இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

மன்னார்சாலை நாகராஜா கோயில்

உ. தாமரைச்செல்வி


குழந்தைப்பேறு வேண்டுபவர்களின் மனக்குறையைப் போக்கிக் குழந்தைப்பேறு அளிக்கும் நாகராஜர் கோயில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகில் மன்னார்சாலை எனுமிடத்தில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

மன்னார்சாலையில் வசித்து வந்த அந்தணர் குடும்பத்துப் பெண்ணிற்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் மனக்கவலையடைந்த அந்தப் பெண் பரசுராமரை வேண்டித் தனக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணுவின் தோற்றமாகக் கருதப்படும் பரசுராமர் அந்தப் பெண்ணிடம், “பெண்ணே, சிவபெருமான் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி வந்தால் உனக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும்” என்று அருளினார்.

அந்தப் பெண்ணும் பரசுராமர் சொன்னபடி பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கித் தனக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வந்தார். அவரின் தொடர் வேண்டுதலின் பலனாக வாசுகி அவர் முன்பு தோன்றி, “பெண்ணே, உன் தொடர் வேண்டுதலால் மகிழ்ந்தேன். உனக்கு முதல் குழந்தையாக ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று பிறக்கும். அதன் பிறகு, இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கும். முதல் குழந்தையாகப் பிறக்கும் அந்தப் பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது. இந்த உலகம் இருக்கும்வரை அந்தப் பாம்பும் உயிருடன் இருந்து உன்னையும், உன் மரபு வழியினரையும் பாதுகாக்கும்” என்று அருளினார்.

வாசுகி அருளியபடி அந்தப் பெண்ணிற்கு முதலில் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பும், அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. அந்தப் பெண் இரு குழந்தைகளையும் ஒன்று போல் கவனித்து வளர்த்து வந்தார். இரு குழந்தைகளும் பெரியவர்களாகினர். அந்தப் பெண் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை முதலாவது மகனான நாகராஜனிடம் கூறினார்.


அதைக் கேட்ட நாகராஜன், “தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை, எனவே இந்த வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க ஆசைப்படுகிறேன். தங்கள் விருப்பப்படி தம்பிக்குத் திருமணம் செய்து வைத்துவிடுங்கள். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன்” என்றார்.

அந்தப்பெண், “மகனே, நீ என்னைவிட்டுத் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நான் இருக்கும் வரை என் கண் முன்பாகவே இருக்க வேண்டும். நீ இந்த வீட்டின் நிலவறையில் இருந்து கொள். நான் அவ்வப்போது வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று வேண்டிக் கொண்டாள்.

நாகராஜன் தாயிடம், “அம்மா, நான் தங்கள் விருப்பப்படி இந்த வீட்டின் நிலவறையில் போய் இருந்து கொள்கிறேன். நான் இந்தக் குடும்பத்தினரையும், அவர்களைத் தொடர்ந்து வரும் மரபு வழியினரையும் இந்த உலகம் இருக்கும்வரை காப்பாற்றுவேன். தாங்கள் விரும்பும் நேரத்தில் நிலவறைக்கு வந்து என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

நாகராஜன் தன் தம்பியிடம், “தம்பி, நான் நிலவறைக்குச் சென்ற பின்பு, அதனருகில் ஒரு கோயில் அமைத்து, கோயிலினுள்ளே எனது உருவச்சிலை ஒன்றை நிறுவி, எல்லோரும் என்னை வணங்கி வாருங்கள். என்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்குவேன்” என்று சொல்லி வழிபாட்டு முறைகளையும் சொன்னார்.

அதன் பிறகு அவர் நிலவறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டார். நாகராஜனின் தம்பி நிலவறையின் அருகில் கோயிலமைத்து, அதில் நாகராஜர் சிலையினையும் நிறுவினார். அன்றிலிருந்து இன்று வரை நாகராஜர் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு அருகிலுள்ள நிலவறையில் நாகராஜர் இருந்து அருள்வதாக பக்தர்களிடம் நம்பிக்கையும் நிலவுகிறது.


வலிய அம்மா பூசை

நாகராஜர் இருப்பதாகக் கருதப்படும் நிலவறைக்குச் செல்லவும், நாகராஜருக்குப் பூசை செய்யும் உரிமையும் அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணியாகக் கருதப்படும் "வலிய அம்மா" என்பவருக்கு மட்டுமே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்குச் சென்று நாகராஜனை வழிபடுவதாகச் சொல்கின்றனர். பக்தர்களின் வழிபாடு, சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கான மேற்பார்வை போன்றவைகளையும் இவரே கவனித்துக் கொள்கிறார். இக்கோயிலில் நாகராஜனுக்கு அடுத்து முக்கியத்துவமுடையவராக "வலிய அம்மா" இருக்கிறார். "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்தக் குடும்பத்தின் மூத்தப் பெண்மணியாக இருப்பவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். அந்தப்பெண் திருமண வாழ்க்கையிலிருந்தால், அவர் தனது குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி, "வலிய அம்மா" வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் நடைமுறையிலிருக்கிறது.

உறுளி கவிழ்த்தல்

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் உறுளி என்கிற நல்ல கனமுள்ள வட்ட வடிவிலான வெங்கலப் பாத்திரத்தினை இக்கோயிலின் பூசைப்பணிகளைச் செய்யும் “வலிய அம்மா”விடம் கொடுத்துத் தங்கள் குழந்தைப்பேறு வேண்டிக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த உறுளிப் பாத்திரத்தைப் பூசை செய்து அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் கவிழ்த்து வைத்து விடுகிறார். அந்தத் தம்பதியினர் தங்களுக்குக் குழந்தை பிறந்த பின்பு, தங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து வலிய அம்மாவைப் பார்த்து, வெள்ளியில் செய்யப்பட்ட ஒரு பாம்பு உருவத்தினைக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த வெள்ளிப் பாம்பு உருவத்திற்குப் பூசை செய்து, தம்பதியர் முன்பு கொடுத்துக் கவிழ்த்து வைத்திருந்த உறுளிப் பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து வேண்டுதலை நிறைவு செய்து தம்பதியர்களுடன், குழந்தையையும் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.



ஆயில்ய நாள் வழிபாடுகள்

நாகராஜா கோயில்கள் அனைத்திலும் புரட்டாசி மாதத்தில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். மன்னார்சாலை நாகராஜா கோயிலிலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த வழிபாட்டில் திருவிதாங்கூர் மன்னர் கலந்து கொண்டு நாகராஜரை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது. ஒரு முறை மன்னர் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே, அவர் அடுத்து வந்த ஐப்பசி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வருகை தந்து, புரட்டாசி மாத ஆயில்ய நாள் சிறப்புக் கொண்டாட்டங்களைப் போன்றே சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டார். அதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்ட அவர், இனி ஆண்டுதோறும் இரு ஆயில்ய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நட்த்தும்படி வேண்டிக் கொண்டார். இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி என இரண்டு மாதங்களில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுகிறது.

சிறப்புகள்

இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நாக வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கோயில்களில் மன்னார்சாலை நாகராஜா கோயில்தான் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது.

இக்கோயில் வளாகத்தில் முப்பது ஆயிரத்துக்கும் அதிகமான நாகதேவதைகளின் சிலைகள் இருக்கின்றன.

இக்கோயிலில் குழந்தைப்பேறு வேண்டிச் செய்யப்படும் உறுளி வேண்டுதல் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமானதாக இருக்கிறது.

அமைவிடம்

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஹரிப்பாடு எனும் ஊரிலிருந்து வடகிழக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்சாலை எனுமிடத்தில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p24.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License