இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
சிறுகதை

சொப்பு விருந்து

எஸ். ஷங்கரநாராயணன்


உலகம் எப்பவுமே கண்டுபிடித்து அறிந்துகொள்ள வேண்டியதாகத்தானே இருக்கிறது! கண்ணுக்குத் தெரியாத திரைகள் எங்கும் எங்கெங்கிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்று தோன்றியது சரவணனுக்கு. துரும்படியில் யானைகள் இருப்பதைக் கண்டுகொள்ளவா முடிகிறது. சின்னத் திரியைப் பற்ற வைத்தால் பெரும் வெடிகள் சிதறுகின்றன. பாறைக்கடியில் நீரூற்றுகள் கிடைக்கின்றன. வயலை உழுதால் புதையல் கிடைக்கிறது. தேடுதலும், கவனமாய்க் காத்திருத்தலும் வாழ்க்கையை எத்தனை பரசி விரித்துக் காட்டுகின்றன.

நியதிகளுக்கு முடிவு என்று ஒன்று இல்லைதான். கண்ணி விட்டுப் போதல், அதுவே நிகழ்கிறது. சில நியதிகள் விட்டுப் போவதே கூட, புதிய நியதிகளில் ஒருவேளை புகுந்துகொள்வதாக அமையக் கூடும் அல்லவா? மானுடக் கணக்குகளும் காலக் கண்ணிகளும் சரியாக இணைவதில் அடையாளங்கள் தட்டுப்படுகின்றன போலும்.

காலையிலேயே மனசு ஒரு புதிய தாள லயத்தில் தன்னை இணைத்துக்கொண்டாற் போலிருந்தது. எத்தனை கனமான நினைவுகள் அழுத்தினாலும் ஓர் உறக்கம், மனசைக் கழுவிவிட வல்லதாய் இருக்கிறது. அடுத்த நிலைநோக்கி நகர்தல் இயல்பாகவே தவிர்க்கவொண்ணாததாகவே அல்லவா ஆகி விடுகிறது. இனி என்ன, என திகைக்கிறதே ஒரு பாவனைதான். கணநேர மயக்கம். மருட்டல். எதற்கும் முடிவு உண்டு என்பதுபோலவே, இதுவும் ஒரு பார்வைதான்... எதற்கும் முடிவு என்பது இல்லை!

புடவை புடவையாய் உடுத்திப் பார்த்துக்கொள்ளும் வானத்தின் வர்ண அமர்க்களமாய் மானுடம் மனச் சலனங்களிலும் தேடல்களிலும் ஆர்வத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேதான் வருகிறது. வாழ்வில் அழகுகள் பொதிந்துள்ளதைக் கண்டுணர்ந்து பிரித்து அனுபவிப்பதில்தான் வாழ்கிற தத்துவம் வெற்றி பெறுகிறது. எங்கோ தூரத்தில் இருந்து வரும் பூ வாசனையின் மௌன அறிவிப்பு இதைத்தான் சொல்கிறது. எங்கோ பெய்கிற மழையின் மண்வாசனை, முகம் காண முடியாத தொலைதூரத்து நண்பனின் கடிதம் போல. நண்பா! என்ன இருந்தாலும் நீ நேரில் வந்திருக்கலாம்.

கடிதம் போடாமல்கூட வந்துவிடுகிறது மழை. கதவைத் தட்டுகிறது திறக்கச் சொல்லி...



குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் வாசலிலும் உள்ளேயும் குவித்து வைத்திருக்கிற கடையை அன்றைக்குப் பார்த்தபோது மனம் துள்ள ஆரம்பித்துவிட்டது. அவிழ்த்துக்கொண்ட கன்றுக்குட்டி போல. காலை உதறி உதறி எம்பித் தாவும் கன்றுக்குட்டிகள் திடீரென்று சூழலுக்குக் கலகலப்பைக் கொண்டுவந்து விடுகின்றன. மனசுள் குலுங்கும் கிலுகிலுப்பை. கடைவாசலில் சிறு பலகைபெஞ்சில் பிஞ்சுக் குழந்தைகளுக்கான செருப்புகள் ஷூக்கள் பார்த்தபோது மனம் பரவசப் பட்டது. ஹெமிங்வே ஒரே வரியில் எழுதிய சிறுகதை ஞாபகம் வந்தது.

Children shoes for sale. unworn!

குழந்தைக் காலணிகள். இதுவரை போட்டுப் பார்க்காதது!

இந்த இலக்கியவாதிகள் ஏதோ ஒன்று புதுசாய் கவனிக்கிறார்கள். அதைச் சொல்லித் தருகிறார்கள்.

வாழ்க்கை புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. கவனிக்காமல் விட்டால் அது சரியில்லைதான்!

கீச் கீச்சென்று ஊதல் உள்ளே வைத்த காலணிகள். சிற்றடி சீரடி எடுத்து வைக்கும்தோறும் காலுக்குள்ளிருந்து சீறும் சப்த அமர்க்களத்தில் குழந்தைக்கு சிறு திகைப்பும் பின் சிரிப்பும். திடீர் திடீரென்று காது நிறைவதில் அந்த உணர்ச்சி அதன் உடம்புக்குள் நதியாய் ஓடுவதைப் பார்க்க முடிகிறது. குழந்தைகள் நடைபழக உத்திரீதியாய் ஒரு கொண்டாட்டம். 'மா தூ...' (அம்மா தூக்கு) எனும்போது 'பாரு குட்டி நீ இதைப் போட்டுக்கோ நடந்தா விசில் சத்தம் வரும்...' அதன் நடையில் குழந்தையை விட, பார் அம்மா முகத்தை. புன்னகை முகம் நெடுக விரிந்து பரந்திருக்கிறது.



A thing of beauty is a joy for ever, என்கிறான் கவி ஒருவன். அதை ஆவேசமாய் சாமர்செட் மாம் மறுக்கிறான். புலன்களை முதற் பரிச்சயத்தில் நிறைப்பதே அழகு. அது காலாந்திர ஆனந்தத்தை எப்படித் தர முடியும். மகிழ்ச்சியைத் தாண்டி அது மூளையில் திரும்பத் திரும்ப அலைமோதல் செய்ய வேணுமென்றால் அதில் அழகுத்தளத்தைத் தாண்டி உள்படுகைகள் (லேயர்ஸ்) தரிசனப்பட வேண்டாமா? - என்கிறான். எதிராளியை எள்ளுவதில் மாமுக்கு நிகரில்லை. நிஜத்தில் அந்த cakes and ale நாவலே சக எழுத்தாளனை எத்தும் உச்ச உத்திதானே...

பார்வையில் கோளாறு என்று நினைத்தான் சரவணன். அழகுச் சிதறல்கள் கண்ணுக்கு விருந்து என்பது சரிதான். அதிலேயே மனசூன்றிக் கொண்டிருப்பது எளிய நிலையே, அலுத்துவிடும் அது, என்பதும் உண்மைதான். ஆனால் வாழ்க்கையில் அடுத்தடுத்து அழகுகள் கலைக்கண்ணுக்குத் தட்டுப்பட்டுக் கொண்டேதானே இருக்கின்றன. ஒரு அழகுக் கூறில் இருந்து அடுத்ததுக்கு மனம் தாவிக் கொண்டேதான் இருக்கிறது. பட்டாம்பூச்சி தேனுக்கு அலைகிறதைப்போல!

ஆக வாழ்க்கையில் ஆனந்தத்துக்குக் குறைவில்லை. Life is too short to be kept worrying, என்பார்கள். சாமர்செட் மாம் அறியாதிருக்க முடியாது. சும்மா கிண்டிக் கிளறிவிட்டுப் பார்க்கிறான்!

தூக்குமேடையில் இருந்து கொண்டே தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லையா - Beauty will save the world! ஆச்சர்யமானவர்கள் இந்தக் கலைஞர்கள்!

சில நாட்கள் இப்படி ஆகிவிடுகிறது. காற்றலைத்தாற் போல மனசுக்குள் எண்ண அலைகளின் சளப் சளப். காற்றில் காயப்போட்ட வேட்டியின் ஃபட் ஃபட்.

கோவில் பக்க சிறு உலாவலில் நம்பிக்கைப் புன்னகையுடன் உள்பவித்திரங்களுடன் நடமாடும் பக்தக் கும்பலின் ஊடே புகுந்து கடக்க அவனுக்கு எப்பவுமே பிடிக்கும். நம்பிக்கைக் கேந்திரங்கள் அவை. கையில் விபூதி குங்குமத்துடன் துளி நம்பிக்கையும் அங்கே கிடைக்கிறது ஜனங்களுக்கு. பாவனைகள் அற்ற மனிதர் யார்?



மிளகு உப்புடன் அந்தக் கோவில் குளத்தில் பாவத்தையும், அட அவநம்பிக்கையையும் அல்லவா அவர்கள் கரைக்கிறார்கள்.

குடும்பம் குடும்பமாக வந்து போவதற்குக் கோவில் போல வேறில்லை. கோவிலில் என்றில்லை, ஒன்றாய்க் கோவிலுக்குக் கிளம்பும் கணத்திலேயே வாழ்க்கை இறுக்கம் தளர்ந்து ஓர் அமைதி உள்ளே ஸ்தாபித்துக்கொள்கிறது. கையெடுத்து அவன் இதுவரை உள்ளே போய்க் கும்பிட்டதில்லை. அது தேவையாயும் உணர்ந்ததில்லை. கைவிடப்பட்ட நிலை, என்கிற தருணம் அவனில் கிடையாது.

உலகம் புன்னகைகளால் ஆளப்படுகிறது.

வாசம் என்பது மலரின் புன்னகை.

சின்ன வயசில் அம்மாவுடன் கோவிலுக்குப் போயிருக்கிறான். கடவுளை உற்சவம் என்று யானை வாகனத்தில், குதிரை வாகனத்தில் ஊர் உலா அழைத்து வருவது, குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவதாய்த்தானே இருக்கிறது... என்றான் அம்மா கையைப் பிடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்து வந்த ஒரு போதில். டாய், என்றாள் சிரித்தபடி. ரசித்தாப் போலிருந்தது. சடைநாயைப் பார்த்து, பஞ்சுமிட்டாய், என்று அவன் காட்டியதை அடிக்கடி ஞாபகம் கொள்வாள் அவள்.

எல்லா மனுசாளுக்கும் உள்ளே குழந்தைகள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதை வளர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கரண்ட் கட்டாகி ஒலிகள் உள்ளமுங்கிக் கொள்ள, திரும்ப பளிச்சென்று வெளிச்சம் வந்த போதில் கூவென்று கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் குழந்தை மனம்.

விசில் ஷூவைப் பெண்ணொருத்தி கடை ஒன்றில் பேரம் பேசி வாங்கினாள். அதை அவள் கையில் இருந்து பிடுங்க முயற்சிக்கும் குழந்தை. ஆனந்தத்தை முழுசாய் உடனே அனுபவிக்கும் ஆவேசம் அதற்கு. கடைக்காரன் அவர்கள் தாண்டிப் போகையில் வெறும் கையால் ஷூவின் பாதத்தை அமுக்கி சப்தமெழுப்பிக் காட்டியதில் மனசு பரபரத்து விட்டிருந்தது. கண்ணே சிரித்தது அதற்கு.

அப்பவே போட்டுப் பார்க்கிற பிடிவாதம். சற்றுமுன் கால் வலிக்கிறது, தூக்கு என்று அடம்பிடித்த குழந்தையா இது! முகமெல்லாம் ஒளிபூத்து நிற்கிறது.



பக்கத்து வீட்டுக் குழந்தை ஞாபகம் வந்தது அவனுக்கு. நல்ல கொழுகொழு குழந்தை. நடையே கிடையாது. சுய கட்டுப்பாடு இல்லாத நடை. உடம்பே வாகில்லாமல் வழிந்தோடும் மெழுகுவர்த்தி போலிருக்கும். புவியீர்ப்புக்கு அனுசரித்து காலை எட்டி வைக்கத் தெரியாமல் தள்ளாடி பொத்தென்று விழும் குழந்தை. இந்த லெட்சணத்தில் அம்மா கையைப் பிடித்துக்கொள்ள வந்தால் ஹும், என ஒதுக்கி அலட்சிக்கிறதில் வீம்புக்குக் குறைச்சல் இல்லை.

சில சமயம் சுற்றிலும் விளையாட்டுச் சாமான்களைப் பரத்திப் போட்டுக் கொண்டு என்னவோ தன் கற்பனையில் லயித்திருக்கும். பொம்மைகள் அதன் உலகத்தில் உயிர்கொண்டு உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கலாம்.

சரவணன் சொப்பு விளையாடுகிறாப் போல படமே இப்போதும் வீட்டில் இருக்கிறது. மண்ணும் இலையும் தண்ணியும் கலந்து சிறு அடுப்பு வைத்து சமையல் பண்ணுகிறாப் போல பாவனைகள். எத்தனை அழகான பருவம் அது.

என்னடா, என்று கேட்டாள் அம்மா.

சமையல் பண்ணறேன் அம்மா.

உனக்கு என்னடா தெரியும்? - அம்மாவுக்குச் சிரிப்பு.

வா, வந்து சாப்பிடு அம்மா.

சின்ன பிளாஸ்டிக் ஸ்பூனால் அந்தக் கிண்ணத்தில் இருந்து அவள் வாய்க்குள் சரித்தான்.

ஐ ரொம்ப நன்னாருக்கே... என்று அவன் தொப்பையில் குத்தினாள் அம்மா!

அந்தக் குழந்தைக்கு இதைப்போல ஷூ வாங்கித் தந்தால் என்ன என்று திடீரென்று தோணியது.

பெத்தவள் ஆச்சர்யப்பட்டுப் போனாள். ஒரு தயக்கத்துடன் வேணாங்க, என்றாள். உங்களுக்கு இல்ல, குழந்தைக்கு... என்றான் புன்னகையுடன். என் புன்னகையை உன்னால் உதறிவிட முடியுமா பெண்ணே, என்கிற சவாலுடன்.

ரொம்ப விலை இருக்குமே, என்றாள் மீண்டும்.

சிரிப்புக்கு விலை கிடையாது, என்றான். நன்றி. நான் பக்கத்து வீட்டில் இருந்து நம்ம கிருஷ் நடக்கிற சத்தத்தைக் கேட்டுட்டே இருப்பேன், என்று குழந்தைக்குக் கையாட்டிவிட்டு வந்தான்.

அம்மா ஞாபகம் வந்திருந்தது. ஓட்டமும் சாட்டமுமாய்த் தெருவில் விளையாடிவிட்டு வந்தவனை ட்ரௌசரைக் கழற்றி அம்மணமாய் நிற்க வைத்து மேலே தண்ணீர் ஊற்றி குளிரக் குளிரக் குளிப்பாட்டும் அம்மா. அந்தக் குளியலுக்காகவே இன்னொரு முறை புழுதியில் ஆடலாம் போலிருக்கும்.

அம்மா ஒருநாள் இறந்து போனாள். காலேஜ் ஹாஸ்டலுக்கு செல்ஃபோனில் செய்தி வந்து அடுத்த ரயிலில் ஓட வேண்டியிருந்தது. கடைசியில் உன் பேரைத்தாண்டா சொல்லிட்டிருந்தா, என்று அண்ணன் சொன்னபோது அழுகை வந்தது. கிட்டே போய் அம்மா, என்று கூப்பிட்டால் எழுந்து விடுவாள் போலத்தான் இருந்தது.

அப்பா சற்று ஸ்தானம் பார்க்கிறவர். அம்மா சட்டென்று குழந்தைகளுடன் கரைந்து விடுவாள். பையன்களுடன் சேர்ந்து கதற முடியாதவராய் அப்பா அங்கே நின்றிருந்தது பரிதாபமாய் இருந்தது.



கீச் கீச்சென்று நடந்து வந்தது கிருஷ். கையில் சிறு கிண்ணம். எதோ இனிப்பு போல. அம்மா தந்தனுப்பியிருந்தாள். சிமென்ட் வராண்டாவில் அது கால்ச்சத்த திகட்டலும், கிண்ணத்தைக் கீழே போட்டு விடாத அதிக எச்சரிக்கையுடனும் நடந்துவர வேண்டியிருந்தது. பின்னாலேயே வந்தாள் அம்மா.

அடேடே உள்ள வாங்க, என்று கூப்பிட்டான். தனியறை. பிரம்மச்சாரி அறை, அப்டி இப்டிதான் இருக்கும், என்றான் புன்னகையுடன். குனிந்து குழந்தையிடம் கிண்ணத்தை வாங்கி ஒரு சாக்லெட் உறையைப் பிரித்து தன் வாயில் போட்டுக்கொள்வதாய்ப் போக்குக் காட்டியபோது குழந்தை முகம் மாறியதை ரசித்தான்.

டேய் அன்க்கிளுக்குக் குடுக்கணும்டா, என்று இன்னொரு உறையைப் பிரித்து அதன் கையில் தந்து அவன் வாயில் போடச்சொன்னாள் அவள்.

நானாம், நேக்கு, என்றது குழந்தை. சிரித்தார்கள்.

அசட்டுக் குட்டி, அங்கிள்தானே உனக்கு ஷூ வாங்கித் தந்துர்க்கா, என்றாள் அம்மா. அது கால்களைப் பார்த்துக் கொண்டது. திரும்ப நடக்க ஆசைப்பட்டது அது.

இவன் அப்பா எங்க வேலை பார்க்கிறார், என்று பொதுப்படையாய்ப் பேசிக் கொண்டார்கள்.

நான் டிசியெஸ்ல வேலை பார்க்கிறேன். இப்பதான் புதுசு. நாங்கல்லாம் மதுரைப் பக்கம். திருவாடானை...

அவர்கள் போன பின்னும் ரொம்ப நேரம் அந்த ஷூ சத்தம் அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.

அன்றிரவு அம்மா ஞாபகம் வந்து கொண்டேயிருந்தது. அம்மாமுன் குழந்தையாய் உணர்வதே அற்புதமான அனுபவம். கல்லூரியில் சேர்க்க அப்பாதான் வந்தது. அம்மா அவன் கிளம்பும்போது அழுவாள் என எதிர்பார்த்தான். ம், என ஒரு வார்த்தையுடன் தலையாட்டினாள். நல்லாப் படி, என்ன? - என்றாள். ரைட்.

அப்பா முன்னால் தோணாதது சட்டென்று தோணியது. அம்மா, அப்பா ரெண்டு பேரும் நில்லுங்க, நமஸ்காரம் பண்றேன்...

பக்கத்து வீட்டுத் தூளியில் அசைவு தெரிந்தது. குழந்தை ஒண்ணுக்குப் போய் ஈரத்தில் லஜ்ஜைப் பட்டிருக்கலாம்... தூளி அசைந்து மேல்கொண்டியின் கிறீச், சிறிய இடைவெளியில் திரும்ப இன்னொரு கிறீச் கேட்டது. தூளி ஆடிக் கொண்டிருந்தது. திரும்ப குழந்தை அழ ஆரம்பித்தது.

மெல்லிய குரலில் அம்மா தாலாட்டு பாடினாள். ஆயர்பாடி மாளிகையில்...

அந்தப் பாடலைக் கேட்டபடியே இவன் தூங்கிப் போனான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p21.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License