இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

சூரியனார் கோயில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி


சூரியனை உலகமெங்கும் வழிபடும் வழக்கம் இருந்தது. பாரசீகர்கள் சூரியனை மித்திரன் எனவும், கிரேக்கர்கள் அப்பல்லோ எனவும், ரோமர்கள் தைபீரியஸ் எனவும் வணங்கினர். எகிப்து, வடஅமெரிக்கா என எல்லா இடங்களிலும் சூரிய வழிபாடு தொன்றுதொட்டு இருந்துள்ளது. எகிப்தின் பாரோ மன்னர்கள் தங்களைச் சூரியக் குமாரர்கள் என அழைத்துக் கொண்டனர். நம் இந்திய மன்னர்களும் சூரியவம்சம் என அழைத்துக் கொண்டது அறிவோம். இதனாலேயே சூரியனுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயிலகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நவக்கிரகங்களில் ஒன்றாக இருக்கும் சூரியனுக்குத் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனார் கோயில் அமைந்திருக்கிறது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் குறித்த மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்...


தல வரலாறு

இமயத்திலிருந்த காலமுனிவரிடம் வந்த இளம் துறவி ஒருவர் தனது எதிர்காலம் பற்றிச் சொல்லும்படி கேட்கிறார். முனிவர் அவரிடம், ‘உமக்குச் சொல்லும்படி ஏதுமில்லை’ என்கிறார். வந்தவர் அவரிடம், ‘உமது எதிர்காலமாவது அறிவீரோ?’ எனச் சொல்லி மறைகிறார். அப்போதுதான் அந்த முனிவருக்கு இளம் துறவி வேடத்தில் வந்தது காலதேவன் என்பது தெரிகிறது.

உடனே அவர் தன்னுடைய ஞானத்திறனால், தன்னுடைய எதிர்காலம் குறித்து அறிய முயற்சிக்கிறார். அப்போது அவருக்கு முன் வினைப்பயனால் தொழுநோய் பற்றும் எனத் தெரிகிறது. அதனையறிந்த அவர் கலக்கம் அடைகிறார். தனக்கு வரும் தொழுநோயிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என்று அவர் சிந்திக்கிறார். பின்னர், நவக்கிரகங்களை நினைத்துக் கடுந்தவம் புரிகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த நவக்கிரகங்களின் நாயகர்கள் முனிவரின் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்கின்றனர். காலமுனிவர் அவர்களிடம், முன்வினைப்பயனால் தனக்கு வரவிருக்கும் தொழுநோய், தன்னைப் பற்றாது அருள வேண்டுமென்று கேட்கிறார். அவர்களும் முனிவர் கேட்ட வரத்தினைத் தந்தருள்கிறார்.

இதனை அறிந்த பிரம்மதேவன், ‘இறைவனின் ஆணைப்படி காலதேவனின் துணையுடன் பூவுலகில் பிறக்கும் உயிர்கட்கு வினைப்பயன் தருவதே உங்களின் பணி, அதனை மீறிக் காலமுனிவரின் வினைப்பயனான தொழுநோயை நீக்கி வரம் தந்த உங்களுக்கு அந்தத் தொழுநோய் பற்றி அவதியடையுங்கள்’ எனச் சாபமிட்டார்.

அப்போதுதான் நவக்கிரகங்களுக்குத் தாங்கள் செய்த தவறு தெரிய வந்தது. உடனே அவர்கள், தங்களை மன்னித்து, அந்தச் சாபத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டினர்.

உடனே பிரம்மன் அவர்களிடம், ‘காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருக்க வனத்தில் (வெள்ளெருக்கங்காடு) கார்த்திகை மாதத்தின் முதல் ஞாயிறு தொடங்கி 78 நாட்கள் தவம் புரிதல் வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடியும் நேரத்திற்கு முன்பாகக் காவிரியில் நீராடி, மங்களநாயகி உடனுறை பிராணநாதரை எருக்கின் இலையில் தயிர் அன்னம் வைத்துப் படைத்து வணங்கி, அதை உண்டு வந்தால் உங்கள் நோய் குணமடையும்’ என்று விமோசனத்தையும் சொல்லி அருளினார்.

பிரம்மன் கொடுத்த சாபத்தின்படி நவக்கிரகங்களைத் தொழுநோய் பற்றிக் கொண்டது. அவர்கள் பிரம்மன் சொன்னபடி பூலோகத்தில் இருந்த அருக்க வனம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் பிரம்மன் சொன்னபடி செய்து, அதிலிருந்து விடுபட்டனர்.

நவகிரகங்கள் தன்னால் துயருற்றதை அறிந்த காலமுனிவர், அங்கு வந்து அவர்களிடம் மன்னிப்பு வேண்டினார். தங்களிடம் வேண்டிய காலமுனிவரிடம், தமக்கு அங்கு ஒரு ஆலயம் அமைக்கப் வேண்டினர். அவ்வாறு உருவான கோயிலோ சூரியனார் கோவில் என்கிறது இக்கோயிலின் தல வரலாறு.



சூரியனுக்கு உகந்தவை


1. இராசி - சிம்மம்

2. திசை - நவகிரகங்களில் நடு

3. நிறம் - சிவப்பு 4. வாகனம் - ஏழு குதிரை பூட்டிய ஒரு சக்கரத் தேர்

5. கிழமை - ஞாயிறு

6. தானியம் - கோதுமை

7. மலர் - செந்தாமரை

8. ஆடை - சிவந்த ஆடை

9. இரத்தினம் - மாணிக்கம்

10. உலோகம் - செம்பு

11. அன்னம் - சர்க்கரைஅன்னம்



கோவில் அமைப்பு

இக்கோயிலின் கருவறையில் சூரியபகவான் இடப்புறம் உஷாதேவி, வலப்புறம் சாயாதேவி ஆகியோருடன் நின்ற நிலையில் இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களுடன் காட்சியளிக்கிறார். உஷாதேவி வலது கரத்தில் நீலோற்பவ மலரையும், சாயாதேவி இடது கரத்தில் தாமரை மலரையும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். கருவறையின் மேல் ஏகதள விமானத்தின் நான்கு மூலைகளிலும் குதிரைச் சிற்பங்கள்.விமானத்தைச் சுற்றி பன்னிரு உபசூரியர்கள் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். கருவறையின் முன் சூரியனின் வாகனமான குதிரை நின்ற நிலையில் இருக்கிறது. பிங்கலனும், தண்டியும் துவாரபாலகர்களாக இருக்கின்றனர்.

கோயில் வளாகத்தில் தென்மேற்கில், கோள் வினை தீர்த்த விநாயகர் சந்நிதி, வடக்கில் தீர்த்தக் கிணறு, சண்டேசுவரரின் சந்நிதி, வடகிழக்கில் யாகசாலை, தென்கிழக்கில் மடைப்பள்ளி, தெற்கில் தலவிருட்சமான வெள்ளெருக்கு உள்ளது. சூரிய பகவானின் கருவறையை ஒட்டி, மற்ற நவக்கிரகங்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இக்கோயில் நவகிரகங்களின் கோவில் என்றாலும், சூரியனுக்கு உரிய தலமாகவே இருக்கிறது.



வழிபாடு

இக்கோயிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் வரும் இரதசப்தமி விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. இது தவிர, சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இக்கோயிலில் இருக்கும் சூரிய பகவானை வழிபடுபவர்களுக்கு புகழ், மங்களம், உடல்நலம், ஆட்சித் திறம், செல்வாக்கு போன்றவை கிடைக்கும் என்கின்றனர். இவை தவிர, தோல் நோய்கள் இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுக் குணமடையலாம்.


சிறப்புகள்

1. இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்.

2. சூரியனுக்கென்று அமைக்கப்பட்டு, நல்ல பராமரிப்பில் இருந்து வரும் ஒரே கோவில் இது.

3. இக்கோயிலில் நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

4. சூரியனை வணங்கும் போது, அவரெதிரில் உள்ள குருவின் அருளும் கிடைக்கும்.

5. இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களின் நல்லருள் கிடைக்கும்.

6. இக்கோயில் கிரகங்களை இடமாகச் சுற்றி வந்து, பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்பில் அமைந்துள்ளது.

7. இக்கோயிலில் ஒன்பது கிரகங்களுக்கும் பரிகாரம் செய்யும் அமைப்பு இருக்கிறது.

8. இக்கோயில் தீர்த்தக்குளம் சூரியக்குளம் என்றழைக்கப்படுகிறது.



அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், ஆடுதுறைக்கு வடக்கில் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பனந்தாளுக்குத் தெற்கில் 10 கிலோ மீட்டர் தூரத்திலும் சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. கும்பகோணம், ஆடுதுறை, அணைக்கரை போன்ற ஊர்களிலிருந்து திருமங்கலக்குடி எனும் ஊருக்குச் சென்று, அங்கிருக்கும் திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்கலநாயகியையும் வழிபட்ட பின்னர் சூரியனார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்கிற வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p39.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License