இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சிறுகதை

காதலிக்கணும்... எல்லாரும் காதலிக்கணும்...!

ஸ்ரீ


என்னங்க அப்படி பாக்குறீங்க? இவன் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லைன்னா? உங்க வீட்டில் ஒரே நாள்ல பிறப்பும் இறப்பும் நடந்திருக்கா? அப்படி ஒரு நிலைமையை நினைச்சாவது பாத்திருக்கீங்களா?

புதுசா பிறந்த வரவை நினைச்சுப் பூரிப்பீங்களா? இல்லை பிரிந்த உறவை நினைச்சு அழுவீங்களா? என்னடா தெரியாமல் இவன் பக்கத்துல உட்காந்துட்டோமேன்னு வருத்தப்படுறீங்களா? காலையில இந்த பஸ்ல தான் ஆரம்பமாச்சு என் பயணம்.

என் பேரு சிவசுப்ரமணியம். 'சிவா'னு கூப்பிடுவாங்க. சின்ன குடும்பம். அம்மா, அப்பா, ஒரு அக்கா. அப்பா கவுன்சிலர், அம்மா ஹவுஸ் வைஃப். அக்காவுக்கு இன்னிக்கு தான் ஆண் குழந்தை பிறந்திருக்கு. அப்பா தான் எல்லாமே வீட்டுல. ஆனா ஏனோ அம்மா சில சமயம் ஒரு முடிவு எடுத்துட்டா அப்பா அமைதியா போய்டுவார். அஞ்சு வயசிருக்கும் போது இதப்பத்தி அம்மா கிட்ட கேட்ட நியாபகம் இருக்கு. அதுக்கு அவங்க "குற்ற உணர்ச்சி" அப்டின்னு பதில் குடுத்தாங்க. அதுக்கு அர்த்தம் அந்த வயசுல எனக்கு புரியலைங்க. அப்பா கொஞ்சம் கடுமையாத்தான் நடந்துக்குவார். அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதா அப்பா சொல்லுவார். என் தாத்தா பெரிய பணக்காரர். அதனால என் அப்பா அவர் பேரை சொல்லியே நிறைய காரியம் சாதிச்சதா சொல்லுவாங்க அம்மா. 40 வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல 'சண்டியர்'னு பேர் எடுத்தவர் எங்க அப்பா. நிறைய பேர் என்னை இன்னைக்கு தான் முதல் தடவை பாக்குறாங்க இந்த ஊர்ல. அவரை பத்தி குறைஞ்சது ஒரு மணி நேரம் பேசுனாங்க எல்லாரும்....



ஓ! இந்த ஊருக்கு வந்த விஷயத்தை சொல்லலை இல்லை. அக்காவுக்கு பிரசவம் ஆச்சுன்னு சொன்னேன் இல்லை. குழந்தை பிறக்குற நேரத்துல எங்க குல தெய்வம் கோயிலில் அர்ச்சனை பண்ணனும்னு சொல்லிட்டாங்க அம்மா. அதான் 150 கிலோமீட்டர் தள்ளி இருக்குற இந்த ஊருக்கு வந்தேன். ஒரே நாள்ல உங்க வாழ்க்கையில் பல எதிர்பாராத மாறுதல் நடந்திருக்கா? எனக்கு இன்னைக்கு அப்படி ஒரு நாள் தான். காலையில் இதே பஸ் ஏறுனேன் எங்க ஊர்ல.

*******


"ஏன் சார் பஸ்ஸை எப்போ எடுப்பீங்க?"

"உட்காருப்பா எல்லாத்துக்கும் டைம் இருக்கு."

"தம்பி."

"என்னங்க?"

"உட்காரலாமா?"

"ம்"

"என்னய்யா முகம் வாட்டமா இருக்கு?"

"விகடன் கிடைக்கலை. தொடர்ந்து ஆறு வருஷமா படிக்கிறேன். ஒரு வாரம் கூட தவறினது இல்லைங்க. போன ஆறு நாளும் அலைச்சல். நிக்கக் கூட நேரம் இல்லை. இன்னைக்காவது வாங்கலாம்னு பாத்தா கிடைக்கலை. அதான்"

"சரி விடுங்க தம்பி. வழி பூரா பேசிக்கிட்டே பூட்டா ஒன்னியும் தெரியாது. என்ன கோயிலுக்கா?"

"ஆமாங்க. அக்காவுக்கு பிரசவம். குழந்தை பிறக்குற நேரத்துல பூஜை பண்ணனும்னு அம்மா என்னை அனுப்பிட்டாங்க."

"நல்ல விசயம் தம்பி. எல்லாம் நல்ல படியா நடக்கும்."

"நல்லதுங்க."

"நானும் கோயிலுக்குத்தேன் போறேன். கோயில் இருக்கே அதுக்கு தெக்கால 8 கல்லு நடந்தா என்னோட ஊரு தம்பி. 35 வருசமாச்சு சொந்த ஊரவுட்டு வந்து. ஆனால் இந்த கோயிலுக்கு மட்டும் எல்லா வருசமும் இந்த நாள் போயி மஞ்சுளா பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடுவேன்."

"ஓ!"

"மஞ்சுளா ஆரு தெரியுமுல்ல? என் உசுரு!"

"ம்"

"தம்பி பேரென்ன?"

"சிவா... ... ... சிவசுப்ரமணியம்"

"காதலிச்சிருக்கியா?"

"இல்லங்கய்யா"

"காதலிக்கணும்... எல்லாரும் காதலிக்கணும்."

"நீங்க... ... ...?"

"அதான் சொன்னேன்ல. மஞ்சுளா... இப்போ அவ எங்க இருக்காளோ? எப்படி இருக்காளோ...?"

"அப்டின்னா?"

"தெரியலை தம்பி. தகவல் இல்லை. கடசியா அவ வாக்கப்பட்டு போனப்போ பாத்தது. அதுக்கப்புறம் நானும் அந்த ஊர்ல இல்லை."

"சாரிங்க..."

"ம்..."

"அது வந்து...உங்களுக்காக வருத்தப்பட்டேங்க."

"அட வுடுங்க தம்பி. இப்போ வருத்தப்பட்டு என்ன ஆவப்போவுது. எல்லாம் தலை எழுத்துப்படிதான் நடக்கும்."

"அப்படி என்ன தான்யா ஆச்சு? நீங்க தப்பா நினைக்கலைன்னா..."

"இதுல தப்பா நெனக்க என்ன தம்பி இருக்கு ? எங்க அய்யா விவசாயி. நானும் எங்க அய்யாவும் இப்போ போறோமே அந்த ஊருக்கு தான் வேலைக்கு போவோம். அந்த ஊரு பொண்ணு தான் மஞ்சுளா. லட்சணமான பொண்ணு. மகாலட்சுமி மாதிரி இருப்பா... பாத்ததும் புடிச்சி போச்சு மனசுக்கு. ஆனா அந்த காலத்து காதலுக்கு ஒங்கள மாதிரி கையால காதலிக்கத் தெரியாது தம்பி. ஒரே ஒருக்கா தான் அவ மேல கை பட்டுச்சு. கண்ணுல தண்ணி வெச்சுட்டா. அதுக்கே அவ கண்ணாடி வளையல் ஒடஞ்சு போச்சு. அதுக்கு எனக்கு நானே தண்டனை குடுத்துக்கிட்டேன். தா தெரியுது பாத்தியா கன்னத்துல நீட்டா ஒரு தழும்பு இது அவ வளையலால நானே ஆழமா கிழிச்சிக்கிட்டேன். மிஞ்சினது வெறும் தழும்பு தான் தம்பி. அப்போ கிழிச்சதை விட அவ இல்லாத இந்த வாழ்க்கை... இப்போ வாழும் போது தான்... இந்த தழும்பு அடிக்கடி வலிக்குது."

"வண்டி கொஞ்ச நேரம் நிக்கும் போய் சாப்பாடு சாப்பிடுறவங்க சீக்கிரம் சாப்டு வந்திடுங்க."

"சாப்புடுறீயளா தம்பி?"

"இல்லங்க எனக்குப் பசிக்கலை..."

"அக்காளுக்கு இப்படி இருக்கும் போது எங்க சோறு எறங்கும்? நமக்கு புடிச்சவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா மனசு கெடந்து அடிச்சிக்கும். கெழவனுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்னு நெனக்காத தம்பி. மஞ்சுளாக்கு ஒரு நோவோ, பரிட்சையோ வந்தா எனக்கு எந்த வேலையும் ஓடாது. காதல் இப்போதான் பழகிப் போன வார்த்தை மாதிரி தெரியுது தம்பி. என் காலத்துக் காதல் அவ கோலத்துல வெச்ச பூசணிப் பூவை ஆருக்கும் தெரியாம வூட்டுக்கு எடுத்துட்டு போறது... அய்யனார் கோவிலோரமா இருக்க கள்ளிச்செடில முள்ளால ரெண்டு பேரு பேரையும் எழுதுறது... இப்படி சின்ன சின்னதாத்தான் வெளிப்படுத்துவோம். இதெல்லாம் காதலான்னு நெனப்பயே. அப்போவெல்லாம் காதல் மனசுல சாஸ்தி ஆனா வெளியில சொன்னது கம்மி. இப்போ மனசுக்குள்ள இருக்கான்னு கூட தெரியலை... ஆனா ஒன்ன ஒன்னு காதலிக்கறதா பெருசா சொல்லிக்கிட்டு திரியுதுவோ."

"ஆமாங்க...!"

"காதல் ரொம்ப கொடூரமானது தம்பி. நல்லதும் பண்ணும் கெட்டதும் பண்ணும். மொத ரெண்டு வருசம் காதல்ல ரொம்ப சந்தோசமா போச்சு தம்பி. எங்க அய்யாவுக்கு நானும் நாலு பேரு மதிக்கிறா மாதிரி நல்ல நெலமைக்கு வரணும்னு ஆசை. ஆனா எல்லாம் விதிப்படி தான நடக்கும். அந்த சம்பவத்துக்கு அப்புறம் ஊர்ல இருக்க எனக்கு பிடிக்கலைப்பா. ஏதோ மனசு போன போக்குல வாழ்ந்து இப்போ மேஸ்திரியா இருக்கேன். என்னப்பா பதிலே காணோம். தொந்தரவா இருக்கா?"

"அப்படி இல்லங்கய்யா. பெரியவங்க நீங்க... எப்படி உங்களுக்கு ஆறுதல் சொல்றதுன்னு எனக்குத் தெரியலைங்க."

"இனிமே ஆறுதல் சொல்லி என்ன ஆவப்போவுது தம்பி?"

"ஏன் அய்யா எல்லாமே அவங்களுக்கு தானா?"

"ஆமாம். பின்ன? இந்த பொம்பளை சாதி ரொம்ப பாவம் தம்பி. பொறந்துல இருந்து பெத்தவங்களுக்காக வாழறாங்க... அப்புறம் கட்டிக்கிட்டவனுக்காக வாழறாங்க... மஞ்சுளாவும் அப்படித்தான் போயிட்டா... அவளுக்காக யார் வாழ்றது? அதான் நான்... அவளுக்காக வாழ்ந்துட்டு இருக்கேன். ஏன் தம்பி இது காதல் இல்லையா?"

"அப்போ உங்களுக்காக எப்போ வாழப் போறீங்க... ?"

"எனக்காகவா? வாழ்வேன் தம்பி... என் காதலுக்கும் வாழ்வுக்கும் இப்போ சம்பந்தம் இல்லை. என் மனசுக்கு அவ போதும்பா. இப்போ... போய்கிட்டு இருக்கோமே இதான் என் ஊரு. பக்கத்து ஊருல தான் கோயில் இருக்கு... அவளோட ஊருக்குள்ள இன்னும் 15 நிமிசத்துல போயிடுவோம். அந்தா தெரியுது பாரு ஒரு ஓட்டு வூடு அங்கதான் நான் பொறந்தேன்."

*******


"அய்யா... இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணும்?"

"வந்தாச்சுப்பா. ஒரு பல்லாங்கு தூரம் தான்."

"கோயில் தொறந்திருக்குமா?"

"நாலு மணி ஆவும் தொரக்க. வெளிய வேப்பமரம் ஒன்னு இருக்கும் அங்க படுத்தா நல்லா இருக்கும்... அங்க பாரு நெறைய பேரு ஒக்காந்திருக்காங்களே அது தான்... கோவில்!. நாமலும் அங்க போய் படுத்திருந்து கோயில் தொரந்த உடனே போய் தரிசனம் பண்ணிட்டுப் போவோம்."

"நீங்க விட்டுக் கொடுத்திருக்க கூடாதுங்க."

"தம்பி எதை சொல்றீங்க?"

"அதான். உங்க... காதலை..."

"ஓ! அதைச் சொல்றீங்களா? சில விசயம் கைய விட்டு போகணும்னு இருந்தா யாராலயும் எதுவும் செய்ய முடியாதுப்பா. அந்த ஊரு பெரிய எடத்து பையனுக்கும் மஞ்சுளா மேல ஆசை. அங்க ரெண்டு பேரோடக் காதலைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும் நடுவுல வந்தான். அவ சம்மதிக்கலைன்னு தெரிஞ்சும் ஆளுங்களை விட்டு பஞ்சாயத்தை கூட்டிட்டான். அவன் மஞ்சுளாவை கெடுத்ததா ப்ராது குடுத்தாங்க. அவ இல்லைன்னு அழுததை ஊரும் நம்பலை... பெத்தவங்களும் நம்பலை... பணமிருக்கிறவன் சொல்றதை அப்படியே நம்பிட்டாங்க... மஞ்சுளாவை அவனுக்கே கட்டி வெச்சிட்டாங்க... அன்னைக்கு அவளைப் பாத்ததுதான். எப்படி இருக்கான்னு கூட தெரியலை. எவ்ளோவோ சம்பாதிக்கணும்னு நெனச்சேன் தம்பி. ஆனா இப்போ என்னிடம் இருக்கறது ஒரு ஓட்டு வூடுதான். பொஞ்சாதி, புள்ள குட்டி இல்லை. சொத்துன்னும் சொந்தம்னு சொல்லிக்க ரெண்டு தென்னமரம். இதா பாத்தியா இந்த தேங்கா. இது எம்மரத்து கா தான். கா பறிக்கவே மாட்டேன்யா. இது மட்டும் மஞ்சுளாக்காக... இந்த மரமும் எம் மவன் மாதிரி தான். கா பறிச்சிட்டா கோச்சிப்பான் ராவுல காத்தடிக்க மாட்டான். அப்புறமா கூட உக்காந்து சமாதானப்படுத்துவேன். 'அம்மாக்காகதானடா' -ன்னு சொன்னாக் கேட்டுப்பான். நல்ல புள்ள. வருசா வருசம் இப்படி ஒரு தேங்கா அர்ச்சனை பண்ணுவேன் அவ பேருக்கு. இன்னிக்கு அவ பொறந்த நாள் தம்பி. மஞ்சுளா, திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. அய்யா நா சத்த இப்படி கண்ணை மூடுறேன். கோயில் நடை தொறந்தா கொஞ்சம் எழுப்பி விடுங்க தம்பி."

*******


"ஹலோ! சொல்லுங்கப்பா.."

"டேய் அக்காவுக்கு ஆம்பளை புள்ள பொறந்திருக்குடா. உங்க அம்மா அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு சீக்கிரம் வர சொன்னா. என்ன?"

"சரிப்பா" என்று செல்போனை சட்டைப்பையில் வைத்தேன்

"அய்யா... அய்யா..."

என் குரலுக்கு அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை.

இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர் "சார். அவருகிட்ட ரொம்ப நேரமா அசைவே தெரியல. கொஞ்சம் தள்ளுங்க என்னன்னு பாப்போம்..."

"என்னங்க ஆச்சு?"

"தெரிஞ்சவரா சார்?"

"ஆமாம்."

"தவறிட்டாருங்க. சொல்ல வேண்டியவங்களுக்கு தகவல் தந்திடுங்க. கோயில் பக்கத்துல உசுரு போயிருக்கு நல்ல சாவு தான்."

"நீங்க இந்த ஊரா?"

"ஏன் கேக்குறீங்க?"

"நான் ராசமாணிக்கம் பேரன்."

"எந்த ராசமாணிக்கம்?"

"பழைய பஞ்சாயத்து போர்டு தலைவரு..."

"அடடே தெரியாம போச்சே தம்பி. நல்லா இருக்கீயளா? முன்னாடியே வரதா சொல்லி இருக்கலாமே! ஏதாவது ஏற்பாடு பண்ணி இருப்போமே."

"அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. எனக்கு ஒரு உதவி பண்ணனுமே!"

"சொல்லுங்க சார் செஞ்சிடுவோம்..."

"இந்தாங்க தேங்கா. மஞ்சுளா, திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. ஒரு அர்ச்சனை மட்டும் பண்ணிடுங்க."

"இது எதுக்கு சார். நாங்களே ஒரு ஸ்பெஷல் அர்ச்சனை பண்ணிடுறோம்."

"இல்லங்க. இந்த தேங்காய் மட்டும் உடச்சு அர்ச்சனை பண்ணிடுங்க போதும்."

"சரிங்க சார். இவ்ளோ தூரம் வந்துட்டு சாமி பாக்காம போறீங்களே!"

"இல்லங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. வரேங்க."

*******


பெரியவரை அவரு ஊருக்கு கொண்டு போய் எல்லா காரியமும் பண்ணிட்டு வரேங்க. அவர் கடைசியா கண்ணை மூடும் போது வந்த கண்ணீர் அந்த தழும்புல தேங்கி நின்னுச்சு. எதுக்காக அழுதிருப்பார்? ஒரு வேளை அர்ச்சனை பண்ண முடியாம தான் சாக போறதை அவர் உணர்ந்திருப்பாரா? இல்லை தன்னோட சோகத்தை ரொம்ப நாள் கழிச்சு காது குடுத்து கேக்க ஒரு ஜீவன் கிடைச்சதை நினைச்சு சந்தோஷத்துல கண்ணு கலங்கி இருந்திருப்பாரா? எதுவா இருந்தா என்னங்க? அந்த கண்ணீர் அந்த தழும்பை ஆத்திடும். என்னோட அம்மா மேல சாகுற வரைக்கும் உசுரா இருந்த மனுசனை அப்பா ஸ்தானத்துல நினைச்சு எல்லாம் செஞ்சுட்டு வந்திருக்கேனே நான் பண்ணது தப்பா...? நீங்கதாங்க முடிவைச் சொல்லனும் ...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p18.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License