இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

செவலக்கா​ளை

மு​னைவர் சி.​சேதுராமன்


வீட்டின் முன்னர் ​பெரிய ​வேப்பமரம். அதன் அருகில் ​வைக்​கோற்பட்ட​றை. அதில் நான் மட்டும் தான் கட்டப்பட்டிருப்​பேன். ​ரோட்​டோரத்தில் வீடு என்பதால் ​​ரோட்டில் ​போ​வோரும் வரு​வோரும் என்​னை ​​வெறிக்க ​வெறிக்கப் பார்த்து வியப்ப​டைந்து ​கொண்​டே ​செல்வர். ​ அப்படி​யொரு அழகு. அவ்வளவு கம்பீரம். செகப்பட்டிக் ​செல்லக்கண்ணுவின் கா​ளை என்றால் சுத்துப்பட்டு ஊரார்களுக்கும் ​தெரியும். அப்படிப் ​பேரும் புகழும் வாங்கியிருக்​கேன்.. என்​​ன வளக்கிறா​ரே ​செல்லக்கண்ணு... அவரு மாதிரி யா​ரையும் பாக்க முடியாது... அவ​ரோட பிள்​ளைக​ளைக் கவனிக்கிறா​ரோ இல்​லை​யோ? என்னைத் தன்​னோட பிள்​ளைகளை விட ஒருபடி ​மே​லே​யே நல்லாக் கவனிக்கிறாரு...​தெனமும் என்னக் குளிப்பாட்டிக் ​கொம்பச் சீவி ​அதுக்கு எண்ணை தடவிப் பொட்டுவச்சி ​வைக்​கோலப் ​போட்டு என்​னோட ​மே​லெல்லாம் தடவி உருவிவிட்டு பருத்திக் ​கொட்டப் புண்ணாக்கு தவிடு எல்லாத்​தைபும் ​போட்டுப் ​பெசஞ்சு வச்சி, கத்திரிக்கா வாங்கிக் ​கொடுத்து அப்பப்பா என்னத்தச் ​சொல்லறது... அப்படி ஓவியமாப் பாத்துக்கிட்டாரு... அப்பறம் என்ன ​கொறச்சல்னு ​நெனக்கிறீங்களா...?

அதுதாங்க எனக்கும் புரியல... ​கொஞ்ச நாளா மூஞ்சிய உம்முன்னு வச்சிக்கிட்டு என்னய ஒரு ஏக்கத்​தோட பாக்குறதும் கவ​லையா ஒக்காந்துக்கறதுமா என்னய வளக்கிறவரு இருக்காரு. நானு என்னத்தக் கண்​டேன். வாயிருந்தா என்னன்னு ​கேக்கலாம்... என்னால எதுவும் ​செய்ய முடியல... நானும் அவ​ரோட ​மொகத்தப் பாத்துக்கிட்​டேதான் இருக்​கேன்... என்ன ​செய்யச் ​சொல்றீங்க...

இந்தப் பகுதியில என்ன மாதிரிப் ​பே​ரெடுத்த மஞ்சிவிரட்டு மாடுக எதுவு​மே இல்லீங்க... அம்புட்டுப் ​பேரு... ஒருக்கா பக்கத்துல இருக்கற அரளிப்பா​றை மஞ்சுவிரட்டுக்கு என்ன ​செல்லக்கண்ணு புடுச்சிக்கிட்டுப் ​போனாரு. ​தொழுவுல வச்சி என்ன அவுத்துவிட்டாரு பாருங்க...அப்படி​யே என்னயப் புடிக்க வந்தவங்கல ஒ​ரே பாச்சல்ல ஓடவச்​சேன்... சில​பேரு என்னயப் புடிக்கிறதுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்தாங்க... என்​னைப் பிடிச்சிட்டா ஒருபவுன் தங்கக் காசு டீவி அப்படி இப்படின்னு ​நெ​றைப் பரிசு​ வேற அறிவிச்சாங்க... எல்லா மாடுபிடிகாரப் பயபுள்ளயும் என்னய ரவுண்டு கட்டிட்டாங்க...



என்​னோட ​சொந்தக்காரரு சற்று ​மேடான பகுதியில நின்னுகிட்டு நான் என்ன பண்​றேங்கறத பதட்டத்​தோட பாத்துக்கிட்​டே இருந்தாரு... நான் சும்மா விடு​வேனா...? ​தெகச்சி நின்னு வி​ளையாண்​டேன்... அதுல ​ரெண்டு மாடுபிடிகாரங்க என்​னோட பாய்ச்சல்ல படுகாயப்பட்டுட்டாங்க... என்​னோட வாலைக் கூட அவங்களால ​தொட முடியல... சும்மா ஒரு மணி​ நேரமா நின்னு பாச்சா காட்டி விளையாட்டுக் காட்டு​னேன்... க​டைசி வ​ரைக்கும் என்​னைய யாராலயும் புடிக்க முடியல... என்ன வளத்தவரக் கூப்புட்டு எல்லாப் பரி​சையும் ​கொடுத்தாங்க... ​செல்லக்கண்ணு​வோட ​செவலக்கா​ளைய எந்த மாடுபிடிகாரங்களும் பிடிக்காததனால எல்லாப் பரி​சையும் அந்தக் கா​ளைக்​கே ​கொடுக்கு​றோம்... இதுமாதிரி இந்தச் சுத்துவட்டாரத்துல எந்தக் கா​ளையும் இல்ல... அப்படின்னு ஒலி​பெருக்கியில என்னயப் புகழ்ந்து தள்ளிட்டாங்க... அப்படி​யே ஒ​ரே ஓட்டமா ஓடியாந்து ​செகப்பட்டிக்கு வந்து என்​னோட வீட்டுக்கு வந்துட்​டேன்... எந்த ஊருல என்னய அவுத்துவிட்டாலும் நான் ​செகப்பட்டிக்கு என்​னோட வீட்டுக்​கே வந்துடு​வேன்...

இந்த அரளிப்பா​றை மஞ்சிவிரட்டு முடிஞ்ச அடுத்த நா​ளே சில​பேரு என்னய வளக்குறவரப் பாக்க வந்தாங்க. என்னய ஒரு லட்ச ரூபாய்க்குக் ​கேட்டாங்க... என்​னோட​செல்லக்கண்ணு ஐயா மறுத்துட்டாரு... அ​தோட மட்டுமில்லாம அவங்களக் கன்னாப் பின்னான்னு திட்டி ​வேற அனுப்பிச்சாரு... அவங்க ​போனபின்ன என்​னையத் தடவிக் ​கொடுத்து ஏண்டா ​செவல ஒண்ணப் ​போயி வித்துரு​வேன்னு ​நெனச்சாங்களா? என்​னோட உசிரு இருக்கிறவ​ரைக்கும் ஒண்ண விக்க​வே மாட்​டேன்டா... என்று​சொன்னதக் ​கேட்டு என்​னோட கண்ணுல தண்ணீ​யே வந்துருச்சு... அப்படி​யே அவர நாக்கால நக்கிக் ​கொடுத்​தேன். அவரும் என்ன அன்​போட கட்டிப் பிடுச்சிக்கிட்டாரு...

இ​தெல்லாம் ஏன் ஒங்ககிட்ட ​சொல்​றேன்னு ​நெனச்சிங்களா... பின்ன என்னங்க பண்றது...? என்னய வளக்கிறவரு ​மொகத்துல சந்தோசத்த​யே காங்க முடியலங்க... கவ​லையா​வே இருக்காரு... என்னய பாக்குறதும் த​லையக் கீழ ​போட்டுக்கறதுமா​வே அவரு இருக்காரு... எனக்​கொண்ணும் புரியல...

முன்ன மாதிரி என்னய ​ஜோடிச்சி புடுச்சிக்கிட்டுப் ​போகமாட்​டேங்கறாரு... என்னய எப்படி​யெல்லாம் ​​ஜோடிப்பாரு ​தெரியுமுங்களா...? அடடா... என்​னோட கழுத்துல ​தோலுல பதிச்ச மணியக் கட்டி ​நெத்தியில ​நெத்திப் பா​றைங்கற ​வெள்ளி இ​லை மாதிரி இருக்கிற ந​கையப் ​போட்டுவிட்டு, துண்டு ​வேட்டி, மா​லை​யெல்லாம் ​போட்டு, ஒடம்​பெல்லாம் சந்தனத்தப் பூசிவிட்டு கவுத்தப் ​போட்டு என்னயப் புடுச்சிக்கிட்டுப் ​போனாருன்னா ஊ​ரே ஆச்சரியமாப் பாக்கும்... ​என்ன ​செல்லக்கண்ணு இன்னக்கி எந்த ஊருல மஞ்சிவிரட்டு... ஓ... சிறாவயலா... சரி... சரி... என்று கூறி அவருடன் தாங்களும் வருவதாகச் ​​சொல்வர். என் பின்னால் வருவ​தை அவர்க​ளெல்லாம் ​பெரு​மையா ​நெனப்பாங்க...



ஆனா இப்ப அ​தை​யெல்லாம் ​நெனச்சு என்ன பண்றது...? ​நேத்து எங்க வீட்டுக்குச் ​செல​பேரு வந்தாங்க... அவங்க ​பேசினதக் ​கேட்டதுலேருந்து என்னய வளத்தவரு மன​சொடிஞ்சு ​போயித்திரியராரு... நாட்டுல என்ன​மோ புதுசா சட்டங் ​கொண்டு வந்துருக்காங்களாம்... மாடுகளக் ​கொடு​மைப் படுத்துறது தப்பு... மஞ்சிவிரட்டுங்கற ​பேருல மாடுகள ​ரொம்ப ​ரொம்ப ​கொடுமப் படுத்துறாங்க... அதனால இனி​மே மஞ்சுவிரட்​டே ​வைக்கக் கூடாதுன்னு கவரு​மென்டுல சட்டம்​ போட்டுட்டாங்களாம்...அதனாலதான் என்னய வளத்தவரு ​ரொம்ப மனக் கஷ்டப்பட்டுக்கிட்டுக் கிடக்கறாரு... யாரால என்ன ​செய்ய முடியும். ​தெனந்​தோறும் என்னயப் பாக்குறதும் மூஞ்சியத் தூக்கிவச்சிகிட்டு இருக்கறதுமா இருந்தாரு ​செல்லக்கண்ணு. இப்படி இருக்கறப்ப ஒருநாளு ​ரெண்டு மூணு ஆளுக வந்து என்னய ​வெலக்கிக் ​கேட்டாங்க...

​ வெல ​தெகயல... அதனால ​​போயிட்டாங்க ​​போலருக்கு... நான் மனசுக்குள்ளாற ​அவரு என்னய வித்துறக் கூடாதுன்னு ​நெனச்சிக்கிட்​டேன். எவ்வளவு ​பேரும் புகழும் நான் அவருக்கு வாங்கிக் ​கொடுத்துருக்​கேன்... அதனா​​லே​யே என்னய அவரு விக்க மாட்டாரு... இப்படி நான் பலவாறு ​யோசிச்சிக்கிட்​டே இருந்​தேன்...

முன்னமாதிரி என்னவரு என்னயக் கவனிக்கிற​தே இல்ல... அதனால நான் ​ரொம்ப ​மெலிஞ்சிட்​டேன்... ஒடம்​பெல்லாம் வத்திப்​போச்சு... ஒருநாளு திடீர்னு நாலஞ்சு​பேரு வந்து என்னய ​வெலக்கி வாங்கிட்டாங்க... என்னய அவங்க பிடிக்கிறதுக்காக வந்தாங்க... நானு அவங்களப் பிடிக்க விடல... என்னய வளத்தவரு வந்து என்னய அவங்ககிட்ட ​வேற கயித்தப் ​போட்டுக் கட்டிக் ​கொடுத்துட்டாரு...

நான் அவங்க கூடப் ​போகாம சண்டித்தனம் பண்ணி​னேன். ஆனா அவங்க என்ன விடல... அடிச்சி இழுத்துக்கிட்டுப் ​போயிட்டாங்க... முன்னா​லெல்லாம் என்னய அவுக்க​வே விடமாட்​டேன். இப்ப நா ​சேலுக்​கெட்டுப் ​போயிட்​டேன். அதனால அவங்கள என்னால எதுவுஞ் ​செய்ய முடியல... அவங்க அடிச்ச அடிய ​​என்னால தாங்க முடியல...

அவங்க என்னய இழுத்துக்கிட்டுப் ​போயி ஒரு ​பெரிய லாரியில ஏத்துனாங்க... இந்தமாதிரி ​நெறய மாடுங்கள லாரி ​நெறய ஏத்தி நம்பருப் ​போட்டாங்க... லாரிய ​​வேகமா ஓட்டுனாங்க... என்னால அங்க இங்க திரும்பக் கூட முடியல கழுத்துல கவுத்தப் ​போட்டு இருக்கிக் கட்டி வச்சிருந்தாங்க... வலியப் ​பொறுத்துக் ​கொள்ள ​வேண்டியிருந்தது.

ஏங்கூட இருந்த என்னச் ​சேர்ந்தவங்களும் த​லைவிதின்னுட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க... கிட்டத்தட்ட நூறு​பேரு அந்த லாரியில இருந்​தோம்... லாரி ​வேகமாப் ​போயிக்கிட்​டே இருந்துச்சு... என்​னோட மனசுக்குள்ளாற பலவிதமான எண்ணங்கள் ஓடிக்கிட்​டே இருந்துச்சு... என்னய வளத்தவரு எப்படி இந்தமாதிரி என்னய வித்தாரு... அந்தளவுக்கு நா​னென்ன கஷ்டத்தக் ​கொடுத்​தேன்... எவ்வளவு ​பேரும் புகழும் நான் அவருக்குச் சம்பாரிச்சுக் ​​கொடுத்​தேன்... மஞ்சிவிரட்டு இல்​லேண்ணா என்ன... ​கெட்டா ​போயிருச்சு... என்னய உழுவுறதுக்காவாவது பயன்படுத்தலாம்ல...



எதுவுஞ் ​செய்யாம இப்படி அடிமாட்டுக்கா என்னயக் ​கொண்டு​போயி விக்கிறது...? ச்​சே என்ன மனுசங்க இவங்க...? அடிமாடுன்னா என்னாது...? பிடிமாடு, ஒழவுமாடு, மஞ்சுவிரட்டு மாடு, கா​ளை மாடு, பசு மாடு, வட மாடு, ​தொழு மாடு, ​கோயில் மாடு அப்படீன்னு பல மாடுகளத் ​தெரியும். ஆனா இந்த அடிமாடுன்னா என்னான்னு எனக்கு ​வெளங்க​லே... ஒரு​வே​ளை ​கோபம் வந்தா அடிக்கற மாடா இருக்கு​மோ...? சரி அடிச்சிட்டுப் ​போறாங்க... மத்தவங்களுக்குக் ​கோபம் வந்தா என்னயப் ​போட்டு ஏன் அவங்க அடிக்கணும்...? அடிமாடுங்கறதுக்கு இதுதான் அர்த்தம்​போல...

ஆனா என்ன ​வெலக்கு வாங்குனவங்க அவங்களுக்குள்ள, “​டேய் சின்னச்சாமி இந்த மாட்டுல எத்தன கி​லோ கறி​தேரும்... அதவிட இதனோட கறி சும்மா பஞ்சுபஞ்சாடா இருக்கும்... அதனால இத ​வே​றெ எங்கயாவது வித்துப்புடலாம்டா...” என்று கூறிய​தைக் ​கேட்டவுடன் தான் எனக்கு அடிமாடுன்னா என்ன அர்த்தம்னு ​தெரிஞ்சது...

சரி... மஞ்சிவிரட்டு இல்​லேன்னா என்ன ​வே​றெதுக்கும் என்னயப் பயன்படுத்தலாம்ல... ஒண்ணு இல்​லேன்னா இன்​னொன்ன மாத்தி ​யோசிச்சிச் ​செய்யாம உசிர எடுக்கற ​செய​லையா ​செய்வாங்க... மனுசங்க எல்லாரு​மே சுயநலக்காரங்க ​போலிருக்கு... பிள்​ளைய மாதிரி என்ன வளத்துட்டு ​கொல்றதுக்கு விக்க எப்படி மனசு வந்துச்​சோ ​தெரியல...

இப்படி நான் பலவிதமா ​​நெனச்சிக்கிட்டு இருக்கற ​போ​தே லாரி திடீர்னு ஒரு இடத்துல நின்னுருச்சி... லாரிய ஒரு ​கொட்டடி முன்னால நின்னது. லாரியின் பின்கதவைத் திறந்து எங்கள எறக்கினாங்க... அந்தக் ​கொட்டடிக்குள்ளாறக் ​கொண்டு ​போனாங்க... அந்த எடம் ஒ​ரே ரத்தக் கவிச்சியா இருந்துச்சு... எனக்கு நாக்கு வரண்டு ​போயிடுச்சு... தண்ணித் தாகமா இருந்துச்சு தவிச்ச வாய்க்கு ஒருவாய்த் தண்ணீராவது ​கெ​டைக்குமான்னு பாத்​தேன். அங்க எதுவும் ​​கெ​டைக்கறதுக்கு வழியில்லாம இருந்தது. நானும் என்​னோட வந்தவங்களும் சாப்புட​வே இல்​லை... ஒவ்​வொருத்தரா எங்கள இறக்கினவங்க தனித்தனியா ஒவ்​வொருத்த​ரையும் ​கொல்லத் ​தொடங்கினாங்க...

ஒரு ​மெஷினுக்கு முன்னால ​கொண்டு​ போயி ஒவ்​வொருத்தரயும் நிப்பாட்டுனாங்க... அப்ப ​பெரிய சம்மட்டி மாதிரி ஒரு இரும்புத் தடி ​ரெண்டு ​கொம்புக்கும் நடுவுல மடார்னு அடிக்க... என்னவங்க துடிதுடிச்சு கீ​​ழே விழுந்தாங்க. அத எடுத்துக்கிட்டுப் ​போயி ஒரு ​மெஷினு பக்கத்துல ​போட அது த​லைய அறுத்து ரத்தத்​தைத் தனியா ஒரு ​பொட்டியில ​சேர்த்து வச்சது... இப்படி​யே எல்லா​ரையும் அறுத்து அறுத்துத் தள்ளிக்கிட்​டே இருந்தாங்க...

அ​தை​யெல்லாம் பாக்கப் பாக்க எனக்கு ​கொ​லை​யே நடுங்குச்சு... பயத்துல கண்ண மூடிக்கிட்​டேன்... யா​ரோ என்னயப் புடுச்சி ​கொலகார ​மெஷினுக்கிட்டத் தள்ளுனாங்க... கண்ணத் ​தொறந்து பாத்தா நான் ​மெஷினுக்கிட்ட நிக்க​றேன்... நாக்கு வறளுது... தண்ணியக் ​கொடுத்துட்டாவது என்னயக் ​கொல்லக் கூடாதா...? அட ஈவு இரக்கமில்லாத மனுஷங்களா...? என்று நி​னைப்பதற்குள்ளாக என்த​லையில் மாட​​ரென இரும்புச் சம்மட்டி த​லையில் விழ மயங்கிச் சரிந்​தேன்... என் நி​னைவுக்குள் என்​னை வளர்த்தவரின் உருவம் நிழலாடியது... இந்தச் ​​செவலக்கா​ளையின் நி​னைவு அவருக்கு மட்டுமல்ல ​செகப்பட்டிக்கும் சுத்துப்பட்டு ஊரார்களுக்கும் நிச்சயம் இருக்கும் என்ற எண்ணம் மட்டும் என் மனதிற்குள் ஓட ​செகப்பட்டி ​செவலக்கா​ளையாகிய நான் எனது க​டைசி மூச்​சை நிறுத்திக் ​கொண்டேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p240.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License