இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

ஆடும் மனசு

மு​னைவர் சி.​சேதுராமன்


அந்த அலுவலகத்தில் ​மேலாளருக்கு அடுத்து அ​னைவரும் கண்டு பயப்படும் நபர் காசாளர்தான். காசாளர் வணங்காமுடி வருகிறார் என்றா​லே ​மேலாள​ரைத் தவிர அ​னைவருக்கும் வயிற்றில் புளி​யைக் க​ரைக்கும். அந்த அளவிற்கு அவர் எல்​லோ​ரையும் கடித்துக் குதறிவிடுவார். மற்றவர்கள் என்ன நி​னைத்துக் ​கொள்வார்கள் என்​றெல்லாம் அவர் பார்ப்பதில்​லை. அவரிடமிருந்து பணம் வாங்குவதென்பது கல்லில் நாருரிப்பது ​போன்றது. அந்தளவிற்கு ஆயிரத்​தெட்டுக் ​கேள்விகள் ​கேட்டு அதில் அவருக்குத் திருப்தி ஏற்பட்டா​லொழிய அவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது.

வார்த்​தைகளா​லே​யே புரட்டி எடுத்து விடுவார். அலுவலகத்தில் உள்ள அ​னைத்துச் ​சேர்க​ளையும் பின்னி, அது ஆடாமலிருக்கச் ​சேர்களுக்குக் கீழ் புஷ் ​போட்டுத் தருவதாக ஒப்புக் ​கொண்டு ​வே​லை பார்த்த ஒருவரும், அவருடன் வந்த சின்னப் ​பையனும் பணம் வாங்குவதற்காக காசாளரது அ​றை வாயிலி​லே​யே காத்துக் ​கொண்டிருந்தனர். அந்தப் ​பெரியவருக்கு வயது அம்பத்தஞ்சு இருக்கும். பார்க்கப் பரிதாபமாகக் காணப்பட்டார். கூட இருந்த அந்தப் ​பையன் அவரு​டைய மகன் என்று அலுவலகத்தில் உள்ளவர்கள் ​கேட்டதற்குக் கூறியிருந்தார்.

காசாளர் வணங்காமுடி தான் அமர்ந்திருந்த அந்தச் சேரை உட்கார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்துச் சோத​னை ​செய்து பார்த்தார். அவர் அமர்ந்திருந்த ​சேர் ‘லொடக்…லொடக்” என்று ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. அந்தச் ​சே​ரைக் குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது. ஜிவ்​வென வணங்காமுடிக்குக் ​கோபம் த​லைக்​கேறியது.

‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னி​யே…இப்ப நான் ஒக்காந்துருக்கிற ​சேரே இப்படி ஆடிக்கிட்டு இருக்​கே... ஒனக்கு எப்படிய்யா பில்லுல ​கை​யெழுத்துப் ​போட்டு பணத்​தைத் தரு​வேன்… ஒன்னயப் ​போயி யாருய்யா இந்த ​வே​லைக்குக் கூட்டியாந்தாங்க..இந்தமாதிரி அ​ரைகு​றை ​வே​லை பாக்குறவங்க கிட்ட​யெல்லாம் ஒரு ​வே​லை​யை நம்பி ஒப்ப​டைக்கக் கூடாதுய்யா….”

அத​னைக் கண்ட வயர் பின்னியவன் பவ்வியமாகப் பயத்துடன் காசாள​ரைப் பார்த்துக் ​கொண்​டே இருந்தார். ஒவ்​வொரு அலுவலகமாகச் சென்று அங்கிருக்கும் சேர்களின் பழைய பிய்ந்து போன வயர்களையும்…அடிப்பகுதி புஷ்களையும் மாற்றிக் கொடுத்து வயிறு வளர்ப்பவன் அவன். எங்க எதுவும் ​பேசினால் பணம் ​கொடுக்காது விட்டுவிடுவா​ரோ என்று த​லை​யைக் குனிந்து ​கொண்​டே ​நெஞ்சப் படபடப்புடன் நின்று ​கொண்டிருந்தான்.



‘யோவ்!… என்னய்யா இந்தச் ​சேர் மட்டும்தான் ஆடுதா…? இல்ல எல்லாச் ​சேரும் ஆடுதா…? ஆமா… எல்லாச் சேர்களுக்கும் கரெக்டா புது வயர் மாத்திட்டியா?” காசாளர் அவ​னைப் பார்த்து அதட்டலாகக் கேட்க,

‘இல்லீங்க சார்… சரியா பண்ணி முடிச்சுட்டேன் சார்! வாங்கிட்டு வந்த புஷ்ஷூல ஒண்ணு மட்டும் ​கொறஞ்சு ​போச்சு சார்!….மத்தபடி எல்லாச் சேர்களுக்கும் புது வயரும்…புது புஷ்களும் மாத்தியாச்சுங்க சார்! ஒ​ரே ஒரு புஷ்​ஷை வாங்கிட்டு வந்து நா​ளைக்கு மாட்டி விட்டர்​​றேன் சார்……” என்று பயந்து பயந்து பதில் கூறினான்.

“ஆமா யாராவது ​வந்து சே​ரெல்லாம் ​செக் பண்ணினாங்களா இல்​லையா?”

“யாரும் செக் பண்ணலைங்க சார்… ஆனா அதுக்கு அவசியமே இல்லைங்க சார்… எல்லாத்​தையும் சரியாப் பின்னிட்​டேன் சார்…” எனறான்.

‘அப்படியா?… அப்பறம் எப்படி இது மட்டும் ஆடுது…?” என்று காசாளர் எழுந்து நின்று தன் சேரை இழுத்து அவனிடம் ஆட்டிக் காட்ட, அது ஒரு பக்கம் புஷ் இல்லாமல் நொண்டியது.

அவன் துணுக்குற்றவனாய், அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘ஏண்டா…எல்லாச் சேருக்கும் புஷ் போட்டாச்சுன்னு பொய்யாடா சொன்னே?”

‘இல்லைப்பா… ஒரே ஒரு புஷ் பத்தலை… அதான்!” பையன் நடுங்கியபடி சொன்னான்.

‘என்கிட்ட சொல்ல வேண்டாமா?….” என்று பையனைக் கடிந்து விட்டு, காசாள​ரைப் பார்த்து, ‘சார்… மன்னிச்சிடுங்க சார்… ​வேணுமின்னு ​செய்யாம விட​லே சார்… நான் அதைச் சரியாக் கவனிக்காம விட்டுட்டேன்…ஒரே ஒரு புஷ்தானே சார்?…அத…நாளைக்கே கொண்டாந்து மாட்டிடறேன் சார்!” என்று கெஞ்சிக் ​கேட்டான் அவன்.

‘என்னய்யா வெளையாடறியா?… எல்லாச் சேர்களுக்கும் வயர் மாத்தியாச்சு… புஷ் போட்டாச்சுன்னு பொய் சொல்லி பில்லை சாங்ஷன் பண்ணிட்டு வந்திருக்கே… அப்படித்தானே?”

‘சார்…சார்…வந்து…வந்து…ஒரு புஷ்தானே…சார்…நா​ளைக்கு வந்து மாத்திக் ​கொடுத்தர்​றேன் சார்…”

‘​யோவ் பேசாதய்யா!…உன்னையெல்லாம் ஆபிசுக்குள்ளாற விடறதே தப்பு!…ஏதோ போனாப் போகுதுன்னு வேலையக் கொடுத்தா ஃபிராடா பண்றே?” வானத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார் காசாளர் வணங்காமுடி.

அத்தனை பேர் முன்னிலையிலும் காசாளர் ​பேசிய ​பேச்சில் கூனிக் குறுகிப் ​போனான் அவன். வத்திப் ​போன அவனது உடல் ​வெட​வெட என்று நடுங்கத் ​தொடங்கியது.

“வயசானவன்னு பார்க்கறேன்!…இல்லேன்னா பில்லைத் தூக்கி மூஞ்சில வீசி ‘போடா நா​யே வெளிய”ன்னு தொரத்தியடிச்சிருப்பேன்!…போய்யா…​போ….போயி நாளைக்கு இன்னொரு புஷ்ஷோட வந்து மாத்திக் ​கொடுத்துட்டு ​மொத்தப் பணத்​தையும் வங்கிக்கிட்டுப் ​போ….!”



காசாளர் கூறிய​தைக் ​கேட்ட வயர் பின்னியவன் அதிர்ந்​தே ​போனான். ஒரு வாரத்திற்கும் மேலாக எங்கும் வேலையே கிடைக்காமல் வறட்சியில் கிடந்தவனுக்கு அதிர்ஷ்டவசமாய் இன்றைக்கு இந்த ஆபீசில் வேலை கிடைத்தது. வேலை முடித்ததும் கிடைக்கும் பணத்தில் இன்றைக்காவது தானும் தன் மகனும் வயிறார சாப்பிடலாம் என்று கனவு கண்டிருந்தான். காசாளரின் ​பேச்சி அவன் த​லையில் இடி​யை இறக்கியது ​போன்றிருந்தது… அவன் பதற்றத்துடன்…

“சார்….சார்…பாதிக் காசாவது குடுத்தீங்கன்னா…ஒங்களுக்குப் புண்ணியமாயிருக்கும் சார்…!” என்று அவன் கேட்க நினைத்தான். ஆனால் காசாளரின் இரத்தம் குடிக்கும் ஓநாய்ப் பார்வையைக் கண்டதும் பேச வந்ததை அப்படியே வாய்க்குள்​ளே​யே விழுங்கிக் கொண்டான்.

இ​தை​யெல்லாம் பார்த்துக் ​கொண்டிருந்தவர்களுக்கு சற்றுத் துணிச்சல் வந்தது. ஆபீசிலிருந்த மற்றவர்கள் அந்த வயர் பின்னுகிறவனுக்கு சாதகமாய்ப் பேசத் துவங்கினர். அவர்களுள் ஒருவனான ​டெஸ்பாட்ச் ​மோகன்,

“கேஷியர் சார்…அவன்கிட்டப் ​போயி ஏன் சார் தகராறு பண்ணிட்டிருக்கீங்க?... அவனப் பாத்தாப் பறிதாபமா இருக்கு சார்… அவங்கிட்ட பணத்தைக் ​கொடுத்தனுப்புங்க சார்” என்று கூறினான். இத​னைக் ​கேட்ட காசாளருக்கு வியப்பாக இருந்தது. அட நம்மகிட்ட ​பேச​வே பயப்படுற இந்த ஆபிசு​லே நம்மப் பாத்து இந்தப் பயலுக்காக வக்காளத்து வாங்க வர்றா​னே…இவன இப்​போ​தைக்கு எதுவும் ​பேச ​வேண்டாம்…சமயம் வர்ற​போது பாத்துக்கு​வோம்… என்று மனதிற்குள்​ளே​யே கூறிக் ​கொண்டு… அத​னை ​வெளிக்காட்டாது,

“இவனுக்குப் பணங் ​கொடுக்கறதைப் பத்தி ஒண்ணுமில்லை மோகன்…இவனுகளையெல்லாம் நம்ப முடியாது…இந்த ஒரு புஷ்ஷூக்காக இவன் நாளைக்கு வருவானா…? ​கொஞ்சம் ​யோசிச்சுப் பாருங்க….கண்டிப்பா வரமாட்டான்!…வேற எங்காவது வேலை கெடைக்கும்…அங்க போய்டுவான்…இதை அப்படியே மறந்திடுவான்! இவன நம்பி எப்படிப் பணங் ​கொடுக்கறது” என்று வணங்காமுடி இன்னும் பிடிவாதமாகவே ​பேசினார்.

இத​னைக் ​கேட்ட ​மோகன், “சார்… பாவம் சார்…அவன்…. வேணும்னா….அந்த ஒரு புஷ்ஷோட அமௌண்ட்டை கழிச்சிட்டு மீதியக் குடுத்தனுப்பலாமில்ல?” என்று விடாமல் பேசினான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த காசாளர் இனி​மேல் ​பேச்​சை வளர்ப்பது சரியல்ல என்ப​தை உணர்ந்து ​கொண்டு, “ஓ.கே!…நீங்க சொல்லறதுனால தர்றேன்…அதுவும் மொத்த அமௌண்ட்டையும் தர்றேன்!…”யோவ்…வாய்யா….இந்தா ஃபுல் பேமெண்ட்டுமே வாங்கிக்க!… ஆனா நாளைக்கு கண்டிப்பா வந்து புஷ்ஷ மாத்திக் ​கொடுத்துட்டுப் போகணும்!… என்ன?” என்று பணத்​தைக் ​கொடுத்தார்.

“சரிங்க சார்!… கண்டிப்பா வந்து ஒங்க சேருக்கு ஒரு புஷ்ஷப் போட்டுட்டுத்தான் வேற வேலைக்கே போ​வேன்” என்று முகமலர்ச்சியுடன் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றான் அவன். பையனும் பெரிய ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டி ஆட்டைப் போல் கூடவே ஓடினான்.

மறுநாள் மாலை ஐந்து மணியிருக்கும், அலுவலக​மே அதிர்ந்து ​போகும் அளவிற்குக் காசாளர் தாம்தூம் என்று குதித்தார், ​​மோக​னை வரவ​ழைத்து,

“என்ன​மோ ​பெரிய தர்மப் பிரபு மாதிரி அந்த வயர்ப்பின்றவனுக்கு சப்​போர்ட்ப் பண்ணி ​பேசினீங்க…நான் சொன்னதைக் கேட்க​வேயில்​லை​யே நீங்க… பாத்தீங்களா?….இன்னிக்கு அவன் வரவேயில்லை!…எனக்குத் தெரியும் சார் இவனுகளைப் பத்தி. வேற எங்கயாவது வேலை கெடைச்சிருக்கும்…டக்குன்னு ஓடியிருப்பான்!... ​​கொஞ்சமாவது அனுபவம் ​வேணும் சார்… நான் என்ன அரக்கனா…? எதுவும் ​​தெரியாதவனா… என்​னோட அனுபவத்துக்கு முன்னால நீங்கள்ளாம்…​கொசுறு….இப்ப என்னாச்சு பாத்தீங்கள்ள….” கடு​மையாகப் ​பேசினார்.

பதில் பேச முடியாத நி​லையில் வாய​டைத்துப் ​போய்விட்டான் மோகன். தனது தவ​றை உணர்ந்து காசாளரிடம் மன்னிப்புக் ​கேட்டுவிட்டு தன்னிடத்திற்குச் ​சென்றமர்ந்து ​வே​லையில் ஈடுபட்டான். அவன் வேலையில் மும்முரமாய் மூழ்கியிருப்பதைப் போல் பாவ்லா காட்டினான். வே​லையில் அவனால் முழு​மையாக ஈடுபட முடியவில்​லை. தன்னு​டைய மனசுக்குள், ‘அடப்பாவி…ஏழையாச்சேன்னு அவனுக்கு பரிஞ்சு பேசினது தப்பாப் போச்சு!…இப்ப நம்மையே தலை குனிய வெச்சிட்டான்!” என்று அந்த வயர் பின்னுபவனைத் திட்டித் தீர்த்தான்.



மறுநாளும் அந்த வயர் பின்னுபவன் வரவில்லை. அத​னைத் ​தொடர்ந்து பத்து நாட்களும் அவன் வராததால், நாள்​தோறும் காசாளரின் அர்ச்ச​னை​யைத் தாங்க முடியாத நி​லையில் நா​மே அத​னைச் சரி ​செய்துவிடு​வோம் என்ற முடிவுக்கு வந்தான் ​மோகன். அப்​போதுதான் இந்தக் காசாளரின் அர்ச்ச​னையிலிருந்து தப்ப முடியும். இல்​லை​யென்றால் மனுஷன் தன்​னை வாட்டி வள​​வெடுத்துவிடுவார். இந்த நினைப்பில் அலுவலகப் ​பைய​னை அ​ழைக்க ​​மோகன் எத்தனித்த​போது சரியாக அந்தச் சிறுவன் மட்டும் வந்து நின்றான்.

வந்தவன் ​நேராக காசாளரின் அ​றைக்குச் ​சென்றான். அவ​னைப் பார்த்த காசாளர், “வாய்யா…பெரிய மனுசா…இப்பத்தான் ஒனக்கு வழி தெரிஞ்சுதா?…எங்க ஒங்கப்பன்?…இங்க வரப் பயந்திட்டு ஒன்னைய அனுப்பிச்சிட்டானா?…” என்று நக்கலாகப் பேசியவாறே எழுந்து நின்றார்.

காசாளரின் சேரைத் தலைகீழாகத் திருப்பி அந்தப் புஷ்ஷை சரியாக மாட்டி விட்டுச் சிறிதும் ஆடாதபடி செய்து விட்டுக் கிளம்பினான் சிறுவன்.

அவன் டெஸ்பாட்ச் மோகனின் டேபிளைக் கடந்து செல்லும் போது, அவனை அருகில் அழைத்த மோகன், “ஏம்பா?….மறுநாளே வர்றேன்னு சொல்லிட்டுத்தானே போனீங்க?… இப்ப என்னடான்னா பத்து நாளு கழிச்சு நீ மட்டும் வந்திட்டுப் போறே!… ஒங்கப்பனுக்கு வக்காலத்து வாங்கப் போயி நான் இந்தாளுக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டேன்” என்றான்.

அவன் கூறிய​தைக் ​கேட்ட சிறுவனின் கண்களில் இருந்து கரகர​வெனக் கண்ணீர் வழிந்தது… கண்ணீர் வழிந்த முகத்துடன் அவன் ​மோக​னைப் பார்த்து, ‘சார்… மன்னிச்சிடுங்க சார்... ​வேணுமின்னு பண்ண​லே சார்… நாங்க அன்னிக்கு இங்கிருந்து போனோமா?…அன்னிக்கு ராத்திரி​யே எங்கப்பாவுக்கு மாரடைப்பு வந்திடுச்சு சார்… ஆசுபத்திரிக்குக் ​கொண்டு ​போறதுக்குள்ளாற எங்கப்பா செத்துப் போயிட்டாரு... சார்..! ஒங்கள ஏமாத்தணும்னு எண்ணமில்ல சார்…” என்ற சிறுவனின் கண்களில் நீர்.

அத​னைக் ​கேட்ட காசாளரும் டெஸ்பாட்ச் மோகனும் அதிர்ந்து ​போயினர். அழுது ​கொண்​டே சிறுவன் தொடர்ந்தான்.

“எங்கப்பா செத்துப் போனதும், அவரு முடிக்க ​வேண்டிய​தை எல்லாம் முடிக்க ​வேண்டியது என்​னோட கட​மை சார்…. அன்னிக்கு நீங்க அவரைத் திட்டியது… அவர் மறு நாள் வர்றேன்னு உறுதியாச் சொல்லிட்டுப் போனது எல்லாத்தையும் நான் பார்த்திட்டுத்தான் இருந்தேன்…!…அதனால... எங்கப்பா ஒங்ககிட்ட ​சொன்னது மாதிரி நான் அடுத்த நாளே இங்க வரணும்னு கிளம்பினேன்… ஆனா எங்க சொந்தக்காரங்கதான் ‘பத்தாம் நாள் சடங்க முடிச்சிட்டுத்தான் போகணும்னு என்ன நிறுத்திப்புட்டாங்க!…இன்னிக்குத்தான் பத்தாம் நாள்… அங்க சடங்கு வேலைக முடிஞ்சதும் நேரா இங்கதான் வர்றேன்!…என்ன மன்னிச்சிடுங்க சார்…” பரிதாபமாய்ச் சொல்லி விட்டுக் கண்ணீருடன் வெளியேறினான் அவன்.

அவன் சென்று வெகு நேரம் ஆன பின்னரும் அந்த ஒட்டு​மொத்த அலுவலக​மே அ​மைதியில் உ​றைந்து ​போயிற்று. ஒவ்​வொருவர் மனதிலும் அந்தச் சிறுவனும் அவனது கட​மை உணர்வு​மே நி​றைந்திருந்தது. நி​லை​மை அறியாது அவ​னையும் அவனுக்கு உதவிய ​மோக​னையும் வார்த்​தையால் வறுத்​தெடுத்த காசாள​ரை ஏளனமாக அற்பப் புழு​வைப் பார்ப்பது ​போல் அ​னைவரும் பார்த்தனர்.

“..ச்​சே மத்தவங்க​ளோட மன​சைப் புரிஞ்சுக்காத இவ​​னெல்லாம் ஒரு மனுஷனா..” என்பது ​போன்றிருந்தது அவர்களின் பார்​வை.​

அவர்களின் பார்​வையால் கூனிக் குறுகிப் ​போன காசாளர் வணங்காமுடியின் இதயத்தில் யா​ரோ சம்மட்டியால் தாக்கியது ​போன்றிருந்தது. இது நாள் வ​ரையிலும் மற்றவர்களின் சூழ​லையும் மன​தையும் உணராமல் இருந்து விட்​டோ​மே என்ற கழிவிரக்கம் அவரது உள்ள​த்​தைக் க​ரையா​னைப் ​போன்று அரித்தது.

யா​ரையும் நிமிர்ந்து பார்க்கும் ​தைரிய​மே அவரிடம் இல்​லை. அவர் இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தார். இப்​போது தான் அமரும் சேரைத் தன்னிச்சையாக அசைத்துப் பார்த்தார். அது ஆடவில்லை. அது ஆடாமல் அ​சையாமல் சரியாக இருந்தது. ஆனால் அவர் மனம் மட்டும் அமைதி இழந்து ​ஊசல் குண்டு​போல் அங்குமிங்குமாக ஆடிக் கொண்டிருந்தது. அத​னை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்​லை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p206.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License