இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

இவனும் என் மாணவனே!

முகில் தினகரன்


ஆகஸ்ட்-15.

அந்த சிறைச்சாலையின் உள் மைதானம் களை கட்டியிருந்தது. திரும்பிய திசையெல்லாம் தேசியக் கொடிகள்… மூவண்ணத் தோரணங்கள்… கொடிககள்… என அமர்க்களம் விரவியிருக்க ஒலி பெருக்கிகள் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்” பாடிக் கொண்டிருந்தன. கைதிகள், வார்டன்கள், அதிகாரிகள் என்று வித்தியாசமின்றி அனைவர் நெஞ்சிலும் தேசியக் கொடி குண்டூசி உதவியுடன் உட்கார்ந்திருந்தது.

“இன்னிக்கு கொடியேத்த வரப் போற வி.ஐ.பி. யாருன்னு தெரியுமா?” கைதி எண் 332 கேட்க,

“யாரு…நமீதாவா?... இல்ல… நயன்தாராவா?” 543 திருப்பிக் கேட்டான்.

“அதுதான் இல்லை… இந்த வருஷம் வரப் போறவரு… ஒரு… சாதாரண… பள்ளிக்கூட வாத்தியார்”

“என்னது? இஸ்கூலு வாத்தியா?” 543 ‘பக..பக’வெனச் சிரித்தான்.



“சிரிக்காதப்பா… அந்த வாத்திகிட்டப் படிச்ச பல பேரு இப்பப் பெரிய…பெரிய ஆளுங்களா… பெரிய… பெரிய பதவில இருக்காங்களாம்… மனுசன் நேர்மையின் மறுபிறப்பாம்… ஒழுக்கத்தில் ஒண்ணாம் நெம்பராம்… தன் வாழ்க்கையையே ஆசிரியப்பணிக்கு அர்ப்பணிச்சிட்டு… கல்யாணமே பண்ணிக்காம வாழ்ந்திட்டிருக்காராம்... எல்லாத்துக்கும் மேல ஜனாதிபதி கையால நல்லாசிரியர் விருது வாங்கியவரப்பா… நம்மள மாதிரி இல்ல…”

வரப்போகும் வி.ஐ.பி.யின் வளமான வரலாற்றைக் கேட்ட 543, அதற்கு மேல் பேச இயலாமல் தன் வாயைச் சாத்திக் கொண்டான்.

சரியாக 10.00 மணிக்கு வந்து சேர்ந்த ஆசிரியர் சாரங்கபாணியை ஓடோடிச் சென்று வரவேற்ற காவல் துறை அதிகாரிகளில் பலர் அவரிடம் பயின்ற மாணவர்களே.

பொலிவான முகத்தில் பெருந்தன்மைப் புன்னகையுடன் அந்த வரவேற்பினை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் கம்பீரமாய்க் கொடியேற்றி கருத்தாழமிக்க உரையாற்றி அமர்ந்தார்.

தொடர்ந்து பேசிய பல அதிகாரிகள் தங்கள் உரையில் தவறாமல் ஆசிரியரைப் புகழ்ந்து விட்டுத் தாங்கள் அவரிடம் படித்தவர்கள் என்கிற விஷயத்தை பூரிப்புடன் சொல்லி மகிழ்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாய் கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார் ஆசிரியர் சாரங்கபாணி.



முகமலர்ச்சியுடன் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்தபடி இனிப்புகளை வழங்கிய ஆசிரியர் அடுத்து தன் முன் கை நீட்டி நின்ற அந்த இளைஞனைப் பார்த்ததும் அதிர்ந்தார்.

“நீ… நீ… ஆனந்தன்தானே?”

“இன்னாது… ஆனந்தனா?… அது சரி… பெருசு காலைலேயே மப்பு ஏத்திக்கிட்டு வந்திடுச்சு போல… பெருசு… நம்ம பேரு சேகரு… ஆனந்தனில்ல”

“இல்ல… நீ பொய் சொல்றே… உடுமலைப்பேட்டைக்குப் பக்கத்துல கோமங்கலம்தானே உன் சொந்த ஊரு,… உங்கப்பா பாத்திரக்கடை தேவராஜன்தானே?… நீ கோமங்கலம் கவர்மெண்ட் ஹைஸ்கூலில்தானே படிச்செ?”

அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அலட்சியமாக எங்கோ பார்க்க,

“என்னப்பா வயசான எனக்கே ஞாபகமிருக்கு… உனக்கு இல்லையா?… ஒன்பதாம் வகுப்புல உனக்கு வகுப்பாசிரியரா இருந்தேனே?… படிப்பே ஏறாத உன்னைப் பாஸ் பண்ண வைக்கறேன்னு சொல்லி மற்ற ஆசிரியர்கள் கிட்ட சவால் விட்ட என்னை பரீட்சைக்கே வராம ஓடிப் போயி மூக்கறுத்தியே நீ… மறந்திட்டியா?”



“ச்சே... என்னடா இது பெரிய ரோதனையாப் போச்சு த பாரு பெருசு… நீ சொல்ற ஆளு நானில்ல…போதுமா?” என்று திட்டவட்டமாய் மறுத்து விட்டு “வந்தமா… கொடிய ஏத்துனமா… போனமா… ன்னு இல்லாம ஆனந்தனாம்… உடுமலைப்பேட்டையாம்… ஒம்பதாம் வகுப்பாம்… ச்சை…”முனகிக் கொண்டே சென்றவன் திரும்பி வந்து 'ஏம் பெருசு… பேச்சுக் குடுக்கற மாதிரிக் குடுத்து, நைஸா ஸ்வீட் குடுக்காம அனுப்பறியே… நியாயமா?” சிரித்தபடி கேட்டான்.

அவன் சிரிப்பதைக் கண்டு மற்ற கைதிகளும் கோரஸாய்ச் சிரிக்க,

ஜெயிலர் தன் கர்ண கடூரக் குரலில் அதட்ட,

சிரிப்பொலி சட்டென்று அடங்கியது.

“மன்னிச்சிடுப்பா… பேச்சுவாக்குல மறந்துட்டேன்..” சிறிதும் கூச்சமில்லாமல் ஒரு கைதியிடம் வெகு யதார்த்தமாக மன்னிப்பு கேட்ட ஆசிரியரின் பெருந்தன்மை அங்கு நின்றிருந்த அனைவரையும் வியக்கச் செய்தது.

“என்ன சார்… நீங்க போய் இவன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு… அவன் ஒரு சாதாரண கைதி…” சாரங்கபாணி ஆசிரியரின் முன்னாள் மாணவரான ஜெயில் சூபப்ரின்டென்டண்ட் கேட்க

“இல்லப்பா அவனைப் பார்த்தா என் கிட்ட படிச்ச மாணவனாட்டமே தெரிஞ்சுது… அதான் கேட்டென்… இல்லேங்கறான்… ஒருவேளை நான்தான் ஞாபகப்பிசகாப் பேசறனோ..ன்னு… எனக்கே சந்தேகம் வருது”

“இருக்க முடியாது சார்… அவன் நிச்சயமா உங்ககிட்ட படிச்ச மாணவனா இருக்க முடியாது… ஏன்னா உங்ககிட்ட படிச்ச மாணவர்களெல்லாம் இன்னிக்கு எவ்வளவு உயர்நிலைல… பட்டம் பதவிகளோட பெரிய பெரிய மனிதர்களா வாழ்ந்திட்டிருக்காங்க… அதனாலதான் சொல்றேன்… இவன் உங்க ஸ்டுடண்ட் இல்லை” ஜெயில் சூப்பரின்டென்டண்ட் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.



தொடர்ந்து அதைப் பற்றி விவாதிக்க விரும்பாமல் மற்ற கைதிகளுக்கு “மள…மள”வென்று இனிப்பு வழங்கி விட்டு விடை பெற்றார் ஆசிரியர் சாரங்கபாணி.

ஒரு மாதத்திற்குப் பிறகு தபால்காரன் எறிந்து விட்டுப் போன இன்லண்டு கவரை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்த சாரங்கபாணி ஆசிரியர் அதன் பின்பக்கத்தில் அனுப்பியவர் பற்றிய குறிப்புக்கள் ஏதுமில்லாததால் குழப்பத்துடனே பிரித்தார்.

“அன்புக்கும்… பெரும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு,

மத்திய சிறையிலிருந்து ஆனந்த சேகர் எழுதுவது

முதலில் என்னை மன்னியுங்கள்.

நீங்கள் சொன்ன கோமங்கலம் பாத்திரக்கடை தேவராஜனின் மகன் ஆனந்தன் நானேதான். பள்ளிக் காலங்களில் மட்டும்தான் நான் ஆனந்தன் என்கிற நாமகரணத்தோட திரிந்தேன்… அதற்குப் பிறகு என் பெயரின் பின் பகுதியிலுள்ள சேகரே எனது பெயர் என்றாகி விடடது.

இப்போது ஒப்புக்கொள்வதை அன்றே ஒப்புக் கொண்டிருக்கலாமே! என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் ஒரு காரணமாகத்தான் நான் அன்று ஒப்புக் கொள்ளவில்லை. ஜனாதிபதி கையால் நல்லாசிரியர் பட்டம் பெற்று… பெரிய பெரிய அதிகாரிகளை… டாக்டர்களை… இன்ஜினியர்களை… உருவாக்கின இந்த ஆசிரியரிடம் பயின்ற ஒரு மாணவன் திருடனாகியிருக்கிறான்… ஜெயில் பறவையாகத் திரிகின்றான் என்கிற அவப்பெயர் உங்களுக்கு வர நான் காரணமாகலாமா?

என் சக கைதிகளெல்லாம் உங்களைப் பூஜிக்கும் அளவுக்கு பேசும் போது… “இல்லை… திருடனான நானும்... இவரிடம் பயின்று வந்தவன்தான் ” என்று சொல்லி அவர்கள் மத்தியில் உங்களுக்கிருந்த உயர்ந்த மதிப்பு குறைந்திடக் காரணமாகலாமோ? நான்? அப்படி என்னை நான் அடையாளம் காட்டினால்… உங்களுக்குக் கிடைத்த நல்லாசிரியர் விருதுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே… ஆகவேதான் அன்னிக்கு நான் அந்த மாதிரி பேசினேன்.

மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன்… என்னை மன்னிச்சிடுங்க!

இப்படிக்கு

அன்று ஆனந்தன் என்று அழைக்கப்பட்டு இன்று சேகர் என்று அழைக்கப்படும் ஆனந்தசேகர்.

கடிதத்தைப் படித்து முடிக்கையில் சாரங்கபாணி ஆசிரியரின் விழியோரத்திலிருந்து ஒரு கணணீர்த் திவலை உருண்டோடி தரையில் விழுந்து தெறித்தது.

தன்னிடம் பயின்று உயர்நிலையடைந்த மாணவர்கள் சேர்த்துக் கொடுத்த பெருமைக் கோபுரம் சரிந்து விடாமலிருக்க தன்னையே அடையாளம் மறைத்துக் கொண்டு தன் ஆசிரியரின் கௌரவம் காப்பாற்றிய அந்தக் கைதியை எண்ணி அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது

“என்ன இருந்தாலும் என் மாணவனல்லவா?” என்று வாய்விட்டுச் சொல்லி மகிழ்ந்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p157.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License