இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


25. ரயில் பயணக் காதல்!

இரண்டாவது நாளாக ஊட்டியின் முழு இரவை அனுபவிக்க தயாராகிக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. ஊட்டியின் குளுமை அவளது சிகப்பு மேனியில் என்னமோ மாயாஜாலங்களை செய்து கொண்டிருக்க, அதைப் புரிந்து கொள்ளாத ஆனந்த் சிறிதுநேரம் வெளியே சென்று விட்டு வருவதாக அவளிடம் சொன்னான்.

"என்ன ஆனந்த்... நீங்க மட்டும் தனியா போறதாச் சொல்றீங்க? நீங்க முதல்லயே சொல்லியிருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேன்; நைட் டிரெஸ்சுக்கு மாறியிருக்க மாட்டேன்ல?"

“இல்ல ஷ்ரவ்யா. இது என்னோட பெர்சனல் வேலை. அதனாலதான் நீ வேண்டாம்னு நினைக்கறேன்.”

“என்னோட பெர்சனல் விஷயங்கள் எத்தனையோ உங்ககிட்ட ஷேர் பண்ணியிருக்கேன். ஆனா, நீங்கதான் இன்னும் என்கிட்ட முழுமையா ஒட்டாம இருக்கீங்க.”

“உன்ன நான் எந்த அளவுக்கு புரிஞ்சியிருக்கேன்னு வந்து சொல்றேன். ஒரு அரை மணி நேரத்தை மட்டும் எனக்குத் தனியா விட்டுக்கொடேன்...”

ஆனந்த் ரொம்பவும் இறங்கி வந்து கேட்டதால்... சரி, போயிட்டு, சீக்கிரமாவே வாங்க... என்று அவன் வெளியே செல்ல அனுமதி கொடுத்தாள் ஷ்ரவ்யா.



ஆனந்த் அருகே இல்லாத இரவு பொழுது ஷ்ரவ்யாவுக்கு உடனேயே “போர்” அடிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்ததாக என்ன செய்யலாம் என்று அவள் பார்வையால் எதையோத் தேடிய போது, ஆனந்த் வைத்திருந்த டைரி தென்பட்டது.

அடுத்தவங்க டைரியைப் படிப்பது கூட “கிக்”கான விஷயம்தானே? என்று நினைத்தவள், ஆர்வமாய் அதைப் புரட்டினாள். பெரும்பாலான பக்கங்களில் கவிதையே எழுதப்பட்டு இருந்தது. முந்தைய நாள் வரையிலான தனது எண்ணங்களை அதில் எழுத்தாக வடித்திருந்தான் ஆனந்த்.

ஊட்டிக்கு அவர்கள் இருவரும் வந்த நாளன்று நிறையவே எழுதி இருந்தான். அதை ஆர்வமாக படித்தாள் ஷ்ரவ்யா.

“இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதே சந்தோஷம் நான் முதன் முதலா சென்னைக்குப் பணி மாற்றலாகி வந்த போது கிடைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த திவ்யா இன்னிக்கும் என் கண்ணுக்குள்ளேயே இருக்குறா. நான் சென்னைக்கு வந்தப்போ என்னோட வயசு 24. திவ்யாவுக்கு 19 அல்லது 20 வயசுதான் இருக்கும். அவகிட்ட மணிக்கணக்கா பேசணும்னு ஆசைப்பட்டு இருக்கேன். ஆனா, அவளை நான் பார்த்தது என்னவோ 4 மணி நேரம்தான். அவளுக்கு எந்த ஊர், எங்கே படிக்கிறாள் என்பதுகூட தெரியாது. அதேநேரம், அவளோட பெயர் மட்டும் மந்திரம் போல் என் மனதில் எப்போதாவது ஒலிப்பது உண்டு. இந்த நேரத்துல, திவ்யாவை நான் சந்திச்ச அனுபவம் மறுபடியும் என் நினைவுக்கு வருது. இது, எத்தனையாவது ஆயிரத்தியொரு முறை என்பது எனக்குத் தெரியாது. சென்னைக்கு மாற்றலாகி வரும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எனது சொந்த ஊரான குட்டம் கிராமத்துக்கும் போய்விட்டுத்தான் வந்தேன். தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸில் எனது முதல் சென்னை ரயில் பயணம் ஆரம்பமானது. நான், நீண்ட தொலைவு பயணித்த ரயில் பயணமும் அதுவே!



இந்த ரயில் பயணத்தில்தான் திவ்யாவை முதன் முதலாகப் பார்த்தேன். அவள் கல்லூரி மாணவி என்பதும், அவளது பெயர் திவ்யா என்பதும் அவளது தோழிகள் பேசிய பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன். நான் பயணித்தது முன்பதிவு செய்யப்படாத பெட்டி என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. திவ்யாவோடு அவளது சக மாணவிகள் சுமார் 15 பேரும் வந்திருந்தனர். அவர்கள் வாலிபால் ப்ளேயர்களாம். அன்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த மாநிலக் கல்லூரி அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். 15 மாணவிகள் இருந்தாலும் திவ்யாவை எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.

முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் லக்கேஜ் வைக்கக்கூடிய பகுதியில் சக மாணவிகள் 3 பேருடன் அமர்ந்திருந்தாள் திவ்யா. அவளது தரிசனம் எனக்கு நேரடியாகக் கிடைக்கும்படி அவளுக்கு எதிரே தனி சீட்டில் அமர்ந்திருந்தேன் நான். அதனால், அவளது ஒவ்வொரு செய்கையையும் என்னால் ரசிக்க முடிந்தது. சுட்டிப் பெண்ணாக நடந்து கொண்டாள் திவ்யா.

சில்லறைக் காசுகளை மார்பிள் தரையில் சிந்தியது போன்ற வெட்கச் சிரிப்பு, சக தோழிகளைச் செல்லமாக அதட்டும் விதம், வாலிபால் விளையாட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்... என்று அவள் பேசிய விஷயங்கள் நிறைய! கூடவே, தனது ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, நெஞ்சோடு அணைத்து தனக்குத்தானே மனப்பாடம் செய்து கொண்ட செயல், அவள் மீதான எனது ரசனையை இன்னும் அதிகப்படுத்தி விட்டது. 4 மணி நேரம் போனதே தெரியவில்லை.

ரயில் திண்டுக்கல்லை நெருங்கிய போதுதான் அந்த மாணவிகள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் அதுதான் போலும்! எல்லோரும் பரபரப்பாக அவரவரது லக்கேஜ்களை ஒன்று சேர்க்கும் வேலையில் ஈடுபட்டனர்.

லக்கேஜ் வைக்க வேண்டிய இடத்தில் அமர்ந்து பயணித்த திவ்யா கீழே இறங்கினாள். அவளது லக்கேஜை எங்கேயோ வைத்து விட்டாள் போலும்! பதற்றமாகத் தேடினாள். திடீரென்று அவள் பார்த்தபடி என்னை நோக்கி வந்தாள். எனக்கு திக்கென்று இருந்தது. “நாம ரொம்ப நேரமா அவளது செய்கைகளை ரசிச்சிட்டு இருந்தோமே... அதை, அவள் தப்பா எடுத்துக்கிட்டாளோ...” என்றுகூட யோசித்தேன். ஆனால், திவ்யா அப்படி நினைக்கவில்லை.

கையில் வைத்திருந்த வாலிபாலை என்னிடம் கொடுத்தாள். “கொஞ்சநேரம் இதை வெச்சிக்கோங்க...” என்று சொல்லி, அதை என்னிடம் கொடுத்து விட்டுத் தனது லக்கேஜைத் தேடினாள். ஒரு வழியாக அதைக் கண்டுபிடித்து விட்டு மறுபடியும் என்னருகில் வந்தாள். பந்தைக் கேட்டு வாங்கினாள். அதைக் கொடுக்க மனமில்லாமல் கொடுத்தேன். “ரொம்ப தேங்க்ஸ்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்தாள். என்னையே மறந்து நின்றேன் நான்.



திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் நிற்க... திவ்யா உள்ளிட்ட எல்லா மாணவிகளும் இறங்கி விட்டார்கள். கூடவே என் மனமும்தான்! திவ்யா எங்கே? என்று தேடினேன். வாசல் வரை ஓடி வந்து அவள் போகும் திசையைப் பார்த்தேன். அவள் ஒருமுறை பார்க்க மாட்டாளா என்று மனசுக்குள் ஏக்கம். அந்த ஏக்கம் திவ்யாவுக்கும் புரிந்துவிட்டது. நம்ம சினிமாக்களில், கதாநாயகி தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையில் கதாநாயகனை ஒருவித சிரிப்போடு திரும்பிப் பார்ப்பாளே... அதேபோல் திரும்பினாள் எனது திவ்யாவும்! அவளது அந்தப் பார்வையில் என் மனம் மட்டும் திண்டுக்கல்லில் இறங்கிக் கொண்டது. அவள் நினைவுகளோடு சென்னைக்குப் பயணித்தேன்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடைசியாக திவ்யா ஒரு சிரிப்பு சிரித்தாளே... அந்தச் சிரிப்பு தந்த அதே இன்பம், பரவசம் சில வருடங்களுக்குப் பிறகு இன்று எனக்கு கிடைத்து இருக்கிறது. அந்த திவ்யாவே இந்த ஷ்ரவ்யாவாக இருக்கக்கூடாதா?” என்று எழுதி முடித்திருந்தான் ஆனந்த்.

டைரியைப் படித்து முடித்த ஷ்ரவ்யாவின் கண்களின் ஆனந்தக் கண்ணீர் பெருகி நின்றது. ஆசை நாயகியாக தன்னை அழைத்து வந்தவன், தன்னை ஆசைக் காதலியாகப் பார்ப்பதை நினைத்து, அந்த இனம்புரியாத மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை இன்னும் கூடுதலாய் உதிர்த்தாள்.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5y.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License