இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

புதிய வாழ்வு...?

பாரதியான்


மதன் கூறியதை அதிர்ச்சியோடுதான் கேட்டனர், அவனின் பெற்றோர்... அதை ஏற்க முடியாது என்பதை மெளனத்தில் காட்டினர்.

நீண்ட அமைதிக்குப் பின், “ஏதாவது பதில் சொல்லுங்க சார்...” பொறுமை இழந்த நண்பன் கதிர்.

“இவனோட பைத்தியகாரத்தனத்துக்கு எந்தப் பதிலும் இல்லப்பா” கோபத்துடன் கூறி, மனைவி வைத்திருந்த கைப்பையை ‘வெடுக்' என பிடுங்கிக் கொண்டு வாசல் நோக்கிச் சென்ற ராகவனின் முன்போய் நின்று,“அப்பா என்னோட குணம் உங்களுக்கு நல்லாவே தெரியும்” என்றான்.

“என்னமீறி நீ ஒன்னும் செய்ய முடியாதுடா ”

“செஞ்சிட்டா...?”

“என்னடா வார்த்த தடிக்குது...வேலைக்கு போயிட்ட திமிரா...”

வாக்குவாதம் முற்றினால் சண்டையாக மாறிவிடுமே என்று பயந்த விமலா, “மதன் தெளிந்த யோசனையோடதான் பேசுறியா... வெளியில தெரிஞ்சா மொத்த காலனி சனமே சிரிக்கும்” என்றதும் கதிரின் பக்கம் திரும்பி “ஏப்பா நீயும் இதுக்கு உடந்தையா...?” கேட்டாள்.

“ம்... தொரைக புரட்சி செய்றாங்களாம் புரட்சி” ராகவன்.

“நீங்க நினைக்கிறது தப்பு சார்... இன்றைய சமுதாயத்துல இது ஒரு சாதாரண மறுமலர்ச்சி அனைவராலும் ஏற்கப்பட்ட இணைப்பு முயற்சி” என்றான் கதிர்.

“வெளியில ஆயிரம் நடக்கலாம், இந்தக் குடும்பத்தில் சரிப்படாது”

“ஆமாப்பா... அப்பா சொல்லக் கேட்டு, இப்படியே இந்த விசயத்தை விட்ரு”

“புரியாம பேசாதம்மா ஆழமா சிந்தித்துத்தான், இந்த முடிவுக்கே வந்திருக்கேன். உடனே மாமா வீட்டுக்குப் போய் இது பத்தி பேசுங்க” என்று கட்டளையாகச் சொன்னான் மதன்.

“டே..டேய் நிறுத்துடா எனக்குனு தனியொரு மரியாதை இருக்கு அத வீணா அசிங்கப்படுத்த நான் விரும்பல, புத்தியில் பிராண்டிய எடக்கு முடக்கான நெனப்பத் தூக்கி தூரப் போட்டு லீவு முடியவும் மும்பைக்கு கிளம்பு” இப்படிச் சொன்னதும், குறுக்கே நின்ற மகனை விலக்கி வெளியேறினார் ராகவன்.

தலையில் அடித்துக் கொண்டு விசும்ப ஆரம்பித்தாள் விமலா.

கேள்வியாக நண்பனை ஏறிட்டான் கதிர்.

ராகவன், விமலா தம்பதியருக்கு மதன் இரண்டாவது மகன். மூத்தவன் ரகு, நான்கு மாதங்களுக்கு முன் டூவீலர் சாலை விபத்தில் இறந்துபோக, அவளின் இளம் மனைவி, கீதா அப்போது ஜந்து மாத கர்ப்பவதி! முதல் தாய்மை... வெறுமை கொண்ட நிலையானது. வாழ்க்கையோட தொடக்கமே அவளுக்கு முற்றுவைத்தார் போல் பிறந்த வீட்டுக்கே அனுப்பி விட்டது.



மும்பை சென்ற மதனுக்கு கவனம் மொத்தமும் சிதைந்து விட்டது. வேலையில் துளிகூட ஒட்டில்லை, கீதாவின் நிலையை எண்ணி,எண்ணி வருத்தத்தின் உச்சத்துக்கே போனான். அண்ணனின் இழப்பால் தன்னோட சுபங்கள் ஒதுக்கி இருண்டு கிடக்கும் கீதாவின் ஞாபகமாகவே இருந்தான்.

இன்னும் கொஞ்ச நாட்களில் குழந்தை பிறந்துவிடும், அதன் வளர்ச்சி, எதிர்கால தேவைகள்... எதிர்கொள்ள வேண்டிய சமூக எதார்த்தங்கள்,நினைத்துப் பார்க்கவே அவனுக்கு தலைச் சுற்றலாக ஆனது.

பாவம் கீதா, கனவுகளையும், கற்பனைகளையும் அள்ளிக்கொண்டு, தன் குடும்பத்தில் வந்து குறுகிய பொழுதுகளிலேயே தொலைத்தும் விட்டாள்.

இழப்பை ஈடு செய்ய வேண்டும்... யோசனையிலேயே மூழ்கிக்கிடந்தவனுக்கு “ஏன் கீதாவை மறுமணம் செய்துக்ககூடாது” ன்னு “பொறி” தட்டியது.

அதற்குக் காரணம், சாஸ்த்திரம், சம்பிரதாயம் என கீதாவின் மங்களத்தை அமங்களமாக்க பழமைவாதிகள் நெருங்கிய போது பாரதியின் புதுமைப்பெண் காட்டி, எதிர்த்தாள், தடுத்தாள். அந்த நிலைப்பாடு இன்றைய பெண் சமுதாயத்துக்கு விழிப்புணர்வானது என கதிரிடம் வாயாரியிருந்தான் மதன்.

தொலைபேசியில் தகவல் சொன்ன மறுவாரமே கிளம்பி வந்துவிட்டான்.

திறந்த மைதானமாகிப்போன மனித நிலையில் வெட்கப்பட ஒன்றுமில்லை. இந்த மாதிரி மனப்பூர்வமான ஒப்புதலுக்கு உடன்படனும். ஆனா அதன் முதல் வரிசையில் நிற்கும் வாழ்வின் அனுபவ முதிர்ச்சியானவர்களே மறுமணத்தை தட்டிக் கழிப்பது வேதனைக்குரியது, என்றாலும் மதனுக்கு எடுத்து வைத்த காலை பின்னிழுக்க மனமில்லை, கதிரை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள மாமாவின் வீட்டுக்கு சென்று விட்டான்.

விசயம் அறிந்து, “மதன் உன் பெருந்தன்மையான முன்வருதலுக்கு நான் தலைவணங்குகிறேன். அதே சமயம் பக்குவமா விசயத்த கையாளனும், உன் பெற்றோர் மனசுகளை ஏத்துக்க வைக்கனும் கீதா...” முடிக்கவில்லை அவர் “நீங்க என்ன சொல்றீங்க மாமா...? ” நேரடியாகவே கேட்க, அனுபவசாலி அவரோ, பொறுமையாகப் பேசி, துடிப்பாக இருந்த மதனை அமைதிப்படுத்தினார்.

“சார் மதன் அப்பா, அம்மாவுக்கு எல்லாம் தெரியும் இப்ப உங்களுக்கும் சொல்லியாச்சு” கதிர் இப்படி கூறியபோது

“அவங்களோட பதில்...” என்றார்.

“சம்பந்தமே இல்லாம மானம் மரியாதைன்னு புலம்புறார். தன் குடும்பத்தால ஒரு பொண்ண சூழ்ந்த இருள விரட்ட, மறுமணதீபம் ஏற்றலாமேன்னு மதன் நினைக்கிறான் இதுல தப்பு ஏதுமில்லையே...”



“இந்த விசயத்துல நான் ரெண்டாம்பச்சம்தான் ” ஒதுங்குவதாக அவர் கூற, “ஆளாலுக்கு விதன்டம் பேசினால் பிரச்சனைதான் வளரும் மாமா, ரகுக்கு துணையா வந்ததுக்கு எதிர் வரும் காலம் முழுவதும் துயரப்படனும்னு கீதாவுக்கு என்ன அவசியம்? இங்க யாரும் பண்ணாத காரியத்தையா நான் முன் வைக்கிறேன். கணவனால் ஏற்பட்ட இழப்பை இரண்டாவது முறையா பூர்த்தி செய்யும் புனிதச்செயலே மறுமணம். பழமையைத் தள்ளிப் புதுமைக்கு வழி விடுங்க, எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றான் உருக்கமுடன் மதன்.

“உங்க பொண்ணு வாழ்க்கை, அவங்க வயித்துல சுமக்கற குழந்தையோட எதிர்கால நலன் கருதியே மதன் வந்திருக்கான். வெளியுலகம் அப்படி இப்படி பேசும்னு தட்டிக்கழிக்கிறது வடிகட்டின மூடத்தனம் சார்... எதார்த்தத்துக்கு வாங்க, கீதாவுக்கு பிடிமானமா இருக்கும் நீங்க, உங்க காலத்துக்குப் பின் அவளுக்கு யார்னு யோசிச்சுப் பாருங்க... தனியாகக் கீதாவால் வாழமுடியும்னு நம்புறீங்களா?” என்று கதிர் கேட்டபோது, அவரால் மெளனத்தையே பதிலாகக் காட்ட முடிந்தது.

பெரியவர்களிடம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், கடுகளவு பலனும் கிடைக்காதோ... சட்டென ஒரு முடிவுக்கு வந்த மதன், சம்மந்தப்பட்ட கீதாவிடமே கேட்டு விடலாம் என்று சமையலறைக்குள் நுழைந்து, “எல்லாம் கேட்டு இருப்பீக, குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்து விடலாமுன்னு நினைக்காதீங்க. இனி வார காலத்துல நிறைய எதிர்கொள்ள வேண்டி வரும், அதையெல்லாம் சமாளிக்கத் திணறி அப்போது நீங்க என்ன யோசித்தாலும் சரி செய்வது ரொம்ப கடினம். நடைமுறை வெளியுலகம் வாங்க... மனசப் பக்குவப்படுத்திக்கிட்டா எதையும் ஏற்கலாம். இந்த நிமிஷம் உங்க ஒத்துழைப்புதான் முக்கியம்... பெரியவங்க என்னங்க பெரியவங்க... ஒரு மரியாதைக்கு முன் வரனும். அத அவங்க காப்பாத்தேலேன்னா இளைய சமுதாயம் நாம் விழித்தெழுவோம் எதிர்ப்படும் தடையை உடைத்தெறிவோம்” இடது கை நான்கு விரல்கள் மடக்கி, கட்டை விரல் நிமிர்த்திய போது,

“தடைகளை விலகிவிட்டதப்பா...” குரல் வந்த வாசலை அனைவரும் பார்க்க,

அங்கே ராகவன் நின்றிருந்தார், விமலாவும்தான்.

“வாங்க சம்பந்தி”

“அத மேலும் தொடரலாமா” சிரித்தபடியே கேட்டவரை உணர்ச்சி மேலிட கட்டிக் கொண்டார் கீதாவின் தந்தை. அவரது கண்களில் கசிவு.

மருமகளை ஆதரவுடன் தன்னருகில் நிறுத்திக் கொண்டாள் விமலா.

“மதன் என்னை மன்னிச்சுருப்பா... ஏதோ ஒரு கேவலமாகத்தான் முதலில் நடந்துக்கிட்டேன். உன் உறுதி ஜெயிச்சிருச்சுடா, உயர்ந்த நோக்கத்தில் நெனச்சபடியே கீதாவை வெளிச்சமாக்கிட்ட... இந்த பூமியில் சந்தோஷமா வாழத்தானே நாம பிறந்தோம்... அதை ஏன் வருத்தத்துல கழிக்கனும்னு உணர்ந்தேன். நீ இங்கதான் வந்திருப்பேன்னு யூகித்தே வந்தேன். என் கனிப்பு சரியாப்போச்சு. முறைப்படியான மற்ற விசயங்களை பேசி முடிவெடுத்துக் கொள்வோம்” அவரின் அந்த வெளிப்பாட்டில் அனைவரும் பூரித்தனர்.

“புதியதொரு வாழ்வின் தொடக்கத்தில் கீதா, இனி மதன் மூலமா மகிழ்வாள்” என்று கதிர் சொல்லவும் அங்கே ஆனந்தக் காற்று வீசியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p239.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License