இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கந்தன் தருவான் எதிர்காலம்...!

விசாகன்


பல்கலைக்கழகம் தனக்குக் கொடுத்த சான்றிதழ்களை ஒவ்வொன்றாக தேடிப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள் இளவரசி. முறையே ஏழு வருட ஐந்து வருட பெண் குழந்தைகள், பெரியவள் இளவரசி கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்க, சின்னவள் அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏ பாப்பா கொஞ்சம் அமைதியாயிரு... அம்மா முக்கியமா தேடிக்கிட்டிருக்கேன்ல?”

குழப்பமும் பயமும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியும் இளவரசி மனதில் அழுத்திக் கொண்டிருந்தது. உடல் எடையே இல்லாத மாதிரி லேசாக இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. அவயங்கள் அதன் போக்கில் போவது போல் உணர்ந்து கொண்டிருந்தாள்.

“கவலப்படாத தாயீ... நானிருக்கன்ல?” அப்பா சொன்னது நினைவிருந்தாலும், வயதானவரால் என்ன செய்து விட முடியும் என்ற கலக்கம் இவளை ஏதேதோ நினைக்கச் செய்தது.

“உள் பீரோலதான வச்சேன்னு சொன்னாரு...”

“பிளஸ்டு சர்டிபிகேட் மட்டும் இருக்கு, டிகிரி சர்டிபிகேட்ட காணமே...” எரிச்சலோடுதேடினாள்.

சின்னவள் பால் கேட்க, அப்படி அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு“பாப்பா எதையும் தொட்ராத” என்றுபெரியவளிடம் சொல்லி விட்டுப் பாலைக் காய்ச்சிச் சின்னவளுக்குக் கொடுத்துவிட்டுப் பெரியவளைப் பார்த்து“தோச சாப்பிர்ரயாடீ?” என்றாள்.

“ம்... சட்னி வேணா... ஜாம் போட்டுக்குடு... இல்ல இல்ல சாஸ்போட்டு... இல்ல இல்ல... ம்... ரெண்டும் போட்டுக் குடு”

கொசுவர்த்தி லிக்யுட்டை பொருத்தி பாய் தலகாணியை விரித்து இருவரையும் படுக்க வைத்தாள். “ஏழுமணிக்கே ரெண்டுந்தூங்கிருச்சுக...” “நடுராத்திரி எந்திருந்சுக்குட்டு தொல்ல பண்ணப் போதுக...” என்று நினைத்தபடியே தன் தேடல் படலத்தைத் தொடர்ந்தாள்.

சர்டிபிகேட்டுகளை எடுத்துக் கொண்டு போய் அருகில் உள்ள கண் மருத்துவமணையில் காண்பித்து ஆபீஸ் அசிஸ்டண்ட் வேலை கேட்க வேண்டும். நாலாயிரம் சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார்கள். இப்போதைக்கு இதை வைத்து ஒப்பேத்த வேண்டும், மற்றபடி பின்னர் யோசித்துக் கொள்ளலாம், உடனடியாக ஏதாவதுவேலைக்குப் போவதே உசிதம் என்று நினைத்தாள் இளவரசி. வீட்டில் வேறுகாசுஇல்லை, ஆனால் வங்கியில் அவர் பேரில் பணம் இருக்கிறது என்றாலும் உடனடியாக எடுக்க முடியாது.

“இப்பதான படுத்தா? அதுக்குள்ள படுக்கையிலேயே உச்சா போயிட்டாளா?”

“படுக்குமுன்ன உச்சா போயிட்டு படுரின்னா கேக்குறாளா?” சின்னவளுக்குத் துணியை மாற்றிவிட்டு ஈரம் இருக்கும் இடத்தில் துண்டை விரித்து மீண்டும் படுக்க வைத்தாள்.

“சர்டிபிகேட்ட எங்க வச்சுருப்பாரு?” அலமாரி மேலிருந்த சூட்கேசை எடுத்துத் திறந்துஒவ்வொன்றாய் அள்ளிப் போட்டாள். பெரியவள் பிறந்த போது அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோ தென்பட்டது. நினைவலை பின்னோக்கி பாய்ந்தது. விழிகளில் கண்ணீர் முன் நோக்கிப் பொங்கியது. தலையைத் தூக்கிக் கண்களை மூடினாள், கன்னத்தில் விழ வந்த கண்ணீர் இமை மூடியதால் துண்டாகித் தெறித்து இவள் பாதத்தில் விழுந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டாள். சத்தமில்லாமல் அழுவதையும் தேடுவதையும் தொடர்ந்தாள்.

“இளவரசீ... இளவரசீ...”

“எங்கம்மா இருக்க?”

“உன்னைய பாக்க வந்திருக்காங்கம்மா உங்க வீட்டுக்காரரோட ஆபீசிலருந்து...” பக்கத்து வீட்டுப் பெண் கதவை தட்டினாள்.

“ஆங்... இத வர்ரேங்க்கா... ” கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்.

“வாங்க, வாங்க. உக்காருங்க” என்றாள்.

“இருக்கட்டும்ங்க” நான்கு பேரும் அமர்ந்தார்கள். சற்று நேரம் அமைதி காத்த பின் “திடீர்னுஇப்டியாகும்னுநெனக்கல.. ரொம்ப சூட்டிகையான ஆளு... எல்லாத்துக்குமே சங்கடமாப் போச்சு...” என்று ஆரம்பித்தார் ஒருவர்.



ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் துக்கத்தைத் தூண்டுகிறார்களே என நினைத்தாலும் அவர் சம்மந்தமான பிஎப் மற்றும் இதர விசயங்கள் குறித்து அறிய வேண்டுமே என்பதால் முகத்தில் எந்த ரியாக்சனுமின்றி டிவி ஸ்டேண்ட் அருகே நின்று கொண்டிருந்தாள் இளவரசி. யார் ஆறுதல் சொன்னாலும் அவளுக்குத் துக்கம், பயம் அதிகரித்துக் கொண்டுதான் போனதே தவிர குறைந்தபாடில்லை. குழந்தைகள் ஸ்கூல், வீடு உள்ளிட்ட அனைத்து விசயங்களுக்கும் பல ஐடியாக்களைச் சொன்னார்கள்.

“வேலையில இருக்கும் போது இப்டியானதுனால பிஎப் பணத்தோடு அதுக்குஞ் சேத்து மூனுலட்சம் சொச்சம் கைல கெடைக்கும்மா…” “ஆனா நம்ம கம்பெனில பென்சன் கிடையாதுன்னுஉனக்குத் தெரியும்னுநெனக்கிறேன்...” என்றார் மேனேஜர்.

“ஆங்...தெரியுங்க...” இந்த பணத்த மட்டுங் கொஞ்ச சீக்கரமா...

“பத்தே நாள்ள அவர் அக்கவுண்டல் ஏறிரும்மா...”

“லீகல்ஹேர்ஸ் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்துப் பணத்த நீ எடுத்துக்கலாம்மா...” இடைமறித்தார் மேனேஜர்.

“எதுன்னாலும் எங்கள காண்டக்ட் பன்னும்மா” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

உள்ளபடியே ஆறுதலடைந்தது போல முகபாவத்தை அவர்களிடம் காண்பித்து, அவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பினாள் இளவரசி. தன் வாழ்க்கையின் உன்னதத்தை, பற்றிக் கொண்டிருந்ததை, அதுவே எல்லாம் என்றிருந்ததை இழந்தவர்களுக்கு எது ஆறுதலாக இருக்க முடியும்? இழந்ததை இனி ஒரு போதும் பெறமுடியாது... தன்னுடைய இரண்டு பிள்ளைகள் முகங்களில் அதைக் காணமுடியும், அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் மட்டுமே அதை அவள் காணமுடியும். என்னையே மயக்கும் எனது முப்பத்திரண்டு வயது உடலமைப்பு இனி மற்றவர்களுக்கு வேலி இல்லாத பயிராகப் பார்க்கத் தோன்றும் நிலையாகி விட்டதே, உதவி என்ற பேரில் இந்தப் பயிரை அசைத்துப் பார்க்க, சுவைத்துப் பார்க்க வரப்போகும் தொந்தரவுகளை எண்ணி அஞ்சும் நிலை வந்துவிட்டதே. இனி எந்தெந்த விதத்தில் சிரமப்படப்போகிறோமோ என்ற எண்ணத்திலேயே அவள் மனம் போய்க் கொண்டிருந்தது. இவள் கல்லுரித் தோழி சொன்ன புதிய துணை யோசனை என்பதுபேச்சுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும், நடைமுறைக்குப் பொருந்துமா? இன்னும் இருபது நாட்கள்கூட கழியவில்லையே, அதற்குள் ஏதேதோ நினைப்பு வருகிறதே? புலம்புகிறேனே... ஐயோ... கடவுளே எனக்கு ஏன் இந்த நிலை வர வேண்டும், பிள்ளைகளை நினைத்தால் என் உடம்பு நடுங்குகிறதே...



தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள், கோடி மலர்களைக் கொட்டியது போல் இருந்தது அவளுக்கு. இதமாய் உணர்ந்தாள், சின்னவள் தூக்கத்தில் சிரித்தாள், இளவரசி துக்கத்தில் சிரித்தாள்.

வாஷ் பேசனில் குனிந்து முகத்தைக் கழுவி, வயிற்றுப் பகுதியில் படர்ந்திருக்கும் நைட்டியைத் தூக்கிப் பிடித்து முகத்தை துடைத்து விட்டுச் சூட்கேசை பெட் மீது வைத்து மீண்டும் சர்டிபிகேட்டை தேடத் துவங்கினாள்.

“எங்க இருக்கும்….?” தேடிக் கொண்டே தூங்கிப் போனாள்.

பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, இருக்கின்ற சர்டிபிகேட்களை எடுத்துக் கொண்டு முதலில் போவோம், டிகிரி சர்டிபிகேட் அம்மா வீட்டில் இருக்கிறது என்று சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து தோழிக்குப் போன் செய்தாள் இளவரசி.

“அஞ்சுமணிக்கு டூட்டி முடிஞ்தசும் நா அங்க வந்திர்ரேன்... நீ ஒரு ஆறு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்திரு...” என்றாள் தோழி.

அவள் என்ன உற்சாகமாய்ப் பேசுகிறாள், ஒவ்வொரு வார்த்தையிலும் என்னமாய் துள்ளல் வெளிப்படுகிறது... ஆனால் என்னை அறியாமலேயே என் குரல் உள் வாங்கிக் கொண்டதே... எந்த வார்த்தை பேசினாலும் கெஞ்சும் தொனியிலேயே பேசுகிறேனே... ஏன்? அவரே கதியாய் கிடந்ததால் இனி உனக்கு எவருமில்லை என்ற உள்ளுணர்வினாலோ? கட்டியவன் இருக்கிறான், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்று அவனையே சார்ந்திருந்தது குற்றமா? எதையும் எதிர்பார்த்தே வாழ முடியுமா? குழப்பம் வரும் போதெல்லாம் பிள்ளைகளிருவரின் சிரிப்பை நினைத்தே அமைதிப்பட்டாள். ஆறு மணி ஆவதற்குள் ஆறு வருசமானது போலிருந்தது. ஸ்கூலிலிருந்துவந்த பிள்ளைகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

“என்ன லேட்டாயிருச்சா?” என்றாள் தோழி.

“அதெல்லாமில்லை... நானே இப்ப அஞ்ச நிமிசத்துக்கு முன்னதான வந்தேன்”

“நீ இங்கருக்குற ரிசப்சன்ல ஒக்காரு... நா உள்ள போயி என்னோட பிரண்ட பாத்துக் கேட்டுட்டு வந்துர்ரேன், சரியா?” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

“யாரு... இளவரசியா தங்கம்? நல்லாயிருக்கியா தங்கம்?”

“கேள்விப்பட்டேம்மா... பிள்ளைக எல்லாம் எப்பிடி இருக்குக?” என்றாள் கண் செக்கப்புக்கு வந்த இவள் அம்மாவின் சினேகிதி கமலா.



“ம்... நல்லாயிருக்காங்கம்மா...” துக்கம் தொண்டையை அடைத்தது இளவரசிக்கு. அழுகையை அடக்க முடியவில்லை. திடீரென்று கரண்ட் கட்டாகி விட்டது. அனைவரும் இருட்டில் அமர்ந்திருந்தார்கள். இவர்களிருவரும் காற்றாட வெளியில் வந்து நின்றார்கள்.

“பிள்ள பெறக்காத வீடு இருக்கு தங்கம்... ஆனா சாவு விழுகாத வீடிருக்கா தங்கம்? எங்கவீட்டுல அவர் செத்து போனப்ப நா மட்டும் மலச்சிருந்தா எம் புள்ளைகளைக் கர சேத்திருக்க முடியுமா? எதையும் ஏத்துக்குற பக்குவத்த வளத்துக்கனுந் தங்கம்... கவலப்படாத தங்கம்… எல்லாஞ் சரியாயிடும்”

இளவரசி மனம் லேசானது. எத்தனையோ பேர் ஏதேதோ சொன்னதில் கிடைக்காத ஆறுதலை கமலாம்மா சொன்ன வார்த்தையில் உணர்ந்தாள்.

மின்இணைப்பு வந்தவுடன் பளிச் பளிச்சென டியூப் லைட்டுகள் எறிந்து வெளிச்சத்தினைப் பாய்ச்சின. அருகிலிருந்த பீடா கடையிலிருந்த ரேடியோ பாடிய பாட்டு இவள் காதுக்குத் துல்லியமாகக் கேட்டது.

“வரும் காற்றினில் அணையா சுடர்போல... இனி கந்தன் தருவான் எதிர்காலம்... கந்தன் தருவான் எதிர்காலம்... எனக்கும் இடம் உண்டு... அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில், எனக்கும் இடம் உண்டு...”

வீட்டில் சர்டிபிகேட் வைத்திருந்த இடம் நினைவுக்கு வந்த அதே நேரத்தில் தோழியின் அழைப்பும் வந்தது. பையை தூக்கிக் கொண்டு நடந்தாள் இளவரசி. நடையில் அவளுக்கே புதிய தெம்பு தெரிந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p215.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License