இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோயில்

உ. தாமரைச்செல்வி


விஷ்ணு கையில் வைத்திருக்கும் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் கதாயுதம் என்கிற ஐந்து ஆயுதங்களில் சக்கராயுதம் முதன்மையானதாக இருக்கிறது. இந்தச் சக்கராயுதத்தை விஷ்ணு தனக்கு நிகரான சக்தியுடையதாக உருவாக்கினார். சக்கராயுதத்தில் இருக்கும் இறைவனைச் சுதர்சனர் என்று போற்றுகின்றனர். சுதர்சனரைப் பக்தர்கள் அனைவரும் சக்கரத்தாழ்வார் என்றே அழைக்கின்றனர். சக்கரத்தாழ்வாரைச் சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திரமூர்த்தி, மந்திரமூர்த்தி என்கிற வேறு சில பெயர்களாலும் அழைப்பதுண்டு.

சுதர்சனர் வழிபாடு

சுதர்சனரை வழிபட்டு வலது புறமாகச் சென்று பின்புறமுள்ள யோக நரசிம்மரை வணங்கினால், அனைத்து அச்சங்களும் அகன்று மனத்துணிவும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்பது தொன்ம நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால், விஷ்ணு பக்தர்களிடம் சுதர்சன வழிபாடு மிகச் சிறப்புடையதாக இருக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் விஷ்ணு கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கென்று தனிச் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இச்சந்நிதிகளில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எட்டு கரங்கள் கொண்டிருந்தால் சுதர்சனர் என்றும், பதினாறு கரங்கள் கொண்டிருந்தால் சுதர்சன மூர்த்தி என்றும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்டிருந்தால் மகா சுதர்சனர் என்றும் அழைக்கப்படுகின்றார்.


சுதர்சன மூர்த்தி

திருநெல்வேலி மாவட்டம், கரிசூழ்ந்தமங்கலம் எனும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் சுதர்சன மூர்த்திக்குத் தனிக்கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் கருவறையில் சுதர்சனர் மூலவராகத் தனது பதினாறு கைகளில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு வகையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார்.

சுதர்சனருக்குப் பின்புறம் நான்கு கரங்களோடு யோக நரசிம்மர் இருக்கிறார். நரசிம்மரின் நான்கு கரங்களிலும் சுதர்சனச் சக்கரங்கள் இருக்கின்றன. பொதுவாக, விஷ்ணு கோயில்களில் இருக்கும் சுதர்சனர் சந்நதிகளைப் போன்று இங்கு யோக நரசிம்மரைக் கண்டு வணங்கிடப் பின்புறமாகச் செல்வதற்கான வழி இல்லை. இங்கு சுதர்சன மூர்த்திக்குப் பின்பகுதியில் இருக்கும் யோக நரசிம்மரை வணங்குவதற்குப் பின்புறச் சுவரில் நிலைக்கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. நரசிம்மருக்குத் தீப ஆராதனை செய்யப்படும் பொழுது, அதன் ஒளியில், நிலைக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்ம உருவத்தைக் கண்டு வணங்க முடியும்.


உற்சவர் வெங்கடாசலபதி

இக்கோயிலின் மூலவராகச் சுதர்சன மூர்த்தியும், உற்சவராக வெங்கடாசலபதியும் இருக்கின்றனர். இக்கோயில் உற்சவரின் பெயரால், வெங்கடாசலபதி கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயில் கருவறையின் முன்னாலிருக்கும் மண்டபத்தில் உற்சவரான வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் செப்புத் திருவுருவங்களாக அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு மூலவருக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே உற்சவருக்கும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


வழிபாட்டுப் பலன்கள்

சுதர்சன மூர்த்தியை வழிபடுவதால், மனிதனுக்கு வரும் பல்வேறு பாதிப்புகளுக்கும் முதன்மைக் காரணமாக இருக்கும் கடன் (ருணம்), நோய் (ரோகம்), எதிரி (சத்ரு) எனும் மூன்றும் அழிந்து மன அமைதி கிடைக்கும். கல்வி தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கித் தடையற்ற கல்வி வளம் கிடைக்கும். மேலும், கெட்ட கனவுகள், மனக்குழப்பம், மனநோய், தீய சக்திகளால் ஏற்படும் மனம் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் அதனால் வரும் துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.

சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதியாக இருப்பதால், இக்கோயில் சுக்கிரன் பரிகாரத் தலமாகவும் இருக்கிறது. இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.

படிப்பாயாசம்

திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும், குழந்தைப் பேறு கிடைக்காதவர்கள் கணவன், மனைவி என இருவரும் சேர்ந்து இங்குள்ள சுதர்சன மூர்த்தியையும், நரசிம்மரையும் வழிபட்டுத் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள படித்துறையில் பாயாசம் வழங்கினால், அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் விரைவில் கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அமைவிடம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேலப்பாளையம் வழியாகச் சேரன்மகாதேவி செல்லும் வழியில் இருக்கும் பத்தமடை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்து தனிப்பாதையில் 2 கிலோ மீட்டர் தொலைவு சென்றால் கரிசூழ்ந்த மங்கலம் ஊரை அடையலாம். இங்குள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.

(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p30.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License