இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

முதியோர் இல்லம்

முனைவர் சி.சேதுராமன்


அன்று பள்ளி விடுமுறை என்பதால் மாலதி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இரண்டரை வயதுதான் நிறைந்திருந்தது.

அவளது பெற்றோர் அவளைத் தற்போதுதான் ஒரு புகழ்பெற்ற கான்ட்வென்ட் பள்ளியில் சேர்த்திருந்தனர்.

மாலதி எப்போதும் துறுதுறுவென்று இருப்பாள். எதைப் பற்றியாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் பதில் கூறிவிட முடியாது. அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவளது அப்பத்தாதான் ஏதாவதொரு பதிலைக் கூறிச் சமாளிப்பாள். இருப்பினும் அதனைச் சரியென்று மாலதி ஏற்றுக் கொள்ள மாட்டாள். அவளுக்குப் அப்பத்தாவின் மீது அளவுகடந்த பாசம். எப்போதும் அப்பத்தாவைச் சுற்றிச் சுற்றியே வந்து விளையாடுவாள். அவளது அப்பத்தாவும் அவளுடன் சிறுகுழந்தை போன்று விளையாடுவாள். அன்றும் எப்போதும் போல் மாலதி விளையாடிக் கொண்டிருந்தாள்.



ஏனோ அன்று வீட்டில் மாலதியின் அப்பா முரளியும், அம்மா ஜானகியும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அப்பா யாருக்கோ போன் செய்வதும் பின்னர் ஜானகியிடம் விவரம் கேட்பதுமாக இருந்தார். இதெல்லாம் கவனித்தும் கவனியாதும் மாலதி விளையாட்டில் மும்மரமாக இருந்தாள்.

பகல் நேரத் தூக்கத்துக்குப் பின் எழுந்த முரளி, நேராகச் சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி ஜானகி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

'என்ன ஜானகி! எல்லாம் ரெடியா?' என்று கேட்டான்.

'நாங்க எல்லோரும் ரெடிங்க. நீங்க தான்... இன்னும் ரெடியாகலை.. என்னதான் அப்படித் தூக்கமோ? பகல் நேரத்துல இப்படியா தூங்குவாங்க…ம்..ம்...சீக்கிரம் கௌம்புங்க.' என்று தன் கணவரை விரைவுபடுத்தினாள் ஜானகி.

'இன்னும் பத்து நிமிஷத்தில் நா ரெடியாயிடுவன்' சொல்லி விட்டுப் போன முரளி, சொன்னதை விட விரைவாக வந்தான். வீட்டின் முன்பகுதியில் முரளியின் அம்மா வேதநாயகி சோகமாக உட்காந்திருந்தாள்.



அப்பொழுது காப்பி டம்ளர்களோடு வந்த ஜானகியைப் பார்த்து, 'எங்க அம்மாவுக்கு வேண்டிய துணிமணி, சாமனெல்லாம் எடுத்துட்டியா?' என்று முரளி கேட்டான்.

'இதோ இரண்டு பெட்டிகளில் எடுத்துட்டேன்’ என்று கூறி வீட்டின் முன்பகுதியில் இருந்த பெட்டிகளைக் காட்டினாள் ஜானகி. விளையாட்டில் மூழ்கியிருந்த மாலதி, ஓடோடி வந்து, 'ஏம்பா அப்பத்தா எங்க போறாங்க?' என்றாள் திடுமென.

'அப்பறம் சொல்றேன்.. இப்ப அப்பத்தாவுக்கு ஓடிப்போயி ஒரு முத்தம் கொடு’ என்று அன்புடன் தன் மகளை அணைத்துக் கேட்டான் முரளி. குழந்தை ஒடிச் சென்று அப்பத்தாவை இறுக அணைத்து முத்தம் கொடுத்தது. முகத்தில் எந்தவிதமான பிரதிபலிப்புமின்றி ஜன்னலினூடாக வெறுமையாக இருந்த தனது அறையை வெறித்துப் பார்த்தபடியிருந்தாள் வேதநாயகி. அப்பத்தாவின் முகத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணாத மாலதி, தனது அப்பா, அம்மா இருவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தனது அப்பத்தாவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இதைக் கவனித்த முரளி எங்கே தனது மகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாளோ என்று கருதி நிலைமையைச் சமாளிக்க,

'மாலதி குட்டி போயி காரில ஏறுங்க’ என்று கூறினான் முரளி.



எப்போதும் காரில் செல்லும் போது 'அப்பாவிற்குப் பக்கத்திலதான் இருப்பேன்' என்று அடம் பிடிக்கும் மாலதி, அன்று அப்பத்தாவின் அருகில் அமர்ந்திருந்தது மட்டுமல்லாது அப்பத்தாவின் தோளில் தனது தலையை சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் பிஞ்சு உள்ளத்தில் பல்வேறு எண்ண அலைகள். முகத்தில் குழப்பத்தின் சாயல். மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாலதி தனது அப்பத்தாவைப் பார்த்து,

'அப்பத்தா நீங்க எங்க போறீங்க?'

'முதியோர் இல்லத்துக்கு'

'முதியோருன்னா யாரு அப்பத்தா.......'

'என்னை மாதிரி வயசு போன கெழடுகதான்' என்ற அப்பத்தா தொடர்ந்தாள்.

'என்னால முன்ன மாதிரி இப்பல்லாம் ஓடியாடி வேலை செய்ய முடியாது. ரிப்பேராகிப் போன இந்த மெஷினால யாருக்கும் பயனில்லை. பயனில்லாத இந்த மெசினு இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? அதத் தூக்கி வெளியில போட்டுருவாகல்ல. அதுமாதிரிதான் என்னத் தூக்கிப் போடுறாங்க' என்று மனவேதனையுடன் தனக்குத் தானே பேசிக்கொண்டாள் வேதநாயகி.



மாலதி அப்பத்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பத்தாவின் முணுமுணுப்பு மாலதிக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. இதைக் கேட்டுத் துணுக்குற்ற முரளி, திரும்பித் தனது தாயின் முகத்தைப் பார்த்த முரளியின் கால்கள் 'ஆக்சிலேட்டரை' மிகவேகமாக அழுத்தின.

'அப்பத்தா... ஏன்... ... ... ' என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள் மாலதி.

'ஏய் மாலதி, சும்மா இருக்கமாட்டியா? மொச்சுமொச்சுன்னு என்ன பெரியமனுசியாட்டம் பேசிக்கிட்டே வாரே? பேசாம வாயை மூடிக்கிட்டு வரமாட்டியா?' அடக்கியது ஜானகியின் குரல். தொடர்ந்து. காரினுள் அமைதி நிலவியது. அந்த இறுக்கத்தை தளர்த்த கார்க்கண்ணாடியை சற்று கீழே இறக்கினான் முரளி. ஈரப்பதம் இல்லாமல் சூடாக இருந்த காற்று அவன் முகத்தில் மோதியது. ‘வெளியில் எங்கிருந்தோ, ‘‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை…’’ என்ற திரைப்படப்பாடல் மெலிதாக காற்றில் அலையாக வந்து கொண்டிருந்தது.

'ஏப்பா முரளி? இன்னும் ரொம்ப தூரம் போகணுமா? ரொம்ப நேரமா சாஞ்சுக்கிட்டே இருக்கறதாலே எனக்கு முதுகெல்லாம் வலிக்குதுடா' என்று தனது நடுங்கும் விரல்களால் கோடிட்டுக்காட்டிபடியே முதுகுத் தண்டை முனகியபடி வருடினாள் வேதநாயகி.

'இல்லம்மா இன்னும் கொஞ்சத்தூரம்தான். இந்தக் கோவிலைத் திரும்பினாப் பக்கம்தான்’ என்றான் முரளி.

மாலதிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று தன் அப்பத்தாவைப் பார்த்து மாலதி கேட்டாள். 'ஏன் அப்பத்தா, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒங்களை மாதிரி வயசானபிறகு நானும் அப்பா மாதிரியே அவங்கள இங்கதான கொண்டு வந்து சேர்க்கணும்?'

இதைக்கேட்ட முரளிக்கு இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு தாக்கியதைப் போன்று சுருக்கென்றிருந்தது.

கணவன், மனைவி இருவரது கண்களும் ஒருமுறை தமக்குள் சந்தித்து மீண்டன. அப்பார்வைகள் எத்தனையோ விஷயங்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டன.

'கோவில் திருப்பத்தில்' காரைத் திருப்பிய முரளி, போக வேண்டிய தெருவுக்குப் போகாமல், காரை ரிவர்ஸ் எடுத்து, கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, வீட்டை நோக்கிக் காரைத் செலுத்தினான்.

இதைக் கண்ட மாலதி தனது அப்பாவைப் பார்த்து, 'ஏம்பா அப்பத்தாவ முதியோர் இல்லத்தில விடலயா?' என்று விப்புடன் கண்களை விரித்தபடி கேட்டாள். அதற்கு முரளி, ‘‘இல்லடா செல்லம் அப்பத்தா இனி நம்ம வீட்டிலதான் இருப்பாங்க' என்றான். முரளியின் குரலில் ஒரு உறுதி தெரிந்தது. காரின் பின்னிருக்கையில் இருந்து, 'ஹும்…ஹும்..' என்று ஒரு நீண்ட பெருமூச்சு .

எங்கிருந்தோ வானொலிப் பெட்டியிலிருந்து,

‘‘அன்னையைப் போலொரு தெய்வமில்லை…
அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை…மனிதரில்லை’’

என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் கணீரென்று காற்றில் அலைஅலையாய் மிதந்து வந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p180.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License