இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

எல்லாருக்குள்​ளேயுமா சாமி இருக்காரு?

மு​னைவர் சி.​சேதுராமன்


“விநாயக​னே ​வெவ்வி​னை​யை ​வேரறுக்க வல்லான்….”

ஒலி​பெருக்கியில் சீர்காழி ​கோவிந்தராசனின் குரல் கம்பீரமாக ஒலித்துக் ​கொண்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி ​நெருங்குவதால் எங்கு பார்த்தாலும் விநாயகர் நீக்கமற நி​றைந்து காட்சியளித்தார்.

நகரின் முக்கிய சாலையான கீழ இராஜவீதியின் இருமருங்கிலும் விநாயகர் பல அவதாரங்களை எடுத்து அடியவர்களுக்குத் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் புதுக்​கோட்​டை நகர் முழுவதும் விநாயகர் சிலைகளின் விற்ப​னை க​ளைகட்​டியிருந்தது. ​பொம்​மை விற்கும் வியாபாரிக​ளை மக்கள் சூழ்ந்து ​கொண்டு விநாயகர் சி​லைக​ளை வாங்கிக் ​கொண்டிருந்தனர். சந்திரனும், சசிகலாவும் தங்கள் செல்ல மகன் விக்​னே​​ஷைத் தூக்கி கொண்டு சாலையோரத்தில் இருந்த ​பொம்​மைக் கடைகளை அலசி கொண்டிருந்தனர்.

சந்திரனுக்கும் சசிகலாவிற்கும் விநாயகர் இஷ்ட​ தெய்வமாவார். அவர்களுக்கு விநாயகரின் அருளால்தான் மகன் பிறந்தான். அதனா​லே​யே அவர்கள் தங்கள் மகனுக்கு விக்​னேஷ் என்று ​பெயர் ​வைத்தார்கள். ஒவ்​வொரு விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு விநாயகர் சி​லை​யை வாங்கி வழிபாடு ​செய்வது அவர்களின் வழக்கமாக இருந்தது.

நா​ளை வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு நல்ல விநாயகர் சிலை​யொன்​றை வாங்குவதற்காக வீட்டில் இருந்து மகனுடன் அவர்கள் கிளம்பியிருந்தார்கள். ஒவ்​வொரு க​டையாய் விசாரித்துக் ​கொண்​டே வந்தார்கள். இரண்டு, மூன்று மணி நேரம் ஆகியும் அவர்கள் எதிர்பார்த்த விலையிலும், தரத்திலும் நல்லதொரு விநாயகர் சிலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

கொஞ்ச நேரத்திலேயே ஏதேனும் ஒரு சிலையை வாங்கி செல்வது என்று சந்திரன் முடிவு செய்து விட்டான். விநாயகர் என்ன கோவிச்சுக்குவா போறாரு?. ஏதாவது ஒண்ண வாங்கிட்டு வா சசி என்றான். அதற்கு அவள் “இங்க பாருங்க எதுக்​கெடுத்தாலும் அவசரப் படாதீங்க. ​தெய்வ காரியத்துக்கு வாங்குறோம். ​பொறு​மையா நல்லதாப் பார்த்துத் தானே வாங்க முடியும்” என்று சந்திரனின் வாயைச் சசிகலா அடைத்து விட்டாள்.



நேரம் செல்லச் செல்ல சந்திரன் ரொம்பவும் கடுப்பானான். விக்​னேஷூம் சோர்வடைந்தான். பிறகு மூவரும் அருகில் இருந்த ஜூஸ் கடைக்குச் ​சென்று கரும்புச் சாறினை வாங்கி அருந்தி விட்டு மீண்டும் விநாயகர் சி​லை வாங்கும் படலத்தைத் தொடர்ந்தனர். கரும்புச் சாறுக் கடையில் இருந்து நான்கு கடை தள்ளியிருந்த ​பொம்​மைக் கடையில் இருந்த ஒரு சிலையை எடுத்துச் சசிகலா சந்திரனிடம் காட்டினாள். ரொம்ப நல்லாயிருக்கு என்றான் சந்திரன். அந்த நேரத்தில் புத்தர், இயேசு சிலைகளைச் சசிகலா காட்டியிருந்தால் கூட நல்லாயிருக்கு என்று தான் சொல்லியிருப்பான் சந்திரன்.

இருவருக்கும் அந்தச் சிலை பிடித்துப் போக​வே கடைக்காரனிடம் வி​லையி​னைப் ​பேரம் ​பேசத் ​தொடங்கினர். க​டைக்காரன் 450 ரூபாய் என்றான். சசிகலா 250 ரூபாய் என்று பேரம் பேச ஆரம்பித்தாள். 500 ரூபாய் கொடுத்தாவது இந்த சிலையை வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் சந்திரன். கடைக்காரன் சசிகலாவிடம் இருந்த சிலையைப் பிடுங்கிக் கொண்டு “அம்மா இந்தமாதிரி நாங்க வித்தா த​லையில துண்டப் ​போட்டுக்கிட்டுப் ​போக ​வேண்டியதுதான். ஏ​தோ ​கொஞ்சங் ​கொறச்சுக் ​கேப்பிங்கன்னு பார்த்தா முழுப் பூசணிக்காய ​சோத்துல ​போட்டு ம​றைக்கிறது மாதிரில்ல அடிமாட்டு வி​லைக்குக் ​கேக்குறீங்க… இந்தச் சி​லைய வித்தா எனக்குப் பத்​தோ இருப​தோதான் ​கெ​டைக்கும்... அதவச்சி நான் எந்தக் ​கோட்​டையக் கட்டப்​போ​றேன்…நீங்க ​கேக்குற வி​லைக்கு நமக்குக் கட்டுபிடி ஆகாதும்மா…” என்றான்.

“ஹூம்… ஹூம்… கடவுளுக்குக் கூடப் பேரம் பேசக் கூடிய மக்கள் ​பெருகிப் ​போய்ட்டாங்க… எல்லாம் கால​நேரத்​தைத் தான் ​சொல்லணும்… என்னத்தச் ​செய்யிறது….” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான் கடைக்காரன். இதைச் சந்திரன் கேட்டதும் “ஆமா…மா…இந்தக் காலத்துல வியாபரிங்க எல்லாம் கடவுளை​யே வியாபாரப் ​பொருளாக்கிப் பணம் சம்பாதிக்க ​நெனக்கிறீங்கள்ள… அ​தெல்லாம் கால​நேரமில்லாயாக்கும் ….” என்றான். இத​னைக் ​கேட்ட க​டைக்காரன் ​​பேச்​சைக் கு​றைத்துவிட்டுத் தனது வியாபாரத்​தைக் கவனிக்கத் ​தொடங்கினான்.



மீண்டும் ​சசிகலாவிற்கும் க​டைக்காரனுக்கும் பேரம் தொடர ஒரு வழியாக 350 ரூபாய் என்று பேசி முடித்து அந்தச் சி​லை​யை வாங்கினாள் சசிகலா. க​டைக்காரனுக்கும் ஒருவித மகிழ்ச்சி. க​டைக்காரன் மகிழ்ச்சியுடன் சி​லை​யை எடுத்துக் ​கொடுத்தான். இப்​பொழுது சந்திரனின் முகத்தில் புன்ன​கை அரும்பியது.

அடுத்த நாள் கா​லையில் விக்​னேஷூக்கு பள்ளியில் விநாயகர் சதுர்த்தி​யை முன்னிட்டு மாறு​வேடப் ​போட்​டி​யை ​வைத்திருந்தனர். சந்திரனும் சசிகலாவும் ​யோசித்து ​யோசித்து மகன் விக்​னேஷூக்கு விநாயகர் ​வேடம்​போட்டுப் பள்ளிக்குக் ​கொண்டு ​போய் விட்டுவிட்டு வந்தனர். மகனுக்குப் பரிசு கி​டைக்க ​வேண்டும் என்று மனதிற்குள் இருவரும் ​வேண்டிக் ​கொண்டனர்.

மாலையில் பள்ளி ​வேன் வந்ததும் அதிலிருந்து இறங்கி வந்த விக்​னேஷ் வேகமாக ஓடி வந்து “அம்மா…” என்று கூப்பிட்டுக் ​கொண்​டே வந்து சசிகலா​வைக் கட்டி கொண்டான். சசிகலாவும், “ஏஞ்செல்லம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்துட்டியா….? ​ஆமா…ஸ்கூல்ல இன்னக்கி நடந்துச்​சே மாறு​வேடப் ​போட்டி அதில ​என்ன யாரு பரிசு வாங்குனாங்க….? என்று ​கேட்டாள்.

அதற்கு விக்​னேஷ், “அம்மா நான் ஸ்கூல்ல நடந்த மாறுவேட போட்டியில் ஜெயிச்சுட்டேம்மா. முதல் பரிசு எனக்குத் தாம்மா. நீ காலையில போட்டு விட்ட விநாயகர் வேஷத்தால தாம்மா எனக்குப் பரிசு ​கெ​டைச்சது. எங்க டீச்சர் என்னை ரொம்ப பாராட்டுனாங்கம்மா” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

மகன் பரிசு வாங்கிய​தைக் கண்ட சசிகலா அவ​னை வாரி அ​ணைத்து, “அப்படியா தங்கம், ரொம்ப சந்தோஷம் டா. அப்பாகிட்டச் சொல்லிட்டியா” என்றாள். “ம்ம்ம்.. சொல்லிட்டேனே” என்றான் விக்​னேஷ். “நாம கும்பிடுற சாமி தான் உனக்குள்ள இருந்து உன்னை ஜெயிக்க வச்சுருக்காருப்பா” என்றாள் சசிகலா.

“என்னம்மா சொல்ற எனக்குள்ள சாமி இருக்காரா?” என்று குழந்தை மொழியில் புரியாமல் கேட்டான் விக்​னேஷ். “ஆமாண்டா தங்கம். சாமி ஒனக்குள்ள மட்டுமில்ல எல்லாருக்குள்ளயும் இருக்காருடா” என்றாள் சசிகலா.

“ஆமா எல்லாருக்குள்​ளேயுமா சாமி இருக்காரு?” என்று திரும்பவும் ​கேட்டான் விக்​னேஷ். இத​னைக் ​கேட்ட சசிகலா மக​னைப் பார்த்து, “ஆமாப்பா எல்லாருக்குள்​ளேயும் சாமி இருக்காருப்பா” என்று பதிலளித்தாள்.

“ஒனக்குள்ளயே சாமி இருக்காரு; அப்பாவுக்குள்​ளேயும் சாமி இருக்காரு…எனக்குள்​ளேயும் சாமி இருக்காரு… அப்புறம் ஏம்மா வேற ஒரு சாமியை வாங்க ரோடு ரோடா நேத்து நீயும் அப்பாவும் அலைஞ்சீங்க” என்றான் விக்​னேஷ்.



சசிகலாவால் ஒன்றும் ​பேச முடியவில்​லை. யா​ரோ தன்​னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு. தமிழிலக்கியம் படித்த அவளின் மனதில் திருமூலர் கூறிய, ”உள்ளம் ​பெருங்​கோயில் ஊனுடம்பு ஆலயம்; ​தெள்ளத்​ தெளிந்தார்க்குச் சித்தம் சிவமயமாம்” என்ற திருமந்திரப் பாடல் ஒலிக்கத் ​தொடங்கியது. சசிகலா பூ​ஜையறையில் இருந்த விநாயகர் சிலையை நோக்கினாள். அந்தச் சிலை அவளைப் பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல் உணர்ந்தாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p202.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License