இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மனவலி

புவனா முரளி


மதியம் தூங்கக் கூடாது என்ற முடிவுடன் கொட்டாவியை அடக்கிக் கொண்டு மேஜை மீது இருந்த அன்றைய பேப்பரை புரட்டியவளுக்கு அந்தப் பக்கத்தில் சிரித்த முகத்துடன் இருந்த அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் சட்டென்று தூக்கம் கலைந்தது. திக்கென்று இருந்தது… ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை… மீண்டும் ஒருமுறை புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன் அந்தக் கண்களையும் சிரிப்பையும் பார்த்ததும் சட்டென்று பொறி தட்டியது. ஆனால் …. பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்ததும் உறுதியாகிவிட்டது… இது… நம்ம மணிதான். சுமார் இருபது வருடங்களில் முகம் சற்று உப்பி அகண்டு இருந்தது.

ஆழ்மனத்தின் ஏதோ ஒரு கடைக்கோடி மூலையில் ஆழமாகத் தோண்டிப் புதைத்து இறுக்கமாக மூடி வைத்திருந்த நினைவுகள் கரையைத் தாண்டிய சுனாமி அலைகளாகப் பீறிட்டு எழுந்து என்னைத் திக்குமுக்காடச் செய்தது.

மீண்டும் ஒருமுறை பேப்பரைப் பார்த்தேன். அம்மா பாத்திருப்பாளோ… அம்மா பேப்பர் படிக்க மாட்டாள். அப்பா கண்டிப்பாகப் பாத்திருப்பார். அப்பா அம்மாகிட்ட நிச்சயமா சொல்லியிருக்க மாட்டார்.

மாமா பாத்திருப்பாரா…? மாமா நினைவு வந்ததும் கூடவே மாமியின் நினைப்பும் சேர்ந்து எழுந்தது. என் அக்காவைப் பெண் பார்க்க வந்த போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் அப்பா மாமாவை அறிமுகம் செய்து வைத்தார். மாப்பிள்ளை பக்கத்தில் வயதான ஒருத்தர் மாமாவிடம் எங்க வேலை, எத்தனை பசங்க என்று விசாரித்த போது சற்றும் தயக்கமின்றி எனக்கு ஒரே பொண்ணு. மாப்பிள்ளைக்கு அமெரிக்கால வேலை. அங்கேயே செட்டிலாயிட்டா… என்றதைக் கேட்டதும் பக்கென்றிருந்தது எனக்கு. ஏதோ அவசர வேலையாய் உள்ளே போன மாமியின் பின்னால் நானும் போனேன். சமையலறையின் மூலையில் போய்ப் புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு திரும்பிய மாமியின் முகம் சாதாரணமாயிருந்தது.

இருபது வருஷத்துக்கு முன்னால மாமாவும் மாமியும் வீட்டுக்கு வந்த அந்த நாள் இன்னும் நன்றாக நினைவிருந்தது. அப்பாவும் மாமாவும் மைத்துனன், மாப்பிள்ளை என்ற உறவுக்கும் மேல் நல்ல நண்பர்கள். அவர்களுக்கிடையே இருந்த நட்பு உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரசித்தம்.

பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த நான் கூடத்தில் அவர்களைப் பார்த்ததும், ஹை மாமா மாமி... என்று துள்ளிக் கொண்டு ஓடி வந்தேன். அம்மா கையைப் பிடித்து இழுத்துப் போய் பால் குடிச்சுட்டு ரூமுக்கு போய் எதையாவது படிச்சிண்டிரு... பெரியவங்க பேசற இடத்திற்கு வராதே என்று தேவையில்லாமல் அதட்டியது வினோதமாய் இருந்தது. அப்போதுதான் மாமியின் அழுது சிவந்த முகத்தையும் மாமாவின் இறுக்கமான முகத்தையும் பார்த்துவிட்டு மேலே ஏதும் பேசாமல் உள்ளே ஓடிவிட்டேன். இருந்தாலும் கூடத்திலிருந்து அவ்வப்போது மாமியின் விசும்பலும், மாமாவின் சில சமயம் கோபமான, சில சமயம் தழுதழுத்த குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. ரூமுக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டவள் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கதவருகே காதை ஒட்ட வைத்துக் கேட்டபோது…

பொறுக்க முடியல எனக்கு தியாகு... நேத்திக்குப் போட்டு அடி சாத்திட்டேன். இன்னிக்கு என்னடானா நாலு பக்கத்துக்கு லெட்டர் எழுதி வெச்சுட்டுக் கெளம்பிட்டான். இதோ இவ அழுகையைக் காண எனக்கு சகிக்கலே... நா என்ன பண்ணுவேன் சொல்லு தியாகு... சைக்கியாட்ரிச்டுட கூட்டிண்டு போயி வைத்தியம் பார்க்கக் கூடத் தயாரா இருந்தேன். நாலஞ்சு வருஷமா நா படற வேதனை ஒனக்குத் தெரியாது. ஸ்கூல்ல டீச்சர் கூப்பிட்டு உங்க பையனைக் கண்டிச்சு வைங்கோ… பசங்களைவிட பொண்ணுங்க கூடத்தான் அதிகம் பழக்கமுன்னு சொன்ன போது பொறுக்கித்தனம்னு கண்டிச்சேன். நாளாக நாளாக இவன் நடத்தை எனக்கே ஒரு மாதிரி இருந்தது. வெளில தலை காட்ட முடியல. பசங்கள் எல்லாம் கிண்டல் பண்றாம்மான்னு இவ மடியில் படுத்துண்டு அழறவனைப் பாத்து எனக்கு பாவமாவும் இருக்கும், பத்திண்டும் வரும்.

நா என்ன பாவம் பண்ணேன் தியாகு… எனக்கு மட்டும் ஏன் இப்படி…?



மாமாவின் பேச்சைக் கேட்டதும் மணியைப் பற்றித்தான் என்று புரிந்து போனது… மணி படிப்பில் ரொம்ப கெட்டி. படம் வரைவதில் கில்லாடி. என்னுடைய டிராயிங் நோட்டில் நான் எக்செலண்ட் வாங்கிய படமெல்லாம் மணி போட்டுக் கொடுத்ததுதான். ஆனா நாளாக நாளாக எனக்கே அவன் பேசறது , நடந்துக்கறது ஒரு மாதிரி வித்யாசமாக இருக்கும். என்னன்னு சொல்லத் தெரியல... கண்ணாடி முன்னாடி அதிக நேரம் நின்னு தன்னையே உத்து உத்து பாத்துப்பான். ஒரு முறை லீவுக்கு மாமா வீட்டிற்கு போயிருந்த போது, மாமியும் அம்மாவும் பக்கத்த் கோயில்ல கச்சேரிக்கு போயிட்டா. அப்பாவும் மாமாவும் வாக்கிங் போயிட்டா. மாமா பெண் ஹரிணி டியூசன் போயிருந்தாள். வீட்டில் மணியும் நானும் மட்டுமே. நான் பக்கத்து வீட்டில் உள்ள பெண்களோடு அரட்டைக் கச்சேரியில்… தண்ணி குடிப்பதற்காக வீட்டுக்குள் வந்த போது ஹாலை ஒட்டியிருந்த ஹரிணியின் ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது. கதவு ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. சாத்தியிருக்கும் கதவைத் தட்டி விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்ற ‘நாகரிகம்’ தெரியாத அந்தக் கால நான் இந்த நேரத்தில் லைட் என்ன என்று அணைப்பதற்காக கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனவள் போன வேகத்தில் ஓடி வந்துவிட்டேன். ஹரிணியின் பாவாடை, தாவணியில், கையில் வளையலும், நெற்றியில் பொட்டுமாய் கண்ணாடி முன் சுற்றிச் சுற்றித் தன் அழகை ரசித்துக் கொண்டிருந்த மணி… சில நொடிகளில் வெளியே வந்த மணியின் முகத்திலும் கலவரம்… என்னிடம் அவன் ஒன்றும் பேசவில்லை என்றாலும் அதற்குப் பின் எனக்கும் அவனுக்கும் தர்மசங்கடமான ஒரு இடைவெளி நிரந்தரமானது… ஏனோ இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று தோன்றியது… சொன்னால் மணி திட்டு வாங்குவானே என்று பச்சாதாபம் வேறு… அதற்கும் மாமா , மாமி இப்போ அழுவதற்கும் உள்ள தொடர்பு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது அப்போது.

எத்தனை பெயிண்டிங், எத்தனை சர்டிபிகேட்ஸ் … பக்க பாக்க ஆற்றாமையா இருக்கு எனக்கு… என் பிள்ளை மட்டும் ஏன் இப்படி…. கண்ணில் கண்ணீருடன் மாமாவின் அரற்றலுக்கு அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை…

சரி வாசு… இப்படியே புலம்பிண்டிருந்து என்ன பிரயோஜனம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தியா - அப்பா. கைத்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட மாமா… எதுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும். ஏன் போனான்னு நமக்குத் தெரியும். விலாவரியா லெட்டர் எழுதி வெச்சுட்டு போயிருக்கான். இந்த லெட்டரைப் போலிசுக்கிட்ட காமிச்சு அவா கேக்கற கேள்விக்கு வேற பதில் சொல்ல முடியுமா என்னால…

வெறித்த பார்வையுடன் “பிள்ளை இல்லன்னு ஆயிடுத்து எங்களுக்கு… அவ்வளவுதான் …” மாமியிடமிருந்து பெரிய விம்மல். புடவைத் தலைப்பைச் சுருட்டி வாயில் அடைத்துக் கொண்டவளின் பக்கத்தில் போய் அணைத்துக் கொண்டாள் அம்மா.

அதற்கப்புறம் சொல்லி வைத்தாற்போல் மணியைப்பற்றி யாரும் எதுவும் பேசியதேயில்லை… இரண்டே மாதங்களில் வடக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு போன மாமா ஹரிணி கல்யாணத்திற்கப்புறம் தான் சென்னையில் வீடு வாங்கிக் கொண்டு செட்டிலானார்.

சமயத்தில் மணி என்று ஒருத்தன் இருந்தானா என்பதே கனவு போல் இருக்கும் எனக்கு… இன்றைய பேப்பர் செய்தியும் புகைப்படமும் விரிப்பின் கீழ் தள்ளப்பட்ட குப்பை விஸ்வரூபம் எடுத்தது போல் என்னைப் பார்த்து சிரித்தது…

இருபது வருட காலத்தில் மணி… இல்லை... இல்லை… மாலா, வீட்டை விட்டு வெளியேறியதும் பட்ட துன்பங்களையும் எதிர்கொண்ட அவமானங்களையும் நான்கே வரிகளில் கோடிட்டிருந்தார் நிருபர். இப்போது மாலா வரைந்த படங்கள் சர்வ தேச ஓவியக் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும் கண்காட்சிக்காய் மாலா அடுத்த மாதம் வெளிநாடு செல்லவிருப்பதுமே செய்தி…

மணியைப் பற்றி என் கணவரிடம் கூட நான் ஒன்றுமே சொன்னதில்லை என்று நினைவுக்கு வந்தது… சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவார்... ஊகிக்க முடியவில்லை… சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு… எப்போது குழப்பம் வந்தாலும் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. நிகழ்ச்சிகளை அதன் போக்கில் விட்டு விடுவேன். அது போல அவர் சாயங்காலம் ஆபீசிலிருந்து வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் … அப்ப சொல்லணும்னு தோணினால் சொல்லலாம் . இல்லாட்டா விட்டுடலாம்…



ஆனால் நாள் முழுக்க மனம் ஏதோ பரபரப்பாகவே இருந்தது. வேலையெல்லாம் முடித்துவிட்டு டிவி முன் உட்கார்ந்து கொண்டு சானல் சானலாகத் தாவிக் கொண்டிருக்கையில் காலிங் பெல் கேட்டுக் கதவைத் திறந்தேன்.. அலுப்புடன் சோபாவில் அமர்ந்தவருக்கு காபி கொண்டு வந்த போது.. “என்ன குப்பை ப்ரொக்ராம் பாத்திண்டிருக்க என்று எரிச்சலுடன் இவர் கேட்டதும் தான் டிவியைப் பார்த்தேன். திருநங்கைகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஊர்வலத்தில் ஒரு திருநங்கை ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்… டக்கென்று சானலை மாற்றிய கணவரிடம் ஒன்றும் பேசவில்லை நான்.

இருபது வருடம் கழித்து வெளியே வந்த மணி மன ஆழத்திற்கு மீண்டும் சென்று விட்டான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p196.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License