இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

இரு மனசு

மு​னைவர் சி.​சேதுராமன்


கா​லையில​லே​யே ​வெயில் சுட்​டெரித்தது. படுக்​கையிலிருந்து எழுந்த ராசு தனது அருகில் படுத்திருந்த தன் தம்பி து​ரை​யைப் பரிதாபத்துடன் பார்த்தான். அவனுள் ஒருவிதமான கழிவிரக்கம் ஏற்பட்டாலும், சற்று சலிப்பும் ஏற்படத்தான் ​செய்தது. பாவம் அவனும் தான் என்ன ​செய்வான்.

வறு​மை வாய்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த ராசுவின் தம்பி பிறவியி​லே​யே ​இரு கால்களும் சூம்பிப் ​போய்ப் பிறந்தான். வி​ளைவு அவனது இடுப்பிற்குக் கீழ் சூம்பிய கால்களும் ​பெருத்த உடலுமாக இருந்தான் து​​ரை. ராசுதான் அவ​னைத் தன் முதுகில் சுமந்து ​கொண்டு திரிந்தான்.

அந்தக் காலத்தில் முதுசூரியர், இளஞ்சூரியர் என்று அ​ழைக்கப்பட்ட இரட்​டைப் புலவர்க​ளை ராசுவும் து​ரையும் நி​னைவுபடுத்துவது ​போன்றிருந்தது. என்ன வித்தியாசம் அவர்க​ளைப் ​போன்று இல்லாமல் இருவரும் பார்​வையு​டையவராக இருந்தார்கள்.

அவர்க​ளைப் பார்ப்பவர்களின் மனதிற்குள் ஒருவித கரு​ணை சுரக்கும். ஆனால் இருவரும் யாரிடமும் எ​தையும் வாங்க மாட்டார்கள். தம்பியால் ராசுவும் பள்ளிக்கூடத்திற்குப் ​போகவில்​லை. ராசு பள்ளிக்குப் ​போய்விட்டால் தம்பி து​ரை​யை யார் பார்த்துக் ​கொள்வது? இந்தக் ​கேள்விக்கு வி​டை ​​தெரியாததால்தான் அவ​னை அவனது ​பெற்​றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்​லை.

து​ரையின் உடல் ​பெருக்கப் ​பெருக்க ராசுவால் அவ​னைச் சுமக்க முடியவில்​லை. இருந்தாலும் தன்​னோடு பிறந்த தம்பி து​ரை​யை ராசு எப்​போதும் விட்டுக் ​கொடுக்க மாட்டான். தான் கஷ்டப்பட்டாலும் தம்பி​யைக் கஷ்டப்படவிடக் கூடாது என்று மனதிற்குள் நி​னைத்துக் ​​கொண்டு அவ​னைத் தன் முதுகில் சுமந்து ​கொண்டு திரிந்தான்.

அவனது ​பெற்​றோர்கள் ​செல்லப்பனும் ​செல்லியும் ​ரோட்​டோரத்தில் இட்டிலிக் க​டை​போட்டு நடத்துகிறார்கள். அதில் வரும் வருமானம்தான் அவர்களது குடும்பத்தி​னை ஓட்டுவதற்கு ஒத்தா​​சையாக உள்ளது. அவர்கள் தங்களது பிள்​ளைக​ளை நல்ல நி​லைக்குக் ​கொண்டுவர எவ்வள​வோ பிரயத்தனப்படத்தான் ​செய்கிறார்கள். ஆனால் அது என்ன​வோ முயற்​கொம்பாக​வே அ​மைந்து விடுகின்றது. வறு​மை அவர்க​ளை வாட்டி​யெடுத்தது.

து​ரை கடையிலிருந்து எடுத்து ஏழு எட்டு இட்லியை ஒரு வேலைக்கு சாப்பிடுவான். து​ரையின் அம்மா ​செல்லி அவ​னை அவனது கு​றை ​தெரியாமல் விழுந்து விழுந்து கவனிப்பாள். இத​னைக் கண்ட ராசு சில சமயங்களில் தன் அம்மாவிற்குத் தன் ​​மேல் பாசம் கு​றைவு என்று நி​னைத்துக் ​கொள்வான். அவனது தம்பி​யைக் கவனிக்கும்​போது ராசுவின் மனம் சற்று சலனப்படும். ஏ​னெனில் அவனால் அவ​னைத் தூக்கிச் சுமக்க முடியவில்​லை. சிறுபிள்​ளையாக இருந்த​போது அவ​னைச் சுமப்பது எளிதாக இருந்தது. ஆனால் நாளாகநாளாக அது ​ராசுவிற்குப் பெருஞ்சு​மையாக அ​மைந்துவிட்டது.

ராசுவின் துன்பம் து​ரைக்குத் ​தெரியாமலில்​லை. தன் அண்ணனுக்குத் தான் சு​மையாகி விட்​டோ​மே என்று நி​னைத்து மனதிற்குள்​ளே​யே மறுகுவான். ஆனால் அத​னை ​வெளியில் ​சொல்ல மாட்டான். சில சமயங்களில் தன் அண்ணன் சிரமமப்படுவ​தைக் கண்டு, “ஏன்​ணே நானு ஒனக்கு ​ரெம்பச் சிரமம் கொடுக்கிறேன்னு தெரியுது. ​ரெம்பச் சாப்புடக் கூடாதுன்னுதான்​ணே ​நெனக்கி​றேன். என்னால என்​னோட நாக்க அடக்க முடியலன்​ணே... ​கோவிச்சிக்காதண்​ணே...! என்று கண்கலங்கக் கூறுவான். அத​னைக் கண்ட ராசு அவனது கண்ணீ​ரைத் து​டைத்துவிட்டு, “அடப் ​போடா... இப்படில்லாம் ​​பேசாதடா... ஒன்ன நானு சுமக்காம ​வேற யார்டா சுமப்பா... நீயா எதாவது ​நெனச்சிக்காதடா...” என்று ஆறுதல் கூறுவான்.



ராசுவின் கஷ்டம் அவனது அப்பா அம்மாவிற்கும் ​தெரியும். பாவம் பிள்ள இப்படித் தம்பிய முதுகுல சுமந்துக்கிட்​டே திரிஞ்சி கஷ்டப்படறா​னேன்னு அவர்கள் இருவரும் மனதிற்குள் ​போட்டுப் புழுங்கிக் ​கொண்​டே இருந்தனர். தங்களு​டைய இரண்டாவது மகன் ஊனமாய் பிறந்ததுக்காக அழுவதா? இல்லை, அவனை தங்களின் மூத்த மகன் முதுகில் தூக்கிக் ​கொண்டு திரிவ​தைப் பார்த்துப் பார்த்து அழுவதா? என்று அவர்களுக்கு புரியவில்லை. இதற்கு ஒரே வழி கை வண்டி​யொன்​றை வாங்கித் து​ரைக்குக் ​கொடுத்துவிட்டால் பிரச்ச​னை கு​றைந்துவிடும். ​கைவண்டி வாங்குவது என்ன ​லேசுப்பட்ட காரியமா? அதுக்குப் பணம்... ​எங்கு​ போவது? பலரிடமும் ​கேட்டுக் ​கேட்டுப் பார்த்து ஓய்ந்து ​போனார்கள்.

இப்படி இருக்கும்​போதுதான் ஒரு நாள் அவர்கள் க​டைக்கு இட்லி சாப்பிட வந்த ரிக்சா ஓட்டும் சிவராமன், “ஏம்பா... மது​ரையில ​ரோட்டரிக் கிளப்பு ஒண்ணு இருக்குது. அங்க ​நமக்குத் ​தெரிஞ்சவரு ஒருத்தரு இருக்காரு... அவரு அட்ரசத் தர்​றேன். அவ​ரைப் ​போயிப் பார்த்தா அவரு நிச்சயமா ​​கைவண்டி வாங்கிக் ​​கொடுப்பாரு... நானு ​வேணுமின்னா ஒருநா ஓங்கூட வர்​றேன்... என்ன சரியாப்பா...” என்று ​தெய்வம் ​போல் ஒரு ​யோச​னை கூறினான்.

சொன்ன​தைப் ​போல அவன் கூட வந்து அவ​ரைப் பார்த்து உதவி ​செய்யுமாறு கூறினான். அத​னைக் ​கேட்ட அந்த ​ரோட்டரிக் கிளப் நிர்வாகி தான் அவனுக்குக் ​கைவண்டி வாங்கித் தருவதாகக் கூறினார்.

அதன்படி அடுத்த வார​மே அவர்க​ளை வருமாறு ​ரோட்டரி கிளப் நிர்வாகி அ​ழைத்து விட்டார். அவர்களும் தங்களது க​டைக்கு லீவு விட்டுவிட்டு தங்களது மகன்க​ளைக் கூட்டிக் ​கொண்டு மது​ரைக்குச் ​செல்ல ஆயத்தமானார்கள்.

அவர்கள் புறப்படும் போது ​செல்லி, “ஏங்க கைவண்டி கெடைக்கப் ​போற விஷயத்​தை நம்ம பயலுகக்கிட்ட ​சொல்லிட்டீங்களா...?” என்று ​கேட்டாள். அதற்குச் ​செல்லப்ப​னோ, “இல்லப்பா... ​மொதல்ல ​கைவண்டி ​கெ​டைக்கட்டும்... அதுக்கப்பறம் ​சொல்லலாம்னு ​சொல்லல... ஒரு​வே​ளை வண்டி ​கெ​டைக்க​லைன்னு வச்சிக்​க... பயலுக மன​சொடிஞ்சி ​போயிடுவாங்க... அதனாலதான் ​சொல்லல... நமக்கு ​வேண்டியவரப் ​போயிப் பாக்கப் ​போறம்னுதான் அவனுகளுக்குத் ​தெரியும்...” என்று கூறினான். அவன் ​பேசிய​தைக் ​கேட்ட ​செல்லி ​பெருமூச்​​செறிந்தாள்.

அவர்கள் மது​ரைக்கு வந்தார்கள். வந்தவர்கள் மது​ரையிலிருந்து இரண்டு கி​லோமீட்டர் தூரத்தில் உள்ள ​ரோட்டரிக் கிளப்பிற்குச் ​செல்லும் ​பேருந்திற்காகக் காத்திருந்தார்கள். து​ரையும் ராசுவும் ​பேருந்து நி​லையத்தில் நின்று ​கொண்டிருக்கும் பல​ரையும் வண்டிக​ளையும் ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்டிருந்தார்கள். அன்று பார்த்து பயங்கரக் கூட்டமாக இருந்தது. மது​ரைத் திருவிழா நடந்ததால் பேருந்து நி​லையத்தில் நிற்பதற்குக்கூட இடமில்லாதிருந்தது. எப்படா அந்தப் ​பேருந்து வரும் என்று காத்திருக்கத் ​தொடங்கினர்.

​அ​வர்கள் நின்று ​கொண்டிருந்த இடத்திற்கு எதிர்புறத்தில் பழனி ​போகும் பாயிண்ட் டூ பாய்ண்ட் வண்டி ஒன்று வந்து நின்றது. கூட்டம் தள்ளுமுள்ளாக இருந்தது. இவர்கள் இருக்கும் இடத்திற்கும் அதற்கும் சிறிது தூர​மே இருந்தது. து​ரை ​மெதுவாகத் தான் ஒன்றுக்குப் ​போய்வருவதாகக் கூறிவிட்டு ஊர்ந்து ஊர்ந்து ​சென்றான். சரி​யென்று ராசு த​லைய​சைத்தான். நகர்ந்து நகர்ந்து வந்த து​ரை பழனி வண்டியிலிருந்து இறங்கி ஏறுபவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

இத்தருணத்தில் ராசு மனதில் ஒரு எண்ணம் உதித்து ம​றைந்தது. திடீ​ரென்று அவன் ஒரு முடிவு செய்தான். இப்படி வாழ்க்கை பூராவும் தம்பியை முதுகில் தூக்கி கொண்டு இருக்க முடியாது. இப்படியே தம்பியை விட்டு விட்டு பழனி போகும் வண்டியில் ஏறி ஓடி விட வேண்டியது தான். முடிவு செய்தவுடன் ​பேருந்தில் ஏறி விட்டான். ராசுவிற்கு நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது. காசில்​லை என்றாலும் எப்படியாவது எங்காவது வண்டி நிற்கும்​போது இறங்கிக் ​கொள்ளலாம் என்ற ​தைரியத்தில் ராசு வண்டியில் ஏறிவிட்டான்.

​பேருந்து புறப்பட்டு விடும் என்பது மனதில் பட, கடைசியாக தம்பியை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்ற ஜன்னலில் தலையை விட்டுப் பார்த்தான். பார்த்தவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் ​பேருந்தின் பக்கம் இருந்த அவ​னைக் காணவில்​லை. நகர்ந்து நகர்ந்து ​வெகுதூரம் ​​செல்ல முடியா​தே... எங்கு ​போனான். என்ற எண்ணத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவனுக்குச் சரியாகத் ​தெரியாததால் ​பேருந்தின் அடுத்த படிக்கட்டு வழியாக இறங்கிப் பார்த்து விடலாம் என்று கருதி கூட்டத்தில் முண்டியடித்துக் ​கொண்டு ​சென்றான்.

​பேருந்தின் பின்பகுதியில் த​ரையில் து​ரை அமர்ந்திருந்த​தைக் கண்ட ராசு திடுக்கிட்டான். அடப்பாவி நாம அவன விட்டுட்டுப் ​போயிடலாம்னு ​நெனச்சா அவன் நம்ம அண்ணனுக்கு எந்தத் ​தொந்தரவும் குடுக்கக்கூடாதுன்னு ​நெனச்சிப்புட்ட​னே... என்று மனதில் ​தோன்ற தன் ​செய​லை நி​னைத்து ​வெட்கப்பட்டான்.



சட்​டென்று தம்பியின் அருகில் வந்து, “ஏன்டா தம்பி எதுக்குடா பஸ்ஸூல ஏறுன... பஸ்ஸூ புறப்படப்​போகுதுடா எறங்குடா... என்று கூறிக் ​கொண்​டே தம்பி​யைத் தூக்கிக் கீ​ழே இறக்கி விட்டுவிட்டு அவன் வண்டியிலிருந்து இறங்கி, அவ​னைத் தூக்கிக் ​கொண்டு அப்பா அம்மா நின்ற இடத்தி​னை ​நோக்கிச் ​சென்றான்.

தன் தம்பி​யைப் பார்த்த ராசுவின் கண்களில் கண்ணீர் தி​ரையிட்டது. அத​னைக் கண்ட து​ரை அழுது​கொண்​டே, “ஆமாண்​ணே எத்தன நாளக்கித்தான் நீ என்னயச் ​சொமந்துக்கிட்​டே திரி​வே… எனக்கு ​ரெம்பக் கஷ்டமா இருக்குண்​ணே... அதனாலதான் எங்கிட்டாவது கிளம்பிப் ​போயிடலாம்னு ​நெனச்சிப் பஸ்ஸில ஏறிட்​டேன்... நான் ​போயிட்டா நீங்கள்ளாம் நிம்மதியா இருக்கலாம்ல...” என்றான் நாத்தழுதழுக்க...

து​ரை கூறி​ய​தைக் ​கேட்ட ராசு, அவ​னைக் கட்டிப் பிடித்துக் ​​கொண்டு அழத் ​தொடங்கினான். ராசுவிற்கு மனதில் யா​ரோ ஓங்கிக் குத்திய​தைப் ​போன்றிருந்தது. “ச்​சே தம்பி​யோட கு​றை​யை ​ஒரு சு​மையா ​நெனச்சி அவன விட்டுட்டு ஓட ​நெனச்சிட்ட​மே... இந்தப் பய மனசால ஒசந்துட்டான்... ஆனா நான்... அவனுக்கு ஒரு கு​றையுமில்​லை... ஆனா எனக்குத்தான் ஒடம்பு முழுக்கக் ​கொ​றை...” என்று மனதிற்குள்​ளே​யே ​நொந்து​போன ராசு தன் தம்பியை தூக்கிக் கொண்டு போய், அப்பா அம்மாவிடம் உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் தானும் உட்கார்ந்து கொண்டான்.

சற்று ​நேரத்தில் அவர்கள் ​போகக் கூடிய பஸ் வந்ததனால் அவர்கள் அதில் ஏறி ​ரோட்டரிக் கிளப் இருக்குமிடத்தில் இறங்கினார்கள். அங்கிருந்த அந்த ​​ரோட்டரி கிளப் அலுவலர் அவர்க​ளைப் பார்த்து அவர்களுக்குக் ​கொடுக்க ​வேண்டிய வண்டி​யைக் காட்டி அத​னை ​அவர்களிடம் ஒப்ப​டைத்தார். பின்னர் அவர்களது நி​லை​யை அறிந்து, அந்த வண்டி​யை ​ரோட்டரிக் கிளப்பின் ​காரி​லே​யே ஏற்றச் ​சொல்லி அவர்க​ளையும் அந்த வண்டியி​ல் ஏறச் ​சொல்லி அவர்களது ஊரி​லே​யே ​கொண்டு​போய் இறக்கி விடுவதற்கும் உடன் ஏற்பாடு ​செய்தார்.

அவருக்கு நன்றி​யைச் ​சொல்லிவிட்டு அவர்கள் அ​னைவரும் காரில் அ​னைவரும் ஏறி அமர்ந்தனர். அப்​போது ராசு அவனது அப்பாவிடம், “ஏப்பா வண்டி வாங்கப் ​போறத எங்கக்கிட்ட முன்ன​மே​யே ​சொல்லிருக்கலாம்ல... ஏஞ்​​சொல்லல...” என்று ​கேட்டதற்குச் ​செல்லப்பன், “​டேய் ராசு எந்தப் ​பொருளும் நம்ம ​கையில ​கெ​டைச்சாத்தாண்டா உறுதி. ஒங்க ​ரெண்டு​பேருகிட்டயும் ​​சொன்னபிறகு அது கி​டைக்கலன்னு வச்சிக்க ஒங்க மனசு வருத்தப்படும்... அதனாலதான் வண்டி ​கெடச்ச பின்னால ​​சொல்லலாம்னு ​பேசாம இருந்துட்​டேன்...”

இ​தைக் ​கேட்ட ராசு ​எ​தை​யோ ​சொல்ல முயலும்​போது து​ரை அவனது ​கை​யைப் பிடித்து அழுத்தினான். அந்த அழுத்தத்தின் அர்த்தத்​தைப் புரிந்து ​கொண்ட ராசு ​பேசாமல் இருந்துவிட்டான். ​மேலும் தான் அவர்க​ளைவிட்டுவிட்டு ஓட நி​னைத்த​தையும் மனதிற்குள்​ளே​யே ​வைத்துப் பூட்டிவிட்டான். ராசுவும் து​ரையும் ஒருவித அர்த்தப்புஷ்ட்டியுடன் ஒருவ​ரை​யொருவர் பார்த்துப் புன்ன​கைத்துக் ​கொண்டனர். அந்தப் பார்​வையில் இருவர் மனமும் ஒன்றாகிச் சிறகடித்துப் பறந்தன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p241.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License