இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

குழந்தைக்கு என்ன பெயர்...?

முனைவர் சி.சேதுராமன்


மதிய உணவுக்குப்பின் விழிப்பும் தூக்கமும் இல்லாத ஒரு மந்தமான சூழலுக்குள் முரளி ஆட்பட்டுக் கொண்டிருக்கும் போது அவனது செல்போன் குழந்தைச் சிரிப்பதைப் போன்று ஒலித்தது.

…ச்சே… கொஞ்ச நேரம் கண்ணசரலாம்னா விடமாட்டேங்கிறாங்களே. ஏந்தான் இந்த செல்போனக் கண்டுபிடிச்சானோ தெரியல. அலுப்புத்தீரப் படுக்கக் கூட முடியலே..’’ என்று சலிப்புடன் போனை எடுத்தவன் முருகேசன் என்ற பெயரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான்.

முருகேசன் இவனது நெருங்கிய உயிர் நண்பன். அவனுக்குத் திருமணமாகி நாலைந்து வருடங்கள் கழித்தும் குழந்தையில்லாத நிலையில் அவன் மனைவி கருத்தரித்து இதோ நேற்றுத்தான் பிரசவத்திற்காக அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தான். குழந்தை பிறந்து விட்டதா? என்ற மகிழ்ச்சியுடன்,

“டேய் முருகேசா எப்படிடா இருக்க. ஒம்மனைவிக்கு குழந்தை பொறந்திருச்சா” என்று கேட்டான்.



மறுமுனையில் அவனது நண்பன், ”டேய் எனக்குப் பெண்குழந்தை பெறந்துருக்குடா. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..’’ என்று மகிழ்ச்சியில் திணறிப் போய்ப் பேசினான்.

“டேய் வாழ்த்துக்கள்… ஆமா... சுகப் பிரசவந் தானே! தாயும் பிள்ளையும் எப்படி இருக்காங்க.?” –என்று கேட்ட முரளிக்கு

‘‘ரொம்ப நல்லா இருக்காங்கடா! கடவுள நினச்சு வேண்டியது வீண் போகலடா. அதுவும் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் சுகப்பிரசவமா ஆகியிருக்குமா? எல்லாம் கடவுள் செயல்டா. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்டா’’ என்று கூறிக்கொண்டே போனான் முருகேசன்.

முரளிக்கு சுள்ளென்று கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

‘‘ஏன்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களாடா? கடவுளாம்ல… கடவுள். டேய் முட்டாள் ஒனக்கும் ஒன் மனைவிக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டருக்குத்தான்டா நன்றி சொல்லணும். அவங்கள நீ நம்பி சிக்சை எடுத்துக்கிட்ட. அவங்களும் தங்களோட திறமையினால எல்லா சிகிச்சையும் செஞ்சு இன்னக்கி ஒனக்கு அழகான பொம்பளப் பிள்ள சுகப்பிரசவமாப் பொறந்திருக்கு. அதுக்கு அந்த டாக்டர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்று முரளி குட்டிப் பிரசங்கமே வைத்து விட்டான்.



முருகேசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இருப்பினும் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதில் யாரும் தலையிட முடியாது என்று எண்ணிக் கொண்டு,

“டே அப்படில்லாம் சொல்லாதடா... நிச்சயம் நான் கும்புடுற சாமி தாண்டா இதுக்கு காரணம்... என்னோட குலதெய்வம் கொடுத்த செல்வம்டா இது. அப்படி இல்லேனா இத்தனை நாளா ஏன் குழந்தை பெறக்கல... சொல்லு… உனக்கு நம்பிக்கை இல்லேன்றதுக்கா இப்படியெல்லாம் சொல்லாதடா ?…..’’ என்றான்.

முரளியோ விடவில்லை. அவன் கூறுவதுதான் சரியென்று நிரூபிக்க முயன்றான்.

“சரிடா..கடவுள் இருக்கார்னா ஏன் டாக்டர்ட்டப் போய் டெஸ்ட் அதுஇதுன்னு பண்றீங்க… கோவிலுக்குப் போயி அரசமரத்தச் சுத்திப்பிட்டு அப்படியே விட்டுற வேண்டியது தானே!… படிச்சவன் மாதிரியாடா பேசுறே?..’’என்றான்.

முருகேசனும் விடுவதாயில்லை.

“டேய் முரளி அததுக்கு நேரம் வரும் போதுதான்டா கடவுளே பாத்து யாராருக்கு என்ன செய்யணும்னு செய்வாரு... அவர முழுமையா நம்பணும் தெரியும்ல’” என்றான்.

‘‘ ஆமா கடவுளுக்கு ஒவ்வொன்னா பாத்து செய்யருது தான் வேல, போடா … அறிவு கெட்டவனே’’ என்று வெடுக்கென்று பதிலளித்தான் முரளி.



நம்பிக்கை இல்லாத முரளியின் பேச்சு முருகேசனுக்கு என்னவோ போலிருந்தது. இருந்தாலும் நண்பனுக்காகப் பொறுத்துக் கொண்டான். முரளியிடம். ‘‘டேய் எத்தனையோ பேருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாம இருக்கறாங்க தெரியுமா? எல்லாம் கடவுள் செயல்டா. இத ஒனக்குப் பிடிச்சாலும், பிடிக்காவிட்டாலும நம்பித்தான் ஆகணும்’’ என்றான்.

அதற்கு முரளி, “இல்லவே இல்ல... இப்ப கூட நீ கடைசியாப் பார்த்த டாக்டர் தான் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்து இத நடத்திருக்காங்க புரிஞ்சுக்கோ” -

என்று கூறவே முருகேசனுக்குச் சிறு குழப்பம்…

”சரி அதெல்லாம் விடுடா... நான் தேவையில்லாம ஏதேதோ பேசுறேன். ஆமா ஒன்னோட குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போற... நல்ல தமிழ்ப் பேரா வைடா... மற்றவங்க மாதிரி டஸ்சு புஸ்சுனு ஏதாவது பெயரை வைச்சுப்பிடாதே… ஆமா” என்று முரளி கூறியவுடன்,

‘‘அதாண்டா எனக்கு ஒண்ணுமே புரியல... என்ன பேர் வைக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு... டேய் ஒனக்கு தெரிஞ்ச நல்ல தமிழ்ப் பெயராச் சொல்லுடா” –என்றான் முருகேசன்.

“நான் ஒரு யோசனை சொல்லவாடா, பேசாம உன் மனைவிக்குப் பிரசவம் பாத்த டாக்டர் பேரே வைச்சுப்பிடு... என்னைக் கேட்டா ஒங்களோட மகிழ்ச்சிக்கு அவங்க தான் காரணம்..” என்றான் முரளி



இது சரியான யோசனையாகப் படவே முருகேசன் சரியென்று கூறிவிட்டுக் கைபேசித் தொடர்பைத் துண்டித்தான்…

பழங்களை வாங்கிக் கொண்டு முருகேசன் டாக்டர் கமலியின் அறைக்குள் சென்ற முருகேசன்…

‘‘வணக்கம் டாக்டர். ரொம்ப நன்றி டாக்டர்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…” என்று டாக்டரைப் பார்த்துக் கூறினான்.

“அடடே! வாங்க முருகேசன் சார். நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.. குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போறீங்க… அத முதல்ல சொல்லுங்க” என்றார் டாக்டர் கமலி.

“குழந்தைக்கு ஒங்க பேரைத் தான் டாக்டர் வைக்கப் போறேன்” என்றான் முருகேசன்-

‘‘என்னோட பேரா ... என்னங்க … நீங்க... ஆமா... ஏன் என்னோட பெயரை வைக்கப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?” என்றார் டாக்டர் கமலி.

“என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... நீங்க கொடுத்த ட்ரீட்மென்ட் தான் குழந்தை பொறக்க காரணம் ... நீங்க எங்க குடும்பத்துக்குக் கடவுள் மாதிரி அதனாலதான் ஒங்க பேரை வைக்கலாம்னு இருக்கோம்” என்றான் முருகேசன்.

”அப்படியெல்லாம் இல்லிங்க? நாங்க செய்யல. எல்லாம் கடவுளோட செயல். எங்க கைல எதுவும் இல்ல. மனிதர்கள் எல்லாரும் கருவிங்க. கடவுள் அந்தக் கருவிய இயக்குறார். கருவிகளாகிய நாம கடவுள் நடத்தறது மாதிரி நடந்துக்குறோம். நான் செயல்பட்டது கூட அது போன்றதுதான். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு அவர நம்பி நாங்க எங்க கடமையைச் செய்யிறோம். அது மட்டுமில்லாம உங்களோட நம்பிக்கை. நீங்க எங்கள நம்புனீங்க. நாங்க கடவுள நம்பினோம். நம்ம எல்லோருடைய நம்பிக்கையும் வீண் போகல. வெற்றியடைஞ்சுருக்கு. அதனால நாம கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். நீங்களும் ஒங்க மனைவியும் கடவுள நம்பி செயல்பட்டீங்க. ஒங்க நம்பிக்கையை வீண்போகாமக் கடவுளா ஒங்களுக்கு வழிகாட்டி இருக்காரு. சந்தோஷமா ஒங்க மனைவியோடு சேர்ந்து கடவுளோட பேராப் பாத்து வைங்க. அந்தக் கடவுள தொடர்ந்து நம்புங்க. அந்த நம்பிக்கைதான் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு மாதிரி. சரிதானே நான் சொல்றது… நன்றி நீங்க மகிழ்ச்சியாப் போயிட்டு வாங்க…’’ என்று கூறி மகிழ்வுடன் வழியனுப்பினார் டாக்டர்.

டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்த முருகேசனுக்கு குழப்பத்திலிருந்து தெளிவு பிறந்தது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்று மனதில் எண்ணிக் கொண்டு, மகிழ்ச்சி பொங்க தன் மனைவியையும் புதுவரவான குழந்தையையும் பார்க்கச் சென்றான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p146.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License