இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
தெய்வீக்த் திருவிளையாடல்கள்

அழகியின் இசைக்கு ஆடிய ஏழுமலையான்

ஜெயவிகா


இளமை பொங்கி வழியும் பேரழகுக்குச் சொந்தக்காரி அவள். தேவலோக பேரழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகியோரின் கலவையாக இருந்தாள் அவள். பெயர் புரந்தரி. தாசி குலத்தில் பிறந்த இவள் பக்தியின் மறுவடிவமாகவே திகழ்ந்தாள். குறிப்பாக, திருப்பதி ஏழுமலைவாசன் மீது அவளுக்கு தணியாத பக்தி. ஆடல், பாடலுடன் வீணை மீட்டுவதிலும் தனித்திறமை பெற்றிருந்த புரந்தரி, அந்த திறமைகளாலேயே ஏழுமலையானை அனுதினமும் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள்.

இரவு வந்துவிட்டால் போதும்; தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக்கொண்டு, கையில் வீணையையும் தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவாள். புரந்தரியின் இல்லத்தில், அவள் விருப்பத்தின் பேரில் மனைவி லட்சுமிபாயுடன் தங்கி ஆன்மிக சேவை செய்து வந்த ரகுநாதருக்கு இது தெரியாது.

ஒருநாள் இரவு, சலங்கை ஒலி நடமாடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தார் ரகுநாதர். தனது அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது, இன்னொரு அறையில் இருந்து அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தாள் புரந்தரி.

மறைந்து நின்றவாரே அவளைப் பார்த்தார். அவளது பருவச் செழிப்பையும் மீறி ஜொலித்துக் கொண்டிருந்தது அலங்காரம். கையில் அழகான வீணை. காலில் சலங்கைகள். அதன் ஒலிதான் தன்னை எழுப்பிவிட்டது என்று புரிந்து கொண்டார்.

‘எங்கே இந்த இரவு நேர பயணம்...?‘ என்று புரந்தரியிடம் கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது அவருக்கு! ஆனாலும், அவசரப்பட்டு பேசிவிடக் கூடாது என்று எண்ணி அமைதியானார். புரந்தரியும் வெளியேறி விட்டாள்.



மறுநாள் இரவு அவளை கண்காணித்தார் ரகுநாதர். அன்றும் அவள் அதே அலங்காரம், வீணையோடு வெளியேறினாள். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது.

இரவில் அப்படி என்னதான் நடக்கிறது என்று குழம்பிய ரகுநாதர், ஒருநாள் இரவு புரந்தரி வீட்டைவிட்டு வெளியேறும் சமயத்தில் அவளை வழி மறித்தே விட்டார். இதை எதிர்பார்க்காத புரந்தரிக்கு திடீர் அதிர்ச்சி. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“நான் சில நாட்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் இதே இரவு வேளையில் தங்களை அலங்கரித்துக் கொண்டு எங்கோ செல்கிறீர்கள். எங்கே செல்கிறீர்கள் என்று அறிய ஆசைப்படுகிறேன். விருப்பம் இருந்தால் கூறுங்கள்...“ என்று பணிவாகவே கேட்டார் ரகுநாதர்.

அவரது இந்த வேண்டுதல் புரந்தரிக்கு தர்மச்சங்கடமாகிப் போனது. அதேநேரம், உண்மையை மறைக்கவும் அவள் விரும்பவில்லை.

“சுவாமி! இறைவனுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள். உங்களிடம் பொய் சொல்வது, அந்த ஏழுமலையானுக்கே அபச்சாரம் செய்வது போலாகி விடும். அதனால், உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்“.

“நீங்கள் உண்மையைத்தான் சொல்வீர்கள் என்று நானும் நம்புகிறேன்“.

“நான் இந்த இரவு நேரத்தில் வெளியேறுவது, வேறு யாரையும் பார்க்க அல்ல; அந்த ஏழுமலையானைப் பார்க்கத்தான்“.

“என்னது... ஏழுமலையானைப் பார்க்கவா? அதுவும், இந்த இரவு நேரத்திலா?“

“குழப்பம் அடைய வேண்டாம் சுவாமி. ஏழுமலையானின் சந்நிதியில் அவர் மீதான எனது பக்தியை வீணையின் இசையாலேயே வெளிப்படுத்துவேன். அப்போது, மணிகள் ஒலிக்க சந்நிதியின் கதவுகள் தானாக திறக்கும். அந்த ஏழுமலையான் எளியவளான எனது வீணையின் இசைக்கு கட்டுப்பட்டு எழுந்தருளி, என் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவார். சிறிது நேரத்திற்கு பிறகு, என்னிடம் அவர் வீணையை வாங்கி மீட்ட... நானும் அவரது வாசிப்புக்கு ஏற்ப அபிநயம் புரிவேன்... இது இன்று நேற்று அல்ல; பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடக்கிறது...“ என்று புரந்தரி சொல்லச் சொல்ல, பிரமித்துப் போய் நின்றார் ரகுநாதர்.

இவள் சொல்வது உண்மையா? இல்லை... கற்பனைக் கதையா? என்று அவசரத்தில் யோசித்தவர், “தாங்கள் சொல்வதை உண்மை என்று நம்புகிறேன். அந்த ஏழுமலையானுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள என்னால் அவரை நேரில் காண முடியவில்லை. இப்போது, உங்கள் மூலமாக அவரை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்“ என்றார், பணிவாக!

ஒரு நிமிடம் எதையோ யோசித்தவள், பின்னர் ரகுநாதரைப் பார்த்தாள்.

“இன்று இரவே நீங்கள் ஏழுமலையானின் அற்புத திருக்கோலத்தை நேரில் கண்டு தரிசிக்கலாம். என்னுடன் நீங்களும் வாருங்கள். சந்நிதியின் முன் மண்டபத்தில் உள்ள கல் தூணில் ஒளிந்து கொள்ளுங்கள். அங்கிருந்தபடியே இறைவனை தரிசியுங்கள்“ என்றாள்.



சந்தோஷத்தில் மனைவியிடம் சொல்லாமலேயே புரந்தரியுடன் புறப்பட்டார் ரகுநாதர். இருவரும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியை அடைந்தார்கள்.

வழக்கம்போல் சந்நிதியில் அமர்ந்த புரந்தரி பக்தி பரவசத்தோடு வீணையை மீட்க ஆரம்பித்தாள். கல் தூண் ஒன்றின் பின்புறம் ஒளிந்திருந்த ரகுநாதரின் கண்கள் ஏழுமலையான் சந்நிதி கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

அடுத்த நிமிடமே அங்கே தொங்கிக் கொண்டிருந்த மணிகள் தானாக அசைந்து ஒலியெழுப்பின. அவை எழுப்பிய சப்தம் பூஜை நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்த நொடியே சட்டென்று திறந்து கொண்டது சந்நிதியின் கதவு.

இப்போது ரகுநாதரின் பார்வை இன்னும் கூர்மையானது. அவருக்கும் அருள்பாலிக்க கரிசனம் கொண்டார் எம்பெருமான்.

சந்நிதியின் முன்பு புரந்தரி வீணை மீட்டிக் கொண்டிருக்க... தனது அழகான பாதம் தெரிய சர்வ அலங்கார கோலத்தில் நடந்து வந்தார் ஏழுமலையான். புரந்தரி வீணை இசைக்கு ஏற்ப நர்த்தனம் புரிந்த எம்பெருமான், தொடர்ந்து அவளிடம் வீணையை வாங்கி மீட்ட ஆரம்பித்தார். அவரது இசைக்கு ஏற்ப அபிநயம் புரிந்தாள் புரந்தரி.

இந்த தெய்வீக அற்புதக் காட்சிகளை தரிசித்துக் கொண்டிருந்த ரகுநாதரின் கண்களில் இருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீர்த் துளிகள், அவரது பாதத்தை முத்தமிட்டு, தரையில் கரைந்து மறைந்தன.

அப்போதுதான் அவர் எதிர்பார்க்காதது நடந்தது. அதுவரை அழகாய் வீணை மீட்டிய எம்பெருமான், திடீரென்று ராகத்தை அபஸ்வரமாக மாற்றி வீணையை மீட்டினார். புரந்தரியும் அதற்கு ஏற்ப மாறி ஆடினாள். அந்த அபஸ்வரத்தின் ஓசையை மறைந்திருந்த ரகுநாதரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் மறைந்திருந்து கவனிக்கிறோம் என்பதையே மறந்து வெளியே வந்தார்.

அவர் வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் எம்பெருமான் இப்படி ராகத்தை மாற்றினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

மறைவில் இருந்து வெளியே வந்த ரகுநாதர், “என்ன அபச்சாரம் இது? இதை என்னாலேயே கேட்க முடியவில்லையே; வேறு எப்படி அதை எம்பெருமான் ரசிப்பார்?“ என்று அவர் கேட்டபடியே நடந்து வந்து நின்ற போது, அவருக்கு நேர் எதிரே கையில் வீணையுடன் அமர்ந்திருந்தார் எம்பெருமான்.

உண்மை புரிந்து, “எம்பெருமானே...“ என்று குரல் எழுப்பிய ரகுநாதர், “எனது நிறைவேறாத ஆசை இப்போது நிறைவேறிவிட்டது...“ என்று கூறியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.


அப்போது எம்பெருமானே திருவாய் மலர்ந்தருளினார்.

“பக்தா! உன்னை இங்கே அழைத்து வந்த இவள் ஓர் உத்தம பக்தை. இவளே உனக்கு ஞான உபதேசம் புரிவாள். என்னருள் பெற்ற நீ இன்று முதல் ‘புரந்தரதாசன்‘ என்று அழைக்கப்படுவாய். இந்த பூவுலகில் எம்மை பாடி, பல காலம் சிறப்பாய் வாழ்ந்து, என்னை வந்து சேர்வாய்“ என்று அருளி மறைந்தார்.

அதன்படி, புரந்தரியிடம் ஞான உபதேசம் பெற்று புரந்தரதாசன் ஆன ரகுநாதர், ஏழுமலையான் புகழ்பாடும் பக்தி பாடல்கள் பலவற்றை பாடி வாழ்ந்து, இறுதியில் பரமபதம் எய்தினார்.

இந்த புரந்தரதாசரே ‘கர்நாடக சங்கீதத்தின் பிதாமகன்‘ என்றும், ‘நாரத முனிவரின் அம்சம்‘ என்றும் போற்றப்படுகிறார். இவர் முக்தியடைந்த, கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற இடத்தில் ஆண்டு தோறும் அவரது நினைவுநாளில் ஆராதனை செய்து வழிபடுகிறார்கள், பக்தர்கள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p2j.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License