இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

மனசாட்சி

மு​னைவர் சி.​சேதுராமன்


வீட்டின் முன்னால் இருந்த திண்​ணையில் முகம் வாடிப்​போன நிலையில் இருந்தான் கதி​ரேசன். அவனுக்கு என்ன ​செய்வ​தென்​றே ​தெரியவில்​லை. மனம் குறுகுறுத்துக் ​கொண்​டே இருந்தது. ​மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் ​கொண்டிருந்தான். வாழ்க்கையில் முதன் முதலாக, மனசாட்சிக்கு எதிராகச் செய்த ஒரு செயல். ஆமாம், மகத்தான தவறு. ஆனால் யாருக்குமே அது தெரியாது. யாரும் அவனைக் குறை கூற முடியாது. அவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செய்த குற்றம். அவனாக வாயைத் திறந்து சொன்னாலொழிய ஒரு ஈ எறும்புக்குக் கூடத் தெரியாது. அப்படி ஒரு குற்றத்தைச் செய்து விட்டாலும் மாட்டிக் கொள்வோம் என்கிற பயமே கதி​ரேசனுக்கு இல்லை. அவன் தைரியமாக இருந்தான். இருந்தாலும் அவன் மனம் உறுத்திக் ​கொண்​டே இருந்தது.

பக்கத்துத் ​தெருவில் இருந்த ராமாயி அம்மா இறந்துவிட்ட ​செய்தி​யை அவன் ​கேள்விப்பட்டதிலிருந்து அவனுக்கு இருப்புக் ​கொள்ளவில்​லை. இறந்து​ போன ராமாயி அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள், மூன்று மருமகள்கள், பேரன் – பேத்திகள் என்று ஒரு குறையுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கணவனை இழந்த பின்னரும் தன்னம்பிக்கை தளராமல் தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்துப், படிக்க வைத்து, ஆளாக்கி, தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருக்கும் ராமாயி அம்மாள் அந்த ஊருக்​கே ஓர் அதிசயம்தான். கதி​ரேசனுக்கு அவர்கள் வீட்டில் அனைவரிடமும் நல்ல விதமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆமாம், அவனுடைய அப்பா காலத்திலிருந்து அவர்கள் குடும்ப நண்பர்களாக அந்தக் குடும்பம், பல காலமாகப் பழகி வந்தது.

ராமாயி அம்மா ​பெறாத பிள்​ளையாக​வே கதி​ரேசன் இருந்தான். அந்த அளவிற்கு அந்தக் குடும்பத்துடன் ஒன்றிவிட்டான். நல்லது ​கெட்டது என்று அ​னைத்திலும் இவன் இல்லாது அந்த விட்டில் ஒன்றும் நடக்காது. ஒருநாள் அந்த ராமாயி அம்மா, அவனைக் கூப்பிட்டு, “டேய் கதி​ரேசா, ஒன்னை நம்பி, ஒங்கிட்ட ஒரு வேலையைக் கொடுக்கப் போறேன், செய்வியா?” என்றாள்.



கதி​ரேசனுக்கு ஒன்றும் புரியவில்​லை. சரி என்ன​மோ ​சொல்லாறாங்க ​கேட்டுத்தான் பார்ப்​போம் என்று மனதிற்குள் நி​னைத்துக் ​கொண்டு, “அதுக்கென்னம்மா, செய்யறேன். சொல்லுங்க” என்றான் கதி​ரேசன்.

அந்தக் குடும்பத்தில் யாருக்குமே தெரியாமல் ஒரு லட்ச ரூபாயி​னைக் கதி​ரேசனின் ​கையில் ​கொடுத்து அதை யாருக்கும் தெரியாமல் வங்கியில் அவளு​டைய பேரில் போடச் சொன்னாள் ராமாயி. அவனை நம்பி பணத்தை ஒப்படைத்தாள். பணத்​தை வாங்கிய கதி​ரேசன் எதற்கு என்பது​போல் ராமாயி அம்மா​ளைப் பார்த்தான்.

அவனின் பார்​வையில் ​தெரிந்த ​கேள்வி​யைப் புரிந்து ​கொண்ட அந்த அம்மாள், “இங்க பாருப்பா… நான் இறந்து ​போயிட்​டேன்னா ஏம்பிள்ளங்க கஷ்டப்படாம என்னத் தூக்கிட்டுப் ​போயி அடக்கம் பண்ணணும். என்​னோட அந்திமச் ​செலவுக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுப்பா… இது ஒனக்கும் எனக்கும் மட்டும்தான் ​தெரியணும். ​வேற யாருக்கும் ​தெரியக் கூடாது. நான் இறந்து ​போன பிறகு நீ ஏம்பிள்ளகள் கிட்டச் ​சொல்லிரு..” என்று கூறினாள்.

ராமாயி அம்மாள் அதுவரை யாரிடமும் கையேந்தாமல் கௌரவமாக வாழ்ந்து விட்டாள். தன்னு​டைய இறுதிக் காரியங்களுக்குக் கூட பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது. இப்பணம் அப்போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தில் ராமாயியம்மாள் அவளுடைய கணவனுக்கு வந்த பென்ஷன் பணத்தில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம். அவள் கணவன் இறந்த பின் வந்த குடும்ப ஓய்வூதியத்தி​னை ​வைத்துக் ​கொண்டு சிறுசிறு ​வே​​லைக​ளையும் ​செய்து அந்தக் குடும்பத்​தை நிமிரச் ​செய்தாள். இன்றுவ​ரை அவள் திருப்தியாக அவளது கட​மைக​ளைச் ​செய்துவிட்டாள். கதி​ரேசன் நீட்டிய வங்கிக் காகிதங்களில் நம்பிக் கையெழுத்திட்டாள் ராமாயி அம்மாள். அப்போது கூட கதி​ரேசன், மனிதனாகத்தான் இருந்தான்.



ஆனால் எப்போது அவன் மூளைக்குள் சாத்தான் புகுந்ததோ தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போடாமல் தன் வீட்டிலே​யே கொண்டுபோய் வைத்துவிட்டான் கதி​ரேசன். அது வரை மனிதனாக இருந்த கதி​ரேசனின் மூளைக்குள் ஓர் எண்ணம். ராமாயி அம்மா இந்தப் பணத்தை நம்மிடம் கொடுத்தது யாருக்குமே தெரியாது. இதை அப்படியே அமுக்கிவிட்டால் என்ன? எந்தக் காலத்தில் தன்னால் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்று அவன் காதுகளுக்குள் சாத்தானின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தச் சாத்தானின் குரலுக்குக் கதி​ரேசன் செவி சாய்த்தான். தீயதைச் செய்யும் போது, தீய சக்திகள் உதவும் என்பது எவ்வளவு உண்மை. அவன் மனத்துக்குள் சாத்தான் புகுந்து, அவனை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.

ராமாயிஅம்மாள் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள். பிள்​ளைக​ளைக் கூட நம்பாமல் ​பெறாத பிள்​ளையாகிய கதி​ரேச​னை இவள் நம்பினா​ளே...! அவள் வைத்திருந்த நம்பிக்கை இப்படி ஒரு கீழ்த்தரமான செயலுக்குத் தன்னை ஆளாக்கும் என்று ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் குடும்பத்தாரோடு பழகுவதைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. காலம் கடந்த ஞானோதயம். அவன் மேலேயே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. கதி​ரேசனின் செயலுக்கு உதவுவது போல் திடீரென்று யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லாமலே இருதயத் தாக்குதலினால் பணம் ​கொடுத்த அன்று இரவே இறந்து போனாள் ராமாயி அம்மாள். அப்பாடி அந்த ராமாயி அம்மாளும் இறந்து போயாச்சு. இனி தான் செய்த அந்தக் காரியம் யாருக்குமே தெரியாது. கதி​ரேசனுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

செய்தியி​னைக் கேள்விப்பட்டு கதி​ரேசன் ராமாயி அம்மாவின் வீட்டுக்குப் ​போனான். அவ​னைக் கண்ட ராமாயி அம்மாளின் மகன்கள் அ​னைவரும் வந்து கட்டிப் பிடித்து அழுதனர். ​அந்த அம்மாவின் மூத்த மகன் அவனது ​கைக​ளைப் பிடித்துக் ​கொண்டு அழுது ​கொண்டிருந்தார்.

ராமாயி அம்மாளின் இரண்டாவது மகன், “இப்போ அம்மாவோட காரியங்கள் நடத்தப் பணம் வேணும். என்ன கஷ்டப்பட்டாலும் நாங்க மூணு​பேரும் பங்கு போட்டுக்கிட்டுச் செய்வோம்…” என்று அருகிலிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தது அ​னைவரின் காதுகளிலும் விழுந்தது.

“கதி​ரேசா, ஒன்னைப் பத்தி அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ‘கதி​ரேசன் என் வயித்திலே பொறக்காத இன்னொரு மகன்’னு” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு பெருமூச்சு விட்டார் மூத்த மகன். இந்தச் சொற்களைக் கேட்டதும் கதி​ரேசன் மனத்தில் இருந்த சாத்தான் இறந்து போனது. அவன் மன​தை யா​ரோ சம்மட்டி ​கொண்டு அடிப்​ப​தைப் ​போன்றிருந்தது. அவனது மனதில் ராமாயியம்மாள் உயிரோடு உலவத் ​தொடங்கினாள்.



கதி​ரேசன் அவனையும் அறியாமல், “நீங்க யாரும் கடசீ வரை கஷ்டப்படக் கூடாதுன்னு நேத்திக்கிதான் என்கிட்ட ஒரு லட்ச ரூபாயைக் குடுத்து அவங்களோட கடைசீ செலவுக்கு வெச்சிக்க சொன்னாங்க. அதுக்குள்ளே இப்பிடி நம்மையெல்லாம் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டாங்களே… அம்மா” என்று அழுதபடி கதி​ரேசன், ராமாயி அம்மாளின் உடலுக்கு அருகில் ​சென்று அவளது கால்கள் தன் தலையில் படுமாறு வைத்துக்கொண்டு, “அம்மா.. அம்மா..” என்று குலுங்கிக் குலுங்கி அழுதான் கதி​ரேசன்.

அவன் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கிற்று. அவன் மனதிற்குள் இருந்த பாரமும் உறுத்தலும் இருந்த இட​மே ​தெரியவில்​லை.

“நல்லவர்க் ​கெல்லாம் சாட்சிகளுண்டு ஒன்று மனசாட்சி… அது ​தெய்வத்தின் சாட்சியம்மா… அதுதான் உண்​மைக்கும் சாட்சியம்மா…” என்ற கண்ணதாசனின் பாடல் டி.எம்.எஸின் குரலில் வா​னொலிப் ​பெட்டியிலிருந்து காற்ற​லையாக மிதந்து வந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p217.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License