இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

வீட்டுக்கு வீடு வாசப்படி

மு​னைவர் சி.​சேதுராமன்


வீடு அ​மைதியாக இருந்தது. சுற்றிலும் ​தென்​னை மரங்கள்... அதன் நடுவில் வீடு... எத்த​னை அழகான அ​மைப்பு... இந்த மாதிரி இடத்துல இருக்கறதுங்கற​தே மனதுக்கு ​ரொம்ப இதமா இருக்கும். இப்படிப்பட்ட எடத்துல இருக்கறவங்க நல்ல மனசு ப​டைச்சவங்களாத்தான் இருப்பாங்க... இப்படிப்பட்டவங்க எப்படி இவங்க ​பொண்ண ​அந்த பிடுங்கல்ல ​​கொடுத்தாங்க... என்று எண்ணமிட்டவா​றே கண்ணுச்சாமி வீட்​டை ​நெருங்கி, “ஏங்க வீட்டுல யாருங்க...?” என்று ​கேட்கவும் வீட்டுக் கத​வைத் திறந்து ​கொண்டு, “யாரு...?” என்று ​கேட்டுக் ​​​கொண்​டே வந்த ​சோ​லையப்பன், கண்ணுச்சாமி​யைப் பார்த்தவுடன், “அட​டே கண்ணுச்சாமி அண்ணனா... வாங்க... வாங்க... என்ன நல்லா இருக்கறீங்களா...? வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா...? ஒங்க ஊருலதான ஒங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுல ஏந்தங்கச்சியக் கட்டிக் ​​கொடுத்துருக்​கேன்... எப்படிண்​ணே இருக்குது...?” என்று சரமாரியாகக் ​கேள்விக் க​ணைக​ளைத் ​​தொடுத்துக் ​கொண்​டே வந்து அவ​ரை வர​வேற்றான்.

“ம்...ம்... நல்லாருக்​கேன் தம்பி... இந்தப் பக்கமா வந்​தேன்... ஒன்​னையப் பாத்து ஒரு முக்கியமான விஷயத்​தையும் ​சொல்லிட்டுப் ​போகலாம்னு வந்​தேன்...” என்று பூடகமாகப் ​பேசினார் கண்ணுச்சாமி.

வீட்டிலிருந்த நாற்காலி​யை எடுத்துப்​ போட்டவா​றே தன் ம​னைவியிடம் காப்பி ​போடுமாறு கூறிவிட்டு, “என்னண்​ணே விஷயம்... ஏந்தங்கச்சிக்கு ஏதாவது ஒடம்புக்கு முடியலியா...?” என்று ​நெஞ்சம் படபடக்கக் ​கேட்டான் ​சோ​லையப்பன்.

வந்தவ​ரோ... "அட ஆமாப்பா... ஒந்தங்கச்சிய ​அவ வீட்டுக்காரன் போட்டு அடி​யோ அடின்னு அடிக்கிறான்...? யாரா​ரோ ​சொல்லிப் பாத்துட்டாங்க... மனுஷன் ​கேட்கமாட்டங்கறான்... ம்முன்னா அடி... ஆன்ன அடி... பாவம்பா ஓந்தங்கச்சி... எங்களாள பாத்துக்கிட்டு சகிச்சிக்கிட்டு இருக்க முடியல... அதான் மனசு ​கேக்காம வந்து ஓங்கிட்ட விஷயத்​தைச் ​சொல்லிட்​டேன்... அவ​னெல்லாம் மனுஷனாயா...? அந்தப் புள்​ளையப் ​போட்டு அந்த அடி அடிக்கிறான்... நீ ​போயி என்னன்னு ​கேளு... அப்பத்தான் அவன் அடங்குவான்...” என்று ஆ​வேசம் வந்தவ​ரைப் ​போன்று மனதில் உள்ளவற்​றை எல்லாம் அவன் முன் ​கொட்டினார் கண்ணுச்சாமி.

அவர் கூறிய​தைக் ​கேட்ட ​சோ​லையப்பன் தி​கைத்துப் ​போய்விட்டான். “என்னன்​ணே...? நீங்க சொல்ற​தெல்லாம் உண்மையாண்​ணே...? என்னால நம்பவே முடியலை​யேண்​ணே... கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்கண்​ணே...“ என்று ​சோ​லையப்பன் கண்ணுச்சாமி சொன்னதை நம்ப முடியாமல் கேட்டான்.

“என்னப்பா... என்னத்தை விவரமாச் சொல்லுறது? ஒனக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னுதான் நெனச்சேன். ஓந்தங்கச்சிய அவ புருஷன் போட்டு அடிக்கிறதை எத்தனை முறை நான் ஏம்வீட்டு மாடியிலே இருந்து பார்த்திருக்கேன் தெரியுமா? அந்தப் பொண்ணு எல்லாத்தையும் மறைச்சிட்டு எங்கக் கிட்ட சிரிச்சி பேசும். ஏம்​​பொண்டாட்டி கேட்டாக் கூட அதெல்லாம் ஒண்ணுமில்லையேன்னு மழுப்பிடும். ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டாக் கூட அந்த மனுஷனுக்கு வேலை போனதிலிருந்து ரொம்பத்தான் அவளைப் போட்டு வதைக்கிறான். எனக்கே மனசு தாங்கலை. அதுதான் உன்கிட்ட சொல்லுறேன். நான் அந்நியன். நான் கேட்டா அது தப்பாப் ​போயிடும். நாளைக்கு ஏதாவது ஒணணுன்னா நீங்க சொல்லவே இல்லையேன்னு என்மேல நீ வருத்தப்படக் கூடாதுன்னு தான் ஓங்காதிலே போட்டேன். இனி ஓம்பாடு. ஓந்தங்கச்சி பாடு. நான் கிளம்புறேன்...” என்று காப்பி​யை வாங்கிக் குடித்துவிட்டுக் கண்ணுச்சாமி தன்ஊருக்குக் கிளம்பிவிட்டார்.

வந்தவர் தனது மனப்பாரத்​தை இவனிடம் இறக்கி ​வைத்துவிட்டுத் தன் பாரத்​தைக் குறைத்துக் ​கொண்டு ​போய்விட்டார். ஆனால் ​சோலையப்பனால் அவர் இறக்கி ​வைத்த பாரத்​தைச் சுமக்க முடியவில்லை. ஆத்திரத்தில் அவனது கண்கள் சிவந்தன. அவனது கன்னமும் மீசையும் துடி துடித்தது. அவனைப் பார்க்கும் போது அவன் மனைவி காமாட்சிக்குப் பயமாக இருந்தது.

“என்ன திமிர் இருந்தால் ஏந்தங்கச்சியப் ​போட்டு அடிப்பான் அவன்... நாதாரிப் பய... அவனத் தட்டிக் கேட்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா...? அவ்வளவு திமிரா அவனுக்கு? இந்தத் திமிரு எப்படி வந்துச்சு? யாரும் வந்து கேட்க மாட்டாகன்னு நெனச்சிட்டானா... வர்றேன்டா... அ​யோக்கியப் பய​லே... வர்​றேன்டா... காலையிலேயே கிளம்பி வர்றேன். வந்து ​ரெண்டுல ஒண்ணு பாத்துப்புடு​றேன்... அந்தக் களவாணிப் பய​லோட சட்டையைப் பிடிச்சி இழுத்து நடு ரோட்டுல போட்டு ஒதைச்சாத்தான் அவன் ​சொன்னபடி ​கேப்பான். அவனைச் சும்மா விட போறதில்லை நான்...” என்று தனக்குத்தா​னே ​பேசிக்​கொண்ட ​சோ​லையப்ப​னைப் பார்த்த அவன் ம​னைவி காமாட்சி உடல் நடுங்க அ​வ​னை​யே பார்த்துக் ​கொண்டிருந்தாள். அவளுக்குக் ​கையும் ஓடவில்​லை... காலும் ஓடவில்​லை... திருதிரு என்று விழித்துக் ​கொண்டிருந்தாள்.

“ஏய்... என்னடி திரு திருன்னு முழிக்கிறே. நாளைக்கிக் காலையிலேயே ஏந்தங்கச்சியப் பார்க்கப் போகணும். எல்லாத்​தையும் ​ரெடி பண்ணி வை...” என்று ​சோ​லையப்பன் தன் மனைவியைப் பார்த்து அதட்டினான். அவள் அங்கிருந்து நகரவே இல்லை.

“என்னடி? சொல்லிக்கிட்​டே இருக்​கேன். ​போகாம அப்படி​யே நிக்க​றே... என்ன ஒங் காதுல விழலையா? போயி என்​னோட சட்​டை​வேட்டி​யெல்லாம் அயர்ன்பண்ணி ​ரெடியா ​வையி...” என்றான்.

ஆனால் அவ​ளோ “ஏங்க... நான் ஒண்ணு ​கேக்கு​றேன் தப்பா நினச்சிக்கிடாதீங்க... நீங்க ஒங்க தங்கச்சி வீட்டுக்குப் போறது அவசியந்தானா...?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“என்னடி...? என்னங்க​றேன்...? நாம்​போறது அவசியமில்லைன்னு சொல்லுறியா? கண்ணுக்குக் கண்ணா வளர்த்த தங்கச்சிய அவன் அடிப்பான்... ஒதப்பான் நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்கணும்ணு சொல்லுறியா...?” என்று காட்டுத்தனமாகக் கத்தினான் ​சோ​லையப்பன்.



“நான் கேட்க வேணான்னு சொல்லலைங்க. அவளே வந்து சொன்னாள்ன்னா நாம கேட்கலாம். இ​தெல்லாம் சாதாரணமானது. புருஷன் பொண்டாட்டி சண்டையில ​போயி நாம தலையிடுறது நமக்கு மரியா​தையில்லைங்க... அதுக்குத்தான் ​சொல்​றேன்...” என்றாள் அவன் மனைவி காமாட்சி.

“எது புருஷன் ​பொண்டாட்டி சண்டை? அடுத்தவன் பார்த்துட்டு வந்து சொல்ற அளவுக்கு இருக்குது. நான் போய் கேக்கலைன்னா என்ன நினைப்பாங்க... அவனுக்கும் குளிருவிட்டுப் ​போயிரும்?”

“ஏங்க அ​மைதியா இருங்க... அவங்க எதையாவது நெனச்சிக்கிட்டுப் போகட்டும். ஆனால் நீங்க இப்போ போறது அவ்வளவு நல்லதா எனக்குப் படலைங்க...”

“ஏய்... இங்க பாருடி ​பேச்​சை நிப்பாட்டு இதுக்கு மேல உன் அறிவு​ரை​யைக் கேக்க நான் தயராயில்லை. என்னுடைய தங்கச்சிய பத்தி எனக்குத்தான் தெரியும். இதுக்கு மேல நீ எதாவது ​சொன்​னேன்னு வச்சுக்​கோ பல்ல உதுத்துப்புடு​வேன் ஆமா...” என்று கூறிவிட்டுக் கோபமாக எழுந்து போய்விட்டான் சோ​லையப்பன்.

இதற்கு மேல் அவனிடம் எதையும் பேச முடியாது. பெருமூச்சுடன் தன் வேலையைக் கவனித்தாள் காமாட்சி.

மறுநாள் காலையில் தங்கையின் வீட்டில் கால் எடுத்து வைத்தவுடன் “வாங்க மாமா... வாங்க... வாங்க... வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா...?” என்று முகம் மலர வரவேற்றது தங்கையின் கணவன் தான். ஏதோ வேலையாக வெளியே கிளம்புவதற்குத் தயாராக இருந்தான்.

“ஆமா... மாமா... என்ன திடீர்ன்னு வந்திருக்கிறீக? ஆச்சர்யமா இருக்குது! நாங்க வாங்க வாங்கன்னாலும் வரமாட்டீங்க இப்ப திடுதிப்புன்னு வந்து நிக்கிறீக...? ஏம்மாமா ஏதாவது முக்கியமான விசயமா?” ஆவலுடன் கேட்ட மாப்பிள்ளையிடம் தங்கையை அடித்த விசயத்​தைப் பற்றி ​சோ​லையப்பனுக்குக் கேட்க மனம் வரவில்லை.



“இல்ல மாப்பி​ளே. சும்மா தான் வந்​தேன். ஒங்களை எல்லாம் பார்த்து ​ரொம்ப நாளாச்சில்ல... அதான் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்” என்று எ​தை​யோ கூறி மழுப்பிவிட்டான்.

“சரி மாமா. நான் அவசரமா ஒரு ​வே​லைக்குப் ​போயிக்கிட்டு இருக்​கேன். ​போயி அந்த ​வே​லைய முடிச்சிட்டு வர்​றேன், வந்த பிறகு சாவகாசமா பேசலாம் மாமா... காமாட்சி... ஒங்க அண்ணனை நல்லாக் கவனி. நான் போற வழியில அவருக்குப் பிடிச்ச ஆட்டுக்கறி வாங்கி யாருகிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன்... என்ன... வரட்டுமா...?” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கிளம்பி விட்டான்.

காமாட்சி ​சோ​லையப்பனுக்குக் காபி கலந்து கொடுத்து விட்டு அண்ணி, குழந்தைகளின் நலன் விசாரித்தாள். ஊர் விசயங்களைப் பற்றிக் கலகலப்பாக பேசினாள்.

அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவள் மனத்தில் இல்லையே என்று ​சோ​லையப்பனுக்கு வருத்தமாக இருந்தது. பேசிக்கொண்டு இருந்தபோதே ஆட்டுக்கறி வர​வே தன் அண்ணனுடன் ​பேசிக் ​கொண்​டே அத​னைச் சமைப்பதற்குத் தயாரானாள். ​வெங்காயத்​தை நறுக்கிக் ​கொண்டிருந்த தங்கையிடம் ​சோ​லையப்பன் அ​மைதியாகக் கேட்டான்.

“ஏம்மா காமாட்சி ... ஓம்வீட்டுக்காரனப் பத்தி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா...?”

“என்னன்​ணே கேள்வி பட்டீங்க...?”

“ஓம்புருஷன் உன்னை எப்போப் பார்த்தாலும் மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறானாமே... என்னதான் ​நெனச்சிக்கிட்டு இருக்கான்? என்ன ​கேக்கப்பாக்க ஆளில்​லைன்னு ​நெனக்கிறானா?” என்று கடு​மையான ​கோபத்தில் ​கேட்டான்.

அதற்குக் காமாட்சி​யோ, “அப்படில்லாம் ஒண்ணுமில்லையே... ஏண்​ணே என்​னையப்​ போட்டு என்​னோட வீட்டுக்காரரு அடிக்கிறாருன்னு ஒங்கக்கிட்ட யார் சொன்னது...?”

“இங்க பாருத்தா யாரு சொன்னா என்ன... என்கிட்ட எ​தையும் மறைக்காமல் சொல்லு. அவனை உண்டு இல்​லைன்னு பண்ணிப்புட​றேன்...” என்று கடுகடுப்பான முகத்துடன் கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்லண்​ணே... எப்பவாவது கோபம் அதிகமா வந்திருச்சின்னா அதைக் கட்டுபடுத்த முடியாமல் என்னப் ​போட்டு அடிக்கிறாரு. அதுவும் எப்போதாவதுதான்...” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.

“என்னம்மா இப்படிச் சொல்லுற? அவனுக்கு எதுக்காவது கோபம் வந்தா அதுக்காக ஒன்னைப் போட்டு அடிப்பானாமா...?”



“அப்படியில்லண்​ணே. அவருக்கு அவரு மேலேயே கோபம். தான் குறைவா சம்பாதிக்கிறோமேங்கற ஆத்திரம். வீட்டுச் செலவுக்கு அது பத்தமாட்​டேங்கு​தேன்னு ஆத்திரம். அதுமட்டுமில்லாம தன் தங்கையை கல்யாணம் செஞ்சி கொடுக்கணுமேன்கிற மனவருத்தம். இ​தை​யெல்லாம் தாங்கிக்க முடியாத​ போது, நான் ஏதாவது கேட்கப்போய் அந்தக் ​கோபத்​தை​யெல்லாம் என் மேல திருப்பி விடுறார். அவ்வளவு தான்... இதப்​போயிப் ​பெரிசா எடுத்துக்கிடாதீங்க...”

“அவ​னோட ஆத்திரத்தத் தீத்துக்கறதுக்காக நீதான் கிடைச்சியா...? ஆத்திரத்தத் தீத்துக்கணும்னா அவன் அம்மாவை​யோ அவந்தங்கச்சி​யை​யோ ​போட்டு அடிக்க வேண்டியது தானே? அவனால கட்டிக்கொடுக்க முடியலைன்னா ஒரு கூலி வேலை செய்யிறவனுக்குக் கட்டிக் கொடுக்கிறது தானே... இவன் இருக்கிற லட்சணத்தில் தங்கைக்குப் பணக்கார இடமாப் பார்த்தா முடியுமா...?”

“என்னண்​ணே சொல்ற? நீ மட்டும் ஓந்தங்கச்சிக்கு நல்ல இடமா... சம்பாதிப்பவனா பார்த்துத்தானே கட்டிக் கொடுத்த. ஒன்​னோட வருமானத்துல எனக்கு ஒரு கூலிவேலை பாக்குற மாப்பிள்ளையை ஏன்​ணே பார்க்கலை. என் மேல நீ வச்ச பாசத்தால தானே வரவுக்கு மீறி கடன் வாங்கி கல்யாணம் செஞ்சு வச்சே. அப்போ ஒனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது. எத்தனை முறை என் கண்ணெதிரிலேயே அண்ணியப் ​போட்டு அடிச்சிருப்ப. அ​தே மாதிரிதான் அவங்க நிலையில இப்போ நான் இருக்கிறேன். விடுங்கண்​ணே... வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கத்தா​னே ​செய்யும்... எல்லாத்​தையும் ​பெரிசுபடுத்தினா குடும்பம் எப்படி உருப்படும்...” என்றாள்

​சோ​லையப்பனுக்கு மனதில் யா​​ரோ ஓங்கி மிதித்தாற்​போன்று இருந்தது. அவன் எதுவும் ​பேசாமல் யோசித்தவாறு இருந்தான். காமாட்சி கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்காக... அப்படி​யே விட்டுற முடியுமா...?

“இல்லை காமாட்சி... மனசு கேட்கலை. நான் அவன் வந்ததும் இதைக் கேட்கத் தான் போறேன்...” என்றான்.

“வேண்டாம்ண்​ணே. நீ இதைக் கேட்டால் ஒங்களுக்குள்ள இருக்கிற மரியா​தை போயிடும். நீ எப்படி அண்ணி வீட்டுக்காரர்களை மதிக்கலையோ... அதே மாதிரி இவரும் ஒங்கள மதிக்காம நடந்துக்குவார். எனக்கும் ஒன் வீட்டுக்குமான உறவும் போயிடும். எனக்கு அண்ணியோட வாழ்க்கையே பாடமாயிடுச்சுண்​ணே... அதனால் தயவு​ ​செஞ்சு நீ இதைக் கண்டும் காணாமல் இருந்திட்டுப் ​போயிடு. அது தான் நமக்கு நல்லது... ஏம் வீட்டுக்காரரு ​கோபக்காரருதான்... ஆனா ஒம்​மேல ​ரொம்ப மரியா​தை வச்சிருக்காருண்​ணே... அத வீணாவுல ​கெடுத்துக்காத... எல்லாஞ் சரியாப் ​போயிரும்...” என்றாள் சரஸ்வதி.

​சோ​லையப்பனுக்கு மனம் பக்குவப்பட்டுப் ​போனது... தன் தங்கச்சியா இப்படிப் ​பேசுறா...? அவ​ளை வியப்பாகப் பார்த்தான்... எவ்வளவு பக்குவம்... எனக்குத் ​தெரியாத​தெல்லாம் இவளுக்குத் ​தெரியு​தே... பாசம் என்​னோட கண்ண ம​றைச்சிடுச்சு... வாழ்க்​கைப் பாடத்​தை எவ்வளவு கச்சிதமாச் ​சொல்றா...” என்று மனதிற்குள் எண்ணமிட்டவாறு தன் தங்கையைக் கண்கலங்கப் பார்த்தான்.

மதியம் அவள் ச​மைத்துப் ​போட்ட​தை உண்டவுடன் ஊருக்குக் கிளம்பினான்... தன் தங்​கையின் உயர்ந்த எண்ணத்​தை எண்ணி எண்ணிப் பூரித்துப் ​போனான்.

அவன் மனதில் அவன் எப்​போ​தோ படித்த, “அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் ​கொல்” (அறி​வையும் பண்பாட்​டையும் எங்கு கற்றுக் ​கொண்டாள்...?) என்ற குறுந்​தொ​கை வரிகள் பளிச்சிட்டன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p235.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License