இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

எது உண்மை?

முனைவர் சி.சேதுராமன்


அரசு விரைவுப் பேருந்து ​மது​ரையிலிருந்து விழுப்புரம் நோக்கி இருட்டைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. இரவு நேரப் பயணமாதலால் அதிகக் கூட்டமில்லை. ​பேருந்தின் சன்னல்கள் அடைத்திருந்த போதும் மார்கழி மாதக் குளிர் பேருந்துக்குள் இருக்கத்தான் செய்தது. கம்பளித் துண்டால் இழுத்துப் ​போர்த்திக் கொண்டு சன்னலோரமாக அமர்ந்திருந்தேன்.

பேருந்துக்குள் ஆடியோ, வீடியோ இரண்டும் வேலை செய்யாததால் இருந்த பத்துப் பேரும் நிம்மதியாக இருந்தோம். ஒரிருவர் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, ஒருவர் போனில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்.

பேருந்து ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் திடீரெனப் பேருந்தை நிறுத்தினார். எதற்கு இவர் இங்கு​ பேருந்​தை நிறுத்துகிறார் என்று யோசிக்கும் போதே ஒரு இளைஞனும் இளவயதுப் ​பெண்ணும் மிகவும் அவசர அவசரமாக ​பேருந்தில் ஏறினர். பேருந்தின் விளக்​கொளியில் அவர்களது முகம் சரிவரத் தெரியவில்லை. அவர்களது இளமையையும் நி​லை​மை​யையும் பார்க்கும் போது அவர்களிருவரும் நிச்சயம் வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடியாகத்தான் இருக்க ​வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. அவர்கள் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

நடத்துனரிடம் விழுப்புரத்துக்குப் பயணச்சீட்டு வாங்கினர். அந்தப் பெண் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்களைப் பின்னால் இருந்து பார்த்த போது அவனுக்கு இருபது வயசுக்குள் இருக்கும். அவளுக்குப் பதினெட்டு வயது கூட நிரம்பியிருக்க வாய்ப்பில்லை. 'இந்த வயசுல இதுக ​கெட்ட​ கேட்டுக்குக் காதல். இதுகளாலே வாழ்க்கைப் போராட்டத்துல ​வெற்றி பெற முடியுமா?’ என்று நான் நினைக்கும் போதே அவர்களது குசுகுசுப்பான பேச்சு எனது சிந்தனையை கலைத்தது.

"எனக்குப் பயமாயிருக்கு..." அவனது தோளில் சாய்ந்திருந்த அந்த இளம்​பெண் விசும்பலினூடே பேசுவது மெல்லக் கேட்க, நான் இருக்கையில் சற்று முன் நகர்ந்து அமர்ந்து அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனித்தேன்.

"அடலூசு... எதுக்குப் பயம்... எதாக இருந்தாலும் நான் இருக்கேன். என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..."

“ம்... இவனுக்கிட்ட என்ன இருக்கு... எப்படிப் பார்த்துக்குவான்” எனக்கு கோவங் ​கோவமாக வந்தது.

"இல்ல.. சித்திக்கு தெரிஞ்சா..."

"தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க… இல்ல அவங்கனால நம்மல என்னதான் பண்ண முடியும்..? நம்ம விஷயத்துல முடிவெடுக்க அவங்க யாரு... என்ன வந்தாலும் சந்திப்போம்..."

'அடேங்கப்பா... இவுக ​பெரிய தமிழ் சினிமா கதாநாயகன் எத்தனை பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிச்சு விரட்டப் போறாரு. மூதேவி... இழுத்துக்கிட்டுப் போற பொண்ணுக்கு ஒரு வேளை கஞ்சி ஊத்துமான்னு தெரியலை... இதுல என்ன வந்தாலும் சந்திப்பாராம்... முதல்ல இவளை வச்சி வாழ முடியுமான்னு ​யோசிச்சுப் பார்ரா பன்னா​ட…' எனக்குள் கோபம் எரிமலையாய்க் கனன்றது.

"இல்லை... என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..."

அவன் அந்தப் ​பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு, "இதப்பாரு…எதப்பத்தியும் நினைக்காம அப்படியே தூங்கு. எதாயிருந்தாலும் நாளைக்கிப் பார்த்துக்கலாம்" என்று கூறியவாறு அவ​​ளை அணைத்துக் கொண்டான்.



எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. “தம்பி...!” என்று அந்தப் பையனை அழைத்தேன். அவனும் என்ன என்பது போன்று என் பக்கம் திரும்பினான்.

"உனக்கு வயசு என்னப்பா?"

"என்னோட வயசு உங்களுக்கு எதுக்கு சார்...?"

"இல்ல சும்மாத்தான் ​கேக்க​றேன் சொல்லுப்பா..."

"பத்தொன்பது... ஏன் சார்…?"

"இரு... அவசரப்படாதே... படிக்கிறியா..."

"இல்லை..."

"ம்ம்... இந்தப் புள்ள படிக்குதா...?

"ஆமா...சார்…"

"இந்த வயசுல ஒங்களுக்கு வாழ்க்கையின்னா என்னன்னே தெரியாது. அப்புறம் எப்படிப்பா இப்படில்லாம்?"

"நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலை...சார்"

"புரியலையா... அதான் இந்தச் சின்னப்புள்​ளைய இழுத்துக்கிட்டு ஓடுறியே... அதத்தான் ​சொல்​றேன்… ஒங்க ​ரெண்டு ​பேருக்கும் குடும்பச்சுமையின்னா என்னன்னு தெரியுமா...?"

"என்னது இழுத்துக்கிட்டு ஓடுறேனா... என்ன சார் சொல்லுறீங்க..."

"என்னப்பா புரியாத மாதிரி நடிக்கிறே... உன்னோட ஆசை தீரும் வரைக்காவது அவளை... "

"சார்..." அவனது கத்தலில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.

"ஏம்பா உண்மையைச் சொன்னா கத்துறே..." நானும் பதிலுக்குக் கத்தினேன். அந்தப் பெண் எதுவும் பேசாமல் அ​​மைதியாக அமர்ந்திருந்தாள்.

"எது சார் உண்மை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தா காதலர்களாத்தான் இருக்கணுமா...?"

"காதலர்களா இல்லைன்னா நீங்க ஏன் இந்த ​நேரங்​கெட்ட நேரத்துல ஓடி வந்து ஏறணும்... அப்பா அம்மாவை மறந்து இவளுகளும் அரிப்பெடுத்து ஓடியாந்துடுறாளுங்க..." கோபத்தில் எ​தைப் ​பேசுவ​தென்று ​தெரியாது யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டேன். அ​தைக் ​கேட்டதும் அந்தப் பெண் அழத் ​தொடங்கினாள்.

"இப்ப அழு... ஆத்தா அப்பன் மொகத்துல கரியை பூசிட்டு ஓடியாரும்போது இனிச்சிருக்குமே... அழு​கையா வருது அழு​கை"

"பேச்சை நிறுத்துங்க சார்… நீங்க பாட்டுக்கு ஏ​தே​தோ ​பேசிக்கிட்​டே ​போறீங்க… இனிப் ​பேசினீங்க… அப்புறம் மரியாதை கெட்டுடும். இவ யாரு தெரியுமா சார்… இவ என்​னோட தங்கச்சி... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தாளே காதலிக்கிறாங்கன்னு ஏன் சார் ஒங்கள மாதிரி உள்ளவங்கள்ளாம் நினைக்கிறாங்கன்னு தெரியல… நீங்க மட்டும் இல்லை நாட்டுல முக்கால்வாசிப் பேர் அப்படித்தான் நினைக்கிறாங்க. அது ஏன்னே தெரியலை. தனியா வண்டியில போறது அண்ணன் தங்கையாக இருந்தாலும் ஒங்க பார்வைக்கு அது தப்பாத்தான் தெரியுது. அதனாலதான் இன்னைக்கு பெரும்பாலான அண்ணன் தங்கைகள் சேர்ந்து எங்கயும் போக முடியறதில்லை."



எனக்கு என்னவோ போலாகிவிட்டது. ​பேச்​சைச் சிறிது நிறுத்திய அந்த இ​ளைஞன் மீண்டும் தொடர்ந்தான்.

"யாரையும் பர்த்தவுடனே ​மொதல்ல தப்பா எடை போடுறதை நிறுத்துங்க சார்… எங்க​ரெண்டு ​பேருக்கும் அம்மா இல்லை. அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி எங்களுக்கு நல்லவங்களா அமையலை. எவ்வளவு கொடுமை பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டாங்க. அப்பா எதுவும் கேட்டுக்கிறதுமில்லை… கண்டுக்கிறதுமில்​லை… நான் படிக்கலை. ஆனா ஏந்தங்கச்சி நல்லாப் படிப்பா. இப்ப இவ படிப்பக் கெடுத்து சித்தியோட சொந்தத்துல ஒரு குடிகாரனுக்கு கலியாணம் பண்ணி​ வைக்க ஏற்பாடு நடக்குது. இவளை நல்லாப் படிக்க வைக்கணும். எங்க அம்மா செத்ததுக்கப்புறம், எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணியதால மாமா வீட்டு உறவு அத்துப் போச்சு. எங்கப்பா எங்களையும் மாமா வீட்டுக்குப் போக விடலை... இருந்தாலும் மாமா எங்களுக்கு உதவுவாருங்கிற நம்பிக்கையில அப்பாவும், சித்தியும் பக்கத்து ஊரு திருவிழாவிற்குப் போயிருக்கிற நேரத்துல யாருக்கும் தெரியாம மாமா ஊருக்கு கிளம்பிட்டோம்." அவனுக்கு கண்ணீர் வந்தது... அந்தக் கண்ணீருக்கு காரணம் நான்தானே என்று நினைத்த போது எனக்கு வெட்கமாய் இருந்தது…என் மனம் கனத்தது…. அந்தப் பெண் தனது தாவணியால் அவள் கண்ணத்தில் வழிந்த கண்ணீ​ரைத் துடைத்தாள்.

எல்லோரும் என்னை ஒரு புழுவைப் போல பார்த்தனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் குற்ற உணர்வு என்னை எரித்துக் ​கொன்றுவிடும் என்று நி​னைத்த நான் அந்தப் பையனின் கைகளை பிடித்துக் கொண்டு, 'தம்பி என்​னை மன்னிச்சிருப்பா…ஏனோ தெரியலை இந்த பார்வை நல்ல நோக்கத்துல பார்க்கிறதை விட கெட்ட நோக்கத்துலதான் அதிகம் பார்க்குது. எதையும் ஆழமாய் பார்க்காமல் அவசர கதியில் பார்ப்பதுதான் இத்தனைக்கும் காரணம் என்னை மன்னிச்சுடுங்கப்பா...' என்றபடி அவர்களிருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.



அவனும் பரவாயில்ல சார்… ஒங்க நி​லையில யாராக இருந்தாலும் அப்படித்தான் ​நெனக்கத் ​தோணும்… ஏன்னா காலம் அப்படி இருக்கு சார்… என்றபடி என்​னைப் பார்த்து ஒரு சிறிய புன்ன​கை​யைப் படரவிட்டான்… அதற்குள் நான் இறங்கும் இடம் வர​வே அவனிடம் வி​டை​ ​பெற்றுக் ​கொண்டு இறங்கி நடந்​தேன்… பார்க்கிறவ​னோட பார்​வையிலதான் எல்லா​மே தப்பா சரியாங்கறது இருக்கு…எ​தையும் அவசரப்பட்டு நாம பார்த்துட்டு முடி​வெடுத்து விடக் கூடாது… என்ற எண்ணம் என் மனதில் நிழலாட அந்த உடன் பிறந்​தோருக்கு நல்லது நடக்க ​வேண்டும் என்று ஆண்டவ​னிடம் ​வேண்​டிக் ​கொண்டு நடந்​தேன்…”

ஒளிமயமான எதிர்காலம் என்னுள்ளத்தில் ​தெரிகிறது” என்ற பாடல் காற்றில் மிதந்துவர என்னுள் மகிழ்ச்சி பரவியது…

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p192.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License