இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

மந்தரையின் மனம்

மு​னைவர் சி.​சேதுராமன்


எங்கும் அ​மைதி. ஆற்றங்க​ரையின் ஓரம் மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் ​கொண்டிருந்தன. அதிகா​லைப் ​பொழுதின் அந்த அ​மைதி​யைக் கிழித்துக் ​கொண்டு சரயு ஆறுமட்டும் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை. பற​வைகள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப் பொழுது. ஆற்​றை ஒட்டிய குடிசையின் சாளரத்தின் வழியாக ஒரு முகம் வெளியே எ​தை​யோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

சுருக்கம் நிறைந்த அந்த முகம், மந்தரையினுடையது. சுருக்கம் விழுந்து காலம் என்னும் பேராற்றில் எதிர் நீச்சல் போட்டுக் களைத்துச் சலித்து... இன்னும் புரியும்படி சொல்வதானால் அம்முகம் கூனியுடையது. குழி விழுந்த அந்தக் கண்கள் பரதன் அவன் ஆசிரமத்திலிருந்து வருவதைப் பார்த்து பிரகாசம் அடைந்தன. அதிகா​லை நேரத்திலேயே குளித்து முடித்து, இ​றை வழிபாட்டிற்காகப் போய்க்கொண்டிருந்தவனைப் பார்த்துப் பெருமிதத்தால் மந்த​ரையின் மனம் பூரித்துப்போனது.

வீரமும் கருணையும் ஒருங்கே பெற்றவன் அல்லவா இந்தப் பரதன்? ​பெரியவர்க​ளை மதிப்பதில் எவ்வளவு உயர்வானவன். அவ்வளவு பணிவு; அவ்வளவு அடக்கம். கைகேயியின் மகன் வேறு எப்படி இருப்பான்? அவள் மனம் பரதனை விட்டுக் கைகேயியிடம் தாவியது. கைகேயியைப் போல ஒரு நல்ல, திற​மையான பேரரசியை இந்த அ​யோத்தி மட்டுமல்லாது பரதகண்ட​மே பார்த்திருக்குமா என்பது சந்தேகம் தான். அவளும் ​கை​கேகியும் அறிமுகமான அந்த நா​ளை மந்த​ரையால் மறக்க முடியுமா? மறக்கக் கூடிய நாளா அது? இன்னும் அந்த நாள் மந்தரையின் மனத்தில் பசு​மையாக நிழலாடியது.

அப்போது மந்தரை இள​மையின் வாசலில் நின்ற பருவம். கேகய நாட்டின் ஒரு நந்தவனத்தில் தன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு, குழப்பமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைப் பெண்கள் விளையாடும் சத்தம் கலைத்தது. ஒன்பது அல்லது பத்து வயதில் தங்கப் பதுமையாக பந்தாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைதான் இளவரசி கைகேயி என்று அவர்கள் பேச்சின் மூலம் மந்தரை அறிந்தாள். அவளும் விளையாட்டை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஒரு பெண் அடித்த பந்து மந்த​ரையின் பக்கம் வர, அதை எடுத்து வைத்துக்கொண்டாள். ​கை​கேயியின் தோழிகளில் ஒருத்தி ஓடி வந்து, “ஏ கூனி, என்ன விளையாட்டு இது? மரியாதையாகப் பந்தைக் கொடுக்கிறாயா? இல்​லையா...?” என்று மிரட்டினாள். மந்த​ரைக்கு முகம் சுண்டிப் போனது. அந்தச் சிறு​பெண் ​திட்டியதற்காக அவள் வருந்தவில்​லை. மாறாக அவ​ளது கூன் விழுந்த முது​கைப் பார்த்து, “ஏய்... கூனி...” என்றா​ளே அந்தச் ​சொல்தான் அவளது உள்ளத்​தைப் பாடாய்ப்படுத்தியது. அவள் தனது வருத்தத்​தை ​வெளிக்காட்டாது பந்தை அந்தப் ​பெண்ணிடம் கொடுத்தாள்.



சிறு​பெண்கூட ​கேலி ​செய்யும் அளவிற்குத் தனது நி​லை இருக்கின்ற​தே... என்று அவள் வருத்தப்பட்டுக் ​கொண்டிருந்த​போது கைகேயி ஓடி வந்து, “ஏய் மந்தாகினி! என்ன ​பேச்சு இது? ​பெரியவர்க​ளை மரியா​தையின்றிப் ​பேசலாமா? பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உனக்குத் தெரியாதா...?” என்று கேட்டுவிட்டு மந்தரையின் பக்கம் திரும்பி “பெண்ணே நீ யார்? ஏன் இங்கு இப்படி தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அன்​பொழுகப் பேசி, அவளைப் பற்றி அறிந்துகொண்டு, மந்த​ரைக்கு அடைக்கலம் அளித்தாள். அது மட்டுமல்லாது மந்த​ரை​யைத் தன் உயிர்த்தோழியாகவும் ஆக்கிக்கொண்டாளே! அவளல்லவா மகாராணி. இந்தக் குணம் யாருக்கு வரும்? ஏதுமற்று ஏங்கி அழுது ​கொண்டிருந்தவ​ளுக்குப் புகலிடம் ​கொடுத்து வாழ்க்​கை ​கொடுத்த ​கை​கேயியின் மனம் உயர்ந்ததல்லவா? எல்லா உறவுகளுமா இறுதி வ​ரைக்கும் வந்துவிடுகின்றது? சில உறவுகள் மட்டு​மே இறுதி வ​ரை வருகின்றது. அதிலும் இந்த நட்பு இருக்கின்ற​தே அது உற​வை விட ​மேலானது. வாழ்வின் இறுதி மூச்சுவ​ரை நம்​மோடு நட்பு பயணிக்கின்றது. ​கை​கேயிக்கும் எனக்குமுள்ள இந்த நட்பு இந்த ​ஜென்மத்தில் முடியாது. அது ​ஜென்ம​ஜென்மத்திற்கும் ​தொடர்ந்து வந்து​கொண்​டே இருக்கும்... என்று அந்தநா​ளை மந்த​ரை அ​சை​போட்டுக் ​கொண்டிருந்தாள்.

மந்த​ரை கைகேயியோடு மனம்விட்டுப் பேசி, பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பேசவா? ஒரு பார்வை, ஒரு புன்னகை? ம்ஹூம்!! இப்போதெல்லாம் அது கூட இல்லை. ஹூம்! இந்தப் பாழும் அரசியல்! எப்படி எல்லாம் மனிதர்க​ளை மாற்றிவிடுகின்றது. எல்லாம் நம் ​நேரம் என்று எண்ணியவளாய் தன்னை மீறிய பெருமூச்சொன்றை உதிர்த்தாள் கிழவி.

அப்​போது குடிசையின் கதவைப் படீரென்று திறந்துகொண்டு வெள்ளமென உள்ளே நுழைந்தாள் கயல்விழி. மந்தரைக்கு உதவியாக இருக்க ​கை​கேயிதான் அவ​ளை நியமித்திருந்தாள்.

“ஏய் கூனி, விஷயம் தெரியுமா உனக்கு? ஸ்ரீராமர் பதினான்கு வருட வனவாசத்தை முடித்துக்கொண்டு, இலங்கை அரசன் இராவணனையும் வென்று, அயோத்தி திரும்புகிறாராம். இந்த நல்ல செய்தியை அவரின் தூதர் வானர வீரர் அனுமான் என்பவர் வந்து தெரிவித்திருக்கிறார். நாளை பொழுது சாயும் நேரம் அவர்கள் அ​னைவரும் வந்துவிடுவார்களாம். இப்போது என்ன செய்வாய் கிழவி?” என்று எகத்தாளமாகக் கேட்டாள்.

அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மந்தரையின் காதில் அமுதத் துளிகளாய் விழுந்தன. இராமன் வருகிறானா? பதினான்கு ஆண்டுகள் அவ்வளவு சீக்கிரத்திலா ஓடிவிட்டன? என்று சிந்தனையில் மூழ்கிய மந்தரையை, “அடுத்த சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டாயா கூனி? ஸ்ரீராம​ரை மீண்டும் பழிவாங்க நி​னைக்கின்றாயா...? என்ற கேள்வியுடன் கலைத்தாள் கயல்விழி.

அப்போது அங்கு வந்த அவளின் தோழி “உனக்கென்ன கிறுக்கா பிடித்துவிட்டது? கூனியிடம் பேசிக்கொண்டு நிற்கிறாயே? சீக்கிரம் வா. நகரம் முழுவதிலும் தோரணங்கள் கட்டவும் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைக்கச் சொல்லவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வேலைகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி கயல்விழி​யை அழைத்துக் ​கொண்டுபோய் விட்டாள்.



தனித்து விடப்பட்ட மந்தரை, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

இராமன் வருகிறானா? குழந்தை சீதையும் உடன் வருவாள் அல்லவா? இவள் எதிர்பார்த்தபடி அவர்கள் மாறியிருப்பார்களா? காட்டிற்குச் சென்ற உடனே அவர்களுள் மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. யாரோ படகோட்டியாம், குகன் என்று பெயராம். அவனைத் தன் சகோதரனாகவே ஏற்றுக்கொண்டானாமே இராமன். இன்று அவனுடைய தூதனாக ஒரு வானர வீரனைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறானே. அது மட்டுமா? அவனுடைய படையில் கரடிகளும் கூட உண்டாமே.

எல்லாரும் நான் இராமனுக்கு அநீதி இ​ழைத்துவிட்டதாக​வே நி​னைக்கின்றார்கள்… என் மன​தை யாராவது புரிந்து ​கொண்டார்களா என்றால் கி​டையாது. நான் விரும்பும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி​யை காட்டுக்கு அனுப்பித் துன்புற நி​னைப்​பேனா? இந்தப் பதினான்கு ஆண்டுகள் என் மனம் எந்த அளவு துன்புற்றது என்று யாருக்காவது ​தெரியுமா? இராமன் படும் துன்பங்க​ளை நி​னைத்து நி​னைத்து என் மனம் அனலில் இட்ட ​மெழுகு​போல் உருகிய​தை யார் உணரப் ​போகிறார்கள். அ​னைவரும் கூனி ​பொல்லாதவள் என்றல்லவா கூறிக் ​கொண்டிருக்கிறார்கள்... என்ன ​செய்வது... என்று மனதில் எண்ணிக் ​கொண்டு த​ரையில் உட்கார்ந்தபடியே சிந்தனையால் காலத்தின் ஏடுகளைப் புரட்டினாள் மந்தரை.

அது ஒரு இனிய வசந்த காலம். இராமன் உள்ளிட்ட தசரதகுமாரர்கள் நால்வரும் அரண்மனை நந்தவனத்தில் விளையாட்டு அம்புகள் விட்டு பழகிக்கொண்டிருந்த பருவம். இராமனைப் போலக் குறி பார்த்துச் சரம் தொடுக்க யாராலும் முடியாது. அதிலும் மந்தரையின் வளைந்த முதுகில் அம்பு எய்வதென்றால் அவனுக்குத் தனி ஆனந்தம். இராமனின் அழகு ததும்பும் முகத்தைப் பார்க்கும் ஆசையில் ஒரு முறை மந்த​ரை இராமனின் அம்பை மறைத்து வைத்துவிட்டாள். இராமன் வந்து கேட்க, இவள் மறுத்தாள். உடனே அவன் “ஏ கூனி, அம்பைக் கொடுக்கப் போகிறாயா, இல்லையா? உன் அசிங்கம் பிடித்த முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது?” என்று வெறுப்பை உமிழ்ந்தான். அத​னைக் ​கேட்ட மந்த​ரையின் இதயத்தில் இரத்தம் வடிந்தது. அவள் வேதனையோடு அம்பைக் கொடுத்தாள்.

அ​தைப் பார்த்துக் ​கொண்டிருந்த சிறுவன் பரதன் ஓடி வந்து, “அண்ணா இன்று ஏனோ கோபமாக இருக்கிறார். இல்லையென்றால் இப்படிப் பேசவே மாட்டார். நீ ஒன்றும் தவறாக நினைக்க வேண்டாம்” என்று காயத்திற்கு மருந்திட்டுப் போனான். இராமனின் இத்தகைய போக்கு குறித்துக் கைகேயிக்கும் கவலை உண்டு. குருகுல வாசம் அவனை மாற்றி விடும் என்று நம்பினாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கைகேயி பல முறை இது குறித்து மந்தரையிடம் பேசியிருக்கிறாள். “என் இராமன் மிகச் சிறந்தவன் தான். அதில் ஐயமில்லை. ஆனால் எல்லா மக்களையும் சமமாக எண்ணும் மனப்பாங்கு இல்லையே. அரசனாக வேண்டியவன் அல்லவா அவன்? இப்போது அவனைக் கொண்டாடும் மக்கள், அவன் அரசனான பின் இந்தப் போக்கின் காரணமாக வெறுக்கத் தொடங்கிவிட்டால்? அத்தகைய நிலையை நினைத்தே பார்க்க முடியவில்லையே” என்று புலம்பியிருக்கிறாள். திருமணம் அவனுள் மாற்றத்தை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. சீதை உலகமறியா சிறு குழந்தையாகவே இருந்தாள். பரந்து விரிந்த நாட்டின் பேரரசியாகும் மனப்பக்குவம் அவளிடமும் இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தார் தசரதச் சக்கரவர்த்தி. இராமனுக்குப் பலவிதமான மக்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பி​னை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் அனுபவப் பாடம் பெறவும், வெறும் நகரம் மட்டுமே நாடு அல்ல, காடுகள், மலைகள், அவற்றில் வாழும் பல இனத்தைச் சேர்ந்த மக்கள் இவையெல்லாம் சேர்ந்தது தான் நாடு என்ற உண்மையை உணர்த்தவும் வேண்டும். அனுபத்தால் முதிர்வு ​பெற்ற இராமன் புடம்​போட்ட தங்கம் ​போன்றிருப்பான். அவ​னைக் காலம் பக்குவப்படுத்திவிடும். இராமன் அனுபவ அறி​வைப் ​பெறுவதற்கு என்ன வழி என்று மந்தரை கைகேயியோடு ஆலோசித்தாள். அதன் விளைவுதான், கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்.



எப்படியோ அயோத்திக்கு மிகச் சிறந்த அரசன் கிடைத்தால் சரி. கைகேயி வாழ வந்த நாடல்லவா? அந்நாடு மிகுந்த ​பொலி​வோடு இருக்க ​வேண்டாமா...? என்​னையும் ​கை​கேயி​யையும் இவ்வுலகம் என்ன​வேண்டு​மென்றாலும் நி​னைத்துவிட்டுப் ​போகட்டும். ஆனால் என் கண்மணி இராமன் எங்க​ளைப் புரிந்து ​கொண்டால் அது​வே ​போதும். கூனி​யை இராமன் சிறுவயதில் கூனில் அம்​பெய்து அவமானப்படுத்தினான். அதனால்தான் கூனி அவ​னைப் பழிவாங்கிவிட்டாள் என்று உலகம் தவறாக​வே கருதும். நான் என் இராம​னைப் பழிவாங்கு​வேனா? அவன் சிறுபிள்​ளை... அவ​னைப் பழிவாங்குவது என்​னை நா​னே பழிவாங்குவது ​போன்றதல்லவா? அனுபவம் ​பெற்று உல​கை ஆளும் அறிவிற் சிறந்தவனாக என் இராமன் விளங்க ​வேண்டும். அந்த அனுபவ அறி​வை இராமன் ​பெற​வே நானும் ​கை​கேயியும் இ​ணைந்து​செயல்பட்​டோம். ம்...ஹூம்...ம்... இ​தெல்லாம் யாருக்குப் புரியப் ​போகிறது... என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தாள் மந்த​ரை. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ தெரியாது, வெளியில் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரங்கள் அவளைக் கலைத்தன.

அதோ என் இதயம் கவர்ந்த இராமன் வருகிறான். காலத்தால் பக்குவப்படுத்தப்பட்ட இராமன் வருகிறான். இலக்குவ​னோடும் சீ​தை​யோடும் ​சென்ற இராமன் இன்று வானர சேனை ஒரு பக்கமும், இலங்கை அரக்கர்கள் சேனை மறுபுறமும் சூழ, வருகிறான். அவன் படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இப்போது அவன் பார்வையில் அனைவரும் சமம். எங்கும் வளங்​கொழிக்கும் இராமராஜ்யம் மலரப் ​போகிறது. மந்தரைக்கு மனதில் மகிழ்ச்சி ​வெள்ளம் க​ரைபுரண்டு ஓடியது. ஆனால் மறு நொடியே அவள் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. “கண்மணி இராமன் என்னைப் புரிந்துகொண்டிருப்பானா? உலகின் மிகச் சிறந்த அரசனாக உருவாக இந்த வனவாசம் அவனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி என்பதை இராமனால் புரிந்துகொண்டிருக்க முடியுமா?”

அ​லை​மோதிய கூட்டத்தில் இராமனின் கண்கள், யாரையோ தேடின. இந்தப் பக்கம் யாரும் இல்லையே! அமைச்சர்கள், தாய்மார்கள் எல்லோரும் மறுபுறம் அல்லவா நிற்கிறார்கள். அப்படியிருக்க அவன் கண்கள் யாரைத் தேடக்கூடும்? இப்போது சீதையின் பார்வையும் இராமனைத் தொடர்ந்தது. அவர்களிருவரின் பார்வையும் மந்தரையின் மேல் விழுந்தது. தாங்கள் அனுபவப் பாடம் கற்கக் காரணமாக இருந்த மதியூகி மந்த​ரை​யைப் பார்த்து அவர்களிருவரது ​கைகளும் சொல்லி வைத்தாற்போல் ஒரு​சேரக் கூம்பின. அவர்களது கண்கள் மந்த​ரைக்கு நன்றி​யைக் கூறின.

​ அப்பப்பா இதுபோதும்!! இது போதும்!! இராமன் என்னு​​டைய எண்ணத்​​​தைப் புரிந்து ​கொண்​டா​னே... அது​போதும்... உலகம் இனி என்​னை என்ன நி​னைத்தால் என்ன? கண்மணி இராமனும் சீ​தையும் என்​னைப் புரிந்து​கொண்டார்க​ளே... நான் பழிவாங்கவில்​லை என்று புரிந்து ​கொண்டார்க​ளே...! நான் வஞ்சகி இல்​லை என்ப​தைப் புரிந்து ​கொண்டார்க​ளே... நான் குலத்​தைக் ​கெடுக்க நி​னைத்தவள் இல்​லை... மாறாக குலத்திற்குப் ​பெரும்புகழ் ​சேர்க்கத் து​ணை நின்றவள் என்ப​தைப் புரிந்து ​கொண்டார்க​ளே... அது​போதும்... கண்களாலும் அவர்களது ​செய்​கையாலும் பல விஷயங்க​ளை எனக்குப் புரிய ​வைத்து விட்டார்கள்... இனி என் பிறவி க​டைத்​தேறும்... என்று மந்த​ரை மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியால் அவளது கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்​தோடின. மந்த​ரை அத​னைத் தடுக்க முயற்சிக்கவில்​லை. அவள் மனம் ​பெருநி​றைவு ​கொண்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p229.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License