இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

பேராற்றுச் செல்வி அம்மன் கோயில்

உ. தாமரைச்செல்வி


வாழ்க்கையில் எத்தனை முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், பல வேளைகளில் ஏதாவதொரு கொடியவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு பெருந்துன்பத்துக்குள்ளாக வேண்டியதாகி விடுகிறது. வாழ்க்கையில் அவ்வப்போது வரும் பெருந்துன்பங்களிலிருந்து விடுபட்டுப் பேரானந்தம் பெற்றிட உதவும் தலமாகத் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் அமைந்திருக்கும் பேராற்றுச் செல்வி அம்மன் கோயில் இருக்கிறது.

தல வரலாறு

தனக்குக் கிடைத்த சக்தியினைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிய துர்க்கன் எனும் அரக்கன் தென்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை எல்லாம் அங்கிருக்க விடாமல் விரட்டி அடித்தான். அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவரையும் அச்சுறுத்தியதுடன் துன்புறுத்தியும் வந்தான். அவனை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தும் வந்தான்.

அவனுடைய கொடிய செயல்களால் அவதிப்பட்டு வந்த முனிவர்களும், மக்களும் அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி இறைவன் சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான் பார்வதிதேவியிடம், அரக்கன் துர்க்கனை அழித்து அனைவரையும் காக்கும்படிச் சொன்னார்.

இறைவனின் கட்டளையை ஏற்ற பார்வதி தேவி எட்டு கைகளுடனான காளியாகப் புதியத் தோற்றமெடுத்தாள். எட்டு கைகளில், எட்டு வகையான ஆயுதங்களைக் கொண்டு அந்த அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்தாள். அரக்கன் அழிந்த பின்பும், அவளின் கோபம் குறையாமல் இருந்தது.

அரக்கன் அழிந்ததைக் கண்டு மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும் அங்கு வந்து, அவளை வணங்கிக் கோபத்தைக் குறைத்து அமைதியடையும்படி வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுதலைக் கேட்டுச் சிறிது அமைதியான அவள், அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கி மூழ்கினாள். பின்னர், அந்த இடத்திலிருந்து பேரொளியாக மாறி மேல்நோக்கிச் சென்றாள்.

அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன. இந்நிலையில், பாண்டிய மன்னனிடம் கோயில் பண்டகசாலைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஒருவர் கனவில் தோன்றிய அம்மன், துர்க்கன் எனும் அரக்கனை அழித்த தான் பல ஆண்டுகளாகத் தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கிக் கிடப்பதாகவும், தாமிரபரணி ஆற்றிலிருந்து தன்னை எடுத்து வந்து, தனக்குத் தனியாகக் கோயில் அமைத்து வழிபடவும் சொன்னார்.

மறுநாள் காலையில், அவர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, அங்கு ஒடிக் கொண்டிருந்த ஆற்று நீரில், ஓரிடத்தில் ஒரு எலுமிச்சை அசையாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அந்த எலுமிச்சையை எடுக்கும் ஆர்வத்துடன் அந்த இடத்துக்குச் சென்றார்.

அங்கு, அவர் கனவில் தோன்றிய அம்மன் சொன்னபடி, ஆற்று நீருக்குள் எட்டுக் கைகளுடனான அம்மன் சிலை ஒன்று இருப்பது தெரிந்தது. அந்தச் சிலையை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்த அவர், தாமிரபரணி ஆற்றின் கரையில் அதை வைத்து வணங்கினார். பின்னர், மன்னரின் உதவியுடன் அங்கு அம்மனுக்கு ஒரு கற்கோயிலையும் கட்டுவித்தார்.


பேராற்றுச் செல்வி

அந்தக் கற்கோயிலினுள் நிறுவப்பட்ட அம்மன், தாமிரபரணி எனும் பெரும் ஆற்றில் இருந்து எடுத்து வரப்பெற்ற அம்மன் என்பதால், பேராற்றுச் செல்வி என்று அழைக்கப்பட்டார். நாளடைவில், பேச்சு வழக்கில் பேராத்துச் செல்வி என்று பெயர் மாற்றமும் பெற்றார். எட்டு கைகளிலும் ஆயுதங்களுடன் இருந்தாலும், இந்த அம்மன் அமைதியான தோற்றத்தில் இருப்பதால் இவரைச் “சாந்த சொரூப காளி” (அமைதி வடிவக் காளி) என்றும் அழைக்கின்றனர்.

கோயில் அமைப்பு

இந்தக் கோயிலில் பேராற்றுச் செல்வி அம்மன் வடக்கு திசையைப் பார்த்தபடி இருக்கிறார். அம்மன் சன்னதிக்குப் பின்புறம் இரட்டைப் பிள்ளையாரும், இவர்களுக்கு இடதுபுறத்தில் இரட்டை நந்தியும் இருக்கின்றன. இரட்டை நந்தி இருப்பது இக்கோயிலின் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில், சங்கிலி பூதத்தார், நல்ல மாடன் ஆகியோர் பீட நிலையிலும், தளவாய்ப்பேச்சி தனிச்சன்னதியிலும் இருக்கின்றனர். இதுபோல், இங்கு லிங்கேஷ்வரர், சக்கர விநாயகர் ஆகியோரும் இருக்கின்றனர்.

விழாக்கள்

இங்கு அனைத்துக் கோயில்களையும் போல் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல், அம்மன் கோயில்கள் அனைத்திலும் ஆடி மாதம் செய்யப்படும் அனைத்துச் சிறப்பு வழிபாடுகளும் இங்கு செய்யப்படுகின்றன. இங்கு சித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் ‘கொடை விழா’, ஆடி மாதம் இரண்டாம் வாரத்தில் ‘முளைப்பாரித் திருவிழா’, புரட்டாசி மாதம் ’பாரிவேட்டை’ போன்ற விழாக்கள் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

வழிபாட்டுப் பயன்கள்

* வடக்கு நோக்கிச் செல்லும் ஆற்றில் குளித்து அம்மனை வழிபட்டால், அனைத்து நலன்களையும் பெற முடியும் எனும் நம்பிக்கை உண்டு. இங்கு, தாமிரபரணி வடக்கு நோக்கிச் செல்வதால், இங்கு ஆற்றில் குளித்து வந்து, அம்மனை வழிபட்டுப் பயனடைகின்றனர்.

* காசியை ஆண்ட மன்னன் ஒருவன் தீராத தொழுநோயால் துன்பப்பட்டு வந்த நிலையில், இங்கு வந்து தாமிரபரணி ஆற்றில் குளித்து, அம்மனை வழிபட்டுத் தொழுநோய் நீங்கப் பெற்றதாகவும், இதனால் இங்கு தாமிரபரணிக்குக் “குட்ட குறை தீர்த்தம்’ என்கிற பெயருமுண்டு என்றும் சொல்கின்றனர். தொழு நோய் மற்றும் தோல் நோயுடையவர்கள் இங்கு தாமிரபரணி ஆற்றில் குளித்து, அம்மனை வழிபட்டு நலம் வேண்டிச் செல்கின்றனர்.

* இங்குள்ள அம்மனுக்குச் செவ்வரளி மாலை அணிவித்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்.

* கொடியவர்களின் தீய செயல்களால் பெருந்துன்பமடைந்து கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு எலுமிச்சை மாலையினைச் சாற்றிச் சிறப்பு வழிபாடுகள் செய்தால், பேராற்றல் கொண்ட பேராற்றுச் செல்வி அம்மன் பெருந்துன்பங்கள் நீக்கிப் பேரானந்தம் கிடைக்கச் செய்வார் என்கின்றனர்.

* இக்கோயிலுக்கு வந்து பயனடைந்த பலரும், அம்மனுக்கு நன்றி செலுத்தும் வகையில், விழாக் காலத்தில் ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி எடுத்து வழிபடுகின்றனர்.

அமைவிடம்

திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதியான வண்ணாரப்பேட்டையில் இந்தப் பேராற்றுச் செல்வி அம்மன் கோயில் அமைந்திருப்பதால், திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அனைத்துப் பேருந்து நிலையங்களிலிருந்தும் நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p26.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License