இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

பனியன்

முனைவர் சி.சேதுராமன்


கண்ணனுக்கு எல்லோரையும் போலப் பனியன் அணிந்து கொண்டு விளையாட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. ரோட்டில் போகும் தன்வயதொத்த சிறுவர்கள் பனியன் அணிந்து விளையாடிக் கொண்டு செல்வதை ஆசை தீரப் பார்ப்பான்.

அவனுடன் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பெரியசாமிக்கு அவனது அப்பா மஞ்சள் கலரில் முண்டாப் பனியன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதனை அவன் போட்டுக் கொண்டு தெருவில் வந்தபோது கண்ணன் ஓடிப் போய் அவனை நிறுத்தி அவன் அணிந்திருந்த பனியனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.

கண்ணன் பெரியசாமியிடம், ‘‘டேய் இந்தப் பனியன் ஒனக்கு ரொம்ப நல்லாயிருக்குடா. எப்படா வாங்கின?’’ என்று கேட்டான்.

அதற்குப் பெரியசாமி, ‘டேய் நேத்துத்தான் எங்க அப்பாரு வாங்கித் தந்தாரு. இதே மாதிரி இன்னொரு பனியனும் வீட்டில வச்சிருக்கேன்.

ஏன் ஒங்கம்மா ஒனக்கு வாங்கித் தரலயா? என்று கேட்டான்.

கண்ணனுக்கு முகம் ஒரு மாதிரியாப் போய்விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ‘இல்லடா நாளைக்கு வாங்கித் தர்ரதா எங்க அம்மா சொன்னுச்சுடா. சரி சரி நீ போ’’. என்று கூறிவிட்டு தளர்ந்த நடையுடன் தனது வீட்டை நோக்கிச் சென்றான்.



அவன் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலைமோதின. இன்று எப்படியாவது தனது அம்மாவிடம் கூறி பனியன் வாங்கித்தரச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தன் அம்மா வரும் வரை வீட்டின் வெளித் திண்ணையிலேயே அமர்ந்திருந்தான்.

அவனது தந்தை இருந்தவரை அவன் ராஜா மாதிரி இருந்தான். அவன் கேட்டதை எல்லாம் கடன் பட்டாவது வாங்கிக் கொடுப்பார் அவனது தந்தை. ஒருநாள் கட்டிட வேலைக்குச் சென்றவர் கட்டடிடத்தில் வேலை செய்தபோது சாரம் சரிந்து உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார். அதிலிருந்து அவன் குடும்பம் மீள நீண்ட நாளாகியது. வீட்டிலிருந்து அவனது தாயார் குடும்பச் சுமையை முழுமையாகச் சுமக்க வேண்டியதாயிற்று.

ஓட்டைக் குடிசை வீட்டில் அவனும் அவன் அக்கா இருவர், அவன் அம்மா ஆகிய நால்வரும்தான். இருப்பினும் வீட்டில் வறுமை. அவன் அம்மா முத்தம்மாள்தான் குடும்பத்திற்காக உழைக்கின்றாள். அவள் சம்பாதித்துத்தான் மூன்று உயிர்கள் உயிர் வாழ வேண்டும். தனது தாயாருக்காகக் காத்திருந்த கண்ணன் தெருக்கோடியில் தன் தாயார் வருவதைப் பார்த்து வேகமாக ஓடினான்.

மகன் ஓடி வருவதைப் பார்த்த முத்தம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. படபடப்புடன் மகனை நோக்கி ஓடினாள். ‘என்னடா கண்ணா. ஏன்டா வேகமா ஓடி வாரே?’’ என்று ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்தாள். அவ்வாறு அணைப்பதில் அவளுக்கோர் சுகம்.

அம்மாவின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்ட கண்ணன் அவளின் கையைப் பற்றி அவளுடன் நடக்கத் தொடங்கினான். அவன் அம்மாவிடம், ‘‘அம்மாம்மா … எனக்கு ஒரு கலரு பனியன் வாங்கித் தாம்மா. ஏங்கூடப் படிக்கிறவங்கல்லாம் போட்டிருக்காங்க. நானும் அவங்க மாதிரிப் போட்டுக்கணும்மா. வாங்கித் தர்ரியா?’’என்று கேட்டான்.



அவளுக்கு மனதில் வலி ஏற்பட்டது. மகனின் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத தனது வறுமையை நினைத்த அவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது. வீட்டிற்கு வந்ததும் மகனைத் தனது மடியில் அமர வைத்துக் கொண்டு, ‘ராஜா வாங்கித் தர்ரேன்டா. கொஞ்சம் பொறுத்துக்கடா. என் கண்ணுல்ல. அம்மா காசு சேத்து உனக்கு வாங்கித் தரேன். என்ன சரியா.’’ என்று சமாதானமாக மகனிடம் கூறினாள்.

ஆனால் அவனோ விடுவதாக இல்லை. முத்தம்மாவைப் பார்த்து, ‘‘நாளைக்கு வாங்கித் தர்ரியா?’’ என்று விடாப்பிடியாகக் கேட்க அவளுக்குப் பதில் கூற முடியவில்லை. இரு மூத்த பெண்குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு சரியான சட்டை, பாவாடையே வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இவனுக்கு எங்கே எப்படி புதுப் பனியன் வாங்கிக் கொடுக்க முடியும். சித்தாள் வேலைக்குப் போய் வயிற்றை நிரப்புவதே பெரும்பாடாக உள்ள நிலையில் எதை வாங்குவது? என்று திண்டாடிக் கொண்டிருந்த முத்தம்மாவிற்கு மனதில் கவலை பூரான் போன்று ஊறியது.

பெண் பெரியவளாகி விட்டால் அவளுக்கு நல்ல துணிமணி வாங்கிக் கொடுக்க வேண்டுமே. இப்பவோ அப்பவோ என்றிருக்கும் அவளுக்கு எதை வைத்து செய்ய வேண்டிய முறையெல்லாம் செய்வது என்ற கவலை அரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மகனின் சிறிய ஆசையினைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே என்ற துக்கம் மனதில் உருள கண்ணீர் சிந்தினாள்.

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்குத் தான் ஏதாவது தவறாக அம்மாவிடம் கேட்டு விட்டோமோ? என்று எண்ணம் எழ அம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவனும் அழுதான். அழுகையின் ஊடே, ‘‘வேண்டாம்மா. . . .இனிமே கேட்கல. . .நீ அழாதம்மா . .’’என்று கூறி அம்மாவின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

அப்போது வீட்டினுள்ளிருந்து வந்த முத்தம்மாவின் மூத்த மகளான லெட்சுமி அம்மாவைப் பார்த்து, ‘‘அம்மா அம்மா நீ கோவிச்சுக்கலன்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா?’’ என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டாள்.

முத்தம்மா தன் மகளைப் பார்த்து, ‘சரி சொல்லு’ என்றாள். லெட்சுமி, ‘‘அம்மா நான் ஒங்கூட வேலைக்கு வரட்டுமா? நான் வேலை பார்க்கிற காச வச்சு தம்பிக்குப் பனியன் வாங்கிக் கொடுக்கலாம்ல’’ என்று தம்பியின் மீது பாசம் பொங்கக் கூறினாள்.

முத்தம்மாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. அவளது கணவன் குழந்தைகளை எவ்வாறேனும் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அவற்றையெல்லாம் சிரமங்களைப் பொருட்படுத்தாது வாங்கிக் கொடுத்தான். அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தனது துயரங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு மூவரையும் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்தாள் முத்தம்மா. இந்நிலையில் மகள் லெட்சுமியின் கூற்று அவளுக்குச் சுரீரென்று மனதுள் தைத்தது.



கண்களில் கண்ணீர் மல்க மகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். ‘‘கண்ணுங்களா நீங்க நல்லாப் படிக்கணும். நீங்க படிச்சுப் பெரிய ஆளா ஆகணும். எதுக்காகவும் ஒங்க படிப்ப நிப்பாட்டப்படாது. நான் எப்படியாவது பனியன் வாங்கித் தர்ரேன் போதுமா’’ என்றாள்.

முத்தம்மாவின் அப்போதைய பதிலில் சமாதானம் அடைந்தான் கண்ணன். அவனுக்குப் பனியன் வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள் முத்தம்மா. அவளுக்கு எந்தவிதமான வழியும் புலப்படவில்லை. அவளுக்குத் திடீரென்று ஒரு யோசனை வந்தது.

கட்டிடத்தில் பூச்சுப் பூசியவுடன் சிமெண்ட் பாலைத் தொட்டுத் துடைப்பதற்குப் மெல்லிய பனியனைக் கொடுத்து வீட்டு உரிமையாளர்கள் துடைக்கச் சொல்வார்கள். அந்தப் பனியன் நல்லா இருக்கும். அந்தப் பனியனை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து நம் மகனுக்குக் கொடுத்தால் என்ன? என்ற எண்ணம் மனதுள் வந்தது.

அந்தப் பனியன் பெரிதாக இருந்தாலும் தற்போதைக்கு அதனை மகனுக்குக் கொடுத்து அவனைச் சமாதானப்படுத்த எண்ணினாள். மறுநாள் காலையில் எழுந்து வேகவேகமாக வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளம்பிச் செல்லுமாறு கூறிவிட்டு கட்டிட வேலைக்குப் புறப்பட்டாள்.



கொத்தனார்களும், சித்தாள்களும் மேஸ்திரியும் வேலை செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். விறுவிறு என்று அவரவர் தத்தம் வேலைகளைச் செய்யத் தொடங்கினர். முத்தம்மாளும் தனது வேலையான கலவையைக் கொண்டு வந்து கொத்தனாரிடம் கொடுத்து சுவரைத் தேய்த்துவிடும் வேலையை ஆரம்பித்தாள்.

முத்தம்மாவின் மனதுள் யாரும் பார்க்காதபோது சுவரைத் தேய்க்கக் கொடுத்த பனியனை இடுப்பில் சுற்றி மறைத்து எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பரபரப்புடன் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். உணவு இடைவேளையின்போது சேலை மாற்றுவதைப் போல் கட்டிடத்தின் உள்ளே சென்று சுவரைத் தேய்ப்பதற்குக் கொடுத்த பனியன்களில் சற்று நல்லதாக எடுத்து தனது சேலைக்குள் வைத்துச் சுற்றிக் கொண்டு யாரும் பார்க்காதவாறு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டுவந்த சோற்றைப் பிள்ளைகளை நினைத்தவாறே சாப்பிட்டு முடித்தாள்.

அன்று வேலைத்தளத்தில் யாருடனும் அவள் பேசவில்லை. மற்றவர்களும் அவளது இயல்பை அறிந்திருந்ததால் அதுபற்றி அவளிடம் கேட்கவில்லை. வேலை முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றபோது அவளுடன் எப்போதும் கூட வரும் அவள் வீட்டினருகில் குடியிருக்கும் வேலம்மாளுடன் சேர்ந்து விரைவாக நடந்து வீட்டிற்கு வந்தாள்.

தனது மகன் இருக்கிறானா? என்று பரபரப்புடன் தேடினாள். கண்ணன் தூத்தில் விளையாடுவதைக் கண்டு அவனை, ‘‘டேய் . . .கண்ணா . . . இங்க வாடா’’ என்று அழைத்தாள்.

அவனும் அம்மாவின் குரல் கேட்டு விளையாட்டை அப்படியே விட்டுவிட்டு கன்றுக் குட்டி போன்று துள்ளிக் குதித்து ஓடிவந்தான். ஓடிவந்த மகனை கட்டி அணைத்த முத்தம்மாள் மகனிடம் அவனுக்குப் பனியன் கொண்டு வந்துள்ளதாகக் கூறினாள்.

கண்ணன் தன் அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தான். முத்தம்மா அவனைப் பார்த்துக் கொண்டே தனது இடுப்பில் சொருகி மறைத்து வைத்திருந்த பழைய பனியனை எடுத்துக் காண்பித்தாள். அதனைக் கண்ட கண்ணனின் முகம் சுருங்கிப் போய்விட்டது.

‘‘அம்மா இது ஏதும்மா?’’ என்று கேட்டான். முத்தம்மாவோ உண்மையைச் சொல்ல விரும்பாமல் தான் வேலை செய்த வீட்டில் கொடுத்ததாகப் பொய் கூறினாள். அப்பனியன் நைந்து போய் இருந்தது. அம்மாவின் சமாளிப்பைப் புரிந்து கொண்ட கண்ணன் பனியனையும் அம்மாவையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, ‘‘அம்மா எனக்குப் பனியன் வேண்டாம்மா. நீ எனக்காகக் கஷ்டப்படுறதப் பார்த்துட்டு பனியனே வேணாம்னு விட்டுட்டேம்மா. ஏம்மா நான் சொன்னதைக் கேட்டு அழறே’’ என்று கேட்டான்.

முத்தம்மா தன் மகனைப் பார்த்து, ‘‘ஏண்டா ராஜா பனியன் பிடிக்கலையா? இப்போதைக்கு இதைப் போட்டுக்கடா பெறகு உனக்கு நல்லதா வாங்கித்தரேன்’’ என்று கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு கூறினாள்.

அம்மாவின் அழுகையைக் கண்ட கண்ணன், ‘‘சரிம்மா அழாதேம்மா…. இதப் போட்டுக்கறேன்…’’ என்று பெரிய அளவில் இருந்த அந்தப் பனியனை வாங்கிப் போட்டுக் கொண்டான். அது ஆங்காங்கே சிறிதளவு கிழிந்து ஏதோ குளிருக்கு ஒன்றைப் போர்த்திவிட்டது போன்று இருந்தது.

பனியனைப் போட்டுக் கொண்டு விளையாடச் சென்ற தன் மகனைக் கணவனைப் பற்றிய நினைவுகளுடன் கண்களில் கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டே இருந்தாள் முத்தம்மாள்….

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p152.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License