இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
தெய்வீக்த் திருவிளையாடல்கள்

தாய் பார்க்க வேண்டிய பிரசவம்

ஜெயவிகா


பூம்புகாரில் தன வணிகனான ரத்னகுப்தனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்... அன்று அவரது மகள் ரத்னாவதிக்கு திருமணம்! ரத்னகுப்தன் பெரும் வணிகன் என்பதால் பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட வணிகர்கள் ஏராளமானபேர் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

திருச்சி செவ்வந்திநாதரின் அருளால், திருமணம் ஆன 10 வருடங்களுக்குப் பிறகுதான் ரத்னகுப்தன் தம்பதியருக்கு ரத்னாவதி பிறந்தாள். ஒரே மகள் என்பதால் அவளது திருமணம் தடபுடலாக நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் வாய் நிறைய வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

திருமணம் முடிந்ததும் கணவன் ஊரான திருச்சிக்கு குடியேறினாள் ரத்னாவதி. திருச்சி செவ்வந்திநாதரின் அருளாலேயே இந்த சம்பந்தம் ஏற்பட்டதாக பரவசப்பட்டனர், ரத்னகுப்தன் தம்பதியர்.

ரத்னாவதி மீது பாச மழை பொழிந்தான், அவளது கணவன். தனக்கு கிடைத்த நல்ல வாழ்வுக்கும் செவ்வந்திநாதர் தான் காரணம் என்று ஆணித்தரமாக கருதிய ரத்னாவதி, திருச்சி மலைக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள அவரை அடிக்கடி சென்று தரிசித்தாள்.

திருமணத்தைத் தொடர்ந்து, அடுத்த எதிர்பார்ப்பான குழந்தைக்கான கர்ப்பமும் அடைந்தாள். தகவல் அறிந்த அவளது பெற்றோர் திருச்சி வந்து மகளைப் பார்த்து மகிழ்ந்தனர். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், மகப்பேறு காலத்தில் வருவதாக தெரிவித்தனர்.



நாட்கள் வேகமாக ஓடின. பத்தாவது மாதமும் வந்தது. ரத்னாவதியின் பெற்றோர், மகளைப் பார்க்க திருச்சிக்கு வண்டி பூட்டி ஏறினர். மகள் விரும்பி சாப்பிடும் பணியாரம், இலந்தை வடை மற்றும் பதார்த்தங்களை கையோடு எடுத்துக் கொண்டு வந்தனர்.

அவர்கள் திருச்சியை நெருங்கிய நேரத்தில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால், அவர்களால் திருச்சிக்கு வர முடியவில்லை. வெள்ளம் வடியும்வரை காத்திருக்க நேரிட்டது.

இதற்கிடையில், ரத்னாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தாய் கையால் தனக்கு பிரசவம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவளுக்கு, தாய் வந்து சேராதது வருத்தமாக இருந்தது. ஆனாலும், தனது தாய் வந்துவிட வேண்டும் என்று செவ்வந்திநாதரை வேண்டிக் கொண்டாள்.

ரத்னவதியின் வேண்டுதல் வீண் போகவில்லை. அவளது தாய் அவள் முன்பு வந்து நின்றாள். தாயைப் பார்த்த மாத்திரத்தில் அவளது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. கூடவே, பிரசவ வலியும் ஏற்பட்டதால், அவளது தாயே பிரசவம் பார்த்தாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஓரிரு நாட்கள் வேகமாக ஓடின. ரத்னாவதியை கூடவே இருந்து கவனித்தாள் அவளது தாய்.

ஒருநாள், வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த ரத்னாவதிக்கு திடீர் அதிர்ச்சி. அவளது தாயும், தந்தையும் மகளைப் பார்க்கப் பதற்றத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

அப்படியானால், வீட்டிற்குள் இருப்பது யார்? என்று யோசித்தபடி திரும்பினாள். அங்கேயும் அவளது தாய் நின்று கொண்டிருந்தாள். ரத்னாவதிக்கு குழப்பமாகி விட்டது.

அப்போது, வீட்டிற்குள் இருந்த, அவளுக்கு பிரசவம் பார்த்த தாய் செவ்வந்திநாதராக மாறினாள். தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் மட்டுவார் குழலம்மையோடு ரத்னாவதிக்கு காட்சியளித்து மறைந்தார்.

அப்போதுதான் அவளுக்கு உண்மை புரிந்தது; தனக்குப் பிரசவம் பார்த்தது தனது தாய் அல்ல, தாய் வடிவில் வந்த செவ்வந்திநாதர் என்று! அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதையறிந்த அவளது உண்மையான பெற்றோரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.



சரி... யார் இந்த செவ்வந்திநாதர்?

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவராக அருள்பாலிக்கும் இறைவன்தான்! ரத்னாவதிக்கு, ஒரு தாயாக மாறி பிரசவம் பார்த்த காரணத்தால், ‘தாயும் ஆனவர்’ என்ற பொருளில் ‘தாயுமானவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

பின் குறிப்பு: இறைவனின் இந்தத் திருவிளையாடலை விளக்கும் வைபவம், ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் பெருவிழாவில் இடம் பெறுகிறது. ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த வைபவத்தை, ரத்னாவதி வழி வந்தவர்களே இன்றும் நடத்தி வருகிறார்கள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p2i.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License