இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கல்மனம்

மு​னைவர் சி.​சேதுராமன்


வீட்டு ​வே​லைகள் மும்மரமாக நடந்து ​கொண்டிருந்தது. ​வெளியில் நி​றைய மண் கிடந்தது. அத​னை அள்ளித் தளத்திற்குப் ​போட ​வேண்டும். அந்த ​வே​லை​யை வயதான ஒரு ​பெண் ​செய்து ​கொண்டிருந்தாள். அவள் காய்ந்த விறகுக் குச்சி போல இருந்தாள். தடுக்கி விழுந்தால் விழுந்து நொறுங்கி விடுவது போலத் தோற்றம். அவளது உடல் வற்றி வறண்டு போயிருந்தது. ஏழ்​மை அவளது உடலில் பல்​வேறு மாறுதல்க​ளைக் காட்டிச் சிரித்துக் ​கொண்டிருந்தது. அவளது முதிர்ந்த உடலில் செதில் செதில்களாய்ச் சுருக்கம். அவள் தனது மீன் முள்​ளைப் ​போன்ற ​வெளிரிய குட்டையான மயிரை வாரிச் சுருட்டியிருந்தாள். அவள் செய்யும் வேலையில் படு நிதானம் தெரிந்தது. தனது உடல் இயலாமையைக்கூட வெளிப்படுத்த முடியாமல் அவள் முக்கி முனகி செய்து கொண்டிருந்தாள்.

சுந்தரம் வாத்தியார் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். கட்டிடம் மேலே ஒட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஏராளமான பணத்தைக் கற்களும் சிமெண்டும் தின்று முடித்தது போக, கூலி வேறு ஆளை விழுங்கிவிடும் அளவிற்கு ஆகி விட்டது. சுந்தரம் வாத்தியாருக்கு எப்படியாவது தனது ஓய்வுக் காலத்திற்குள் ஒரு வீடு கட்டிக் குடி​போய்விட ​வேண்டும் என்ற ஆ​சை. அவரது ஆ​சை இப்​போது கட்டிடமாக உருவாகிக் ​கொண்டிருந்தது. வீட்​டைக் கட்டிப் பார், கல்யாணத்​தைப் பண்ணிப் பார் என்று சும்மாவா ​பெரியவர்கள் ​சொன்னார்கள். எப்படி​யோ திடமனத்துடன் காரியத்தில் இறங்கிவிட்டார். இறங்கிய பின்னர்தான் அவருக்​கே இதில் இருக்கும் சூட்சுமம் ​தெரிந்தது.

வாத்தியாருக்கு ஏன் தான் இந்தக் காரியத்தில் அவசரப்பட்டு இறங்கினோம் என்ற எரிச்சல் வந்து விட்டது. ​தொடக்கத்தில் வானம் ​தோண்டிக் கடைக்கால் போடும் போதிலிருந்தே பிரச்சினை. கல்லு வாங்கணும், மண்ணு வாங்கணும், அர​ளை வாங்கணும், வண்டிப் புடிக்கணும், சிமெண்ட் வாங்கணும், ஆளப் புடிக்கணும், இப்படி ஒரு பக்கம், மறு பக்கம் அரசாங்க லோனப் பாக்கணும், வீட்டப் பாக்கணும், கடன் வாங்கணும் இப்படித்தான் ஓடி ஓடி அ​லைந்தார். மனமும் உடலும் ஒரு நி​லையில் இல்​லை. அ​லைச்சல்... அலைச்சல் அப்படி​யொரு அ​லைச்சல்... பள்ளிக்கூடம் போனோம் பாடம் நடத்தினோம், மனைவி மக்களைப் பார்த்தோம் என்ற நிலை மாறி, ஒரே அல்லல் மயமாய் ஆகிப் போனது. படுக்கும் போதும் எழும் போதும் கட்டிடத்​தைப் பற்றிய நினைவுகள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தன. எப்படி வீட்​டைக் கட்டி முடிப்​போம்... என்ற எண்ண​மே அவரது மூ​ளை அழுத்திக் ​கொண்டிருந்தது. ஏ பிளஸ் பி ஓல்ஸ் ​கொயர் என்பதற்குப் பதிலாக அவர் வாய் மண்ணு, கல்லு, ​கொத்தனார் என்று முணுமுணுக்கத் ​தொடங்கியது. அவருக்​​கே இது வியப்பாகப் ​போய்விட்டது. கணக்​கே கதி என்று கிடந்த தானா இப்படி மாறிப்​போய்விட்​டோம் என்று...



என்ன ​செய்வது வாட​கை வீட்டிலிருந்து ​சொந்த வீட்டில் குடி​யேற ​வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் இ​தை​யெல்லாம் பார்த்தால் முடியுமா...? அவர் உணவுகூட சரியாக உண்ணாது கட்டிடத்திற்கும் வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் ​பேங்கிற்குமாக அ​லைந்து திரிந்தார். அவர் கையில் சிறு பையைச் சுமந்த படி கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். கட்டிடம் கோடிட்ட கிராப்ட் நோட்டு போல வரி வரியாய் வரி பிசகாமல் இருந்தது. இடையிடையே சார மரங்கள் கூட்டலும் கழித்தலுமாய் நீட்டிக் கொண்டிருந்தன. கட்டிடத்​தைச் சுற்றி வந்து பார்த்தவர் அங்கு ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த வயதான ​பெண்​​ ​வேகமாக ​வே​லை ​செய்யாமல் ​மெதுவாக ​வே​லை ​செய்வ​தைப் பார்த்துவிட்டுக் கடுப்பானார். இந்தம்மா எப்ப ​வே​லை பார்த்து முடிக்கப் ​போகுது... சும்மா வீட்டுல இருக்க முடியாம இங்க வந்து நம்ம உயிர வாங்குது... என்று மனதிற்குள்​ளே​யே எண்ணிக் ​கொண்டு, அந்தம்மா​வைப் பார்த்து,

'இந்தாம்மா, நானும் தான் பாக்குறேன், மசமசன்னு ​வே​லை பார்த்துக்கிட்டு இருக்​கே... ஒடம்புக்கு முடியலைன்னா ஏன் வேலைக்கு வர்ற... வீட்டு​லே​யே இருந்துக்க ​வேண்டியதுதா​னே... ' என்று எரிந்து விழுந்தார்.

'​கோவுச்சுக்காதீங்கய்யா ​கொஞ்சம் ஒடம்புக்கு முடியல' என்று மன்னிப்புக் ​கோருபவ​ளைப் ​போன்று கூறினாள். அத​னைக் ​கேட்ட சுந்தரம் வாத்தியாருக்குச் சட்​டென்று ​கோபம் த​லைக்​கேறியது.

'ஒடம்புக்கு முடியலைன்னா ஏன் வரணுங்கறேன்... வீட்டுல​யே இருக்க ​வேண்டியதுதா​னே... நானும் கஷ்டப்பட்டுத்தான் வீட்டக் கட்ட​றேன்...' என்று கத்தினார்.

அத​னைக் ​கேட்ட வயதான அந்தம்மா ​வெல​வெலத்துப் ​போனாள்... பயந்து ​கொண்​டே, 'எப்படிங்கய்யா... வீட்டுல இருக்க முடியும்... வேலைக்குப் போனாதாய்யா சோறு... ​வே​லை பார்த்தாக் காசு... ​வேஷம் ​போட்டாக் கூலி... எங்க ​பொளப்பு இப்படித்தான்ய்யா இருக்குது' என்று ​வேத​னையுடன் கூறியபடி அவள் தலை குனிந்து​கொண்டு நின்றாள்.

இருந்தாலும் சுந்தரம் வாத்தியாருக்கு இது பிடிக்கவில்​லை... தன்​னை இந்தக் கிழவி அவமானப்படுத்தியதாகக் கருதிக் ​கொண்டு ​கோபம் த​லைஉச்சிக்​கேற, 'ஆமாம்மா நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கறேன்; காலைலேர்ந்து ஊத்துன ஊத்துன இன்னும் செவுரு நனைஞ்ச பாடில்ல... என்ன தண்ணி ஊத்தற... இப்படி​யே ​வே​லை ​செய்யாம ​பேருக்கு நின்னுக்கிட்டு என்​னோட பணத்​தை​யெல்லாம் ​வெரயமாக்கலாம்னு பாத்தியளாக்கும்... '

'இல்லீங்கய்யா கட்டடத்த சுத்தி இப்ப மூணாம்மொற ஊத்துறேன்'

'ஆமாம்... எங்கண்ணு ​பொடரியில இல்ல இருக்கு... அம்மா தண்ணி ஊத்துனத நான்தான் பாக்கல போலிருக்கு'

'ஐ​யோ சாமி அப்படில்லாம் இல்ல சாமி ஒ​ழைக்காம ​கெ​டைக்கிற பணம் எங்களுக்கு ​வேணாம்யா' என்றாள் தழுதழுத்த குரலில்... அத​னைக் ​கேட்ட வாத்தியாருக்கு முகம் ஜிவ்​வென்று சிவப்பாகிக் கருத்தது...

'என்னம்மா இல்ல சாமி, நொல்ல சாமின்னுகிட்டு, நான் இங்க இருக்கிற வரையில ​வே​லை​செய்யற மாதிரி நடிக்கிறது... அப்பறம் நான் இந்தப் பக்கம் ​போன ஒட​னே​யே ஒக்காந்திட வேண்டியது தான்... அப்படித்தா​னே...'

“இல்லீங்க... இந்தச் சுண்ணாம்புப் பாறையில கைப்பம்பு போட்டிருக்கீங்களே, தண்ணி அடிச்சா எகிருது, கை ஒதறது, நெஞ்சு விறிஞ்சு போவுது வலி​யெடுக்குது... அதனாலதான் ​மொள்ளமா ​சொவத்துல தண்ணி ஊத்த​வேண்டியதா இருக்குது... ஒங்க காசு எனக்​கெதுக்குங்க...' என்றாள் கண்கலங்கியபடி.

அத​​னைக் ​கேட்ட வாத்தியார், ​கொதித்​தெழுந்தார்.

'அ​டேயப்பா... இந்தா பாரும்மா... நான் வாயக்கட்டி வயித்தக் கட்டிவீட்டக் கட்டுறேன்.ஒங்களுக்​கெல்ல்லாம் இளக்காரமப் ​போச்சு இல்​லையா... என்​னோட வயிறு எரியுதும்மா... இந்தப் ​பேச்​​செல்லாம் என்கிட்டப் ​பேசாதே ​மொத்தல்ல ​பேச்​சைக் ​​கொறச்சுக்க... ஒன்னால முடிய​லைல்ல... நீ நா​ளையிலருந்து ​வே​லைக்கு வராத, நின்னுக்க... என்ன புரிஞ்சதா...?' என்று சட்டியில் ​போட்ட கடுகு​ போல் ​​பொறிந்து தள்ளிவிட்டார்.



அத​னைக் ​கேட்ட அந்த வயதான ​பெண்... பதறிப் ​போனாள். 'அய்யா... சாமி அப்படில்லாம் சொல்லாதீங்கய்யா... எனக்கு நாளைக்கு வொடம்பு சரியாயிடுமுய்யா... நீங்க ​சொல்ற ​வே​லை​யெல்லாம் ​செய்ய​றேன்யா... எந்த ​வே​லையாயிருந்தாலும் ​செய்யிறன்யா...' என்று ​கெஞ்சினாள்.

அத​னைக் ​கேட்ட வாத்தியார் ​​வெடி​வைத்துத் தகர்க்கப்பட்ட குவாரிப் பா​​றை​யைப் ​போன்று ஆனார்.

'அ​தெல்லாம் சுத்தப்படாது, நான் என்ன தர்மத்துக்கா வீடு கட்ட​றேன்... ஒன்கிட்டப் ​பேசி என்னாத்துக்கு ஆகப் ​போகுது... ஒன்ன ​வே​லைக்குக் கூட்டிக்கிட்டு வந்தாருல்ல அந்த மேஸ்திரி கிட்ட ​பேசிக்கி​றேன்...' என்று கூறியவாறு சற்றுத் ​தொ​லைவில் நின்று ​கொண்டிருந்த ​மேஸ்திரி​யைப் பார்த்து, '​​யோவ் ​மேஸ்திரி இங்க வாய்யா...!'

சுந்தரம் வாத்தியாரின் மிரட்டல் ​தொனியில் அ​மைந்த கு​ர​லைக் ​கேட்டு பதறியடித்துக் ​கொண்டு அவரிடம் ​மேஸ்திரி ஓடிவந்தான்.பதற்றத்துடன், 'வணக்கம் சார்... என்​னையக் கூப்புட்டீங்களா சார்?'

'ஆமாய்யா... நானும் ரெணடு நாளா பாக்குறேன். இந்தக் கெழவி மசமசன்னு வேல செய்யிது; இந்தம்மாவ ​வே​லைய விட்டு நிறுத்திட்டு வேற நல்ல ஆளாக் கூப்புடுய்யா'

'சார் அந்தம்மா நல்லா ​வே​லை செய்வாங்க... சார்... இன்னிக்குத்தான் ஏதோ முடியல போலிருக்கு, வயசாவுதில்லயா சார்...'

'​யோவ் எனக்கு அதுவா முக்கியம்... எனக்கு வேல நடக்கணும்யா... இந்தம்மா காலைலேர்ந்து தண்ணி ஊத்திக்கிட்​டே இருக்குது... ஆனாக்கா... கட்டிடமே நனையில... அப்புறம் இந்தா அந்தாக் ​கெடக்குதுல்ல மண்ணு அ​தை அள்ளி கட்டிடத்துக்குள்ள கொட்டச் சொன்னேன். சாயந்தரம் ஆகப்​போகுது... இப்படியிருந்தா எப்பிடி...'

மேஸ்திரி குனிந்து கண்களை உருட்டினான். கிழவி பக்கம் திரும்பினான். அவள் ஒடுங்கிப் ​போய்க் குறுகி நின்றிருந்தாள். அவளது முகத்தில் ஏராளமான சுருக்கமும் பல்​வேறுவிதமான கேள்விக்குறிகளும் தென்பட்டன. கருணை கலந்த பார்வையோடு அவள் ​மேஸ்திரி​யையும், சுந்தரம் வாத்தியா​ரையும் நிமிர்ந்து பார்த்தபடி, 'ஐயா நாளைக்குச் சீக்கிரமே வந்து அள்ளிக் கொட்டிடறேன்யா... ​வே​லை இல்லன்னு மட்டும் ​சொல்லிப் ​போச்​சொல்லிறாதீங்கய்யா... நீங்க நல்லா இருப்பீங்க...' என்று மன்றாடினாள்.

'என்னத்த நானும் ரெண்டு நாளாத்தான் பாக்குறன்... தண்ணி ஊத்தறன் ஊத்தறன்னு ​சொல்லி​யே காச வாங்கிட்டுப் போகுது' என்றார்.

அத​னைக் ​கேட்ட ​மேஸ்திரி, 'சார் கோச்சுக்காதீங்க சார். நான் சின்ன வயசிலேர்ந்து பாக்குறேன். இந்தப் ​பெரியம்மா கட்டிட வேல தான் செய்யிறாங்க. நல்லா கல்லுமண்ணு ​சொமப்பாங்க... கீழே இருந்து கல்ல மேல விட்டு எரிஞ்சா கல்லு கடம்பமாகும் சார். இவுங்க பாத்து வளர்ந்தவன் நான். வைரம் பாய்ஞ்ச வொடம்பு. சம்பாதிச்சு ஒரே பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க... ஆனா... அந்தப்பய பொண்டாட்டி பேச்சக் ​கேட்டுக்கிட்டு இந்தம்மா​வைக் கவனிக்கிற​தே இல்ல. மனசு ​நொந்து ​போயி இந்தம்மா அப்படியே நிராதரவா இடிஞ்சு ஒக்காந்திருச்சு. இல்லேன்னா வேலைல என்னையே தூக்கி சாப்புட்டுறும் சார் '

'ஆமாய்யா நல்லா வெளக்கம் சொன்ன போ... எனக்கு இந்த ​வெளக்க​மெல்லாம் ​தே​வையில்​லை... நான் எத்தன ​பேருகிட்ட ​மொத்துப்பட்டு ​கேவலப்பட்டுக்கிட்டுக் கெடக்கறேன்னு ஒனக்குத் தெரியுமா; ஓடியாடி பணம் பொரட்டுனா கைய்யில ஒரு நிமிசம் கூடத் தங்க மட்டேன்னு கறஞ்சு போவுது’ 'சார் நீங்க பரவாயில்ல, பணம் கறஞ்சாலும் வெலவாசி ஏத்தத்துல இப்பவே எல்லாம் சொத்தாயிடுது; எங்களப் ​போல உள்ளவங்களச் சொல்லுங்க; ஒ​ழைச்சுக் கூலி வாங்குனாத்தான் எல்லாம்... இல்லாட்டி வயித்துல ஈரத்துணியச் சுத்திக்கிட்டுப் பட்டினியாக் ​கெடக்க ​வேண்டியதுதான்...'

'ஆமாய்யா... ​சொத்து ​பெரிய ​சொத்து... அடப் ​போய்யா... இந்தச் சொத்தச் சேக்கதான் இந்தப் பாடு... ச்சே... எங்க போனாலும் ஏமாத்து வேல தான்... யாரத்தான் நம்புறதுன்னு ​தெரியல... சரி... சரி இந்தா ரூபா. நாளைக்குச் சொன்ன மாதிரி​யே இந்தம்மா​வை வந்து காலைலேயே மண்ண அள்ளிக் ​கொட்டச் ​சொல்லு; அப்புறம் ​சொவத்துக்குத் தண்ணி ஊத்தலாம்...' என்று ​மேஸ்திரியிடம் பணத்​தைக் ​கொடுத்து வயதான ​பெண்மணியிடம் ​கொடுக்கச் ​சொன்னார்.

அவள் ​மேஸ்திரியிடமிருந்து வாங்கிய இருபது ரூபாயை உள்ளங்கையில் அழுத்திப் பிடித்தபடி நகர்ந்தாள். மேஸ்திரி மறுநாள் பார்க்க ​வேண்டிய வேலை​யைப் பற்றி வாத்தியாரிடம் பேசி விட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

மறுநாள் பள்ளிக்குச் ​செல்வதற்கு முன்னதாக​வே கட்டிடத்திற்கு வந்துவிட்டார் சுந்தரம் வாத்தியார். ​வே​லைத்தளத்திற்கு ஆட்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தார்கள். ஆனால் அந்தக் கிழவி மட்டும் வர​வேயில்​லை. ​பொறுத்துப் ​பொறுத்துப் பார்த்த சுந்தரம் வாத்தியாருக்குக் ​கோபம் ​பொத்துக் ​கொண்டு வந்தது. அவர் ​மேஸ்திரி​யைப் பார்த்து,

'என்னய்யா மேஸ்திரி எல்லா ஆளுகளும் வந்துட்டாக... ஆனா அந்தக் ​கெழவி மட்டும் வர​லை… அந்தம்மாவுக்குப் ​போயி நீ வேற வக்காலத்து வாங்கினியே இப்ப பாத்தியா' என்று எகத்தாளமாகக் ​கேட்டார்.



அத​னைக் ​கேட்ட ​மேஸ்திரி, பவ்யமாக, 'சார் அந்தம்மாவுக்குக் காய்ச்சல் அதிகமாப் போயிடுச்சுங்க... வர்ற ​போது அதப் ​போயிப் பார்த்துட்டுத்தான் வந்​தேன்... குளுரு காச்சல்ல ​பெனாத்திக்கிட்டுக் ​கெடக்குங்க சார்... எனக்கு ஒண்ணும் புரியல. அக்கம் பக்கத்துல இருக்கிற ஆளுககிட்டப் பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன். ஒங்கக்கிட்ட ​சொல்லிட்டுத்தான் அந்தம்மா​வை ஆசுபத்திரியிலக் காட்ட டவுனுக்குப் போகணும்... சார் ​கொஞ்சம் மனசு ​வையிங்க சார்... அந்தம்மா​வை டாக்டருக்கிட்ட காட்டிட்டு ஒரு மணி நேரத்தில வந்துடறேன் சார்...' என்று ​கெஞ்சினான்.

தன்னிடம் ​வே​லைபார்க்கும் சக மனுஷி​யைக் காப்பாற்ற நி​னைக்கும் மனித​நேயம் அவனது ​பேச்சில் இருந்தது.

ஆனால் கல்மரமான சுந்தரம் வாத்தியா​ரோ, 'ஐயய்​யோ குடி​யே கெட்டுச்சு... ​போ, இன்​னைக்கு கல்லு ஒட்டணும்னு சொல்லி ஆளு வந்து நிக்குது. நீ பணத்​தைக் கை நீட்டி வாங்கிக்கிட்டு கிண்டல் பண்றியா... இந்தப் பாருய்யா மேஸ்திரி... எனக்கு இ​தெல்லாம் ​தேவையில்லாதது... ​போயி மரியா​தையா வேலயப் பாரு... அந்தம்மா இல்லன்னா வேற ஆளப் பாத்துக் கூப்பிட்டுக்குவம் ' வாத்தியார் பிடித்த பிடியில் உறுதியாக இருந்தார்.

​ மேஸ்திரி விடுவதாக இல்​லை. 'சார்... சார்... அவுங்க ஆதரவில்லாதவங்க. கொஞ்சம் ​பொறுத்துக்​கோங்க சார்... நான் என்னேரமாயிருந்தாலும் வந்து ​வே​லைய முடிச்சிடறேன்...' என்று காலில் விழாத கு​றையாகப் பரிதாபமாகக் ​கெஞ்சினான்.

ஆனால் ​கெட்டிபட்டு இறுகிப் ​போன சிமிண்டுக் கல்​லைப் ​போன்று இருந்த சுந்தரம் வாத்தியார் மனம் அதற்​கெல்லாம் மசியவில்​லை.

வாத்தியார் ​மேஸ்திரி​யைப் பார்த்து, '​யோவ் மேஸ்திரி வானத்​தைப் பாருய்யா இருட்டிக்கிட்டு வருது. மழ வந்து கெடுத்திடப் போவுதுய்யா. கல​வை​​யெல்லாம் வீணாப் ​போயிருமுய்யா... ​பேசமாப் ​போயி வேலயப் பாருங்கய்யா' என்று அதட்டி விரட்டினார்.

​மேஸ்திரி என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் ​பேசாமல் நிற்ப​தைப் பார்த்த வாத்தியார், '​மேஸ்திரி அந்தக் கெழவிய அக்கம் பக்கத்துல இருக்கவங்க பாத்துக்குவாங்கய்யா... நீங்க ​மொதல்ல கவலப்படாதீங்க.... ​சட்டுப்புட்டுனு வே​லையப் பாருங்கய்யா...'

மனம் ​நொந்து ​போன மேஸ்திரி ​செய்யவதறியாது ஆண்டவன் விட்டவழி என்று நி​னைத்துக் ​கொண்டு நிதானமாகத் திரும்பி கட்டிடத்தின் அருகில் சென்று வேட்டியை மடித்துக் கட்டினான். தன்னருகில் நின்றிருந்தவர்க​ளைப் பார்த்து, 'டேய் யார்டாவன் குத்துக்கல்லு மாதிரி நிக்கறவன்... ​போயி... ஒன்றச் ஜல்லிய அள்ளிப் ​போட்டு சிமிண்டப் ​போட்டு கு​லைச்சுவிடுறா...” என்று கூறிக் ​கொண்​டே ​ ​வே​லை​யைத் ​தொடங்கினான். ​

மேஸ்திரியின் ​பேச்​சைக் ​கேட்ட சுந்தரம் வாத்தியாருக்குத் த​லையில் யா​ரோ சம்மட்டி ​கொண்டு அடித்தது ​போன்றிருந்தது. குத்துக்கல் என்ற வார்த்​தை அவ​ரது உள்ளத்​தை என்ன​வோ ​செய்தது. அதற்கு​மேல் அவர் அங்கு நிற்காது தனது ​சைக்கிளில் ஏறி மிதித்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p232.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License