தி ஒரு கன்னிப் பெண்ணாகப் பூமியில் அவதரித்தாள். தென் தமிழகத்தில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் நின்றபடி தவம் புரிந்தாள்.

கன்னியாகுமரி அருகே உள்ள சுசீந்திரத்தில் கோவில் கொண்டுள்ள தாணுமாலயன் (சிவபெருமான்). அவளை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது விருப்பம் பற்றி பராசக்தியிடம் கூற... அவளும் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.

இதையறிந்த தேவர்களும், முனிவர்களும் வேறு மாதிரியாக சிந்தித்தனர். கன்னிப்பெண்ணாக அவதரித்த பராசக்திக்கு கல்யாண ஆசை வந்து திருமணமும் நடந்து விட்டால் பானாசுரனை அழிக்கும் எண்ணம் மாறிப் போய்விடும் என்று அஞ்சினர்.

இதுபற்றி ஈசனிடம் கூறத் துணிவில்லாததால் நாரதரிடம் உதவி வேண்டினர். அவரும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க, மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

தொடர்ந்து, நாரதரே அன்னை பராசக்தி சார்பில் தாணுமாலையனை சந்தித்து, திருமணம் சம்பந்தமாக பேசினார். தன்னை மணக்க இரு நிபந்தனைகளை பராசக்தி விதித்து இருப்பதாக அப்போது தாணுமாலையனிடம் அவர் கூறினார்.

“என்ன நிபந்தனை அவை? ” என்றார் தாணுமாலையன்.

“கன்னிப்பெண்ணை மணக்க வேண்டும் என்றால் சீர்வரிசைப் பொருட்களாக கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவற்றை சீதனப் பொருட்களாக கொண்டுவர வேண்டும். இது முதல் நிபந்தனை”.

“அடுத்தது...?”

“சுவாமி! சூரிய உதயத்தில் திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு ஒரு நாழிகை முன்பாகவே மாப்பிள்ளை மணவறைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும். இவைதான் அன்னை பராசக்தியின் நிபந்தனைகள்”.

“சரி... நானும் அதை ஏற்றுக் கொண்டேன் என்று பதில் சொல்லிவிடும்” என்று நாரதரிடம் கூறினார் ஈசன்.

திருமணத்திற்காக குறித்த நாளும் வந்தது. அன்னை பராசக்தி கூறியபடி சீர்வரிசைப் பொருட்களை தேடிக் கண்டுபிடித்து வரவழைத்து விட்டார் ஈசன். அவற்றைக் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தார். சரியான நேரத்திற்குள் மணவறைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் தாணுமாலயனும் குமரிக்குப் புறப்பட்டார்.

ஏற்கனவே நிபந்தனை என்ற பெயரில் கலகத்தை ஆரம்பித்து வைத்த நாரதர், தாணுமாலையன் செல்லும் வழியில் சேவல் உருவெடுத்து கொக்கரக்கோ... என்று கூவினார்.

‘முகூர்த்த நேரம் தவறி, இப்போதே விடிந்துவிட்டதே. பராசக்தி சொன்னபடி கன்னியாகுமரிக்கு செல்ல முடியாதே...’ என்று தவித்த தாணுமாலயன், வேறு வழியின்றி வந்த வழியே சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார்.

அதேநேரம், தன்னைத் திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் வருவார் என்ற நம்பிக்கையில் பராசக்தி. நின்றபடியான தனது தவத்தைத் தொடர்ந்தாள்.



இதற்கிடையில், கன்னிப்பெண்ணான பராசக்தி குமரிமுனையில் தவம் இருப்பதை அறிந்த பானாசுரன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளுக்கு தூது அனுப்பினான். அவனது கோரிக்கையை நிராகரித்த பராசக்தி, ‘ஒரு அசுரனுக்கு இவ்வளவு தைரியமா?’ என்று பொங்கியெழுந்தாள்.

ஆனால், பானாசுரனோ, திருமணம் செய்தால், பராசக்தியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அவன், அதற்காக அவளை கடத்திக் கொண்டு வர முடிவு செய்தான்.

ஒருநாள் பராசக்தியைக் கடத்திச் செல்ல முயன்றான். ஆக்ரோஷமாக பொங்கியெழுந்தாள் தேவி. தேவர்கள், முனிவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவருக்கும் போர் மூண்டது. இறுதியில், பானாசுரனை வதம் செய்தாள் பராசக்தி. தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்து பராசக்தியை வாழ்த்தினர்.

பானாசுரனை அழித்த பிறகும் குமரி முனையில் தனது தவத்தைத் தொடர்ந்தாள் பராசக்தி. அவளது தவம் இன்றும் தொடர்வதாக நம்பிக்கை உள்ளது. தவத்திலிருக்கும் பராசக்திதான் குமரி பகவதி அம்மனாக நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்.

அன்னை பராசக்தி குமரி முனையில் நின்றபடி தவம் புரிந்த பாறை ‘ஸ்ரீபாறை’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பாறைக்கு எதிரே இது உள்ளது.

பின்குறிப்பு :அன்னை பராசக்திக்குத் திருமண சீர்வரிசைப் பொருட்களாக தாணுமாலையன் அனுப்பி வைத்த கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவையே பல்வேறு நிறம் கொண்ட மணல்களாக இன்றும் குமரி கடற்கரையில் கிடப்பதாக நம்பிக்கை.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p2g.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License