இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்திருக்கும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் நவக்கிரகங்களில் வியாழன் (குரு) பகவானுக்குரியதாக இருக்கிறது.

தலவரலாறு

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும்படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது என்று இக்கோயிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

இக்கோயிலின் சிறப்பு பற்றி மற்றொரு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. முசுகந்தன் என்ற சோழ மன்னன், இக்கோவில் கட்டுவதற்காகத் தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் அந்த மந்திரி மன்னன் கொடுத்தப் பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தைப் பயன்படுத்தி இக்கோயிலைக் கட்டினான். இதனையறிந்த மன்னன், தான் கொடுத்த பணத்தில் கோயிலைக் கட்டாமல், மந்திரியின் பணத்தில் கோயில் கட்டப்பட்டதால், அந்தக் கோயில் கட்டுவித்த பலன்கள் எதுவும் தனக்கு வந்து சேராது என்பதால் மந்திரியிடம் அந்தக் கோயில் கட்டிய பலன்களில் தனக்கும் சமபங்கு அளிக்கும்படி மந்திரியிடம் கேட்டான். ஆனால், அந்த மந்திரி அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலையை வெட்டத் தனது வாளை எடுத்து ஓங்கினான். அவ்வேளையில் அங்கு தோன்றிய இறைவன், மந்திரி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

குருவின் தன்மையும் உகந்தவையும்


குரு என்று பெயர் பெற்றவர் மூவர்.

1. ஆதி நாயகனான ஈசன் சின்முத்திரை தரித்து தென்முகக் கடவுளாக, தட்சிணாமூர்த்தியாக ஆலின் கீழமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருள் உணர்த்தியவன்.

2. அப்பனுக்குப் பிரணவத்தை உபதேசித்த முருகன்.

3. தேவர்களின் குருவான வியாழ பகவான்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது வழக்கு. குரு பகவான் இராஜயோகம் தருபவர், வெற்றி, சாதனைகள் தருபவர்

குரு பார்க்க கோடி நன்மை என்பது உலக வழக்கு. குரு பகவான் இராஜயோகம் தருபவர். வெற்றி, சாதனைகள் தருபவர் என்று போற்றப்படுகிறார்.

நிறம் - மஞ்சள்

தேவதை - பிரமன்

தானியம் - கொண்டைக்கடலை

உலோகம் - பொன்

குணம் - சாத்வீகம்

சுவை - இனிப்பு

திசை - வடக்கு

ஆட்சி - தனுசு, மீனம்.

உச்சம் - கடகம்

நட்சத்திரம் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.

ஆடை - மஞ்சள் ஆடை


கோவில் அமைப்பு

1900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் ஆலங்குடி ஊரின் நடுவில் ஐந்து நிலை கொண்ட இராஜ கோபுரத்துடன் அமைந்திருக்கிறது. இக்கோயில் நான்கு புறமும் நீண்ட மதில்களைக் கொண்டது. இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கோபுர வாயிலிலேயே இடது புறம் கலங்காமற் காத்த விநாயகர், அடுத்து நேராக ஏலவார் குழலம்மையின் சந்நிதி, அடுத்து ஈசன் சந்நிதி, இதன் பின்னர் குரு சந்நிதி என அமைந்துள்ளது. (மாதா, பிதா, குரு எனும் அமைவில்) இத்தலத்தில் தட்சிணா மூர்த்தி தெற்கு நோக்கி இருக்கிறார். இரண்டாவது வாயிலிலைக் கடந்தால் சூரியன், சுந்தரர் சந்நிதிகள், அடுத்த உட்பிரகாரத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி,தேவார நால்வர், சப்த லிங்கங்கள் உள்ளன. அடுத்த மகாமண்டபம் கடந்தால், கிழக்கு நோக்கி ஆபத்சகாயேசுவரர் அருள் பாலிக்கிறார். தெற்கே தேவகோட்டத்து விநாயகரை அடுத்து குரு பகவானின் சந்நிதி உள்ளது. இது தவிர, சோமாஸ் கந்தர், வீரபத்திரர், துர்க்கை, சண்டிகேசுரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.


வழிபாடுகள்

இங்கு காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது.

* மாசி மாதம் மூன்றாவது வியாழன் மகா குரு வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

* இங்கு குரு பெயர்ச்சி நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகிறது.

* தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் நாளில் தீர்த்தவாரி நடத்தப் பெறுகிறது.

* சித்ராபௌர்ணமியை முன்னிட்டுப் பத்து நாட்கள் திருவிழாவும். இவ்விழாவில் தட்சிணாமூர்த்தி உற்சவராக வலம் வரும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

வழிபாட்டுப் பலன்கள்

1. இக்கோயிலின் தல விருட்சம் பூளைச்செடி. இச்செடிகளிருக்கும் இடத்தில் பாம்பு உள்ளிட்ட விசப்பூச்சிகள் இருக்காது என்பர். இச்செடிகளை வீடு, வணிக நிறுவனங்களில் கட்டி வைத்தால், எதிரிகளால் வரும் துன்பம் நீங்கும் என்கின்றனர்.

2. நாகதோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு நாகதோசம் நீங்கப் பெறலாம்.

3. குரு பகவானின் அருளைப் பெற்றுச் சிறப்படைய விரும்புபவர்கள் இக்கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டுப் பயனடையலாம்.


தலச்சிறப்பு

1. சுந்தரர் இறைவனை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி பெற்றார்,

2. குருவே தட்சிணாமூர்த்தியாக, தட்சிணா மூர்த்தியே குருவாக அமைந்துள்ளார்.

3. தேவாரப் பாடல் பெற்ற தலம்.

4. காளமேகப் புலவர் இக்கோயில் இறைவன் நஞ்சுண்டதைப் பற்றி;

“ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்றுஆர் சொன்னார்
ஆலங் குடியானே யாகில் குவலயத்தோரெலாம்
மடியாரோ மண்மீ தினில்”

என்று பாடிச் சிறப்பித்திருக்கிறார்.

5. அம்பிகை பெண்களுக்கு உரிய வெள்ளிக்கிழமையின் பெயரும் தாங்கி, ‘சுக்கிரவார அம்பிகை’ எனவும் அழைக்கப் பெறுகிறார்.

6. விசுவாமித்திரர், முசுகுந்தச் சக்ரவர்த்தி,வீரபத்திரர் ஆகியோர் வழிபட்ட சிறப்பு மிக்க தலம்,

7. கயிலையில் பந்தாடிய பார்வதி தேவி அதனைப் பிடிக்கக் கையினை உயர்த்த, அதனைக் கண்ட சூரியன், பார்வதி தன்னை நிற்கச் சொல்வதாக நினைத்து நிற்க, உலக இயக்க மாறுபாடு ஏற்பட்டது. அதனால், கோபமடைந்த இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியைச் சபிக்க அன்னை இங்கு பிறந்து, இங்குள்ள இறைவனை வழிபட்டுச் சாபம் நீங்கி இறைவனை மணந்தார்.

8. சுந்தரர் இங்கு வந்த போது, வெட்டாற்றில் வெள்ளம் வர ஈசனே ஓடக்காரனாகச் சென்று காத்து ஆபத்சகாயேசுவரர் என்று பெயர் பெற்றார். ஓடம் நிலை தடுமாறிப் பாறையில் மோதும் வேளையில் விநாயகர் வந்து காத்ததால், இங்கிருக்கும் விநாயகர் ‘கலங்காமற் காத்தவர்’ என்றானார்.

அமைவிடம்

கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் சாலையில், கும்பகோணத்திற்குத் தெற்கில் 17 கி.மீ தொலைவில் ஆலங்குடி உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லக் கும்பகோணம் நகரிலிலிருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p43.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License